Showing posts with label இந்தியா. Show all posts
Showing posts with label இந்தியா. Show all posts

அறிவிக்கப்படாத யுத்தம்

ஆண்டவன் கொடுக்கிறான். நான் பெற்று கொள்கிறேன் என்று நமது எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகமாகி வருகிறது. இதில் எம்மதமும் விதிவிலக்கில்லை. நமது தலைவர்களாவது நமக்கு வழிகாட்டுவார்கள் என்று பார்த்தால் அவர்கள் இதை பற்றி திறப்பதிற்கு பதிலாக இதனை ஊக்குவிக்கும் தொலைக்காட்சிபெட்டிகளை வாங்கி வழங்கி அதில் ஒரு தொகை பார்ப்பதையே வேலையாக கொண்டுள்ளனர். நான் என்ன தான் நேராக விடயத்திற்கு வராமல் பேசினாலும் இந்த பதிவு நமது மக்கள்தொகை பற்றியது.


முன்பெல்லாம் பத்து பதினைந்து பிள்ளைகள் பெற்று கொள்ளுவார்கள். அதில் குறைந்தது இரண்டு அல்லது மூன்று குழந்தைகள் வளரும் பொது இறக்க நேரிடும். வறுமையினால் மட்டும் தான் இந்த இறப்பு என்று கிடையாது. அப்போது இருந்த நோய்கள் எல்லாம் இப்போது இல்லை. ஒரு வேளை இருந்தாலும் அதற்கான தடுப்பு மருந்துகள் எல்லாம் கிடைத்து விடுகின்றன. அதனால் முன்பு எப்படி பெற்று எடுத்து வளர்த்தார்களோ அதே வீதத்தில் போக வேண்டிய தேவை இப்போது இல்லை. முன்பு வீட்டில் பதினைந்து பேர் இருந்தால் விவசாயம் செய்ய வெளியாட்கள் எல்லாம் தேவை இல்லை. அந்த குடும்பமே அந்த வேலையே செய்ய இயலும். இப்போது பதினைந்து பேர் ஒன்றாக இருக்கும் குடும்பங்கள் ரொம்ப குறைவு. அவர்களும் விவசாயம் பார்த்து சாப்பிட்டால் வீடு தாங்காது என்பதே நிலையாக இருப்பதால் ஆளுக்கு ஒரு வேலை என்று பார்த்து கூட்டு குடும்பம் என்பதை பெயருக்காவது கடைபிடிக்கின்றனர்.




ஒவ்வொரு பிரச்சினைக்கும் ஒவ்வொரு காரணம் இருக்கும். ஆனால் எல்லா பிரச்சினைக்கும் எனக்கு தெரிந்து இதுவொன்றே காரணம்.




இலங்கை சுதந்திரம் அடையும்போது இருந்த அதே அளவில் தான் ஈழத்தமிழர்கள் இருக்கிறார்கள். ஆனால் சிங்களர்களோ தங்களின் மக்கட்செல்வங்களை பெருக்கியுள்ளனர். இதனால் முன்னர் இருந்த விகிதாச்சாரம் முற்றிலும் மாறியுள்ளது. ஒற்றை பிள்ளை பிள்ளை பெற்றவனுக்கும் பதினைந்து பிள்ளைகள் பெற்றவனுக்கும் ஒரே அளவு முதல் தலைமுறையில் இருப்பதாக கொண்டால் மூன்றாம் தலைமுறையில் ஒற்றை பிள்ளை பெற்றவனின் குடும்பம் மற்றவனின் குடும்பத்தை விட பல மடங்கு வசதி படைத்து இருக்கும். அப்போது வரும் தாழ்வு மனப்பான்மையால் இந்த பதினைந்து பிள்ளைகள் பெற்றவனின் குடும்பம் எப்போது அவர்களை கவிழ்க்கலாம் என்று இருக்கும்.



சாதாரண அண்ணன் தம்பிகளிடமே இந்த பிரச்சினைகள் இருக்கும்போது ஒரே தீவு இரு வேறு இனங்கள் ஒன்றாக இருக்க வாய்ப்பு இல்லை.

முன்பெல்லாம் இருந்த விலை இப்போது இல்லை. எல்லாம் மாறிவிட்டது என்று சொல்பவர்கள் முதலில் அவர்களின் குடும்ப உறுப்பினர்களின் எண்ணிக்கை எத்தனை? அவர்களில் எத்தனை பேர் ஒரே இடத்தில் இருக்கிறார்கள் என்று பார்த்தால் புரியும். (இப்போதைய சூழலில் மக்கள்தொகை குறைக்க கூட்டு குடும்பமும் விவசாயமும் தான் சரியான தீர்வாகும். இதை சொல்கின்ற நானே இதை செயல்படுத்த முடியாது என்கின்ற நிலை என்று இருப்பதால் அடுத்தவர்களை குறை சொல்லவும் முடியாது. :-) ). மக்கள்தொகை பெருக்கம் என்பது எல்லாம் சென்றுவிட்டது. இப்போது இதன் பெயர் வெடிப்பு.




எப்போதும் நாம் எந்த ஒரு துறையிலும் முற்றிலும் தன்னிறைவு பெற்ற நாடு கிடையாது. ஒவ்வொரு விடயத்திலும் தன்னிறைவு என்ற பெயரில் நாம் ஊரை அல்ல நாட்டை ஏமாற்றி கொண்டு இருக்கிறோம். (அது பற்றி ஒரு பெரிய பதிவு போட வேண்டிருக்கும்) அப்படி இருக்கும்போது நமது மக்கள்தொகைக்கு ஏற்ப நாமும் விவசாமும் பார்க்கவில்லை. வெளிநாடுகளில் இப்போது வாங்கும் விவசாய பொருட்களின் எண்ணிக்கைகளும் அதிகரித்து ஒரு அளவில் மாத்திரைகளை மட்டுமே சாப்பிடும் நிலை இங்கே வரலாம். அல்லது இந்தியாவிற்கு ஏற்றுமதி செய்ய கூடாது என்று அந்த நாடுகளும் முடிவு எடுக்கும் நிலை வரலாம்.நம்ம மக்கள்தொகை தான் வெடிப்பு என்று சொல்கிறோம். அவர்களுடையது மக்கள்தொகை பெருக்கமே. பெருக்கத்தை உள்நாட்டில் இருக்கும் பொருட்களை கொண்டே சமாளிக்க முடியும். அப்படி இருக்கும்போது அவர்களின் தேவை போகவே நமக்கு ஏற்றுமதி செய்ய இயலும். ஒரு நாட்டில் ஒரு முறை உணவு தட்டுபாடு வந்தது என்றால் முதலில் தடை செய்வது உணவு பொருட்கள் ஏற்றுமதியை தான். அப்படி ஒரு நாடு தனது தேவைக்காக அங்கே ஏற்றுமதி தடை கொண்டு வந்திருக்கும்போது எங்கே என்ன செய்ய முடியும்? வெங்காயத்திற்கு பதில் தொலைக்காட்சி பெட்டியையா சமைக்க முடியும்.



அவன் கொடுக்கிறான். நான் வாங்குகிறேன். இதில் உனக்கு என்ன கஷ்டம். யாருக்கு என்ன நஷ்டம். எந்த ஒரு இலவசமும் முதலில் இனிக்க தான் செய்யும் பின்னர் அதுவே பரவி நம்மை முடமாக்கும். எப்போது எல்லாம் தொலைகாட்சியை பார்க்கிறோம்? பொழுது போகவில்லை என்றா? சரி. இது விவசாயம் செய்பவர்களுக்கு பொருந்துமா? நிச்சயம் பொருந்தாது. அப்படி இருக்கும்போது தொலைகாட்சிகளின் எண்ணிக்கை மக்கள்தொகையினால் பெருகி தெருவிற்கு ஒன்று இருந்த போதே நாம் நாள்கணக்கில் அதனை கண்டு களித்தோம். இப்போது வீட்டுக்கு வீடு என்னும்போது எப்படி இருக்கும்?



இப்படி மக்கள்தொகை அதிகமாக்கும் பொருள் தருவதை விட(தொலைகாட்சியில் நடுஇரவில் வரும் பாடல்கள் எல்லாம் கேட்ட பின்னர் சும்மாவா படுக்க முடியும்) அரசே குடும்பக்கட்டுப்பாட்டை கட்டாயமாக்கலாம். இல்லை என்றால் இலவசம் என்று கேட்கும் எல்லாருக்கும் ஆணுறையை மட்டும் இலவசமாக கொடுக்கலாம். (இதனை பெறுவதற்கும் யோசிப்பார்கள்) நம்மை விட மக்கள்தொகை அதிகம் உள்ள சீனா இப்போது மக்கள்தொகை வெடிப்பை தடுக்க குடும்பகட்டுபாட்டு திட்டங்களை கட்டாயமாக்கி உள்ளது. நாம் இரண்டாம் இடத்தில் தானே என்று நினைக்கிறோம். ஆனால் நாம் தான் முதலிடத்தில் இன்னும் பத்து வருடத்தில் இருப்போம். சீனாவின் உணவு உற்பத்தி தன்னிறைவு அடைந்து பல வருடங்கள் ஆகின்றது. அதே நேரத்தில் அவர்கள் மக்கள்தொகையும் கட்டுக்குள் கொண்டு வந்து உள்ளார்கள். அடுத்த பத்து வருடங்களில் என்ன செய்வது என்று அங்கே ஒரு செயல்திட்டத்திற்கு வந்து விட்டார்கள். ஊழலும் குறைவு( ஊழல்களுக்கெல்லாம் சாதாரணமாகவே மரண தண்டனை கிடைப்பதாக கேள்வி).



அடுத்த பத்து வருடத்திற்குள் ஒரு ஒழுங்கற்ற ஒழுங்கினமான செயலற்ற நிலையில் இருக்கும் நாடாக இந்தியா இருக்க வாய்ப்பு இருக்கிறது.



  • இதுவரை ஊழல்கள் செய்தவர்கள் எவரும் தண்டிக்கப்படவில்லை.
  • ஊழல்கள் எல்லாத்துறையிலும் மலிந்து போய்விட்டன.  
  • மக்கள்தொகையை கட்டுக்குள் கொண்டுவர முயற்சிகள் இல்லை. 
  • உணவு உற்பத்தியில் தன்னிறைவு அடையவில்லை. 
  • மக்கள்தொகை வெடிப்பு ஒரு அளவில் யாரும் யாரையும் குறை சொல்ல முடியாத நிலைக்கு தள்ளும்.



உதாரணம்: ராணுவ வீரர்கள் லஞ்சம் பெற்று கொண்டு எல்லைகளை விட்டு கொடுத்தால் என்னவாகும் ?

 சரி. எல்லாரும் தானே இதில் பாதிக்கப்படபோவது. அப்புறம் என்ன நமக்கு கவலை என்கிறீர்களா?



அதிலும் ஒரு சிறு பிரச்சினை இருக்கிறது. ஊழல்கள் செய்பவர்கள் எல்லாரும் மேலை நாடுகளில் செண்டு உட்காந்து விடுவார்கள். இங்கே மட்டுமே சொத்து வைத்து இருக்கும் அனைவரும் ஒரு நாள் சோத்துக்கு அலைவது நிச்சயம். என்னடா ஊழல்களை பற்றிய பதிவு போல இருக்கிறது என்று நினைக்கிறீர்கள் தானே? மக்கள்தொகை மிகவும் குறைவாக இருந்தபோதும் ஊழல்கள் இருந்தன. ஆனால் சிறிய அளவில். மக்கள்தொகையும் ஊழல்களும் ஒன்றுக்கு ஒன்று தொடர்பானவை. மக்கள்தொகை கூடும்போது அந்த தொகுதியில் இருக்கும் மக்களுக்கு செய்வதற்கென்று வழங்கப்படும் தொகையும் அதிகமாகும். அதில் அடிக்கும் கமிசனும் அதிகமாகும். இது தான் நியதி.



எல்லா பாதுகாப்பு நிறுவனங்களின் கணக்கெடுப்புகளும் சீனா இந்தியாவின் மீது எப்போது வேண்டுமானாலும் படையெடுக்கலாம் என்று உள்ளன. ஆனால் சீனாவிருக்கு தெரியுமோ தெரியாதோ நம்மை நாமே அழிப்பதற்கு ஏற்கனவே நாம் ஒரு போர் தொடுத்து உள்ளோம் என்பது. இந்த கணிப்புகளும் நினைப்புகளும் போரியல் தந்திரங்களும் மாறக்கூடும். ஆனால் நம்மை நாமே அழிக்க மக்கள்தொகை விட பெரிய ஆயுதம் உலகில் இல்லை.



 

புலி பயம் காட்டி ஊழலில் இருந்து தப்பித்து கொள்ள கருணாநிதி முயற்சி

ஸ்பெக்ட்ரம் பிரச்சினையை எப்படியெல்லாம் திசை திருப்பலாம் என்பதற்கு நேற்று தான் ஒரு பதிவு போட்டேன். அந்த பூச்சாண்டி எல்லாம் ஒத்து வராததால் சோனியா குடும்பம் எதற்கு பயப்படும் என்று பார்த்து கொண்டிருந்த கலைஞர் இப்போது புலிகள் தாக்குதல் நடத்துவார்கள் என்று கிலி வேறு கிளப்பியுள்ளார்.

லத்திகா சரண் ஒரு தேர்ந்த போலிஸ் அதிகாரி என்ற தரத்தினை எப்போதோ இழந்து விட்டார் என்றே தோன்றுகிறது. தமிழீழ ஆதரவாளர்களை நோக்கி இவர் எடுக்கும் ஒவ்வொரு நடவடிக்கையும் சர்ச்சைகளில் கொண்டு போய் தான் முடிந்துள்ளன.

ரயில்வே தண்டவாளத்தில் வெடிகுண்டு வைத்து அந்த வழியாக செல்லும் ரயில்களை தகர்க்க முயற்சி செய்ததாக காவல்துறை அந்த ஒரு வாரத்திலே பல கதைகள் சொன்னது. அதை சொன்னதும் நமது லத்திகா சரண் தான்.
அதே போல் சென்னையிலும் தண்டவாளத்தில் கற்களை வைத்து சமூக விரோதிகள் முயற்சி செய்தனர் என்றனர். ஒரே நேரத்தில் ஒரு மனிதர் இரு இடங்களில் இருந்து இரு வேறு செயல்களை செய்ய முடியாது என்பதால் அதற்கு காரணம் என்று இவர்களால் கைது செய்யப்பட்டவர்கள் எல்லாம் விடுதலை செய்யப்பட்டனர்.

இதில் நமது உளவுத்துறை எவ்வளவு சீரழிந்து வருகிறது என்பதற்கு தமீழத்தில் இருந்து இங்கே தங்கிருக்கும் பெண்களிடம் தங்களது காம லீலைகளை அரங்கேற்றி உள்ளனர் தமிழக உளவுத்துறையினர்.

இவர்கள் எப்போதுமே புது கதைகளை சோடிக்கவும் ஒரு பிரச்சினையை திசை திருப்ப மற்றொரு பிரச்சினையை செய்வதற்குமே பயன்பட்டு இருக்கின்றனர்.


இவரே தான் சொல்வதாக ஒரு செய்தியும், மத்திய உளவுத்துறையும் ராவும் சொல்வதாகவும் ஒரு செய்தியும் பரப்பபட்டது.   எது எப்படி இருந்தாலும் ஊழல்களில் இருந்து தப்பிக்க இப்படியெல்லாமா சொல்லுவது.

அப்படி ஒருவேளை உளவுத்துறை என்று ஒன்று இருந்தால் இங்கே நடக்கும் அசம்பாவிதங்களை முன்னரே தடுத்திருக்க முடியாதா என்ன?

விடுதலையான சீமான் ஆவேசம் செய்திக்கு தினமலரில் வந்த முட்டாள்தனமான விமர்சனங்கள்.

தினமலரின் கோமாளிகளுக்கு ஒரு கேள்வி. தினமலரில் வந்த சீமான் பற்றிய செய்திக்கு உங்களின் கருத்துக்களை பார்த்தேன். மிக்க நன்றி.


ஊழல்களில் ஊறி வளர்ந்த காரணத்தால் புதிதாக யார் நல்லது பற்றி பேசினாலும் உங்களுக்கு கோபம் வருகிறதா? உங்களின் மூலையில் இருப்பது மூளையா? இல்லை களிமண்ணா?

தமிழக அரசியலுக்கு தீர்வு சொல்ல வக்கில்லை. உங்களுக்கெல்லாம் ஒரு பேப்பர். அதில் எழுத உங்களை போன்ற அறிவு ஜீவிகள் இருக்கும்வரை இமாய ஊழல்களுக்கு இந்தியாவில் பஞ்சம் இருக்காது. உங்கள் பேப்பரில் வரும் செய்திகளுக்கு நீங்களே கருத்துக்களை திணிப்பதை விட்டுவிட்டு நேரடியாக பேசுவதற்கு கலந்துரையாடல்கள் நடப்பதற்கு ஏற்பாடு செய்யவும்.



கோழைகள் போல கருத்துக்களை நீங்கள் சொல்லுவதை மட்டும் போடுவதை நிறுத்துங்கள். நீங்களும் போங்கடா நீங்களும் உங்கள் பத்திரிக்கை தர்மமும்.

ஒவ்வொரு பிரச்சினைக்கும் குறைகள் சொல்லுவதை விட்டுவிட்டு அந்த பிரச்சினைக்கு முழுவதுமான ஒரு தீர்வினை சொல்லுங்கள். அதற்கு வக்குள்ளவர்கள் கருத்துக்கள் பதியுங்கள். அதன் பின்னர் நான் உங்களை ஆதரிக்கிறேன்


ஜகன் - சென்னை,இந்தியா 2010-12-11 07:21:25 IST


சைமன் என்கிற சீமான் ஒரு ஹிந்து எதிரி (கருணாநிதியை போல்). இவர்கள் இருவருக்கும் வோட்டு போடாதீர்...


சந்திரன் - தமிழ்நாடு,இந்தியா 2010-12-11 07:18:36 IST

இலங்கைத்தமிழர் பிரச்சினை ஒரு போதும் தமிழக தேர்தலில் எதிரொலித்ததில்லை. இனியும் அது எதிரொலித்து ஒரு தாக்கத்தினையும் ஏற்படுத்தப்போவதில்லை. ஏனெனில் தமிழ் நாட்டு தலைவர்கள் அனைவரும் (இதில் யாருக்கும் விதிவிலக்கில்லை) அரசியல் விளம்பரத்திற்க்காக, சுயமையப்படுத்தும் நோக்கில், தனக்கு கூட்டம் கூடுகிறது என்பதற்காக ஒரு கருவியாகத்தான் இலங்கைத்தமிழர் பிரச்சினையை கையாளுகிறார்களே ஒழிய யாருக்கும் எந்த அக்கறையும் உண்மையில் கிஞ்சித்தும் கிடையாது. உண்மையில் 1983 முதல் 1990 வரை சாதாரண தமிழக மக்களுக்கும் ஒரு அக்கறை உணர்வு இலங்கை தமிழர்கள் மீது இருந்தது. அதை சுத்தமாக கெடுத்தது வே.பிரபாகரன் தான். பிரபாகரன் பிரேமதாசாவுடன் சேர்ந்து... "சிங்கள மக்களும் (இ) தமிழ் மக்களும் சண்டை இருந்தாலும் சகோதரர்கள்.. இதில் இந்தியா தலையிட வேண்டிய அவசியமில்லை என்று கூட்டறிக்கை விட்டார்...(அப்புறம் பிரேமதாசாவையே குண்டு வெடிப்பின் மூலம் கொன்றார் என்பது வேறு விஷயம்)...". அப்பொழுதே இந்தியா வின் அக்கறை குறைய ஆரம்பித்தது. பின் 1991 ல் ராஜீவ் காந்தியை கொன்றதன் மூலம் இருக்கும் கொஞ்சநஞ்ச இந்திய, தமிழக அனுதாபத்தினை இழக்க நேரிட்டது. அதன் பின் இலங்கை தாக்கம் என்று ஏதும் கிடையாது... இனியும் எந்த தேர்தலிலும் ஏற்ப்படப்போவதில்லை...சீமான்/நெடுமாறன்/பெ.தி.க/வைகோ போன்றவர்களுக்கு கூட்டம் வேண்டுமானால் கூடலாம்...ஓட்டு என்பது கிஞ்சித்தும் கிடையாது. (வைகோ மட்டும் அதிமுக உடன் (மாறினால் தி.மு.க உடன்) இருப்பதால் அந்த ஆதரவில் கரையேற வாய்ப்புள்ளது...). தமிழக மக்கள் இப்போது எதிர்நோக்கியிருக்கும் சொந்த பிரச்சினைகள் தான் தேர்தலில் எதிரொலிக்கும். சீமான் தனியாக நிற்கும் பட்சத்தில் ஒரு 500 லிருந்து 5000 ஓட்டு வேண்டுமானால் வாங்கலாம்...டெபாசிட் கெடைக்காது....


மண்ணின் மைந்தன் - bangalore,இந்தியா 2010-12-11 07:10:09 IST

அம்மா என்ன தமிழ் நாட்டுல பாத்து பைசா கூட கொள்ளை அடிகளையா என்ன... உங்கள மாதிரி முட்டாள்கள் இருப்பதால் தான் ஒரு புரட்சிய ஆரம்பிக்கவே முடியாது......


vicky - yangsusong,சீனா 2010-12-11 06:59:14 IST

பிக் காமெடி! என்னையா இப்படி காமடிய பேசறிங்க! நிறுத்த முடியவில்லை சிரிப்பை......

jopet - singapore,சிங்கப்பூர் 2010-12-11 05:30:42 IST

ஏன்டா கொய்யாலே! நீ இந்தியாவை கூறு போடுவே. அப்புறம் இலங்கையில புலிகளை காப்பாத்த இங்கே ரத்த ஆறு ஓடும்ன்னு சொல்லுவ. அதெல்லாம் பாத்துட்டு அரசாங்கமும் போலீஸும் சும்மாயிருக்கணும். அதுக்கு உன்னை புடிச்சி ஏன்டா அப்படி பேசுனன்னு கேட்டா அப்புடித்தான் பேசுவேன் பேசகூடாதுண்ணா எனக்கு தனி ஈழம் வாங்கிகுடுன்னு லூசுபயலுக மாதிரியே பேசுவீங்க. என்னமோ ராஜேபக்சே இங்கேருந்து சொன்னவுடனே அப்படியே டிரசவுர்ல ஒன்னுக்கு போயிட்டு பயந்துகிட்டு தனி ஈழம் கொடுக்கிர மாதிரி. வெண்ணைகளா உலகமே கண்டிச்சும் எவன பத்தியும் கவலை படாம அவன் இருக்குறான். இதுல இந்த 85 வயசு அம்னிதர் சத்தம் போடணுமா ? அவர் பதவியை ராஜினாமா செஞ்சாருன்னா அதை கேட்டு உலகமே ஸ்தமபிசிடுமா? ஆனா புலிகளை சுட மாட்டான்கலாம் தனி ஈழம் கிடைச்சிடுமாம். ஏன்டா நீ புலிகளுடைய காசுல படம் எடுத்த நன்றிக்கு எங்க தமிழகம் தான் கிடைசுச்சா?தமிழ் நாட்டு அரசியள்ள நீ ஜெயிச்சாலும் யாருக்காக சட்டசபையில போராடுவ. தனி ஈழம்ன்னு அங்கயும் கத்துவ. பிரபாகரன் வாழ்கன்னு அங்கயும் பேசுவ. உனக்கு, இந்த வைகோவுக்கு எல்லாம் MP சீட்டு MLA சீட்டு கிடைச்சாலும் என்ன பிரோஜனம். தமிழ் நாட்டுக்கோ இந்தியாவுக்கோ குரல் கொடுக்க போறதில்லை. அங்கயும் போய் ரத்தஆறு ஓடும், நாடு ரெண்டாகும்ன்னு தான் பேசுவீங்க. இதுல என்ன பியுட்டின்னா நீ தமிழ் தமிழன்னு பேசிகிட்டு சிங்களகாரியை வச்சே படம் எடுக்கறதுதான். போதும்டா தமிழை என்னமோ நீங்கதான் குத்தகை எடுத்து வச்சிருக்க மாதிரியும் நீங்க இல்லேனா தமிழ் அழிஞ்சிடுமுன்ற மாதிரி பேசாதிங்கடா. எங்களுக்கும் தெரியும்டா உங்க கூத்தெல்லாம். முதல்ல உன்னை, இந்த வைகோ இன்னும் ரெண்டு மூணு டிக்கெட்டுங்க இருக்கீங்க. உங்களை எல்லாம் இலங்கையில குடியுரிமை வாங்கி கொடுத்து அங்கேயே அந்த வன்னி காட்டுலயே குடியிருந்து சேவை செய்யுங்கடான்னு சொல்லணும். போதும்டா இங்கே தமிழ் நாட்டுல எங்க அப்பா அம்மாவுக்கு அண்ணன் தங்கச்சிக்கு நாங்க முழுசா எங்க கடமையா செய்யவே எங்களுக்கு நேரம் பத்தமாட்டேங்குது. இதுல இந்தியாவுக்கு வேற கடமை செய்யணும் இலங்கை தமிழர்களுக்கு வேற கடமை செய்யனும்ன்னா எங்களால முடியலடா? உன்னை மாதிரி லூசு பயலுக கத்தறதுன்னால கலைஞர் has already spent 100 கோடி, which is more than enough. Further more, has done like KALAINGAR for Tamizh refugees in TN....

sathish - melbourne,ஆஸ்திரேலியா 2010-12-11 04:05:24 IST


சபாஸ் ,,சரியான போட்டி,,,, கொசுவுக்கும்,,, கொரங்குக்கும் போட்டி,,, நேத்து முளைச்ச காளான்,, சினிமாவிலே இப்போ தம்பிடி குறையுது,, இல்லே ,,அதனாலே அரசியலில் பூந்துட்டாரு,,, அறிவுள்ளவன் பின்னாலேயும் பத்து பேர்,,, இது போலே அறிவு கெட்ட ....யம் பின்னாலேயும் பத்து பேரு,,,,...

மருதூர் மாணிக்கம் - madurai,இந்தியா 2010-12-11 01:46:09 IST
சீமானே! சிறையில் இருந்தும் உனக்கு புத்தி வரவில்லை. உன்னை இந்த முறை பாளையங்கோட்டையில் பல வருடங்களுக்கு உள்ளே அனுப்பி வைத்து விடுவோம். கலைஞரை எதிர்த்தால் டெபாசிட் கூட வாங்க மாட்டாய்....

குஞ்சுமணி - சென்னை.,இந்தியா 2010-12-11 01:07:28 IST
உனக்கு டிபாசிட் கிடைத்தால் நான் இங்கு கமெண்ட் எழுதுவதை நிறுத்துகிறேன். வாசகர்களும் உன்னை வாழ்த்துவார்கள். நீ வெற்றி பெற்றால் மனித தெய்வம் என நான் நினைக்கும் மருத்துவர் ஐயாவின் கட்சியில் இருந்து விலகி உன்னுடைய அடிமையாக வாழ்நாள் முழுவதும் இருக்கிறேன்....

பாரத புத்திரன் - chennai,இந்தியா 2010-12-11 00:29:37 IST
திரு சீமான் அவர்களே!உண்மையை வெறியோடு பேசுவது,அரசியல் தலைவர்களை ஒத்தைக்கு ஒத்தையா வாறியான்னு கூப்டுறது இதுல்லாம் இல்ல அரசியல். அர்ப்பணிப்பு...மகாத்மா மாதிரி. அடிக்க போறியா? முடிஞ்ச வரைக்கும் என்னை அடி. உடைத்து கைகள் ஓய்ந்த பின்பு ,உனது கோபம் தீர்ந்த பிறகாவது என் மக்களின் நிலை பற்றி யோசி....இது தான் தலைமைக்கு அழகு. உன்னோட மீட்டிங் கொஞ்சம் கேட்டேன். ரொம்ப கேவலமா இருக்கு. கருப்பு சட்டை போட்டு பெரியார் பக்தன்னு சொல்றீங்களே!பெரியாருக்கு இருந்த எதிரியையும் மதிக்கும் பண்பு உங்களுக்கு இல்லாமல் போனது வேட்க கேடு தானே? வாய்க்கு வந்ததெல்லாம் பேசும் வழக்கம் தொண்டனுக்கு இருந்தால் தலைவனுக்கு பிரச்சனை இல்லை, ஆனால் அந்த பழக்கம் தலைவனுக்கு இருந்தால் முதல் அடி உனக்கு அல்ல,உன்னை நம்பி வரும் தொண்டனுக்கே;,,,,,,,,,,,,,,,,,,,,,,பாரத் மாதா கி ஜெய்.தேசம் காப்போம்,தேசியம் காப்போம்....

கே.கைப்புள்ள - nj,இந்தியா 2010-12-11 00:13:28 IST
யாருடா இவன் இந்த சீமான் கோமான். இவன் யாரு இவன் முதல்ல. நீயெல்லாம் இந்த மாறி பேசுர அளவுக்கு ஜனநாயகம் இருக்கு. அதனாலதான் நீ கொரல் விடுற. நீயெல்லாம் யார்ன்னு நெனச்சு சும்மா சவுண்ட் விட்டுகிட்டு திரியிற? இது மாறி சின்ன சின்ன கொசு தொல்ல தாங்கலப்பா....

Chandra - Denver,யூ.எஸ்.ஏ 2010-12-11 00:11:33 IST
Do contest against Kalaignar and lose deposit. You need to take a oath that, if you lost the deposit, you will never speak agaist him. It is the people who decide about who win or loose. Find out your real support in the ground by contesting against Kalaignar....

ராஜீவ் காந்தி என்னும் மனித மிருகம்-6

ஈழதமிழர்கள் படுகொலையில் ராஜிவ்காந்தியின் பங்கு என்று எழுத ஆரம்பித்தால் இந்த பதிவுகள் எண்ணிக்கை எப்படியும் நூறினை தாண்டும்.


ஜால்ரா போடுவதற்கு யாராவது இருந்தால் நல்லது என நினைக்கும் அரசியல்வாதிகள் தங்களுக்கு ஜால்ரா போடுபவர்கள் தான் முதல் எதிரிகள் என்பதை உணர வேண்டும். அப்படி அவருக்கு வெளிநாட்டு கொள்கை என்ற பெயரில் தங்களின் வளத்தை வளர்த்து கொண்ட அதிகாரிகள் தான் அதிகம். அத்தகைய அதிகாரிகள் தங்களுக்கு சொந்தமான அல்லது தங்களுக்கு ஆதாயம் தரும் நிறுவனங்களின் கொள்கைகளை தான் தூக்கிபிடிப்பதில் அக்கறை காட்டினர். இலங்கையை பிரித்து ஈழம் அமைப்பதென்றால் அதற்கு ஒரே ஒரு போராளி குழுவை மட்டும் வளர்த்தாலே போதும். ஆனால் அதையே பல போராளி குழுக்களாக வளர்த்து விட்டு அதன் மூலம் இலங்கையை தன கட்டுபாட்டில் வைக்க வேண்டும் என்பதே இந்தியாவின் அப்போதைய இலங்கையின் மீதான வெளியுறவு கொள்கையாக இருந்தது.




வெளியுறவு கொள்கைக்காக அடுத்தவர்களை ஏமாற்றியது போல் நம்மை நாமே ஏமாற்றி விளையாடும் விளையாட்டு ராஜீவ் காந்தியின் காலத்திலேயே வந்தது. உதாரணம் மாலத்தீவு புரட்சி. அதில் ஆதியும் அந்தமும் இந்தியர்களே. ஆட்சியை பிடிக்க நினைக்கும் எதிர்க்கட்சி தலைவரை ஆட்சியில் உட்கார வைக்க இந்தியா எடுத்த முயற்சி தோல்வி (உளவுத்துறையின் வேலை). ஆனால் அதையே ராஜ தந்திரமாக மாற்ற இந்தியாவே படைகளை அனுப்பி புரட்சியை தடுத்தது. இதில் புரட்சி செய்ய அனுப்பப்பட்டவர்கள் தான்

பத்மநாபாவின் ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி. இவர்களை முழுவதுமாக கட்டுபடுத்தி வைத்திருந்தவர்கள் நமது உளவுத்துறையினர் தான். (புலிகள் தமிழின எதிரிகளையும் துரோகிகளையும் ஏன் கொல்லவேண்டும்? இவர்களை விட்டுவைத்தால் போராளிகளுக்கும் காசுக்காக கொலைகளை செய்பவனுக்கும் வித்தியாசம் இல்லாமல் போயிருக்கும்)



இவர்களையும் ஏனைய போராளி குழுக்களையும் புலிகள் அழித்தனர். அதில் சில எச்சங்களை மிச்சம் விட்டதால் வந்த விளைவு தான் இன்றைய அவர்களின் நிலை.(ஆனந்த சங்கரி, டக்ளஸ் தேவானந்தா போன்றோர் இன்னமும் உயிருடன் இருக்கின்றனர்.)


ஈழதமிழர்களை கொல்ல சொல்லி ராஜீவ் இந்திய அமைதிப்படையை அனுப்பவில்லை. ஆனால் அனுப்பிய படையை நிர்வகிக்க அனுப்பிய ஆட்கள் தங்களின் அதிகாரத்தையும் தங்களுக்கு தேவையானவற்றை இலங்கை அரசிடம் இருந்து பெற்று கொள்ள அவர்கள் இந்திய அரசும் இலங்கை அரசும் செய்து கொண்ட ஒப்பந்தங்களை மீறினர்.( சண்டைக்காரர்கள் இருவருக்கும் இடையில் போட்டால் தான் அதன் பெயர் ஒப்பந்தம். சண்டைக்காரனும் சாட்சிக்காரனும் போட்டு கொண்டால் அதன் பெயர் என்னவென்று தெரியவில்லை? இதை கூட ஒழுங்காக அமல்படுத்த முடியாத நாடு தான் நம் நாடு. இவர்களை நம்பி ஒப்பந்தம் போட்டவர்கள் எல்லாம் என்னவானார்கள் என்பதே தனி தொடராக எழுத வேண்டும்.)


முதலில் ஒப்பந்தங்களை மட்டுமே மீறிய அவர்கள் ஏற்கனவே அவர்கள் வளர்த்து வைத்த போராளி குழுக்களை வைத்து தங்களின் விளையாட்டை தொடங்க முற்பட்டனர். அதற்கு பதிலடி புலிகள் கொடுத்தனர். தாக்குதல் நடத்திவிட்டு மறைந்து கொள்வதென்ற கொரில்லா தாக்குதல்களை தாங்க முடியாமல் அப்பாவி மக்களை துன்புறுத்த தொடங்கினர். இந்த துன்புறுத்தல்கள் எல்லாம் பின்னர் வன்முறை, கற்பழிப்பு, கொலைகள் என்று போனது. அதுவே பின்னர் ராஜிவின் கைமீறி சென்று கூட்டம் கூடமாக தமிழர்களை கொல்லும் நிலையை உருவாக்கியது.( மக்களை துன்புறுத்தினால் போராளிகளை காட்டி கொடுப்பார்கள் என்று எதிர்பார்த்தார்கள். இப்போது போல் அப்போது யாரும் இல்லை)



இந்திய அமைதிப்படை செய்த அட்டுழியங்களை இந்த பதிவில் இணைத்து உள்ளேன்.


Download (PDF Zipped):


Volume 1 Part 1: http://www.mediafire.com/?emj0zigyjyu

Volume 1 Part 2: http://www.mediafire.com/?i5tzkzyjfny

Volume 1 Part 3: http://www.mediafire.com/?tz1mvzdgggz

தும்பை விட்டுவிட்டு அதிகாரிகளின் போக்கிலே சென்றால் அழிவது எதிரிகள் மட்டும் அல்ல தாங்களும் தான் என்பதை ராஜீவ் காந்தியின் வாழ்க்கை தந்த பாடமாக இருக்கட்டும்.

இந்தியா ஒரு ஈனபிறவிகளின் நாடு

என்னடா இந்தியாவினுள் இருந்துகொண்டு இப்படி எழுதி இருக்கிறானே என்று பார்க்கிறீர்களா? இந்தியாவில் இருந்து ஒழுங்காக வருமான வரிகள் செலுத்திவரும் அனைவரும் நாட்டை சாடுவதற்கு முழு உரிமை படைத்தவர்களே.அதிலும் நாம் தமிழர்கள் வேறு. ஈனபிறவிகள் எங்கு அதிகம் என்று கேட்டால் அதற்கு விடை தமிழ்நாடு என்று தான் வரும். யோசித்து பாருங்கள். நமக்கு வாய்த்த கட்சிகள் அப்படி. ஈனபிறவிகளை ஆட்சியில் வைத்து அழகு பார்ப்பதே நமது வேலையாக போயிற்று. இப்போது இருக்கும் மத்திய அரசு இரு வருடங்களுக்கு முன்னரே தோற்று இருந்தால் இப்போது வெளியே வந்து கொண்டிருக்கும் பல ஊழல்கள் அப்போதே வெளியே வந்திருக்கும்.

தாமதமாக கிடைக்கும் நீதியும் நிதியும் பயன் தராது. செத்தவன் கையில் கோடி ரூபாய் இருந்தால் என்ன ? இல்லாவிட்டால் என்ன? நீதி இப்போது எல்லாம் அவ்வளவு சுலபம் இல்லை. அவர்களை காப்பாற்றி கொள்ளவே அவர்களுக்கு தெரியாதபோது எப்படி நம்மை எப்படி காப்பாற்றுவார்கள். நம் தமிழ்நாடு எல்லாவற்றிலும் ஒருபடி மேல். யார் யார் எதிரிகள், துரோகிகள்   என்றே நமக்கு தெரியாமல் ஈழ பிரச்சினைகளுக்கு போராடி பல ஆயிரம் இனஉயிர்களை காவு கொடுத்திருக்கிறோம். இன்னும் கொடுக்க இருக்கிறோம். எனக்கு தெரிந்து ஆளும்கட்சியுடன் தொடர்பில் இருந்த, இருக்கின்ற அனைவரும் துரோகிகளே.( பெயரை குறிப்பிட்டு வம்பில் மாட்டிக்கொள்ள நான் தயாரில்லை). இதில் இவர்களே நமக்கு முன்னர் ஈழத்திற்கு குரல் கொடுப்பர். நாமும் நம்பி இறங்கியபின்னர் அவர்கள் பைகளை நிரப்பிக்கொண்டு சென்று விடுகிறார்கள். இதை எழுதவேண்டிய பத்திரிக்கைகளும் ஒன்றாக தண்ணி சாப்பிட்டு கொண்டு இருக்கிறார்கள்.(தண்ணியை மட்டுமே இங்கே எழுதி இருக்கிறேன். இதன் மூலம் வந்த வருவாய் வைத்து வீடு கட்டியவர்கள் அதிகம். மிச்சம் சொச்சம் எல்லாம் நிறையா இருக்கு. எழுதினால் இந்த பதிவு அசைவமாகி விடும்).

ஆளும்கட்சி தான் இப்படி என்றால் முக்கிய எதிகட்சிக்கு இந்த பிரச்சினையை எப்படி எதிர்கொள்வது என்றே தெரியவில்லை. எம்.ஜி. ஆர் இருந்தால் என்ன செய்திருப்பாரோ? அந்த அளவு இல்லையென்றால் கூட கொஞ்சம் முயற்சி செய்து இருக்கலாம். கடைசி நேரத்தில் கூறப்படும் வாக்குறுதிகள் மக்களை குழப்பமடையவே செய்யும். தெளிவாக்காது.நானும் ஈழ மக்களுக்காக போராடுகிறேன். நீங்களும் ஈழ மக்களுக்காக போராடுகிறீர்கள். இப்படி எல்லாருமே போராடியும் ஒன்றுமே நடக்காததற்கு இந்த ஈனபிறவிகள் தான் காரணம்.


அந்த ஈனபிறவிகள் செய்த காரியங்கள் மிகவும் எளிதானது.
நீங்கள் போராட்டம் நடத்தும்போது உங்களுடன் உங்களைவிட அதிகமான உணர்ச்சி பெருக்கோடு அவர்கள் நடந்து கொள்வார்கள். ஆனால் யார் எதிரி என்பது அவர்களுக்கு நன்றாகவே தெரியும். நீங்கள் அவர்களோடு  நடத்தும் போராட்டம் என்பது கட்டையால் பாம்பினை அடிக்கும்போது கம்பும் உடையகூடாது அதே நேரம் பாம்பும் சாக கூடாது என்று நினைப்பவர்களின் வழிகாட்டுதலுக்கு உள்ளாகும். உங்களுடைய கூட்டங்களில் உங்களின் அனுமதி இல்லாமல் ராஜபக்ஷேவை பற்றி பேசுவார்கள்.( பின்னர் அவரோடு கைகுலுக்குவது வேறு) நீங்களும் எவ்வளவு நல்லவர் என்றே நினைப்பீர்கள். உங்கள் கூட்டம் எப்பொழுது மக்களை நேரடியாக சந்திக்க செல்கிறதோ. அப்போது அவர்களின் உண்மை முகம் வெளிப்படும்.( இதை தான் பொன்சேகா அரசியல் கோமாளிகள் என்றார்.) எங்கே மக்கள் கொந்தளித்து விடுவார்களோ என்று இவர்களே பலவிசயங்களை செய்வார்கள். உண்ணாவிரதம், மனித சங்கிலி, அடிதடி என இவர்கள் செய்தது அனைத்துமே மக்களை குழப்புவதற்காக மட்டுமே. இவர்களால் எந்த  பிரச்சினைகளுக்கும் நிரந்தர தீர்வு கொடுக்க தெரியாது. முடியாது. ஆனால் பேச்சுக்கள் மட்டும் தெளிவாக இருக்கும். நம் நாட்டில் எல்லா மக்களுக்கும் உள்ள அதே ஞாபகமறதி  இங்கே தமிழ்நாட்டில் அதிகம் உள்ளது.

ஈழத்தில் இருந்த தலைவர் தான் தங்களின் நலத்திட்டங்களை செய்யவிடாமல் தடுத்தார் என்று கூறியவர்கள் ஓடி ஒளிந்து கொண்டுவிட்டார்கள்.இவர்கள் என்ன திட்டம் வைத்திருந்தார்கள்? மக்களை பன்னீரில் குளிப்பாட்டி சந்தனத்தை பூசி தினமும் விருந்துகள் கொடுத்து காப்பாற்றுவேன் என்று சொன்னவர்களிடம் ஒரே ஒரு கேள்வி.

அங்கே இன்னமும் உடுக்க உடையும் உண்ண உணவும் இருக்க இருப்பிடமும் இன்னமும் கிடைக்கலாம். என்ன செய்யலாம்? போராட்டம் நடத்தியவர்களும் ஓய்ந்து போய் நாட்கள் ஆகின்றன. நீங்கள் தானே சொன்னீர்கள் அதெப்படி அரசாங்கம் மக்களை கொல்லும் என்று. இராணுவ வீரர்களுக்கு பொழுது போகவில்லை என்றால் தமிழின பெண்களோடு விளையாடி பின்னர் கொல்கிறார்கலாம். என்ன செய்யலாம் சொல்லுங்கள்.


ஒரு காரியத்தை செய்ய சொன்னதாக கூறியதை நம்புவதற்கும், செய்ததாக சொல்வதை நம்புவதற்கும்  மிகபெரிய வித்தியாசம் இருக்கிறது.
உதாரணம் நமது ஆளும்கட்சியின் எம்பிக்கள் ராஜினாமா செய்வதாக கூறியதற்கும் உண்ணாவிரதம் இருந்து போர் நிறுத்தியதாக சொல்லியதற்கும் உள்ள வித்தியாசம் தான். இரண்டுமே ஒரே மனிதரின் பித்தலாட்டங்களில் ஒன்று தான். ஆனால் நம்பாமல் இருந்தவர்கள் ஒரு சிலர் மட்டுமே. ஏமாறுபவர்கள் இருக்கும்வரை ஏமாற்றுபவர்கள் இருக்கத்தான் செய்வார்கள் என்பது உண்மை தான். ஆனால் ஏமாறுபவர்கள் ஒரு நிலையில் ஏமாறுவதற்கு ஒன்றும் இல்லை என்ற நிலை வந்திருக்கும். அந்த நிலை தான் இப்போது. வளங்களும் உரிமைகளும் எப்படி இழந்து இருக்கிறோம் என்று அறிவதற்கு முன்னரே நமது கோமணங்கள் பிடுங்கப்பட்டு இருக்கும்.

அப்படி பிடுங்கியவரை கோமனபிடுங்கி என்றே அன்புடன் அழைக்கலாம். பறிகொடுத்தவரை என்னவென்று அழைப்பது?  களத்தில் போராடி தோற்றவர்களுக்கு வீரமரணம் கிடைக்கிறது. ஆனால் இங்கே போராட்டங்களில் ஏமாந்த நமக்கு என்ன பெயர் கொடுத்து அழைப்பது?

நம்மை ஈனபிறவிகள் என்று சொல்வதா இல்லை நம்மை ஏமாற்றியவர்களை ஈனபிறவிகள் என்று கூறுவதா?

Popular Posts