Showing posts with label ஈழ இனபடுகொலை. Show all posts
Showing posts with label ஈழ இனபடுகொலை. Show all posts

புலி பயம் காட்டி ஊழலில் இருந்து தப்பித்து கொள்ள கருணாநிதி முயற்சி

ஸ்பெக்ட்ரம் பிரச்சினையை எப்படியெல்லாம் திசை திருப்பலாம் என்பதற்கு நேற்று தான் ஒரு பதிவு போட்டேன். அந்த பூச்சாண்டி எல்லாம் ஒத்து வராததால் சோனியா குடும்பம் எதற்கு பயப்படும் என்று பார்த்து கொண்டிருந்த கலைஞர் இப்போது புலிகள் தாக்குதல் நடத்துவார்கள் என்று கிலி வேறு கிளப்பியுள்ளார்.

லத்திகா சரண் ஒரு தேர்ந்த போலிஸ் அதிகாரி என்ற தரத்தினை எப்போதோ இழந்து விட்டார் என்றே தோன்றுகிறது. தமிழீழ ஆதரவாளர்களை நோக்கி இவர் எடுக்கும் ஒவ்வொரு நடவடிக்கையும் சர்ச்சைகளில் கொண்டு போய் தான் முடிந்துள்ளன.

ரயில்வே தண்டவாளத்தில் வெடிகுண்டு வைத்து அந்த வழியாக செல்லும் ரயில்களை தகர்க்க முயற்சி செய்ததாக காவல்துறை அந்த ஒரு வாரத்திலே பல கதைகள் சொன்னது. அதை சொன்னதும் நமது லத்திகா சரண் தான்.
அதே போல் சென்னையிலும் தண்டவாளத்தில் கற்களை வைத்து சமூக விரோதிகள் முயற்சி செய்தனர் என்றனர். ஒரே நேரத்தில் ஒரு மனிதர் இரு இடங்களில் இருந்து இரு வேறு செயல்களை செய்ய முடியாது என்பதால் அதற்கு காரணம் என்று இவர்களால் கைது செய்யப்பட்டவர்கள் எல்லாம் விடுதலை செய்யப்பட்டனர்.

இதில் நமது உளவுத்துறை எவ்வளவு சீரழிந்து வருகிறது என்பதற்கு தமீழத்தில் இருந்து இங்கே தங்கிருக்கும் பெண்களிடம் தங்களது காம லீலைகளை அரங்கேற்றி உள்ளனர் தமிழக உளவுத்துறையினர்.

இவர்கள் எப்போதுமே புது கதைகளை சோடிக்கவும் ஒரு பிரச்சினையை திசை திருப்ப மற்றொரு பிரச்சினையை செய்வதற்குமே பயன்பட்டு இருக்கின்றனர்.


இவரே தான் சொல்வதாக ஒரு செய்தியும், மத்திய உளவுத்துறையும் ராவும் சொல்வதாகவும் ஒரு செய்தியும் பரப்பபட்டது.   எது எப்படி இருந்தாலும் ஊழல்களில் இருந்து தப்பிக்க இப்படியெல்லாமா சொல்லுவது.

அப்படி ஒருவேளை உளவுத்துறை என்று ஒன்று இருந்தால் இங்கே நடக்கும் அசம்பாவிதங்களை முன்னரே தடுத்திருக்க முடியாதா என்ன?

ஈழ இனபடுகொலையை தடுக்க தவறியது நாங்கள் தான் என்று கருணாநிதி ஒத்துகொள்வாரா?

தமிழக முதல்வர் தற்போது ஒரு பேட்டியில் கூறியிருக்கும் விஷயம் முக்கியமானது. ஏன் என்றால் இதையே அவர் பின்னர் மாற்றி கூறக்கூடும். தற்போது தி.மு.க அங்கம் வகிக்கும் காங்கிரெஸ் கூட்டணியில் சிறு சிறு பிரச்சினைகள் வந்து கொண்டு இருக்கின்றன. இப்படி பிரச்சினைகள் பல வந்தாலும் காங்கிரஸ் கட்சியில் இருப்பவர்களே திட்டினாலும் வாய் திறக்காது இருந்தார். ஆனால் அதையும் மீறி பேட்டி கொடுத்தே ஆக வேண்டிய நிலைக்கு நமது முதல்வர் தள்ளப்பட்டுள்ளார். இந்த பேட்டியில்  கூறியுள்ளதாவது
"மத்திய அரசு, மாநில அரசு என்று கருதாமல் இரண்டும் ஒரே அரசுதான் என்று சிந்தித்து ஒரே அரசாக கருதுகிறோம். நிர்வாக வசதிக்காக அவை பிரிக்கப்பட்டவை என்பதை நாம் மறந்து விடக்கூடாது. அவை பேதம், பிளவுக்காக இல்லை. நீங்கள் படித்தவர்கள் உங்கள் சிந்தனைக்கு தீனி போட்டதை போல சில கருத்தை கூறினேன். உங்களுக்கு இது புலப்படுமானால், மாநில அரசு, மத்திய அரசை ஆளுபவர்களுக்கு, கட்சிகளுக்கு இது புலப்படாமல் போக முடியாது. "

இதன் உள் அர்த்தமானது நாங்கள் மத்திய அரசு, மாநில அரசு என்று பிரிந்து ஊழல்கள் செய்யவில்லை. அப்படி நாங்கள் செய்திருந்தாலும் அதில் கொடுக்கவேண்டிய பங்கை காங்கிரஸ் கட்சியின் மேலிடத்திற்கு ஏற்கனவே கொடுத்து உள்ளேன் என்பது தானே அர்த்தம். இது மட்டுமா? ஈழத்தில் நடந்த இனபடுகொலைகளை நாங்கள் இருவரும் சேர்ந்து தான் கண்டு கொள்ளாமல் இருந்தோம். இருப்போம். அதையும் ஆதரிப்போம். தி.மு.க காங்கிரஸ் கட்சியுடன் கூட்டு வைத்தால் தி.மு.க,காங்கிரஸ் இரு கட்சிகளுமே தங்கள் தொகுதிகளின் எண்ணிக்கைகளை இழக்கும். தற்போதைய பீகார் அரசியலில் காங்கிரஸ் ஒரு தோல்வியின் சின்னம்.
அதே நேரத்தில்  அ.தி.மு.க காங்கிரஸ் கட்சியுடன் கூட்டு வைத்தால் எவ்வளவு தொகுதிகளை  அ.தி.மு.க விட்டுகொடுக்க வேண்டியிருக்கும் என்பதும் கூட்டணி ஆட்சியை அவர்கள் எதிர்பார்க்கிறார்கள் என்பதும் அ.தி.மு.கவை யோசிக்க செய்யும். அ.தி.மு.க காங்கிரஸ் கூட்டணியை உடைக்கும் என்றே எதிர்பார்க்கலாம். அப்படி உடைந்தால் அ.தி.மு.கவுடன் இருக்கும் கட்சிகள் எல்லாம் நட்ராற்றில் விடப்படும். அதையும் மீறி இப்பவும் கூட்டணியில்  இருக்கிறார்கள் என்றால் அது அ.தி.மு.க காங்கிரசை நட்ராற்றில் விடபோகிறது என்பதே உண்மையாக இருக்கலாம். ஆகவே காங்கிரஸ் தே.மு.தி.கவுடனும் பா.மா.கவுடனும் கூட்டணி அமைக்கும் என எதிர்பார்க்கலாம்.
ஆனால் இது தேர்தலுக்கு முன் உள்ள நிலைமை. 
கூட்டணி நிலவரங்கள் இப்படி இருக்க இப்போது திருவாய் மலர்ந்துள்ள கலைஞர் காங்கிரஸ் கூட்டணியை விட்டு வந்தால்  நாங்கள் எல்லாவற்றையும் ஒன்றாக தான் சேர்ந்து செய்தோம் என்றே சொல்லுவாரா என்ன? இல்லை வடிவேலு சொல்வது போல் அது வேற வாய் இது நாறவாய் என்பதை உறுதிபடுத்துவாரோ

Popular Posts