Showing posts with label கருணாநிதி. Show all posts
Showing posts with label கருணாநிதி. Show all posts

இலவசம் வேண்டுவோர் கவனிக்க

இன்று விஜய் டிவியில் நீயா நானா பார்க்கும்போது கவனித்த விஷயங்கள். இலவசம் வேண்டும் என்று கேட்கும் நபர்களுக்கு நான் கேட்க நினைத்த கேள்விகள் பின்வருமாறு


  1. பத்தாம் வகுப்பு மற்றும் பன்னிரெண்டாம் வகுப்பு மாணவர்களுக்கு மடிகணினி(Laptop) தேவையா? அவர்கள் அதில் படிப்பு சம்பந்தமாக என்ன செய்ய முடியும்? படம் பார்க்க முடியுமே (Except computer science students) என்று கூறுகிறார்களோ?
  2. மின்சாரமே இல்லாத வீட்டில் தொலைகாட்சிபெட்டியால் என்ன பயன்?
  3. படிப்பதற்கு இட ஒதுக்கீடு கொண்டு வந்தது சரியாக இருக்கலாம். அனைத்து சமுதாயமும் கல்வியில் பங்கேற்க வேண்டும் என்பதும் சரியே. ஆனால் வேலையில் இட ஒதுக்கீடு எந்த வகையில் நியாயம்? இட ஒதுக்கீடு என்பதற்கு பதில் எல்லாருக்கும் கட்டாய கல்வி கொண்டு வரலாமே. சரியாக படிக்காதவர்களை அரசு வேலையில் கொண்டு போய் உட்கார செய்தால் அவர்கள் என்ன செய்வார்கள்?
  4. இந்தியாவில் மானியத்தில் தான் பெட்ரோல், டீஸல் விற்கிறார்கள் என்கிறார்கள்? இது உண்மையா? பிறகு ஏன் விலையேற்றம் எல்லாம்? பக்கத்து நாடுகளில் இப்படி தான் விலை ஏறுகிறதா?
  5. தொலைகாட்சிபெட்டிகள் இல்லாதவர்கள் ஒரு கோடி பேர் என்றால் இவர்கள் ஏன் ஏற்கனவே தொலைகாட்சிபெட்டி இருப்பவர்களுக்கும் சேர்த்து தொலைகாட்சிபெட்டிகள் கொடுக்கப்பட்டு இருக்கின்றனவே அதற்கு என்ன செய்ய போகிறார்கள்?
  6. இலவசம் கொடுப்பதற்கு பதில் கல்வியை மேன்படுத்தலாமே. அனைத்து கல்லூரிகள், பள்ளிகள் அனைத்தையும் அரசுடமை ஆக்கலாமே. ஏன் அதை செய்யவில்லை.
  7. இலவச எரிவாயு இணைப்பு கொடுத்தல் தவறு இல்லை. அதற்கு ஏற்றவாறு தட்டுபாட்டை தவிர்க்க நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளதா? அடுப்பு எரித்து சமைக்கும் குடும்பங்கள் இந்த எரிவாயு இணைப்பினை எப்படி உபயோக படுத்த முடியும். சிலிண்டர் வாங்கும் அளவுக்கு பணம் அவர்களுக்கு எங்கே இருந்து கிடைக்கும்? அதற்கு பதில் அவர்களுக்கு வேலை வாய்ப்பு எற்படுத்திருக்கிறார்களா?
  8. அடிப்படை உரிமைகளே இன்னும் சரி செய்யாதபடாதபோது தற்போது அறிவித்துள்ள இலவசங்கள் மக்களின் மேல் வரிச்சுமையை  எற்றாதோ?
  9. வெளிநாடுகளில் சென்று படிக்கும் நம் மாணவர்கள் படிக்கும்போதே வேலை பார்க்கிறார்கள். உங்களால் படிப்புக்கு முழுதொகையும் செலுத்த முடியாது என்பதால் அந்த அந்த மாநிலங்களில் அவர்களுக்கு பகுதி நேர வேலைகள் கிடைக்க ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது. அதையே இங்கேயும் செய்யலாமே.
  10. அரசின் இலவசங்களால் படித்து விட்டு மேலை நாடுகளில் சென்று குடியேறிவர்களுக்காக தான்  IITs, IIMsஅமைக்கபட்டனவோ?
  11.  உண்மையிலே இட ஒதுக்கீட்டின்படி தான் அந்தந்த சமுதாயத்தின் பொருளாதாரம் இருக்கிறதா? தாழ்த்தபட்டவர்களிலும் பணக்காரர்கள் இருக்கிறார்கள். அய்யர் அய்யங்கார்களிலும் ஒரு வேளை உணவிற்கு கஷ்டபடுபவர்கள் இருக்கிறார்களே? ( நாங்கள் அப்போது கஷ்டப்பட்டோம் இப்போது அவர்கள் கஷ்டப்படட்டும் என்று சொல்லுவது மனித நேயம் இல்லையே)
  12. இலவச மானியங்கள் எல்லாம் எத்தனை ஏக்கர் நிலம் வைத்து இருப்பவர்களுக்கு கொடுக்கபடுகின்றன? ஏக்கர் கணக்கில் நிலம் வைத்து இருப்போர் தான் ஏழை விவசாயியா? உண்மையில் ஏழை விவசாயியை எப்படி இந்த அரசு கண்டுபிடிக்கிறது? வருமான வரி சான்றிதல் வைத்தா?  நில உச்சவரம்பு சட்டம் இன்னும் அமலில் இருக்கிறதா?
  13. வட்டிக்கு விட்டு சம்பாதிப்பவர்களும் வருடத்திற்கு பத்தாயிரம் ரூபாய் தான் சம்பாதிப்பதாக கணக்கில் காட்டுகிறார்கள். அவர்கள் பிள்ளைகளும் மானியங்களை(Scholorship) தானே வாங்குகிறார்கள்.
    எதன் அடிப்படையில் மானியங்கள் கொடுக்கபடுகின்றன. வருடத்திற்கு இவ்வளவு தொகையை செலவு கணக்கில் காட்ட வேண்டும் என்பதற்காகவா?
  14. வேலையிலும் இட ஒதுக்கீடு வேண்டுபவர்கள் ஏன் தனியார்துறையில் அதை கட்டாயபடுத்தவில்லை?
  15. வேலையிலும் இட ஒதுக்கீடு வேண்டுபவர்கள் அவர்களின் நிறுவனங்களில் முதலில் கொண்டுவரலாமே. முதலில் சதம் பெண்களுக்கு கொடுத்து இதனை ஆரம்பிக்கலாமே. (வேலையிலும் இட ஒதுக்கீடு வேண்டுபவர்கள் தங்களின் நிறுவனங்களில் தங்களின் சமுதாயத்தை சேர்ந்தவர்களுக்கே முன்னுரிமை என்றோ அல்லது திறமையின் அடிப்படையிலோ தானே வேளை கொடுக்கிறார்கள்)
  16. தனியார் நிறுவனங்கள் எல்லாம் மென்பொருள் நிறுவனங்கள் அமைக்கும்போது ஏன் அரசு அந்த தொழில் இறங்கவில்லை?

மீண்டும் தகவல் சொல்ல வந்துவிட்டார்கள்

ஐநா சபையின் ஈழத்தமிழர்களின் படுகொலை சம்பந்தமான அறிக்கை வந்துவிட்டது.எல்லாருக்கும் தெரிந்த ஐநாவுக்கு தெரியாத அந்த படுகொலைகளை பற்றி ஐநா கடின முயற்சிகளுக்கு பின்னர் வெளி கொணர்ந்துள்ளது.(?) இந்த அறிக்கையின்படி இலங்கை போர்குற்றம் செய்துள்ளது உறுதியாகிறது. சரி ஒரு வழியாக அறிக்கை வந்து விட்டது அடுத்தது என்ன? அது தான் அறிக்கை கொடுத்து விட்டோம்ல வேறு என்ன உங்களுக்கு வேணும். கொல்லப்பட்டது உண்மை.(அப்படி தான் கொல்லுவாங்க-இந்தியா) அதற்காக பஞ்சாயத்து எல்லாம் செய்ய சொல்லக்கூடாது.
இந்தியாவிலே இந்திய குடிமக்கள் கொல்லபட்டதையே நாங்கள் கணக்கில் கொண்டு வரவில்லை. அப்புறம் எப்படி இந்தியாவை பஞ்சயாத்துக்கு அழைக்கிறார்கள் இந்திய அரசியல்வியாதிகள்( நானும் இந்திய குடிமகன் தான்.) ஒரு வேளை வேடிக்கை பார்த்த பிராந்திய வல்லரசு என்கின்ற முறையில் தலையிட சொல்கிறார்களோ? அதுவும் கிடையாது. காந்திய நாடு என்று ஒரு காலத்தில் சொல்லப்பட்ட காரணத்தால் அழைக்கிறார்களோ? அதுவும் கிடையாது.(திலீபனின் அகிம்சை உண்ணாவிரத போராட்டம் அவரின் உயிரை குடிக்கும் அளவுக்கு சென்றும் இந்தியாவின் கல்மனம் இறங்கவில்லையே.) இலங்கை இனபடுகொலைகளில் இந்தியாவின் பங்கு இல்லாமல் இருந்திருந்தால் கூட பஞ்சாயத்து செய்யும் அருகதை இருந்திருக்கலாம். அருகதையே இல்லாத ஒரு நாட்டின் தலைமையிடம் முறையிட்டால் என்ன நடக்கும்? என்ன தான் எதிர்பார்க்கிறார்கள்? இந்தியா களத்தில் இறங்கி ராஜபக்ஷேவை கைது செய்து இந்தியாவிலேயே அதுவும் தமிழ்நாட்டில் வேலூர் சிறைச்சாலையில் அடைத்து விடுவார்களா  என்ன?
வேறு என்ன எதிர்ப்பார்க்கிறீர்கள் மக்களே?
சரி அடுத்த நாட்டின் பிரச்சினைகளில் நடுநிலையுள்ள எந்த நாடும் தலையிடாது(அந்த நடுநிலையான நாடு இந்தியா இல்லை). நம் நாட்டுக்குள் இருக்கும் பிரச்சினைகளை பார்க்கலாம் என்றால் ஊழல் தான் முதலில் வருகிறது. ஸ்பெக்ட்ரம் அலைகற்றை ஒதுக்கீட்டில் ஊழல் இருப்பது பாமரர்களுக்கும் தெரியும். அதை விசாரிக்க தணிக்கை குழு ஒன்று அறிவித்து அதன் அறிக்கை கூட வந்துள்ளது மன்னிக்கவும் கசிந்துள்ளது. ஊழல் நடந்தது உண்மை தான் ஆனால் ஒன்றும் செய்ய முடியாது என்பதே குழுவின் உண்மையான பரிந்துரை. உண்மையிலே மடியில் கணம் இல்லையென்றால் ஏன் இப்படி ஓடி ஒளிய வேண்டும்? நீதிமன்றத்தில் சந்திக்க வேண்டியது தானே.





உண்மையில் மேல் சொல்லப்பட்ட இரண்டிலும் காங்கிரெஸ் திமுகவின் பங்கு இருக்கிறது. எல்லாருக்கும் தெரியும். ஆனால் தெரியாத விஷயம் ஒன்றே ஒன்று தான்.

ராஜபக்ஷேவையையும் கருணாநிதி குடும்பத்தையும் யாராலும் ஒன்றும் செய்ய முடியாது. அப்படி செய்வதற்கு ஒரே ஒருவருக்கு மட்டுமே தகுதி இருக்கிறது. அந்த நபர் சோனியா காந்தி. அவருக்கும் இது தெரியும். அதனால் தான் இருவரும் ஈழத்தமிழர்களின் போரில் சோனியா காந்திக்கு இருக்கும் அந்த சந்தற்பத்தை அவருக்கு எடுத்து கூறி களத்தில் இறக்கினர். அவரும் விடுவாரா என்ன? களத்தில் இறங்கி கொன்று குவிக்க ஒப்புதல் அளித்தார். புலிகளிடம் சிக்கியிருக்கும் மக்களை காப்பாற்ற மனிதாபிமான நடவடிக்கையில் இறங்கினர். சுதந்திரமாக புலிகளின் நாட்டினுள் வாழ்ந்த ஐந்து லட்சம் மக்களில் மூன்று லட்சம் மக்களை கொன்று விட்டு மற்றவர்களை முகாம் என்ற பெயரில் அடைப்பதற்கு பெயர் தான் மனிதாபிமான நடவடிக்கை.



இந்த நடவடிக்கை இப்போது அண்டை நாட்டில் நடந்துள்ளது. சரி. நம் நாட்டில் ஊழல்வாதிகளை தடுக்க முடியாத அதே அரசு இந்திய அளவில் மட்டும் அல்ல உலக அளவிலும் ஊழல்களை வளர்த்து வருகிறது. ஐநா நினைத்து இருந்தால் இந்த படுகொலைகளை தடுத்து இருக்க முடியும் என்பது ஐநாவின் முன்னாள் அதிகாரி கூறியிருக்கிறார். சரி இதை தவிர்த்து இருக்க முடியும் என்றால் தடுக்காமல் இருக்க யார் என்ன செய்தார்கள் எவ்வளவு கொடுத்தார்கள். ஐநாவின் பொது செயலாளர் பாகி மூன் அப்பாவி என்கிறார்கள்.(?) அடுத்த நிலையில் நம்பியார் இருக்கிறார். இவர் தான் வெள்ளை கொடியுடன் புலிகளின் தலைவர்களை சரணடைய கூறியவர். இவர் அப்பாவி என்றால் நம்புவதற்கு யார் இருக்கிறார்கள்? ஆக குற்றம் செய்தவர்களும் குற்றம் நடப்பதற்கு உறுதுணையாக இருந்தவர்களும் ஒன்றாக சேர்ந்து குற்றத்தை விசாரிக்க இருக்கிறார்களாம். அதை வலியுறுத்தியவர்கள் யார் என்றால் ஸ்பெக்ட்ரம் அலைகற்றை ஒதுக்கீட்டில் ஊழல் செய்தவர்களும் வேறொரு பிரச்சினையை சமாளிக்க மற்றொரு பிரச்சினையை கிளப்பும் கேடுகட்ட இந்த நடைமுறை எப்போது மாறுமோ?

என்னை பொறுத்தவரையில் ஊழலுக்கு மரண தண்டனையே சரியான தீர்வாக அமையும். இல்லையென்றால் இந்த நாடும் மக்களும் புரையோடி போயிருக்கும் ஊழலில் திளைத்து ஒரு நிலையில் வெறுத்து ஆயுதம் எடுக்க நேரிடும்.

தீர்ப்பளிக்கும் நீதிமன்றங்களும் அதை மதிக்க தவறும் அரசு இயந்திரங்களும்

தடை செய்யப்பட்ட இயக்கத்துக்கு ஆதரவாக போராட்டம் நடத்துவதோ, பிரச்சாரம் செய்வதோ குற்றமாகாது என்று வைகோ மீதான பொடா வழக்கில் உச்சநீதி மன்றமே தீர்ப்பளித்துள்ளது. எனவே விடுதலைப் புலிகள் மீது இந்தியாவில் விதிக்கப்பட்டுள்ள தடையை எதிர்த்து கையெழுத்து இயக்கம் நடத்துவது தவறு அல்ல.இதுதொடர்பாக, புலிகளுக்கு ஆதரவுக் கருத்துக்களைச் சொல்லவும் தடை இல்லை. இவை அரசியல் சட்டத்துக்கு எதிரான செயல்கள் அல்ல.
நானும் விவரம் தெரிந்த நாளில் (அதாவது இன்டர்நெட் வசதிகள் வந்த பின்னர்) இருந்து பார்த்து கொண்டு தான் இருக்கிறேன். கருத்துரிமை என்பது நமது தமிழ்நாட்டில் ஏட்டளவில் மட்டுமே தான் இருக்கின்றது. அதுவும் யாராவது வழக்கு தொடுத்தால் மட்டுமே அதனை ஏட்டில் வைத்து உள்ளார்கள் என்பது புலனாகிறது. பின்னர் மீண்டும் இதனை போன்ற ஒரு சம்பவத்தில் பழையபடி யாரோ ஒரு காவல்துறை அதிகாரி கருத்துரிமைக்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டங்களை தடுக்கலாம், கைது செய்யலாம் ஏன் பொடாவில் கூட போடலாம்.



ஒருவரை இப்படி கைது செய்து சிறையில் அடைத்து பின்னர் அவர் நிரபராதி என்று தீர்ப்பானால் அவரை கைது செய்த காவல்துறை அதிகாரிக்கு என்ன தண்டனை தர வேண்டும்/தரலாம். ஒரு வேளை அரசின் அழுத்தத்தின் பேரில் தான் அவர் செய்தார் என்று தீர்ப்பானால் அதற்கு சம்பந்தபட்டவரை என்ன செய்யலாம்/ செய்வார்கள்?

எப்படியெல்லாம் சிண்டு முடியுறாங்க

சென்னையில் புத்த பிட்சுகளின் சேவை மையத்தில் நடந்த தாக்குதலை கண்டிக்க வேண்டியது ஒரு பத்திரிக்கையின் கடமையாக இருக்கலாம். ஆனால் வேறு யாரை காரணம் சொல்லலாம் என்பதில் கூட அரசியல் நடத்துகிறது தினமலர்.நேற்று காலை வரை  இந்த சம்பவம் தொடர்பாக யாரும் கைது செய்யப்படவில்லை.

தினமலர் இதனை போன்று செய்தி வெளியிட்ட பின்னர் ஆட்சியில் இருப்பவர்களுக்கு ஒரு பயம் வந்துள்ளது. விடுதலை  புலிகள் நடமாட்டம்  தமிழ்நாட்டில் இருக்கிறது என்று யாரேனும் குற்றம் சாட்டி விடுவார்கள் என்று பெரியார் திராவிட கழகத்தை சேர்ந்த ஏழு பேர் கைது செய்யப்பட்டனர்.என்னுடைய கேள்வி அவர்கள் தான் உண்மையில் இந்த தாக்குதல்களை நடத்தியவர்களா? இல்லை யாரையாவது இந்த வழக்கில் சேர்க்க வேண்டும் என்று கைது செய்துள்ளார்களா?
அப்போ இந்த சம்பவத்திற்கும் பழ.கருப்பயாவை தாக்கியவர்களுக்கும் சம்பந்தம் இல்லையா?

மீனவர் படுகொலைகளும் நடக்க போகும் அதிசயங்களும்

தமிழ் நாட்டின்  தேர்தல் பலரை முழிக்க செய்கிறது. நாடுகளையே பேச செய்யலாம் .உதாரணங்கள் கீழே உள்ளன .
  • சமீபத்தில் இலங்கை கடற்படைக் கும்பலால் படுகொலை செய்யப்பட்ட நாகை மாவட்ட மீனவர் ஜெயக்குமாரின் குடும்பத்திற்கு இன்று நேரில் சென்று ஆறுதல் கூறினார் அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா. மேலும், ஜெயக்குமாரின் குழந்தைகளின் படிப்புச் செலவையும் அதிமுக ஏற்கும் என்று அவர் அறிவித்தார்.
  • சென்னை எழும்பூரில் உள்ள இலங்கை மகாபோதி சங்கத்தின் மீது நடந்த தாக்குதலைத் தொடர்ந்து, தமிழக மீனவர்கள் இலங்கை கடல் எல்லைக்குள் வந்தாலும் கூட அவர்களை சுட மாட்டோம், தாக்க மாட்டோம் என்று இலங்கை கூறியுள்ளது.மகாபோதி சங்கத்திற்குள் புகுந்த சிலர் அதிரடித் தாக்குதலில் ஈடுபட்டனர். இதில் புத்த பிக்குகள் சிலர் காயமடைந்தனர். அலுவலகமும் சூறையாடப்பட்டது. இந்த சம்பவத்தால் இலங்கை அதிர்ச்சி அடைந்துள்ளது. சிங்களர்களுக்குப் பாதுகாப்பு அளிக்க வேண்டும் என்று அந்த நாடு இந்தியாவைக் கேட்டுக் கொண்டுள்ளது.
இதுவரை ஜெயலலிதா ஒன்றும் பேசவில்லை என்றவர்களுக்கு பதிலடியாக அவர் மீனவர் குடும்பங்களை நேரில் சந்தித்து பேசியுள்ளார். ஆனால் என் கேள்வி இது தான். இந்த பிரச்சினையில் உங்களின் கருத்து நான் கேட்கவில்லை. நீங்கள் ஆட்சிக்கு வந்தால் என்ன செய்வீர்கள் இதற்காக. நீங்களும் மீனவர்கள் எல்லை தாண்டி சென்று மீன் பிடிக்கிறார்கள் என்பீர்களா? இல்லை கட்சதீவை மீட்க முயல்வேன் என்பீர்களா? அவர்கள் உங்கள் பார்வையிலும் பேராசைக்காரர்களா என்ன?

தமிழ்நாட்டில் ஒவ்வொரு சம்பவம் நடக்கும்போதும் ஈழத்தமிழர்களுக்கு ஆதரவானவர்களை நோக்கி ஏதேனும் வழக்கு பதிவு செய்யப்படும். அல்லது புனைவு கதை ஒன்று எல்லாருக்கும் முன்னர் வெளிவரும். ஆனால் தற்போது அத்தி பூத்தாற்போல இலங்கை மகாபோதி சங்கத்தின் மீது தாக்குதல் நடந்தும் ஒருத்தரை நோக்கியும் காவல்துறையின் கை நீளவில்லை. ஒருவேளை பாரதிராசா, பழ. கருப்பையா ஆகியோரின் மீது தாக்குதல் நடத்திய அதே குழு தான் இந்த தாக்குதலையும் நடத்தியதோ? அரசின் செயல்கள் ஒன்றை மறைக்க மற்றொரு தவறை செய்யும் அணுகுமுறையாகவே உள்ளன. இந்த தாக்குதல் நடத்தியவர்கள் ஈழத்தமிழர் ஆதரவு பெற்ற அல்லது ஈழத்தமிழர்களை ஆதரிக்கும் யாரும் செய்யவில்லை. அப்புறம் யார் செய்தார்கள்? முதல்வருக்கு தான் வெளிச்சம் 

எந்த ஒரு விடயமும்(சம்பவம் அல்லது அசம்பாவிதம் ) வரும்போது ஒவ்வொரு கட்சியினரும் அதை எப்படி பயன்படுத்துகின்றனர் என்பதில் தான் அவர்களின் சாமர்த்தியம் இருக்கிறது. ஜெயலலிதாவினால் பாதிக்கப்பட்ட மீனவர்களை சந்தித்து ஆறுதல்கள் வேண்டுமானால் கூறலாம். ஆட்சியில் இருப்பவர்களால் மட்டுமே ஒரு தாக்குதலையும் நடத்தி காவல்துறை பதில் சொல்லாதவாறு செய்து பிரச்சினைகளை ஊற அல்லது ஆற போட முடியும். ஒருவேளை இந்த பிரச்சினை தொடர்ந்து ஆளும்கட்சிக்கு தலைவலியாக இருந்தால் யாரும் நினைக்காத அதிசயங்களும் இதில் நடக்கலாம். யார் கண்டது ராஜபக்ஷேவே நேரில் கதை சொல்ல வரலாம் நண்பர்களை காப்பாற்ற. 

கருணா VS கருணா

கருணா(நிதி)கருணா(அம்மான்)
உலகதமிழினத்திற்கு துரோகம் செய்ததால் துரோகி என்று அழைக்கப்பட்டார்இலங்கைதமிழினத்திற்கு துரோகம் செய்ததால்
துரோகி என்று அழைக்கப்பட்டார்

நான்காம்கட்ட ஈழபோரில் இவர் தமிழர்களை அழிக்கும் காரியங்களில் ஈடுபட்டு வந்த மத்திய அரசுக்கு துணை நின்றார். இவர் நினைத்து இருந்தால் தமிழின அழிப்பு தடுக்கப்பட்டு இருந்திருக்கும்.

 நான்காம்கட்ட ஈழபோரில் இவர் தமிழர்களை
அழிக்கும் காரியங்களில் ஈடுபட்டு வந்த இலங்கை அரசின் படைகளோடு ஒன்றிணைந்து புலிகளின் உத்திகளை அவர்களுக்கு கற்றுகொடுத்து
அவர்களின் தோல்விக்கும் தமிழின
படுகொலைகளுக்கும் காரணம் ஆனார்.  இவர் நினைத்திருந்தால் போரின் போக்கையே
மாற்றி அமைந்திருக்க முடியும்

ஸ்பெக்ட்ரம் ஊழல் விடயம் காங்கிரஸ் ஒத்துழைப்புடன் நடந்ததால் அவர்களை மீறி நடக்க முடியவில்லை. மீறினால் ஊழல் குற்றசாட்டில் சிக்கும் நிலைமையில் இருந்தது திமுக.

கொடுத்த பணத்தை அபகரித்து அது புலிகளின்
தலைமை வரை சென்று அதனால்
கொல்லபடுவோம் என்ற நிலையில் கிழக்கு
மக்களை புலிகள் மதிக்கவில்லை என்று
வாதம்  செய்து பிரிந்து சென்றார்.

ஒருவனுக்கு ஒருத்தி என்ற கோட்பாடு இவருக்கு பொருந்தாது. இவர் கதை ஊர் அறிந்தது.

லசந்த விக்ரமதுங்க படுகொலை
செய்யபடுவதற்கு முதல் நாள் கருணாவை
லசந்த பார்த்துள்ளார். அப்போது கருணா
பெண்களோடு இருந்துள்ளார்.

மக்கள் பிரச்சினைகளில் இவர் கடிதம் எழுதுவதில் வல்லவர். தனக்கொரு பிரச்சினை என்றால் நேரில் சென்று பேசுவார்.
இவருக்கு கடிதம் எழுதி பழக்கம் இல்லை.
இவரிடம் சொன்ன மக்கள் பிரச்சினைகள்
எல்லாம் கிடப்பில் தான் இருக்கின்றன.
இவருக்கு தேவையானவற்றை வெள்ளை
வேன் குழு பிடுங்கி கொடுத்துவிடும்
யார் கேட்ட கேள்விகளுக்கும் பதில் அளிக்க மாட்டார். இவரே கேள்விகளை எழுதி அதற்க்கு அவருக்கு பிடித்த பதில்களை எழுதி வெளியிடுவார்.யாரும் கேள்வி கேட்டால் இவருக்கு
பிடிக்காது. அப்படி கேட்டால் மறுநாள்
அவர்கள் உயிரோடு இருப்பது இல்லை
இந்திய வரலாற்றையே திரும்பி பார்க்க வைக்கும் அளவில் ஊழல்கள் செய்தவர் ஈழத்தமிழர்களுக்காக போராடுவதாக கூறி
சிங்கள அரசிடம் சரணடைந்து துரோகியாக
மாறியவர்
எப்போது இவர் சாவார் என்று மக்கள் நினைக்கும் நிலை.

முன்னரே இவர் செத்து இருக்க கூடாதா
என்று உலகத்தமிழர்கள் நினைக்கும் நிலை.
எச்சி கையால் காக்கா ஓட்ட மாட்டார்.பெண்களை பார்த்தால் தண்ணீராக செலவு
செய்பவர்.
இன்றைக்கும் தாய்பால் குடித்து உடல்நலம் பேணும் அந்த அரசியல்வாதி இவர் தான்.இவர் இன்றும் உடல்நலம் பேண ஓடி
வருகிறாராம்
எத்தகைய சூழல் வந்தாலும் அதனை திசை திருப்புவதில் வல்லவர். ராசாவை தலித் என்று சொல்லி ஸ்பெக்ட்ரம் ஊழலில் இருந்து தப்புவிக்க முயன்றார்.தான் செய்த ஊழலில் இருந்து தப்புவிக்க
கிழக்கு வடக்கு முன்னுரிமை பற்றி பேசி
தப்புவிக்க முயன்றார்.
தமிழினம் செத்து கொண்டு இருக்கும்போது ஸ்பெக்ட்ரம்
ஊழலில் கிடைத்த பணத்தை
எண்ணி கொண்டு இருந்தவர்.
தமிழினம் செத்து கொண்டு இருக்கும்போது
வெள்ளை வேன் கடத்தல் மூலம் கிடைத்த
பணம், துணை ராணுவ படையின் மூலம்
கொள்ளை அடித்த பணம் அனைத்தையும்
எண்ணி கொண்டு இருந்தவர்
இவரை நம்பியிருந்த கட்சியினரையே காவு கொடுத்தவர்.(கிருஷ்ணன் முதலானவோர்)இவரை நம்பி வந்த புலிகளையும்
மக்களையும் சிங்களவர்களிடம் காட்டியும்
கூட்டியும் கொடுத்தார்.
இவரின் வாரிசுகளின் கட்டுப்பாட்டில் கட்சியும் ஆட்சியையும் உள்ளன.இவரின் துணைக்குழுக்கள் தனியாக பிரிந்து
இவரையே எதிர்க்கும் நிலை வந்தும்
பிள்ளையான் கட்டுப்பாட்டிலும் கருணா
கட்டுப்பாட்டிலும் மாறி மாறி இருந்த நிலை
மாறி இவர்களுக்குள் ஒரு ஒழுங்கு ஏற்பட்டு
இருவரும் இப்போது ராஜபக்ஷேவின்
அமைச்சர்களாக இருக்கின்றனர்.
மாணவர்கள் என்றால் இவருக்கு மிகவும் பிடிக்கும். மாணவர்கள் எல்லாரும் ஈழத்தமிழர்களுக்காக போராடியபோது அவர்களுக்காக காலவரையற்ற விடுமுறையை அறிவித்தவர்.மாணவர்கள் என்றால் மிகவும் பிடிக்கும்.
எங்கு எங்கு மாணவர்கள் கூடினாலும்
அங்கே புகுந்து மிரட்டல் விடுப்பதில்
இவர் வல்லவர்.
அரசு அலுவல்கள் இருக்கும்போது கலை நிகழ்சிகளில் மட்டும் கலந்து கொள்ள விரும்புவர்.கலைநிகழ்ச்சி வடக்கு கிழக்கு எங்கு
நடந்தாலும் அதில் கலந்து பாட்டுக்கள்
பாடி மகிழ்பவர்.
ஈழபோரில் இந்திய அரசு இவரை கலந்தாலோசிக்காமல் எந்த நடவடிக்கையும் எடுத்தது இல்லை.ஈழபோரில் இலங்கை  அரசு இவரை கலந்தாலோசிக்காமல் எந்த
நடவடிக்கையும் எடுத்தது இல்லை.
இவரை பற்றி விமர்சிக்கும் நபர்கள் திடீர் என்று தாக்குதல் நடத்தப்பட்டு ஒடுக்கப்பட்டனர்.(பாரதிராசா, கருப்பையா முதலானோர் )இவரை பற்றி விமர்சிக்கும் நபர்கள் திடீர்
என்று தாக்குதல் நடத்தப்பட்டு
கொல்லப்பட்டனர்.

 இவர் மூலம் இந்திய காங்கிரெஸ் அரசு காரியம் சாதித்தது.
மத்திய அரசிடம்  சரணடைந்து இவருக்கு தேவையான வேலைகளில் காரியம் சாதிப்பதே  இவருக்கு வேலையாக இருக்கிறது.

 இவர் மூலம் இலங்கை  அரசு காரியம்
சாதித்தது. யாராவது ஒருவரிடம் சரணடைந்து அடிவருடியாக இருப்பதே இவருக்கு
வேலையாக இருக்கிறது.
உலகெல்லாம் ஈழத்தில் போர் நடக்கிறது என்று சொன்ன போதும் உண்ணாவிரதம் இருந்து நான்கு
மணி நேரத்தில் பத்திரிக்கைகளில் மட்டும் போர் நிறுத்தம் வர செய்தவர்.( நாங்கள் தான் போரை நிறுத்தி விட்டோம். இதற்கு மேல் யாரேனும் இலங்கை போர் குறித்து பேசவோ இல்லை போராட்டம் நடத்தவோ கூடாது என்று போஸ்டர் வேறு வந்தது)
இவர் போர் நிறுத்தம் பற்றி இதுவரை
பேசியதே இல்லை.

வாரிசு அரசியலை இவர் வளர்த்து விட்டார். 

துப்பாக்கி கலாச்சாரத்தின் மூலம் பணம்
சம்பாதிக்கும் முறையை  இவர் 
வளர்த்துவிட்டார். 

மஞ்சபையுடன் வந்து பல ஆயிரம் மன்னிக்கவும் லட்சம் கோடிகளில் சொத்து உள்ளது

லட்சியத்துடன் வந்த இவர் பெயரில்
ஐரோப்பிய நாடுகளில் பணம் உள்ளது.
திமுகவின் திராவிட கொள்கைகள் காற்றிலும் ஏட்டினிலும் மட்டுமே இருக்கின்றனகிழக்கு புறக்கணிக்கபடுகிறது அதனால் தான்
புலிகள் அமைப்பில் இருந்து விலகுகிறேன் என்ற கருணாவின் கதை திரைக்கதைக்கு
மட்டுமே இனிமேல் உதவும் 

ஒவ்வொரு சூழ்நிலையிலும் இவர் மத்திய அரசிடம் பேச்சுவார்த்தை நடத்தியதாக கூறியபோது உண்மையில் பணம் சம்பந்தமாக நடந்த பேச்சுவார்த்தைக்கு பதில் தமிழர்களுக்காக பேச்சுவார்த்தை நடத்தியதாக கதை அளந்தார்.

ஈழத்தமிழர்களின் போர் நடக்கும்போது இவர்
தனது தமிழ்மக்கள் புலிகள் அமைப்பினை
கட்சியாக பதிவு செய்து மக்களின்
சேவைக்காக கட்சி என்று இருந்த வழக்கம்
முற்றிலும் மாறி இவர்களுக்காக
மக்கள் மாறவேண்டிய நிலையை
உருவாக்கினார்கள்.

இதுவரை எந்த ஒரு மக்கள் பிரச்சினையிலும் நிரந்திர
தீர்வினை இவர் கொடுத்தது
இல்லை.
(முதல்வன் படத்தில் வரும் ரகுவரன் )
இதுவரை எந்த ஒரு மக்கள் பிரச்சினையிலும்
தீர்வினை இவர் கொடுத்தது இல்லை.
இவர்கள் சொல்லிகொடுத்த தேசியமும் இறையாண்மையும் நாட்டை படுகுழியில் கொண்டு சென்றதை தவிர மக்களுக்கு
ஒன்றும் செய்யவில்லை.இந்திய இறையாண்மைக்கும் சிங்களவனுக்கும் என்ன சம்பந்தம் என்று இதுவரை தெரியவில்லை.
இவர் சொல்லிகொடுத்த 
இறையாண்மையும்
ஒன்றிணைந்த இலங்கையும் தமிழர்களை படுகுழியில் கொண்டு சென்றதை தவிர  ஒன்றும் செய்யவில்லை.
இன்றைக்கும் துரோகம் என்பதன் அர்த்தம் இவருக்கு புரியவில்லை.துரோகம் என்பதன் அர்த்தம் புரிந்தும் அதன் விளைவு இவருக்கு
புரியவில்லை.
இவரின் வயதில் இருப்பவர்கள் மனித நேயம் பற்றி பேசுவார்கள். அப்படி ஒன்று இவரிடம் இருந்து இருந்தால் இந்நேரம் தமிழ்மக்களுக்கு ஏதேனும் செய்து அவர்களின் மனதில் இடம் பிடிக்க முயற்சித்திருப்பார்.இவரின் வயதில் இருப்பவர்கள் கடந்து வந்த பாதையின் உறுத்தல்கள்
காரணமாக நல்லது செய்ய நினைப்பார்கள். ஆனால் கருணா
ஏதேனும் நல்லது செய்தாரா என்று தெரிந்தவர்கள் கூறவும்.



ஆட்சியில் இருக்கும்போதே இவர் செத்தால் மெரினா கடற்கரையில் ஒரு இடம் கிடைக்கும். ஆனால் மக்களின் மனதில் அல்ல.எப்போது செத்தாலும் ஒரு இடம் கிடைக்கும். ஆனால் மக்களின்
மனதில் அல்ல.



முத்தமிழறிஞர், கலைஞர் என்று ஆரம்பித்த பட்டங்கள் இப்போது தமிழினதுரோகியில் முடிந்துள்ளன.சிறப்பு தளபதி, கிழக்கின் தளபதி, பிரபாகரனுக்கு நிகர் என்று தொடங்கிய பாதை தமிழின துரோகியில் முடிவுற்றுள்ளது.

இந்தியா ஒளிர்கிறது

இந்தியா கடந்த பத்தாண்டுகளில் மிகபெரிய மாற்றங்களை சந்தித்து வருகிறது.

  1. இந்தியர்களிடமிருந்து முறைகேட்ட வழிகளில் சம்பாதித்த பணம் இருபது லட்சம் கோடி மிக சிறிய நாடான லீச்டெண்ச்டீன் வங்கிகளில் போடப்பட்டு உள்ளது. இந்த நாட்டில் போடப்படும் பணத்திற்கு அந்த நாட்டில் மட்டும் வரி கட்டினால் போதும். வேறு எந்த விவரமும் மற்ற நாட்டிற்கு கொடுக்கபடாது.
  2. ஆயிரம் ரூபாய் லஞ்சம் பெற்று கொண்டு இருந்த காவல்துறையினர் எல்லாம் இப்போது லட்சத்திற்கு மாறியுள்ளனர்.
  3. பத்து வருடங்களுக்கு முன்னர் இருவத்தைந்து பைசா ஏற்றினால் சாலையில் இறங்கி போராட்டம் நடத்திய பயணிகள் எல்லாம் குளிர்சாதனம் பொருத்தப்பட்ட வண்டிகளில் மட்டுமே பயணிக்கின்றனர்.
  4. இதுவரை ஐநூறு தமிழக மீனவர்கள் இலங்கை ராணுவத்தால் கொல்லப்பட்டுள்ளதாக கூறுகின்றனர். இந்த எண்ணிக்கை விரைவில் ஆயிரமாக உயர வாய்ப்பு உள்ளது.

  5. இதுவரை எழுதி வந்த திரைக்கதை வசனங்களோடு இளைஞன் படத்திற்கும் தமிழக முதல்வர் கருணாநிதி கதை வசனம் எழுதி உள்ளார். மேலும் அதிகமாக பாராட்டுவிழா கண்ட முதல்வர் என்ற பெயரையும் பெறுகிறார்.
  6. மத்திய அரசில் மட்டுமே அங்கம் வகித்து வந்த காங்கிரஸ் கட்சி மாநிலத்திலும் தங்களின் கடமையை செய்ய வாய்ப்பு கேட்கும் நிலை தமிழகத்தில் வந்துள்ளது.
  7. வாங்குபவர் விற்பவர் இடையில் நடைபெறும் பேரத்திலும் பங்கு கேட்கலாம் என மத்திய அமைச்சர் அழகிரி நிருபித்துள்ளார்.
  8. இதுவரை தமிழக முதல்வர் ஈழத்தமிழர் விடயத்தில் நாற்பது முறையும் தமிழக மீனவர்கள் விடயத்தில் பத்து முறையும் மத்திய அரசுக்கு கடிதம் அனுப்பி உள்ளார்.
  9. சென்னை சங்கமம் என்ற பெயரில் கிராமிய கலைஞர்களின் கலைநிகழ்ச்சி சென்னையில் வருடம் ஒரு முறை நடக்கிறது. இதில் கலந்து கொள்ளும் கலைஞர்களுக்கு சம்பளத்திலும் நிகழ்ச்சி ஏற்பாட்டிலும் கூட ஊழல்கள் செய்ய முடியும் என்று நிருபித்துள்ளனர்.
  10. இது வரை கேள்விபடாத அளவுக்கு ஊழல்கள் எல்லாம் இந்திய அளவில் நடைபெற்றன. அதில் ஸ்பெக்ட்ரம், காமன்வெல்த் போட்டிகள், சத்யம் என்று இந்தியா மேலும் ஒளிர்கிறது.
  11. காஷ்மீரிலும் வடகிழக்கு மாநிலங்களிலும் மட்டுமே மனித உரிமை மீறல்கள் இந்தியாவின் மற்ற மாநிலங்களுக்கும் பரவி உள்ளன.
  12. இலங்கையில் புலிகள் இயக்கத்தினர் கிழக்கினை இழந்த பிறகு இதுவரை நூறு மீனவர்கள் இலங்கை ராணுவத்தால் கொல்லப்பட்டு உள்ளனர்.

இப்படி நான் எழுதி சென்றால் இந்த எண்ணிக்கையும் நூறினை தாண்டும் என்பதால் இதோடு இந்த எண்ணிக்கையை முடிக்கிறேன்.

இந்திய மீனவர்கள் தற்கொலை

இலங்கை அருகே கடலில் மீன் பிடித்து கொண்டு இருந்த இந்திய மன்னிக்கவும் தமிழக மீனவர்கள் இருவர் பத்து நாட்கள் இடைவெளியில் தற்கொலை செய்து கொண்டனர். தமிழக மீனவர்களான இவர்கள் ஏன் இலங்கை அருகே சென்று தற்கொலை செய்து கொண்டனர் என்று இலங்கை அரசு விசாரித்து வருகிறது. இலங்கை அதிபர் ராஜபக்ஷே இதை பற்றி பேசுகையில் தமிழக மீனவர்கள் கடலில் தற்கொலை செய்து கொண்ட விவரம் கேட்டு வருத்தமுற்றதாக கூறியுள்ளார். ஒருவேளை தற்கொலை செய்வதாக இருந்தால் இலங்கையில் உள்ள முகாம்களில் பதிவு செய்துவிட்டு வரும்படியும் கேட்டுக்கொண்டு உள்ளார். இப்படி பதிவு செய்து கொண்டு வரும் தமிழக மீனவர்களுக்கு இலங்கை அரசு முன்னுரிமை கொடுத்து மேலே அனுப்பிவைக்கும் எனவும் தெரிவித்தார். இந்த சலுகையை பற்றி உலக தமிழின தலைவரான கருணாநிதியை கேட்டபோது தமிழக மீனவர்களின் மேல் இலங்கை அரசு காட்டும் பாசம் தன்னை மெய் சிலிர்க்க செய்வதாக கூறியுள்ளார். இலங்கையில் ஏற்கனவே முகாம்களில் இருக்கும் ஈழ தமிழர்களை விட தமிழக மீனவர்களுக்கு முன்னுரிமை என்று கூறியபோது தான் மிகவும் களிப்படைந்ததாக கூறியுள்ளார்.

அடுத்த ராஜினாமா நாடகம் தயார்

தென் மண்டல அமைப்புச் செயலாளர் பதவியிலிருந்து விலக அழகிரி முடிவு செய்துள்ளதாகவும், மத்திய அமைச்சர் பொறுப்பில் இருந்து விலகுவதாகவும் செய்திகள் சொல்லுகின்றன. அடுத்த வாரம் நடக்க உள்ள கனிமொழி ஏற்பாடு செய்துவரும் சென்னை சங்கமம் நிகழ்ச்சியை ரத்து செய்ய வேண்டும் என்றும் முன்னாள் மத்திய அமைச்சர் ராசாவை தற்காலிகமாக தி.மு.க -விலிருந்து நீக்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்ததாக தெரிகிறது. இது உண்மையில் நம்பும்படியாக இல்லை. ஏன் என்றால் மதுரையில் எந்தவொரு பத்திரபதிவும் அஞ்சாநெஞ்சனுக்கு தெரியாமல் நடக்காது. ஒவ்வொரு பத்திரபதிவு பதிவாளரும் அண்ணனிடம் ஒருவார்த்தை சொல்லியாச்சா என்று கேட்டுவிட்டே பத்திரங்கள் பதிவது வழக்கம். பத்திரபதிவில் வரும் கட்டிடம் அல்லது நிலத்தின் மதிப்பு ஒரு கோடிக்கு மேல் இருந்தால் கண்டிப்பாக அந்த பகுதி பத்திர பதிவாளர் சொல்லும் ஒரே வார்த்தை" அண்ணன்கிட்ட சொல்லியாச்சா என்று தான்". இது தவிர முக்கிய இடங்களில் உள்ள நிலங்கள் அல்லது கட்டிடங்கள் சம்பந்தமான பத்திரபதிவிற்க்கும் இது பொருந்தும். அப்படி இருக்கும் அண்ணன் ஏற்கனவே இந்த ஸ்பெக்ட்ரம் ஊழல் மூலம் கிடைத்த பணத்தில் ஒருபகுதியை பெற்று உள்ளதாக தெரிகிறது. அண்ணனிடம் ஒரு நல்ல விடயம் என்னவென்றால் பணம் வாங்குவதற்கு முன்னர் தான் அவர் எதிரியாக பார்ப்பார். பணம் வாங்கி விட்டார் என்றால் நீங்கள் அவரின் சொந்த தம்பி என்ற அளவுக்கு பார்த்து கொள்ளும் அளவிற்கு நன்றி பாராட்டுவார்.


அவரின் இயல்பு இப்படி இருக்க, அவர் சென்று ராஜினாமா பற்றி பேசியதாகவும் மிரட்டல் விடுத்ததாகவும் வந்த கதையானது அடுத்த நாடகமாகவே தெரிகிறது. நாங்க எல்லாம் நல்லவர்கள், அவர்கள் தான் ஊழல் செய்தார்கள் என்று சொல்வதற்கு இப்படி ஒரு நாடகம் நடத்தி உள்ளனர். எப்பவும் கருணாநிதி ஒரு பிரச்சினையோ இல்லை ஒரு சம்பவத்தையோ மறைக்க வேறு ஒரு சம்பவத்தை அல்லது பிரச்சினையை நடத்துவது வழக்கம். அதில் ஒன்று தான் இது.


இதற்கு முன்னர் நடந்த நாடகங்கள் சிலவற்றை கீழே குறிப்பிட்டு உள்ளேன்.

  1. ஈழத்தமிழர் படுகொலைகளை தடுக்க தமிழக பாராளுமன்ற உறுப்பினர்கள் ராஜினாமா
  2. ஈழத்தமிழர் படுகொலைகளை தடுக்க முன்னுதாரனமாக கனிமொழி ராஜினாமா
  3. ஈழத்தமிழர் படுகொலைகளை தடுக்க கருணாநிதியின் நான்கு மணிநேர உண்ணாவிரதம். 
  4. ஈழத்தமிழர் படுகொலைகளை தடுக்க கருணாநிதியின் மனித சங்கிலி போராட்டம். 
  5. ஈழத்தமிழர் படுகொலைகளை தடுக்க தந்திகள் அனுப்பும் போராட்டம் 
  6. ஈழத்தமிழர் படுகொலைகளை தடுக்க ஈழம் கூட வாங்கி தர தயார் என்று ஒரு முறை கூறி மறுநாளே மறுப்பு தெரிவித்தார். இதே போல் பிரபாகரன் நண்பர் என்று சொல்லி மறுநாள் பல்டி அடித்தார். பிரபாகரன் தீவிரவாதி அல்ல அவர் சார்ந்த இயக்கம் சரியில்லை என்று கூறி உள்ளார். 
  7. பாராளுமன்ற தேர்தலுக்கு முன்பு, அவர் ( மட்டும்) அறிவித்த போர் நிறுத்தத்திற்கு பிறகு நூற்றுக்கணக்கான மக்கள் கொல்லப்படுவதாக செய்தி வந்த போது அவர் என்ன சொன்னார் ? மழை விட்டும் தூவானம் விடவில்லை என்றார். அதே பேட்டியின் இறுதியில் இப்போது என்ன செய்யலாம் என்றிருக்கிறீர்கள் ( இலங்கை தொடர்பில்) என வினவியபோது நக்கலாக நாம் போய் டீ குடிக்கலாம் என்றார். ஒரு இன மக்களின் பேரழிவிற்கு பிறகு சுமுக நிலை நிலவுவதாக சொன்னார். இதன் பொருள் தான் (அல்லது தாம் ) விரும்பிய சூழல் வந்துவிட்டது என்பதுதான். எம்பிக்களின் பயணத்திற்கு பிறகு ஜெயலலிதாவின் கேள்விக்கு பதிலளிக்கும் அறிக்கையொன்றில் நாங்கள் செலவு செய்து போய்வந்தோம். நீயும் முடிந்தால் போய் வா.. யார் தடுத்தது என்றார். 
  8. உயர்நீதிமன்றத்தில் நடந்த வழக்கறிஞர்கள் காவல்துறையினர் அடிதடியெல்லாம் இவரின் நாடகத்தில் சிறந்த காட்சிகள்.  
  9. பிரபாகரனின் தாயாருக்கு மருத்துவ சிகிச்சை என்று ஒரு நாடகம். அவரின் சார்பாக வந்த கடிதமே ஒரு நாடகம் தான்.
  10. கட்ச தீவு பிரச்சினையிலும் தமிழக மீனவர்கள் பிரச்சினையிலும் இன்னும் கண்டனங்களையும் கடிதங்களையும் மட்டுமே அனுப்பி நாடகம் நடத்துகிறார்.
  11. செம்மொழி மாநாட்டிற்காக புலிகள் தரப்பில் வந்த ஆதரவு கடிதமும் இவரின் நாடகங்களில் ஒன்று தான்.  
  12. உலகதமிழ் மாநாடு நடத்தும் அமைப்பு உலகத்தமிழ் மாநாடு இப்போது நடத்துவது சரியில்லை என்று சொன்னதும் அந்த அமைப்பின் ஒப்புதல் இல்லாமலே நடத்த முயன்று பின்னர் அதையே உலகத்தமிழர் செம்மொழி மாநாடு என்று நாடகம் நடத்தினார். 
  13. ஸ்பெக்ட்ரம் ஊழல் பற்றி பேசுவதை தவிர்க்க மோகன்ராஜ் என்கௌன்டர். 
  14. முதுகுவலி என்கிறார்கள் இருந்தாலும் கலைநிகழ்ச்சிகள் என்றால் முதல் வரிசையில் இருக்கும் இவர் உடல்நிலை சம்பந்தமாகவும் நாடகம் தான் நடத்துகிறாரோ?

பெரியாரிடம் வெங்காய விலையை கேட்க சொன்னால் என்ன ....கு இவர் முதல்வராக இருக்கிறார்

சென்னை அண்ணா அறிவாலயத்தில், முதல்வர் கருணாநிதி அளித்த மினி பேட்டி: வெங்காய விலை உயர்ந்திருக்கிறதே அதற்கு ஏதேனும் நடவடிக்கை எடுக்கப்படுமா?
அதை பெரியாரிடம் போய் கேளு...
போக்குவரத்து தொழிலாளர்கள் ஊதிய உயர்வு கேட்டிருக்கிறார்களே?
அது கொடுத்தாச்சு... அது பற்றி அறிக்கை வரும்.
இன்று கூட இ.வி.கே.எஸ். இளங்கோவன், அ.தி.மு.க. - காங்கிரஸ் கூட்டணி அமைய வாய்ப்பிருக்கிறது என கூறியதாக செய்திகள் வந்துள்ளதே?
அது எனக்கு தெரியாது. இவ்வாறு, முதல்வர் கருணாநிதி சிரித்தபடியே பேட்டியளித்தார்.

மீண்டும் மீண்டும் இவர் வயதிற்க்கோ இல்லை இவர் இருக்கும் பதவிக்கோ ஏற்றபடி பேசாமல் தான் அந்த பதவிக்கு ஏற்றவன் இல்லை என்று நிருபிக்கிறார். 
 
இவர் தனிப்பட்ட முறையில் மற்றவர்களின் அந்தரங்கங்களை விமர்சிப்பது இவருடன் இருக்கும் அலுவலர்களுக்கு தெரிந்ததே. ஆனால் இப்படி பொறுப்பற்ற முறையில் பதில் அளிப்பதற்கு அப்படி முதல்வர் பொறுப்பில் இருந்து தான் பேச வேண்டுமா?

ஒருவேளை இவருக்கும் ஆட்சிக்கும் சம்பந்தம் இல்லை என்று சொல்ல வருகிறாரோ? இல்லை வெங்காயம் பயிரிடுவதெல்லாம் அவருக்கே தெரியாது என்று சொல்ல வருகிறாரோ?




யாருடைய சாவாவது மக்களை சந்தோசப்படும் என்று மக்கள் நினைத்தால் உண்மையில் அப்படி ஒரு பிறவிக்கு அப்படி ஒரு பிறப்பிற்கு அந்த இழிபிறவி மட்டும் அல்ல அந்த குடும்பமும் வருத்தப்படும் நாள் கண்டிப்பாக வரும்.( நான் யாரையும் குறிப்பிட்டு சொல்லவில்லை. மேல் சொன்ன தகவல்களுக்கும் இதற்கும் சம்பந்தம் இல்லை.)

புலி பயம் காட்டி ஊழலில் இருந்து தப்பித்து கொள்ள கருணாநிதி முயற்சி

ஸ்பெக்ட்ரம் பிரச்சினையை எப்படியெல்லாம் திசை திருப்பலாம் என்பதற்கு நேற்று தான் ஒரு பதிவு போட்டேன். அந்த பூச்சாண்டி எல்லாம் ஒத்து வராததால் சோனியா குடும்பம் எதற்கு பயப்படும் என்று பார்த்து கொண்டிருந்த கலைஞர் இப்போது புலிகள் தாக்குதல் நடத்துவார்கள் என்று கிலி வேறு கிளப்பியுள்ளார்.

லத்திகா சரண் ஒரு தேர்ந்த போலிஸ் அதிகாரி என்ற தரத்தினை எப்போதோ இழந்து விட்டார் என்றே தோன்றுகிறது. தமிழீழ ஆதரவாளர்களை நோக்கி இவர் எடுக்கும் ஒவ்வொரு நடவடிக்கையும் சர்ச்சைகளில் கொண்டு போய் தான் முடிந்துள்ளன.

ரயில்வே தண்டவாளத்தில் வெடிகுண்டு வைத்து அந்த வழியாக செல்லும் ரயில்களை தகர்க்க முயற்சி செய்ததாக காவல்துறை அந்த ஒரு வாரத்திலே பல கதைகள் சொன்னது. அதை சொன்னதும் நமது லத்திகா சரண் தான்.
அதே போல் சென்னையிலும் தண்டவாளத்தில் கற்களை வைத்து சமூக விரோதிகள் முயற்சி செய்தனர் என்றனர். ஒரே நேரத்தில் ஒரு மனிதர் இரு இடங்களில் இருந்து இரு வேறு செயல்களை செய்ய முடியாது என்பதால் அதற்கு காரணம் என்று இவர்களால் கைது செய்யப்பட்டவர்கள் எல்லாம் விடுதலை செய்யப்பட்டனர்.

இதில் நமது உளவுத்துறை எவ்வளவு சீரழிந்து வருகிறது என்பதற்கு தமீழத்தில் இருந்து இங்கே தங்கிருக்கும் பெண்களிடம் தங்களது காம லீலைகளை அரங்கேற்றி உள்ளனர் தமிழக உளவுத்துறையினர்.

இவர்கள் எப்போதுமே புது கதைகளை சோடிக்கவும் ஒரு பிரச்சினையை திசை திருப்ப மற்றொரு பிரச்சினையை செய்வதற்குமே பயன்பட்டு இருக்கின்றனர்.


இவரே தான் சொல்வதாக ஒரு செய்தியும், மத்திய உளவுத்துறையும் ராவும் சொல்வதாகவும் ஒரு செய்தியும் பரப்பபட்டது.   எது எப்படி இருந்தாலும் ஊழல்களில் இருந்து தப்பிக்க இப்படியெல்லாமா சொல்லுவது.

அப்படி ஒருவேளை உளவுத்துறை என்று ஒன்று இருந்தால் இங்கே நடக்கும் அசம்பாவிதங்களை முன்னரே தடுத்திருக்க முடியாதா என்ன?

விடுதலையான சீமான் ஆவேசம் செய்திக்கு தினமலரில் வந்த முட்டாள்தனமான விமர்சனங்கள்.

தினமலரின் கோமாளிகளுக்கு ஒரு கேள்வி. தினமலரில் வந்த சீமான் பற்றிய செய்திக்கு உங்களின் கருத்துக்களை பார்த்தேன். மிக்க நன்றி.


ஊழல்களில் ஊறி வளர்ந்த காரணத்தால் புதிதாக யார் நல்லது பற்றி பேசினாலும் உங்களுக்கு கோபம் வருகிறதா? உங்களின் மூலையில் இருப்பது மூளையா? இல்லை களிமண்ணா?

தமிழக அரசியலுக்கு தீர்வு சொல்ல வக்கில்லை. உங்களுக்கெல்லாம் ஒரு பேப்பர். அதில் எழுத உங்களை போன்ற அறிவு ஜீவிகள் இருக்கும்வரை இமாய ஊழல்களுக்கு இந்தியாவில் பஞ்சம் இருக்காது. உங்கள் பேப்பரில் வரும் செய்திகளுக்கு நீங்களே கருத்துக்களை திணிப்பதை விட்டுவிட்டு நேரடியாக பேசுவதற்கு கலந்துரையாடல்கள் நடப்பதற்கு ஏற்பாடு செய்யவும்.



கோழைகள் போல கருத்துக்களை நீங்கள் சொல்லுவதை மட்டும் போடுவதை நிறுத்துங்கள். நீங்களும் போங்கடா நீங்களும் உங்கள் பத்திரிக்கை தர்மமும்.

ஒவ்வொரு பிரச்சினைக்கும் குறைகள் சொல்லுவதை விட்டுவிட்டு அந்த பிரச்சினைக்கு முழுவதுமான ஒரு தீர்வினை சொல்லுங்கள். அதற்கு வக்குள்ளவர்கள் கருத்துக்கள் பதியுங்கள். அதன் பின்னர் நான் உங்களை ஆதரிக்கிறேன்


ஜகன் - சென்னை,இந்தியா 2010-12-11 07:21:25 IST


சைமன் என்கிற சீமான் ஒரு ஹிந்து எதிரி (கருணாநிதியை போல்). இவர்கள் இருவருக்கும் வோட்டு போடாதீர்...


சந்திரன் - தமிழ்நாடு,இந்தியா 2010-12-11 07:18:36 IST

இலங்கைத்தமிழர் பிரச்சினை ஒரு போதும் தமிழக தேர்தலில் எதிரொலித்ததில்லை. இனியும் அது எதிரொலித்து ஒரு தாக்கத்தினையும் ஏற்படுத்தப்போவதில்லை. ஏனெனில் தமிழ் நாட்டு தலைவர்கள் அனைவரும் (இதில் யாருக்கும் விதிவிலக்கில்லை) அரசியல் விளம்பரத்திற்க்காக, சுயமையப்படுத்தும் நோக்கில், தனக்கு கூட்டம் கூடுகிறது என்பதற்காக ஒரு கருவியாகத்தான் இலங்கைத்தமிழர் பிரச்சினையை கையாளுகிறார்களே ஒழிய யாருக்கும் எந்த அக்கறையும் உண்மையில் கிஞ்சித்தும் கிடையாது. உண்மையில் 1983 முதல் 1990 வரை சாதாரண தமிழக மக்களுக்கும் ஒரு அக்கறை உணர்வு இலங்கை தமிழர்கள் மீது இருந்தது. அதை சுத்தமாக கெடுத்தது வே.பிரபாகரன் தான். பிரபாகரன் பிரேமதாசாவுடன் சேர்ந்து... "சிங்கள மக்களும் (இ) தமிழ் மக்களும் சண்டை இருந்தாலும் சகோதரர்கள்.. இதில் இந்தியா தலையிட வேண்டிய அவசியமில்லை என்று கூட்டறிக்கை விட்டார்...(அப்புறம் பிரேமதாசாவையே குண்டு வெடிப்பின் மூலம் கொன்றார் என்பது வேறு விஷயம்)...". அப்பொழுதே இந்தியா வின் அக்கறை குறைய ஆரம்பித்தது. பின் 1991 ல் ராஜீவ் காந்தியை கொன்றதன் மூலம் இருக்கும் கொஞ்சநஞ்ச இந்திய, தமிழக அனுதாபத்தினை இழக்க நேரிட்டது. அதன் பின் இலங்கை தாக்கம் என்று ஏதும் கிடையாது... இனியும் எந்த தேர்தலிலும் ஏற்ப்படப்போவதில்லை...சீமான்/நெடுமாறன்/பெ.தி.க/வைகோ போன்றவர்களுக்கு கூட்டம் வேண்டுமானால் கூடலாம்...ஓட்டு என்பது கிஞ்சித்தும் கிடையாது. (வைகோ மட்டும் அதிமுக உடன் (மாறினால் தி.மு.க உடன்) இருப்பதால் அந்த ஆதரவில் கரையேற வாய்ப்புள்ளது...). தமிழக மக்கள் இப்போது எதிர்நோக்கியிருக்கும் சொந்த பிரச்சினைகள் தான் தேர்தலில் எதிரொலிக்கும். சீமான் தனியாக நிற்கும் பட்சத்தில் ஒரு 500 லிருந்து 5000 ஓட்டு வேண்டுமானால் வாங்கலாம்...டெபாசிட் கெடைக்காது....


மண்ணின் மைந்தன் - bangalore,இந்தியா 2010-12-11 07:10:09 IST

அம்மா என்ன தமிழ் நாட்டுல பாத்து பைசா கூட கொள்ளை அடிகளையா என்ன... உங்கள மாதிரி முட்டாள்கள் இருப்பதால் தான் ஒரு புரட்சிய ஆரம்பிக்கவே முடியாது......


vicky - yangsusong,சீனா 2010-12-11 06:59:14 IST

பிக் காமெடி! என்னையா இப்படி காமடிய பேசறிங்க! நிறுத்த முடியவில்லை சிரிப்பை......

jopet - singapore,சிங்கப்பூர் 2010-12-11 05:30:42 IST

ஏன்டா கொய்யாலே! நீ இந்தியாவை கூறு போடுவே. அப்புறம் இலங்கையில புலிகளை காப்பாத்த இங்கே ரத்த ஆறு ஓடும்ன்னு சொல்லுவ. அதெல்லாம் பாத்துட்டு அரசாங்கமும் போலீஸும் சும்மாயிருக்கணும். அதுக்கு உன்னை புடிச்சி ஏன்டா அப்படி பேசுனன்னு கேட்டா அப்புடித்தான் பேசுவேன் பேசகூடாதுண்ணா எனக்கு தனி ஈழம் வாங்கிகுடுன்னு லூசுபயலுக மாதிரியே பேசுவீங்க. என்னமோ ராஜேபக்சே இங்கேருந்து சொன்னவுடனே அப்படியே டிரசவுர்ல ஒன்னுக்கு போயிட்டு பயந்துகிட்டு தனி ஈழம் கொடுக்கிர மாதிரி. வெண்ணைகளா உலகமே கண்டிச்சும் எவன பத்தியும் கவலை படாம அவன் இருக்குறான். இதுல இந்த 85 வயசு அம்னிதர் சத்தம் போடணுமா ? அவர் பதவியை ராஜினாமா செஞ்சாருன்னா அதை கேட்டு உலகமே ஸ்தமபிசிடுமா? ஆனா புலிகளை சுட மாட்டான்கலாம் தனி ஈழம் கிடைச்சிடுமாம். ஏன்டா நீ புலிகளுடைய காசுல படம் எடுத்த நன்றிக்கு எங்க தமிழகம் தான் கிடைசுச்சா?தமிழ் நாட்டு அரசியள்ள நீ ஜெயிச்சாலும் யாருக்காக சட்டசபையில போராடுவ. தனி ஈழம்ன்னு அங்கயும் கத்துவ. பிரபாகரன் வாழ்கன்னு அங்கயும் பேசுவ. உனக்கு, இந்த வைகோவுக்கு எல்லாம் MP சீட்டு MLA சீட்டு கிடைச்சாலும் என்ன பிரோஜனம். தமிழ் நாட்டுக்கோ இந்தியாவுக்கோ குரல் கொடுக்க போறதில்லை. அங்கயும் போய் ரத்தஆறு ஓடும், நாடு ரெண்டாகும்ன்னு தான் பேசுவீங்க. இதுல என்ன பியுட்டின்னா நீ தமிழ் தமிழன்னு பேசிகிட்டு சிங்களகாரியை வச்சே படம் எடுக்கறதுதான். போதும்டா தமிழை என்னமோ நீங்கதான் குத்தகை எடுத்து வச்சிருக்க மாதிரியும் நீங்க இல்லேனா தமிழ் அழிஞ்சிடுமுன்ற மாதிரி பேசாதிங்கடா. எங்களுக்கும் தெரியும்டா உங்க கூத்தெல்லாம். முதல்ல உன்னை, இந்த வைகோ இன்னும் ரெண்டு மூணு டிக்கெட்டுங்க இருக்கீங்க. உங்களை எல்லாம் இலங்கையில குடியுரிமை வாங்கி கொடுத்து அங்கேயே அந்த வன்னி காட்டுலயே குடியிருந்து சேவை செய்யுங்கடான்னு சொல்லணும். போதும்டா இங்கே தமிழ் நாட்டுல எங்க அப்பா அம்மாவுக்கு அண்ணன் தங்கச்சிக்கு நாங்க முழுசா எங்க கடமையா செய்யவே எங்களுக்கு நேரம் பத்தமாட்டேங்குது. இதுல இந்தியாவுக்கு வேற கடமை செய்யணும் இலங்கை தமிழர்களுக்கு வேற கடமை செய்யனும்ன்னா எங்களால முடியலடா? உன்னை மாதிரி லூசு பயலுக கத்தறதுன்னால கலைஞர் has already spent 100 கோடி, which is more than enough. Further more, has done like KALAINGAR for Tamizh refugees in TN....

sathish - melbourne,ஆஸ்திரேலியா 2010-12-11 04:05:24 IST


சபாஸ் ,,சரியான போட்டி,,,, கொசுவுக்கும்,,, கொரங்குக்கும் போட்டி,,, நேத்து முளைச்ச காளான்,, சினிமாவிலே இப்போ தம்பிடி குறையுது,, இல்லே ,,அதனாலே அரசியலில் பூந்துட்டாரு,,, அறிவுள்ளவன் பின்னாலேயும் பத்து பேர்,,, இது போலே அறிவு கெட்ட ....யம் பின்னாலேயும் பத்து பேரு,,,,...

மருதூர் மாணிக்கம் - madurai,இந்தியா 2010-12-11 01:46:09 IST
சீமானே! சிறையில் இருந்தும் உனக்கு புத்தி வரவில்லை. உன்னை இந்த முறை பாளையங்கோட்டையில் பல வருடங்களுக்கு உள்ளே அனுப்பி வைத்து விடுவோம். கலைஞரை எதிர்த்தால் டெபாசிட் கூட வாங்க மாட்டாய்....

குஞ்சுமணி - சென்னை.,இந்தியா 2010-12-11 01:07:28 IST
உனக்கு டிபாசிட் கிடைத்தால் நான் இங்கு கமெண்ட் எழுதுவதை நிறுத்துகிறேன். வாசகர்களும் உன்னை வாழ்த்துவார்கள். நீ வெற்றி பெற்றால் மனித தெய்வம் என நான் நினைக்கும் மருத்துவர் ஐயாவின் கட்சியில் இருந்து விலகி உன்னுடைய அடிமையாக வாழ்நாள் முழுவதும் இருக்கிறேன்....

பாரத புத்திரன் - chennai,இந்தியா 2010-12-11 00:29:37 IST
திரு சீமான் அவர்களே!உண்மையை வெறியோடு பேசுவது,அரசியல் தலைவர்களை ஒத்தைக்கு ஒத்தையா வாறியான்னு கூப்டுறது இதுல்லாம் இல்ல அரசியல். அர்ப்பணிப்பு...மகாத்மா மாதிரி. அடிக்க போறியா? முடிஞ்ச வரைக்கும் என்னை அடி. உடைத்து கைகள் ஓய்ந்த பின்பு ,உனது கோபம் தீர்ந்த பிறகாவது என் மக்களின் நிலை பற்றி யோசி....இது தான் தலைமைக்கு அழகு. உன்னோட மீட்டிங் கொஞ்சம் கேட்டேன். ரொம்ப கேவலமா இருக்கு. கருப்பு சட்டை போட்டு பெரியார் பக்தன்னு சொல்றீங்களே!பெரியாருக்கு இருந்த எதிரியையும் மதிக்கும் பண்பு உங்களுக்கு இல்லாமல் போனது வேட்க கேடு தானே? வாய்க்கு வந்ததெல்லாம் பேசும் வழக்கம் தொண்டனுக்கு இருந்தால் தலைவனுக்கு பிரச்சனை இல்லை, ஆனால் அந்த பழக்கம் தலைவனுக்கு இருந்தால் முதல் அடி உனக்கு அல்ல,உன்னை நம்பி வரும் தொண்டனுக்கே;,,,,,,,,,,,,,,,,,,,,,,பாரத் மாதா கி ஜெய்.தேசம் காப்போம்,தேசியம் காப்போம்....

கே.கைப்புள்ள - nj,இந்தியா 2010-12-11 00:13:28 IST
யாருடா இவன் இந்த சீமான் கோமான். இவன் யாரு இவன் முதல்ல. நீயெல்லாம் இந்த மாறி பேசுர அளவுக்கு ஜனநாயகம் இருக்கு. அதனாலதான் நீ கொரல் விடுற. நீயெல்லாம் யார்ன்னு நெனச்சு சும்மா சவுண்ட் விட்டுகிட்டு திரியிற? இது மாறி சின்ன சின்ன கொசு தொல்ல தாங்கலப்பா....

Chandra - Denver,யூ.எஸ்.ஏ 2010-12-11 00:11:33 IST
Do contest against Kalaignar and lose deposit. You need to take a oath that, if you lost the deposit, you will never speak agaist him. It is the people who decide about who win or loose. Find out your real support in the ground by contesting against Kalaignar....

சீமான் மீதான தேசிய பாதுகாப்பு சட்டம் ரத்து பற்றிய தினமலரின் செய்தி

சென்னை : சினிமாக்காரர் சீமான் மீதான தேசிய பாதுகாப்பு சட்டத்த‌ை ரத்து செய்து சென்னை ஐகோர்‌ட் உத்தரவிட்டது. நீதிபதிகள் தர்மாராவ், ஹரி பரந்தாமன் அடங்கிய பெஞ்ச் இந்த உத்தரவை பிறப்பித்தது.

சீமான் கைது செய்ததை இந்த பத்திரிக்கை வரவேற்கிறதா? இல்லை விடுதலை செய்த நீதிபதிகளை கண்டிக்கிறதா?




அதென்னா சினிமாகாரர் சீமான்? சினிமாவில் இருந்து வந்த முதல்வர் இருக்கிறார், எதிர்கட்சிக்காரர்கள் இருக்கிறார்கள். தண்ணி அடித்துவிட்டு பேசும் விஜயகாந்த் இருக்கிறார். இவர்களையெல்லாம் விட சீமான் என்ன குற்றம் செய்தார்?



மற்றொரு பதிவில் சீமானை விடுதலை செய்வார்கள் ஆனால் இதனை போன்ற வழக்குகளை பதிவு செய்த காவல்துறையை கண்டிக்கவாவது செய்வார்களா என்று கேட்டு இருந்தேன். இதுவரை தீர்ப்பில் அப்படி ஒரு கண்டிப்பு இருப்பதாக வெளி வரவில்லை.



இதற்கு பெயர் தான் இந்திய நீதி.. ஆட்சியில் இருப்பவர்கள் தங்கள் இஷ்டம் போல இதனை போன்ற பல வழக்குகளை பதிவு செய்யலாம்.

ராஜீவ் காந்தி என்னும் மனித மிருகம்-6

ஈழதமிழர்கள் படுகொலையில் ராஜிவ்காந்தியின் பங்கு என்று எழுத ஆரம்பித்தால் இந்த பதிவுகள் எண்ணிக்கை எப்படியும் நூறினை தாண்டும்.


ஜால்ரா போடுவதற்கு யாராவது இருந்தால் நல்லது என நினைக்கும் அரசியல்வாதிகள் தங்களுக்கு ஜால்ரா போடுபவர்கள் தான் முதல் எதிரிகள் என்பதை உணர வேண்டும். அப்படி அவருக்கு வெளிநாட்டு கொள்கை என்ற பெயரில் தங்களின் வளத்தை வளர்த்து கொண்ட அதிகாரிகள் தான் அதிகம். அத்தகைய அதிகாரிகள் தங்களுக்கு சொந்தமான அல்லது தங்களுக்கு ஆதாயம் தரும் நிறுவனங்களின் கொள்கைகளை தான் தூக்கிபிடிப்பதில் அக்கறை காட்டினர். இலங்கையை பிரித்து ஈழம் அமைப்பதென்றால் அதற்கு ஒரே ஒரு போராளி குழுவை மட்டும் வளர்த்தாலே போதும். ஆனால் அதையே பல போராளி குழுக்களாக வளர்த்து விட்டு அதன் மூலம் இலங்கையை தன கட்டுபாட்டில் வைக்க வேண்டும் என்பதே இந்தியாவின் அப்போதைய இலங்கையின் மீதான வெளியுறவு கொள்கையாக இருந்தது.




வெளியுறவு கொள்கைக்காக அடுத்தவர்களை ஏமாற்றியது போல் நம்மை நாமே ஏமாற்றி விளையாடும் விளையாட்டு ராஜீவ் காந்தியின் காலத்திலேயே வந்தது. உதாரணம் மாலத்தீவு புரட்சி. அதில் ஆதியும் அந்தமும் இந்தியர்களே. ஆட்சியை பிடிக்க நினைக்கும் எதிர்க்கட்சி தலைவரை ஆட்சியில் உட்கார வைக்க இந்தியா எடுத்த முயற்சி தோல்வி (உளவுத்துறையின் வேலை). ஆனால் அதையே ராஜ தந்திரமாக மாற்ற இந்தியாவே படைகளை அனுப்பி புரட்சியை தடுத்தது. இதில் புரட்சி செய்ய அனுப்பப்பட்டவர்கள் தான்

பத்மநாபாவின் ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி. இவர்களை முழுவதுமாக கட்டுபடுத்தி வைத்திருந்தவர்கள் நமது உளவுத்துறையினர் தான். (புலிகள் தமிழின எதிரிகளையும் துரோகிகளையும் ஏன் கொல்லவேண்டும்? இவர்களை விட்டுவைத்தால் போராளிகளுக்கும் காசுக்காக கொலைகளை செய்பவனுக்கும் வித்தியாசம் இல்லாமல் போயிருக்கும்)



இவர்களையும் ஏனைய போராளி குழுக்களையும் புலிகள் அழித்தனர். அதில் சில எச்சங்களை மிச்சம் விட்டதால் வந்த விளைவு தான் இன்றைய அவர்களின் நிலை.(ஆனந்த சங்கரி, டக்ளஸ் தேவானந்தா போன்றோர் இன்னமும் உயிருடன் இருக்கின்றனர்.)


ஈழதமிழர்களை கொல்ல சொல்லி ராஜீவ் இந்திய அமைதிப்படையை அனுப்பவில்லை. ஆனால் அனுப்பிய படையை நிர்வகிக்க அனுப்பிய ஆட்கள் தங்களின் அதிகாரத்தையும் தங்களுக்கு தேவையானவற்றை இலங்கை அரசிடம் இருந்து பெற்று கொள்ள அவர்கள் இந்திய அரசும் இலங்கை அரசும் செய்து கொண்ட ஒப்பந்தங்களை மீறினர்.( சண்டைக்காரர்கள் இருவருக்கும் இடையில் போட்டால் தான் அதன் பெயர் ஒப்பந்தம். சண்டைக்காரனும் சாட்சிக்காரனும் போட்டு கொண்டால் அதன் பெயர் என்னவென்று தெரியவில்லை? இதை கூட ஒழுங்காக அமல்படுத்த முடியாத நாடு தான் நம் நாடு. இவர்களை நம்பி ஒப்பந்தம் போட்டவர்கள் எல்லாம் என்னவானார்கள் என்பதே தனி தொடராக எழுத வேண்டும்.)


முதலில் ஒப்பந்தங்களை மட்டுமே மீறிய அவர்கள் ஏற்கனவே அவர்கள் வளர்த்து வைத்த போராளி குழுக்களை வைத்து தங்களின் விளையாட்டை தொடங்க முற்பட்டனர். அதற்கு பதிலடி புலிகள் கொடுத்தனர். தாக்குதல் நடத்திவிட்டு மறைந்து கொள்வதென்ற கொரில்லா தாக்குதல்களை தாங்க முடியாமல் அப்பாவி மக்களை துன்புறுத்த தொடங்கினர். இந்த துன்புறுத்தல்கள் எல்லாம் பின்னர் வன்முறை, கற்பழிப்பு, கொலைகள் என்று போனது. அதுவே பின்னர் ராஜிவின் கைமீறி சென்று கூட்டம் கூடமாக தமிழர்களை கொல்லும் நிலையை உருவாக்கியது.( மக்களை துன்புறுத்தினால் போராளிகளை காட்டி கொடுப்பார்கள் என்று எதிர்பார்த்தார்கள். இப்போது போல் அப்போது யாரும் இல்லை)



இந்திய அமைதிப்படை செய்த அட்டுழியங்களை இந்த பதிவில் இணைத்து உள்ளேன்.


Download (PDF Zipped):


Volume 1 Part 1: http://www.mediafire.com/?emj0zigyjyu

Volume 1 Part 2: http://www.mediafire.com/?i5tzkzyjfny

Volume 1 Part 3: http://www.mediafire.com/?tz1mvzdgggz

தும்பை விட்டுவிட்டு அதிகாரிகளின் போக்கிலே சென்றால் அழிவது எதிரிகள் மட்டும் அல்ல தாங்களும் தான் என்பதை ராஜீவ் காந்தியின் வாழ்க்கை தந்த பாடமாக இருக்கட்டும்.

உள்ளம் 'தரிசாக' இருக்கும் அன்னைகளை பற்றி ஒரு ஈனபிறவியின் கருத்து

இவரெல்லாம் அன்னை தெரசா பற்றி பேசவில்லையென்று யார் அழுதது. அன்னை தெரசாவை பற்றி பேச சொன்னால் இவர் ஜெயலலிதாவை கிண்டல் செய்வதாக நினைத்து இவர் சொல்லிய வார்த்தைகள் தான் "அன்னை தெரசா என்று ஒருவர்தான் இருக்க முடியும். வேறு சில அன்னைகளுக்கு உள்ளம் "தரிசாக'' இருக்கும். "தரிசாக'' இருப்பதெல்லாம், தெரசா அல்ல."

அன்னை தெரசாவை பற்றி பேசுவதற்கு ஒரு யோக்யதை வேண்டும். அய்யா நீங்கள் சொல்லுவது போல் தரிசான அம்மாவாக ஜெயலலிதா இருக்கலாம். ஆனால் அதை ஒரு கருமி சொல்லக்கூடாது. ஒரு ஈனபிறவி எடுத்து இங்கே ஆட்சியில் இருக்கும் கலைஞர் சொல்லகூடாது. அரசியல் நாகரிகம் பற்றி அடிக்கடி சொல்லிவிட்டு அதை மீறும் ஒரு ஞாபகமறதி நோயாளி அதை சொல்லகூடாது. (வயசானால் ஞாபகமறதி எல்லாம் வரும் சரி தான் ஆனால் வயசானால் எல்லார் மேலும் இரக்கம் வரும். அது உங்களிடம் இதுவரை யாரும் பார்க்கவில்லையே. இரக்கமே உருவான தெரசாவை பற்றி ஈழதமிழர்கள் கொல்லப்படும்போது ஆட்சியில் இருந்து வேடிக்கை பார்த்த ஒரு இழிபிறவி சொல்லகூடாது.( அப்போது அவர் ஸ்பெக்ட்ரம் ஊழலில் சேர்த்த பணத்தை எண்ணிக்கொண்டு இருந்ததாக சொல்கிறார்கள். இப்படி சேர்த்தும் இன்னமும் பணம் சேர்க்கும் வழி என்னவென்று தான் யோசித்து கொண்டு இருக்கிறார். மடியில் கணம் இல்லையென்றால் இவராக ஏன் இவரின் சொத்து கணக்கை தானாக சொல்ல வேண்டும்?)




மற்ற மாநிலங்களில் எல்லாம் அந்த மாநில தலைவர்கள் எல்லாம் மாநிலத்தில் இருக்கும் தேசிய பிரச்சினைகளுக்கும் பொது பிரச்சினைகளுக்கும் ஒன்றாக தான் போராடுகிறார்கள். ஆனால் இந்த ஈனபிறவிகள் எல்லாம் இருக்கும்வரை அப்படி ஒன்றும் நடவாது என்றே தான் தோன்றுகிறது. இவர் முதலில் ஆரம்பிப்பார்.பின்னர் அந்த அம்மா பதிலடி கொடுக்கும். இப்படி மாற்றி மாற்றி விளையாடும் இவர்களுக்கு மனித உயிர்கள் எல்லாம் என்றைக்கு முக்கியமாகபட்டு உள்ளது. அந்த அம்மா போர் என்றால் உயிர் இழப்பு சகஜம் என்று சொன்னாலும் பின்னர் தனிதமிழ் ஈழமே நிரந்திர தீர்வு என்று கூறி விட்டார். ஆனால் கடைசி வரை வோட்டுக்காக கெஞ்சினாரே தவிர தனிதமிழ் ஈழத்தை இவர் ஆதரிக்கவும் இல்லை. நிரந்திர தீர்வை கூட சொல்ல முடியாத இவர் முதல்வன் படத்தில் வரும் அந்த மோசமான முதல்வர் என்பதில் எள்ளளவும் சந்தேகம் இல்லை.(ரகுவரன் நடித்த வேடம்)



அந்த அம்மா வேண்டுமானால் ஈழ தமிழர்களுக்கும் தமிழர்களுக்கும் எதிரியாக இருக்கலாம். ஆனால் நீங்கள் ஈழதமிழர்களுக்கு மட்டும் இல்லை தமிழினத்திற்க்கே துரோகி என்பதை மக்கள் அறிவார்கள்.

ச்சே இவ்வளவு தானா இந்த உலகம்

இனபடுகொலை சம்பந்தமாக வந்த காணொளியை கண்டபின்னரும்  உலகமே
ஒன்று கூடி நம்மை இன்னும் ஏமாற்றுகிறது என்று புரிகிறது. அந்த காணொளியில் தான் எல்லாமே தெள்ளதெளிவாக உள்ளதே. இன்னும் வேறு என்ன கேட்கிறார்கள்? இன்னும் நம்மை எப்படியெல்லாம் நம்பவைத்து ஏமாற்ற போகிறார்கள். போர்குற்றவியல் நீதிமன்றம் எல்லாம் தமிழனுக்கு சரிபட்டு வருமா? பாலியல் கொடுமைகள் எல்லாம் போரில் சாதாரணம் என்று கேள்விப்பட்டு இருக்கிறேன். ஆனால் சக தமிழன்/ தமிழச்சிகள் இவ்வளவு கொடூரமாக கொல்லப்படும்போது இனிமேலும் துரோகிகளை பற்றி மூடி மறைத்து எழுதுவது தவறு என்றே உணருகிறேன்.
கருணா என்றாலே  துரோகம் என்று பொருளா? அதனால் அந்த இருவரை பற்றியும் நாம் பார்க்க வேண்டியது இல்லை.
ஜகத்கேஷ்பருக்கு முன்னரே (December 2008) புலிகளின் மீதான பிடி மட்டும் அல்ல துரோகங்களும் இறுகுகிறது என்று தெரியும். ஆனாலும் சொல்லவில்லை. அவரே முன்னின்று போராட்டங்களை ஊக்குவிப்பது போல நடித்து தன் மீதான மற்றவர்களின் கவனத்தை திசை திருப்பினார். அப்போதும் கலைஞரை கண்டித்தோ இல்லை மத்திய அரசை கண்டித்தோ கோஷங்கள் எழுப்பகூடாது என்று சொல்லி மாணவர்களையும் மற்றவர்களையும் ஏமாற்றியவர். இவரை வைகோ, நெடுமாறன் போன்றோர்கள் நம்பவில்லை. இவர் பேச்சில் ஆளை வீழ்த்தும் வல்லமை கொண்டவர் ஆதலால் இன்னமும் இவரை நம்பும் ஏமாளிகள் உள்ளனர். இவர் தானாக எந்த ஒரு போராட்டத்திலும் கலந்து கொண்டவரில்லை. முத்துகுமரனின் இறுதி ஊர்வலத்திற்க்கோ அல்லது அதற்கு முதல் நாளிலோ இவர் எங்கே இருந்தார் என்று தெரிந்தவர்கள் கூறவும்?

அடுத்து  வருபவர் திருவாளர் தொல். திருமாவளவன். இவரோ அல்லது இவர் கட்சி சார்ந்தவர்களோ இல்லாமல் எந்தவொரு போராட்டமும் நடைபெறாது. இவர்கள் நடத்தினால் மட்டும் தான் இவரின் கட்சிகாரர்கள் கலந்துகொள்வார்கள் என்றில்லை. எங்கு எந்த போராட்டம் நடந்தாலும் இவர்களே மாணவர்களோ அல்லது மற்றவர்களோடு கலந்து விடுவர். பின்னர் நடக்கும் அத்தனை குழப்பங்களுக்கும் இவரின் கட்சிக்காரர்களே காரணம். முத்துகுமரனின் இறுதி ஊர்வலத்தில் மாணவர்களை அடித்து விரட்டிய பெருமை இவர்களையே சாரும். ஈழத்தமிழர்களின் இனபடுகொலைகளுக்கு எதிராக வழக்கறிஞர்கள் நடத்திய போராட்டத்தில் குழப்பமும் அதையே பின்னர் கலவரமாகவும் மாற்றிய பெருமை இவரையும் இவர் கட்சியினரையுமே சேரும்.

பத்திரிக்கையாளர்கள்: ஈழ பிரச்சினைகளுக்கு முன்னர் வரை பத்திரிக்கை என்றால் அதில் ஒரு தர்மம் கடைபிடிப்பதாகவும் (ஊமை விழிகள் படத்தினை பார்த்து ஏமாந்தது தான்) அதை மீறாமல் எப்போதும் இருப்பார்கள் என்று நினைத்து இருந்தேன். எந்த பத்திரிக்கை நடுநிலையை காத்தது என்றே தெரியவில்லை. அப்படி ஒரு ஒற்றுமை. தினமலரில் ஆரம்பித்து( உங்களுக்கெல்லாம் சாவே வராதா? அப்படியே தான் இருப்பிங்களா என்ன?)  நான் கடைசியாக ஏமாந்தது நக்கீரனிடம். அத்தனை பத்திரிக்கைகளுமே ஊழல்கள் லஞ்ச லாவண்யத்தில் சிக்கி நம்மை ஏமாற்றி விட்டன. ( இதற்கு வேற எவ்வளவோ தொழில்கள் இருக்கின்றனவே. இதில் தான் இந்த மோசடிகளை செய்ய வேண்டுமா?)


மீடியா: எப்போது ஒவ்வொரு கட்சிக்காரர்களும் தொலைக்காட்சி நிறுவனங்கள் ஆரம்பித்தார்களோ அப்போதே நடுநிலை என்பது போய்விட்டது. சன் தொலைகாட்சியில் கிளிநொச்சி வீழ்ந்த உடனே ஆனையிறவு வீழ்ந்ததாக செய்தி போட்டார்கள். அந்த அளவு செய்திகள் நடுநிலையாக இருந்தன.( ஆனால் மூன்று நாட்கள் போராடி தான் ஆனையிறவை விட்டு புலிகள் பின்வாங்கினார்கள்) . கலைஞர் தொலைகாட்சியில் மானமிகு நமிதாவை ஆடவிட்டு அதை மக்கள் பார்க்கும்படி செய்து இருந்தார்கள்.ஜெயா தொலைகாட்சியில் இலங்கையில் போரா என்று கேட்டு புண்ணியம் கட்டியவர்கள் தான் இருக்கிறார்கள்.மக்கள் தொலைகாட்சி இலங்கை போரை தொடர்ந்து காட்டியது. ஆனால் அதில் அரசியல் தேவைக்காக என்பதும் இருந்தது. விஜயில் பரவாயில்லை. நிகழ்ச்சிகளில் யாரேனும் ஈழ பிரச்சினைகளுக்கு அழுதாலும் காட்டினார்கள்.


நான் இந்த பதிவினை மனம் வெறுத்தே பதிவு செய்கிறேன். பலரின் பெயர்கள் எழுதவே நினைக்கின்றேன். ஆனால் அவர்களுடன் தொடர்பில் உள்ளவர்கள்  எல்லாம் நல்லவர்களாக இருக்கிறார்கள். அதனால் நான் எழுதுவது கடினம்.
உங்களுக்கு தெரிந்த துரோகிகளை(புதிய ) பற்றி கூறவும். இனிமேலாவது நாம் ஏமாறாமல் இருப்போம் ஆக.

ஈழ இனபடுகொலையை தடுக்க தவறியது நாங்கள் தான் என்று கருணாநிதி ஒத்துகொள்வாரா?

தமிழக முதல்வர் தற்போது ஒரு பேட்டியில் கூறியிருக்கும் விஷயம் முக்கியமானது. ஏன் என்றால் இதையே அவர் பின்னர் மாற்றி கூறக்கூடும். தற்போது தி.மு.க அங்கம் வகிக்கும் காங்கிரெஸ் கூட்டணியில் சிறு சிறு பிரச்சினைகள் வந்து கொண்டு இருக்கின்றன. இப்படி பிரச்சினைகள் பல வந்தாலும் காங்கிரஸ் கட்சியில் இருப்பவர்களே திட்டினாலும் வாய் திறக்காது இருந்தார். ஆனால் அதையும் மீறி பேட்டி கொடுத்தே ஆக வேண்டிய நிலைக்கு நமது முதல்வர் தள்ளப்பட்டுள்ளார். இந்த பேட்டியில்  கூறியுள்ளதாவது
"மத்திய அரசு, மாநில அரசு என்று கருதாமல் இரண்டும் ஒரே அரசுதான் என்று சிந்தித்து ஒரே அரசாக கருதுகிறோம். நிர்வாக வசதிக்காக அவை பிரிக்கப்பட்டவை என்பதை நாம் மறந்து விடக்கூடாது. அவை பேதம், பிளவுக்காக இல்லை. நீங்கள் படித்தவர்கள் உங்கள் சிந்தனைக்கு தீனி போட்டதை போல சில கருத்தை கூறினேன். உங்களுக்கு இது புலப்படுமானால், மாநில அரசு, மத்திய அரசை ஆளுபவர்களுக்கு, கட்சிகளுக்கு இது புலப்படாமல் போக முடியாது. "

இதன் உள் அர்த்தமானது நாங்கள் மத்திய அரசு, மாநில அரசு என்று பிரிந்து ஊழல்கள் செய்யவில்லை. அப்படி நாங்கள் செய்திருந்தாலும் அதில் கொடுக்கவேண்டிய பங்கை காங்கிரஸ் கட்சியின் மேலிடத்திற்கு ஏற்கனவே கொடுத்து உள்ளேன் என்பது தானே அர்த்தம். இது மட்டுமா? ஈழத்தில் நடந்த இனபடுகொலைகளை நாங்கள் இருவரும் சேர்ந்து தான் கண்டு கொள்ளாமல் இருந்தோம். இருப்போம். அதையும் ஆதரிப்போம். தி.மு.க காங்கிரஸ் கட்சியுடன் கூட்டு வைத்தால் தி.மு.க,காங்கிரஸ் இரு கட்சிகளுமே தங்கள் தொகுதிகளின் எண்ணிக்கைகளை இழக்கும். தற்போதைய பீகார் அரசியலில் காங்கிரஸ் ஒரு தோல்வியின் சின்னம்.
அதே நேரத்தில்  அ.தி.மு.க காங்கிரஸ் கட்சியுடன் கூட்டு வைத்தால் எவ்வளவு தொகுதிகளை  அ.தி.மு.க விட்டுகொடுக்க வேண்டியிருக்கும் என்பதும் கூட்டணி ஆட்சியை அவர்கள் எதிர்பார்க்கிறார்கள் என்பதும் அ.தி.மு.கவை யோசிக்க செய்யும். அ.தி.மு.க காங்கிரஸ் கூட்டணியை உடைக்கும் என்றே எதிர்பார்க்கலாம். அப்படி உடைந்தால் அ.தி.மு.கவுடன் இருக்கும் கட்சிகள் எல்லாம் நட்ராற்றில் விடப்படும். அதையும் மீறி இப்பவும் கூட்டணியில்  இருக்கிறார்கள் என்றால் அது அ.தி.மு.க காங்கிரசை நட்ராற்றில் விடபோகிறது என்பதே உண்மையாக இருக்கலாம். ஆகவே காங்கிரஸ் தே.மு.தி.கவுடனும் பா.மா.கவுடனும் கூட்டணி அமைக்கும் என எதிர்பார்க்கலாம்.
ஆனால் இது தேர்தலுக்கு முன் உள்ள நிலைமை. 
கூட்டணி நிலவரங்கள் இப்படி இருக்க இப்போது திருவாய் மலர்ந்துள்ள கலைஞர் காங்கிரஸ் கூட்டணியை விட்டு வந்தால்  நாங்கள் எல்லாவற்றையும் ஒன்றாக தான் சேர்ந்து செய்தோம் என்றே சொல்லுவாரா என்ன? இல்லை வடிவேலு சொல்வது போல் அது வேற வாய் இது நாறவாய் என்பதை உறுதிபடுத்துவாரோ

Popular Posts