Showing posts with label நெடுஞ்சாலை உணவகங்களில் நடக்கும் பகல் கொள்ளை. Show all posts
Showing posts with label நெடுஞ்சாலை உணவகங்களில் நடக்கும் பகல் கொள்ளை. Show all posts

நெடுஞ்சாலை உணவகங்களில் நடக்கும் பகல் கொள்ளை

நம்மில் பலர் இந்த விஷயத்தை கவனித்து இருக்கலாம், ஒரு சிலர் இதில் ரொம்ப அவஸ்தைகளை பட்டு இருந்திருக்கலாம். அந்த ஒரு விஷயம் நெடுஞ்சாலை உணவகங்கள். நெடுஞ்சாலைகளில் நெடும்தூரம் பயணிக்கும் பயணிகள் தங்களை பயணத்தின் களைப்பில் இருந்து மீட்டு கொள்ளவே மேலை நாடுகளில் நெடுஞ்சாலை உணவகங்கள் ஏற்படுத்தப்பட்டன. நமது முன்னோர்கள் கட்டிவைத்த சத்திரங்களும் அதனை போன்றதாகவே இருந்துள்ளன. ஆனால் நமது கலாசாரத்தில் சத்திரங்கள் முதலில் இலவசமாகவும் பின்பு குறைந்த கட்டணத்தில் பயணிகளுக்கு உணவளித்து இருந்துள்ளனர்.


அப்படி இருந்த தமிழகத்தில் நெடுஞ்சாலை உணவகங்கள் என்ற பெயரில் பயணிகளின் ரத்தத்தை உறிஞ்சும் ஒரு சில உணவகங்கள் உள்ளன. தொழுதூர், விழுப்புரம், கொட்டாம்பட்டி, திருமங்கலம், அருப்புகோட்டை போன்ற இடங்களின் அருகே நடக்கும் நெடுஞ்சாலை உணவகங்களில் அடிப்படை வசதிகள் எதுவும் கிடையாது. அப்படி ஒரு வேலை கழிப்பிடம் இருந்தாலும் அதில் மூக்கை பிடித்து கொண்டு தான் செல்ல வேண்டும். உள்ளே தைரியத்துடன் சென்று மீண்டவர்கள் பின்னர் அங்கே சென்றதற்கான தொற்று நோய்களில் அவதி உற்றுள்ளனர். வெளியிலே சென்று மலம், சிறுநீர் கழித்து வருவது பேருந்தில் வரும் பயணிகளுக்கு நலம். ஆனால் அதன் அருகிலே உள்ள உணவகத்தில் உணவருந்தும் பயணிகளின் நிலை?



சரி வெளிப்புறம் தான் இப்படி சுகாதாரகேடுகளின் மையமாக இருக்கிறது என்றால் உள்ளே அழுக்கில் மூழ்கி எடுத்து இருக்கும் ஒரு அறையினை போன்ற அறையில் தான் உணவு பரிமாறப்படுகிறது. அங்கு வழங்கப்படும் குடிநீர் எப்படி இருக்கும் என்று சொல்ல தேவையே இல்லை. அந்த அளவிற்கு சுகாதாரமான :-) நிலையில் தான் இந்த நெடுஞ்சாலை உணவகங்கள் இருக்கின்றன.



சரி சுற்றுப்புறமும் சூழ்நிலையும் தான் சரி இல்லை. உணவாவது நன்றாக இருக்கும் என்று பார்த்தால் அதுவும் இல்லை. நாங்கள் சுடுவது தான் தோசை, நாங்கள் செய்வது தான் பிரியாணி என்று ஒரு உணவகத்தில் கூறியுள்ளனர். இரவு நேரத்தில் இந்த இரண்டு மட்டுமே அந்த உணவகத்தில் இருக்கும். யார் கேட்டாலும் அது மட்டும் தான் தருவார்கள்.



முட்டை குருமா விலை: 25 ரூபாய்

தோசை ஒன்று விலை :20 ரூபாய்



இங்கு வெளியிடங்களிலோ இல்லை நமது அருகே இருக்கும் உணவகங்களில் இப்படி விலைக்கு நன்றாக இல்லாத உணவு இருந்தால் நாம் என்ன செய்வோம். நாம் அமைதி பேர்வழியாக இருந்தால் அடுத்த முறை இந்த உணவகத்திற்கு வருவதை தவிர்ப்போம்.(அடுத்தவர்களிடமும் இதையே சொல்லி வர வேண்டாம் என்று கூறுவோம்) கொஞ்சம் தைரியமான ஆளாக இருந்தால் அங்கேயே சண்டை போட்டு செல்வோம். ஆக எப்படி இருந்தாலும் அங்கே வரக்கூடியவர்கள் எண்ணிக்கை குறையும். ஆனால் இந்த உணவகங்களில் அப்படி எதுவும் நடக்காது. அடுத்த உணவகத்தில்(உங்களுக்கு பிடித்த நெடுஞ்சாலை உணவகத்தில் பேருந்து நிற்காது) சென்று சாப்பிட வாய்ப்பு கிடையாது. நடுக்காட்டில் உள்ள இவர்களின் உணவகங்களில் சண்டையெல்லாம் போட முடியாது.

அப்படி போட்டுவிட்டு உங்களால் பாதுகாப்பாக செல்வது கடினம்.

இந்த உணவங்கள் எல்லாம் ஆளும்கட்சியில் இருப்பவர்களால் மட்டுமே நடத்தபடுகின்றன.(திமுக, அதிமுக கட்சி பிரமுகர்களால் அந்த அந்த கட்சிகள் ஆட்சியில்)இங்கே நடக்கும் கொள்ளைகளை யாரும் கண்டுகொள்வதும் இல்லை கேட்பதற்கும் யாரும் இல்லை என்ற நிலையே உள்ளது.


இது சம்பந்தமாக யாராவது இதற்கு முன்னர் வழக்கு பதிவு செய்து வழக்கில் வெற்றி பெற்று இருக்கிறார்களா என்று தெரியவில்லை.

Popular Posts