போலி முகங்கள்-2

போலியான முகவரிகளுடன்(Fake Profiles) இவர்களின் வாழ்க்கை தொடங்கினாலும் இவர்கள் ஏதோ ஒரு விடயத்தில் தூண்டப்பட்டு இந்த விளையாட்டை ஆரம்பிக்கிறார்கள்.அது விளையாட்டு என்று நினைத்து விட்டுவிட்டால் மறு நாளில் இருந்து அவர் நல்ல மனிதராக நட மாடலாம். ஆனால் அவர் அந்த போலி கணக்கினை தினமும் நான்கு மணி நேரங்களுக்கு மேல் உபயோகித்தால் அது சத்தியமாக ஒருவகை மன நோயின் அறிகுறி தான்.




இந்த நோய் ஒருவித தாக்கத்தை அவருக்குள் உண்டு செய்கிறது. பெண் போல் உடை அணிந்து கொண்டு ஒருவர் தினமும் வந்தால் அவரின் மனநிலை எப்படி இருந்திருக்கும்.(யாரையும் புண்படுத்தும் நோக்கத்தில் இப்படி எழுதவில்லை) தான் ஆண் இல்லையென்றே அவரின் உள்மனதில் பதியும் அல்லவா அதே போல் தான் இங்கேயும் பெண் பெயரில் ஒருவர் தன்னுடைய அந்தரங்க விடயங்களை விவரித்து கொண்டே இருந்தால் அங்கே அவர் அப்படி ஒரு பெண் இருப்பதாக எதிரில் இருக்கும் நபர்களை மட்டும் ஏமாற்றவில்லை. தன்னையும் தான்.



இவர்கள் மனநோயினால் பாதிக்கபடுவது ஒரு பக்கம் இருந்தாலும் இவர்களை நம் நண்பராக இணைத்து கொண்டால் நாம் நமது கணக்கில் வைத்திருக்கும் குடும்பம் சம்பந்தமான படங்களை(Profile Pictures and albums) இவர்கள் முறைகேடாக பயன்படுத்த வாய்ப்பு உள்ளது. இது ஒரு முக்கியமான விடயம்/எச்சரிக்கையும் கூட. உங்கள் வீட்டு பெண்களின் படங்கள் வெளியிடங்களுக்கு பரவலாம். பலான தளங்களில் இவர்கள் வேறு ஒரு படத்துடன் இணைத்து உங்களை பழி தீர்த்து கொள்ளலாம். அல்லது அத்தகைய படங்களை உங்களுக்கே அனுப்பி உங்களை வெறுப்படைய செய்யலாம்.

இதில் பாதிக்கப்பட்டவர்களின் மனநிலையில் ஒரு குழப்பமும் இருக்காது. ஏன் என்றால் அந்த கணக்கில் இவர்கள் ஒன்றி விடுகிறார்கள். அவர்களுடன் பழகும் போலிகளும் இவர்களும் தங்களை தானே ஏமாற்றிக்கொண்டு இதை ஒரு விதமான முறையில் பரப்புகிறார்கள். சரி பரப்பிவிட்டார்கள். அடுத்து என்ன செய்வார்கள்? நாம் பணத்தையோ அல்லது பொருளையோ இழந்தால் சரி என்று விட்டு விடுகிறோம். நம்மை ஒருவர் போலியான கணக்கில் இருந்து கொண்டு பேசியதை போல் ஜோடனை செய்யப்பட்ட விவாதங்களை வைத்து நம்மை அசிங்கபடுத்துகிறார் என்றால்?

இவர்களுக்கு பொதுவாக இருக்கும் பழக்கங்கள்.


இவர்கள் ஒரு நாளைக்கு பல மணிநேரம் செலவிட்டாலும் இவர்கள் மென்பொருள் நிறுவனங்களில் அல்லது கணிபொறி சம்பந்தமான வேலைகள் அல்லது கணிபொறி மூலம் வேலை செய்பவர்கள் இல்லை.

இவர்கள் தொடர்ந்து கணிபொறி அருகில் இருப்பதால் முதுகு வலி இருக்க வாய்ப்புண்டு. இவர்களுக்கு இரவு தூக்கம் சரியாக இருக்காது. இவர்களுக்கு புதிதாக எந்த ஒரு வேலையும் செய்ய தோன்றாது.(இது முற்றிலும் உண்மை.) வேலைகள் வந்தால் தலைவலி என்பார்கள்.

மன நோயாளிகளை பாதுகாப்பது எதற்கென்றால் முதலில் அவர்களும் மனிதர்கள் என்பதற்கு தான். நம்மாலோ அல்லது அவர்களாலே கூட அவர்களுக்கு தீங்கு நேரலாம். இதற்கு அடுத்து எல்லாரும் கவனிக்க வேண்டிய காரணம் ஒன்று தான்.


அவர்களால் நமக்கு தீங்கு ஏற்படாத வண்ணம் நம்மை பாதுகாக்க தான் மன நோயாளிகளை பாதுகாக்கிறார்கள் அல்லது அடைத்து வைக்கிறார்கள்.



உண்மை இப்படி இருக்கும்போது நாம் எதற்கு அவர்களை நமது வீடு போன்ற இணைய கணக்கில் உள்ளே நுழைய விடவேண்டும்? உண்மையில் யார் யாருக்கு அதிகபடியான நண்பர்கள் வேண்டும்? ஏன் வேண்டும்? சாதாரண ஒரு நபருக்கு ஐம்பதுகளில் நண்பர் எண்ணிக்கை இருந்தால் அது ஏற்று கொள்ளலாம். அதிகபடியான நண்பர்கள் இருக்க வேண்டும் என ஏன் நாம் எதிர்பார்கின்றோம்? அதனால் யாருக்கு பலன் இருக்கின்றது?



நான் ஒரு அரசியல்வாதி என்றால் என்னுடைய கருத்தினை பரப்ப ஒரு ஊடகம் தேவை. அதற்கு தான் என்றால் சரி.



நான் ஒரு விற்பனையாளர் என்றால் என்னுடைய பொருட்களை விற்க அல்லது விற்பனை தளத்திற்கு நண்பர்களை கொண்டு செல்ல என்றால் அதுவும் சரி.



நான் ஒரு புகழ் பெற்ற நபர்.என்னுடன் பலர் பேச முனைந்து நண்பர் அழைப்பு விடுகிறார்கள் என்றால் அதுவும் சரி.



ஆனால்



ஒரு 15 அல்லது பதினாறு வயது பெண் அல்லது பையனின் கணக்கில் ஆயிர கணக்கில் நண்பர்கள் இருந்தால் அது எங்கே அவர்களை கொண்டு போய் விடும் என்பதை யோசியுங்கள்.
 
ஒவ்வொரு விடயத்தையும் யோசித்து யோசித்து செய்யும் பெற்றோர்களுக்கு இது பெரிய சவால் தான். உங்கள் மகன் அல்லது மகளின் கணக்கில் இருக்கும் நண்பர்களின் எண்ணிக்கையை கண்காணியுங்கள்.




மற்றவர்களுக்கு வருவோம்.

யார் யார் எப்படியெல்லாம் உபயோகபடுத்துகிறார்கள் என்று விவரித்தேன். அப்படி ஒரு முகம் தெரியாத நண்பரின் நட்பினால் நீங்கள் பெற போவது என்ன? அவரின் இணையதளத்தை மற்றவர்களுக்கு கொண்டு செல்லவோ அல்லது அவரின் கருத்துக்களை நீங்கள் கேட்கவோ விரும்பவில்லை என்றால் முதலில் அவரின் கணக்கினை உங்கள் நண்பர் வட்டத்தில் இருந்து துண்டியுங்கள். அதிலே பாதி பிரச்சினைகள் குறையும்.



தெரியாத நண்பரின் கணக்கில் எழுதியிருக்கும் வாசகங்களை அழுத்தி அது வேறு ஒரு தப்பான தளத்தில் உங்களை விட்டுவிட்டால் என்ன செய்வது? அதுவும் குடும்பத்தில் அனைவரும் இருக்கும்போது நடந்தால்?

அடுத்த பதிவில் போலிகளை கண்டுபிடிப்பது எப்படி என்று பதிய உள்ளேன்.

2 Response to "போலி முகங்கள்-2"

  1. KamalaKannan says:

    I liked this view. This is True.
    Keep writing

    நன்றி கமலகண்ணன்.

Popular Posts