Showing posts with label ஈனபிறவிகளின் நாடு. Show all posts
Showing posts with label ஈனபிறவிகளின் நாடு. Show all posts

தீர்ப்பளிக்கும் நீதிமன்றங்களும் அதை மதிக்க தவறும் அரசு இயந்திரங்களும்

தடை செய்யப்பட்ட இயக்கத்துக்கு ஆதரவாக போராட்டம் நடத்துவதோ, பிரச்சாரம் செய்வதோ குற்றமாகாது என்று வைகோ மீதான பொடா வழக்கில் உச்சநீதி மன்றமே தீர்ப்பளித்துள்ளது. எனவே விடுதலைப் புலிகள் மீது இந்தியாவில் விதிக்கப்பட்டுள்ள தடையை எதிர்த்து கையெழுத்து இயக்கம் நடத்துவது தவறு அல்ல.இதுதொடர்பாக, புலிகளுக்கு ஆதரவுக் கருத்துக்களைச் சொல்லவும் தடை இல்லை. இவை அரசியல் சட்டத்துக்கு எதிரான செயல்கள் அல்ல.
நானும் விவரம் தெரிந்த நாளில் (அதாவது இன்டர்நெட் வசதிகள் வந்த பின்னர்) இருந்து பார்த்து கொண்டு தான் இருக்கிறேன். கருத்துரிமை என்பது நமது தமிழ்நாட்டில் ஏட்டளவில் மட்டுமே தான் இருக்கின்றது. அதுவும் யாராவது வழக்கு தொடுத்தால் மட்டுமே அதனை ஏட்டில் வைத்து உள்ளார்கள் என்பது புலனாகிறது. பின்னர் மீண்டும் இதனை போன்ற ஒரு சம்பவத்தில் பழையபடி யாரோ ஒரு காவல்துறை அதிகாரி கருத்துரிமைக்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டங்களை தடுக்கலாம், கைது செய்யலாம் ஏன் பொடாவில் கூட போடலாம்.



ஒருவரை இப்படி கைது செய்து சிறையில் அடைத்து பின்னர் அவர் நிரபராதி என்று தீர்ப்பானால் அவரை கைது செய்த காவல்துறை அதிகாரிக்கு என்ன தண்டனை தர வேண்டும்/தரலாம். ஒரு வேளை அரசின் அழுத்தத்தின் பேரில் தான் அவர் செய்தார் என்று தீர்ப்பானால் அதற்கு சம்பந்தபட்டவரை என்ன செய்யலாம்/ செய்வார்கள்?

இந்தியா ஒளிர்கிறது

இந்தியா கடந்த பத்தாண்டுகளில் மிகபெரிய மாற்றங்களை சந்தித்து வருகிறது.

  1. இந்தியர்களிடமிருந்து முறைகேட்ட வழிகளில் சம்பாதித்த பணம் இருபது லட்சம் கோடி மிக சிறிய நாடான லீச்டெண்ச்டீன் வங்கிகளில் போடப்பட்டு உள்ளது. இந்த நாட்டில் போடப்படும் பணத்திற்கு அந்த நாட்டில் மட்டும் வரி கட்டினால் போதும். வேறு எந்த விவரமும் மற்ற நாட்டிற்கு கொடுக்கபடாது.
  2. ஆயிரம் ரூபாய் லஞ்சம் பெற்று கொண்டு இருந்த காவல்துறையினர் எல்லாம் இப்போது லட்சத்திற்கு மாறியுள்ளனர்.
  3. பத்து வருடங்களுக்கு முன்னர் இருவத்தைந்து பைசா ஏற்றினால் சாலையில் இறங்கி போராட்டம் நடத்திய பயணிகள் எல்லாம் குளிர்சாதனம் பொருத்தப்பட்ட வண்டிகளில் மட்டுமே பயணிக்கின்றனர்.
  4. இதுவரை ஐநூறு தமிழக மீனவர்கள் இலங்கை ராணுவத்தால் கொல்லப்பட்டுள்ளதாக கூறுகின்றனர். இந்த எண்ணிக்கை விரைவில் ஆயிரமாக உயர வாய்ப்பு உள்ளது.

  5. இதுவரை எழுதி வந்த திரைக்கதை வசனங்களோடு இளைஞன் படத்திற்கும் தமிழக முதல்வர் கருணாநிதி கதை வசனம் எழுதி உள்ளார். மேலும் அதிகமாக பாராட்டுவிழா கண்ட முதல்வர் என்ற பெயரையும் பெறுகிறார்.
  6. மத்திய அரசில் மட்டுமே அங்கம் வகித்து வந்த காங்கிரஸ் கட்சி மாநிலத்திலும் தங்களின் கடமையை செய்ய வாய்ப்பு கேட்கும் நிலை தமிழகத்தில் வந்துள்ளது.
  7. வாங்குபவர் விற்பவர் இடையில் நடைபெறும் பேரத்திலும் பங்கு கேட்கலாம் என மத்திய அமைச்சர் அழகிரி நிருபித்துள்ளார்.
  8. இதுவரை தமிழக முதல்வர் ஈழத்தமிழர் விடயத்தில் நாற்பது முறையும் தமிழக மீனவர்கள் விடயத்தில் பத்து முறையும் மத்திய அரசுக்கு கடிதம் அனுப்பி உள்ளார்.
  9. சென்னை சங்கமம் என்ற பெயரில் கிராமிய கலைஞர்களின் கலைநிகழ்ச்சி சென்னையில் வருடம் ஒரு முறை நடக்கிறது. இதில் கலந்து கொள்ளும் கலைஞர்களுக்கு சம்பளத்திலும் நிகழ்ச்சி ஏற்பாட்டிலும் கூட ஊழல்கள் செய்ய முடியும் என்று நிருபித்துள்ளனர்.
  10. இது வரை கேள்விபடாத அளவுக்கு ஊழல்கள் எல்லாம் இந்திய அளவில் நடைபெற்றன. அதில் ஸ்பெக்ட்ரம், காமன்வெல்த் போட்டிகள், சத்யம் என்று இந்தியா மேலும் ஒளிர்கிறது.
  11. காஷ்மீரிலும் வடகிழக்கு மாநிலங்களிலும் மட்டுமே மனித உரிமை மீறல்கள் இந்தியாவின் மற்ற மாநிலங்களுக்கும் பரவி உள்ளன.
  12. இலங்கையில் புலிகள் இயக்கத்தினர் கிழக்கினை இழந்த பிறகு இதுவரை நூறு மீனவர்கள் இலங்கை ராணுவத்தால் கொல்லப்பட்டு உள்ளனர்.

இப்படி நான் எழுதி சென்றால் இந்த எண்ணிக்கையும் நூறினை தாண்டும் என்பதால் இதோடு இந்த எண்ணிக்கையை முடிக்கிறேன்.

அறிவிக்கப்படாத யுத்தம்

ஆண்டவன் கொடுக்கிறான். நான் பெற்று கொள்கிறேன் என்று நமது எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகமாகி வருகிறது. இதில் எம்மதமும் விதிவிலக்கில்லை. நமது தலைவர்களாவது நமக்கு வழிகாட்டுவார்கள் என்று பார்த்தால் அவர்கள் இதை பற்றி திறப்பதிற்கு பதிலாக இதனை ஊக்குவிக்கும் தொலைக்காட்சிபெட்டிகளை வாங்கி வழங்கி அதில் ஒரு தொகை பார்ப்பதையே வேலையாக கொண்டுள்ளனர். நான் என்ன தான் நேராக விடயத்திற்கு வராமல் பேசினாலும் இந்த பதிவு நமது மக்கள்தொகை பற்றியது.


முன்பெல்லாம் பத்து பதினைந்து பிள்ளைகள் பெற்று கொள்ளுவார்கள். அதில் குறைந்தது இரண்டு அல்லது மூன்று குழந்தைகள் வளரும் பொது இறக்க நேரிடும். வறுமையினால் மட்டும் தான் இந்த இறப்பு என்று கிடையாது. அப்போது இருந்த நோய்கள் எல்லாம் இப்போது இல்லை. ஒரு வேளை இருந்தாலும் அதற்கான தடுப்பு மருந்துகள் எல்லாம் கிடைத்து விடுகின்றன. அதனால் முன்பு எப்படி பெற்று எடுத்து வளர்த்தார்களோ அதே வீதத்தில் போக வேண்டிய தேவை இப்போது இல்லை. முன்பு வீட்டில் பதினைந்து பேர் இருந்தால் விவசாயம் செய்ய வெளியாட்கள் எல்லாம் தேவை இல்லை. அந்த குடும்பமே அந்த வேலையே செய்ய இயலும். இப்போது பதினைந்து பேர் ஒன்றாக இருக்கும் குடும்பங்கள் ரொம்ப குறைவு. அவர்களும் விவசாயம் பார்த்து சாப்பிட்டால் வீடு தாங்காது என்பதே நிலையாக இருப்பதால் ஆளுக்கு ஒரு வேலை என்று பார்த்து கூட்டு குடும்பம் என்பதை பெயருக்காவது கடைபிடிக்கின்றனர்.




ஒவ்வொரு பிரச்சினைக்கும் ஒவ்வொரு காரணம் இருக்கும். ஆனால் எல்லா பிரச்சினைக்கும் எனக்கு தெரிந்து இதுவொன்றே காரணம்.




இலங்கை சுதந்திரம் அடையும்போது இருந்த அதே அளவில் தான் ஈழத்தமிழர்கள் இருக்கிறார்கள். ஆனால் சிங்களர்களோ தங்களின் மக்கட்செல்வங்களை பெருக்கியுள்ளனர். இதனால் முன்னர் இருந்த விகிதாச்சாரம் முற்றிலும் மாறியுள்ளது. ஒற்றை பிள்ளை பிள்ளை பெற்றவனுக்கும் பதினைந்து பிள்ளைகள் பெற்றவனுக்கும் ஒரே அளவு முதல் தலைமுறையில் இருப்பதாக கொண்டால் மூன்றாம் தலைமுறையில் ஒற்றை பிள்ளை பெற்றவனின் குடும்பம் மற்றவனின் குடும்பத்தை விட பல மடங்கு வசதி படைத்து இருக்கும். அப்போது வரும் தாழ்வு மனப்பான்மையால் இந்த பதினைந்து பிள்ளைகள் பெற்றவனின் குடும்பம் எப்போது அவர்களை கவிழ்க்கலாம் என்று இருக்கும்.



சாதாரண அண்ணன் தம்பிகளிடமே இந்த பிரச்சினைகள் இருக்கும்போது ஒரே தீவு இரு வேறு இனங்கள் ஒன்றாக இருக்க வாய்ப்பு இல்லை.

முன்பெல்லாம் இருந்த விலை இப்போது இல்லை. எல்லாம் மாறிவிட்டது என்று சொல்பவர்கள் முதலில் அவர்களின் குடும்ப உறுப்பினர்களின் எண்ணிக்கை எத்தனை? அவர்களில் எத்தனை பேர் ஒரே இடத்தில் இருக்கிறார்கள் என்று பார்த்தால் புரியும். (இப்போதைய சூழலில் மக்கள்தொகை குறைக்க கூட்டு குடும்பமும் விவசாயமும் தான் சரியான தீர்வாகும். இதை சொல்கின்ற நானே இதை செயல்படுத்த முடியாது என்கின்ற நிலை என்று இருப்பதால் அடுத்தவர்களை குறை சொல்லவும் முடியாது. :-) ). மக்கள்தொகை பெருக்கம் என்பது எல்லாம் சென்றுவிட்டது. இப்போது இதன் பெயர் வெடிப்பு.




எப்போதும் நாம் எந்த ஒரு துறையிலும் முற்றிலும் தன்னிறைவு பெற்ற நாடு கிடையாது. ஒவ்வொரு விடயத்திலும் தன்னிறைவு என்ற பெயரில் நாம் ஊரை அல்ல நாட்டை ஏமாற்றி கொண்டு இருக்கிறோம். (அது பற்றி ஒரு பெரிய பதிவு போட வேண்டிருக்கும்) அப்படி இருக்கும்போது நமது மக்கள்தொகைக்கு ஏற்ப நாமும் விவசாமும் பார்க்கவில்லை. வெளிநாடுகளில் இப்போது வாங்கும் விவசாய பொருட்களின் எண்ணிக்கைகளும் அதிகரித்து ஒரு அளவில் மாத்திரைகளை மட்டுமே சாப்பிடும் நிலை இங்கே வரலாம். அல்லது இந்தியாவிற்கு ஏற்றுமதி செய்ய கூடாது என்று அந்த நாடுகளும் முடிவு எடுக்கும் நிலை வரலாம்.நம்ம மக்கள்தொகை தான் வெடிப்பு என்று சொல்கிறோம். அவர்களுடையது மக்கள்தொகை பெருக்கமே. பெருக்கத்தை உள்நாட்டில் இருக்கும் பொருட்களை கொண்டே சமாளிக்க முடியும். அப்படி இருக்கும்போது அவர்களின் தேவை போகவே நமக்கு ஏற்றுமதி செய்ய இயலும். ஒரு நாட்டில் ஒரு முறை உணவு தட்டுபாடு வந்தது என்றால் முதலில் தடை செய்வது உணவு பொருட்கள் ஏற்றுமதியை தான். அப்படி ஒரு நாடு தனது தேவைக்காக அங்கே ஏற்றுமதி தடை கொண்டு வந்திருக்கும்போது எங்கே என்ன செய்ய முடியும்? வெங்காயத்திற்கு பதில் தொலைக்காட்சி பெட்டியையா சமைக்க முடியும்.



அவன் கொடுக்கிறான். நான் வாங்குகிறேன். இதில் உனக்கு என்ன கஷ்டம். யாருக்கு என்ன நஷ்டம். எந்த ஒரு இலவசமும் முதலில் இனிக்க தான் செய்யும் பின்னர் அதுவே பரவி நம்மை முடமாக்கும். எப்போது எல்லாம் தொலைகாட்சியை பார்க்கிறோம்? பொழுது போகவில்லை என்றா? சரி. இது விவசாயம் செய்பவர்களுக்கு பொருந்துமா? நிச்சயம் பொருந்தாது. அப்படி இருக்கும்போது தொலைகாட்சிகளின் எண்ணிக்கை மக்கள்தொகையினால் பெருகி தெருவிற்கு ஒன்று இருந்த போதே நாம் நாள்கணக்கில் அதனை கண்டு களித்தோம். இப்போது வீட்டுக்கு வீடு என்னும்போது எப்படி இருக்கும்?



இப்படி மக்கள்தொகை அதிகமாக்கும் பொருள் தருவதை விட(தொலைகாட்சியில் நடுஇரவில் வரும் பாடல்கள் எல்லாம் கேட்ட பின்னர் சும்மாவா படுக்க முடியும்) அரசே குடும்பக்கட்டுப்பாட்டை கட்டாயமாக்கலாம். இல்லை என்றால் இலவசம் என்று கேட்கும் எல்லாருக்கும் ஆணுறையை மட்டும் இலவசமாக கொடுக்கலாம். (இதனை பெறுவதற்கும் யோசிப்பார்கள்) நம்மை விட மக்கள்தொகை அதிகம் உள்ள சீனா இப்போது மக்கள்தொகை வெடிப்பை தடுக்க குடும்பகட்டுபாட்டு திட்டங்களை கட்டாயமாக்கி உள்ளது. நாம் இரண்டாம் இடத்தில் தானே என்று நினைக்கிறோம். ஆனால் நாம் தான் முதலிடத்தில் இன்னும் பத்து வருடத்தில் இருப்போம். சீனாவின் உணவு உற்பத்தி தன்னிறைவு அடைந்து பல வருடங்கள் ஆகின்றது. அதே நேரத்தில் அவர்கள் மக்கள்தொகையும் கட்டுக்குள் கொண்டு வந்து உள்ளார்கள். அடுத்த பத்து வருடங்களில் என்ன செய்வது என்று அங்கே ஒரு செயல்திட்டத்திற்கு வந்து விட்டார்கள். ஊழலும் குறைவு( ஊழல்களுக்கெல்லாம் சாதாரணமாகவே மரண தண்டனை கிடைப்பதாக கேள்வி).



அடுத்த பத்து வருடத்திற்குள் ஒரு ஒழுங்கற்ற ஒழுங்கினமான செயலற்ற நிலையில் இருக்கும் நாடாக இந்தியா இருக்க வாய்ப்பு இருக்கிறது.



  • இதுவரை ஊழல்கள் செய்தவர்கள் எவரும் தண்டிக்கப்படவில்லை.
  • ஊழல்கள் எல்லாத்துறையிலும் மலிந்து போய்விட்டன.  
  • மக்கள்தொகையை கட்டுக்குள் கொண்டுவர முயற்சிகள் இல்லை. 
  • உணவு உற்பத்தியில் தன்னிறைவு அடையவில்லை. 
  • மக்கள்தொகை வெடிப்பு ஒரு அளவில் யாரும் யாரையும் குறை சொல்ல முடியாத நிலைக்கு தள்ளும்.



உதாரணம்: ராணுவ வீரர்கள் லஞ்சம் பெற்று கொண்டு எல்லைகளை விட்டு கொடுத்தால் என்னவாகும் ?

 சரி. எல்லாரும் தானே இதில் பாதிக்கப்படபோவது. அப்புறம் என்ன நமக்கு கவலை என்கிறீர்களா?



அதிலும் ஒரு சிறு பிரச்சினை இருக்கிறது. ஊழல்கள் செய்பவர்கள் எல்லாரும் மேலை நாடுகளில் செண்டு உட்காந்து விடுவார்கள். இங்கே மட்டுமே சொத்து வைத்து இருக்கும் அனைவரும் ஒரு நாள் சோத்துக்கு அலைவது நிச்சயம். என்னடா ஊழல்களை பற்றிய பதிவு போல இருக்கிறது என்று நினைக்கிறீர்கள் தானே? மக்கள்தொகை மிகவும் குறைவாக இருந்தபோதும் ஊழல்கள் இருந்தன. ஆனால் சிறிய அளவில். மக்கள்தொகையும் ஊழல்களும் ஒன்றுக்கு ஒன்று தொடர்பானவை. மக்கள்தொகை கூடும்போது அந்த தொகுதியில் இருக்கும் மக்களுக்கு செய்வதற்கென்று வழங்கப்படும் தொகையும் அதிகமாகும். அதில் அடிக்கும் கமிசனும் அதிகமாகும். இது தான் நியதி.



எல்லா பாதுகாப்பு நிறுவனங்களின் கணக்கெடுப்புகளும் சீனா இந்தியாவின் மீது எப்போது வேண்டுமானாலும் படையெடுக்கலாம் என்று உள்ளன. ஆனால் சீனாவிருக்கு தெரியுமோ தெரியாதோ நம்மை நாமே அழிப்பதற்கு ஏற்கனவே நாம் ஒரு போர் தொடுத்து உள்ளோம் என்பது. இந்த கணிப்புகளும் நினைப்புகளும் போரியல் தந்திரங்களும் மாறக்கூடும். ஆனால் நம்மை நாமே அழிக்க மக்கள்தொகை விட பெரிய ஆயுதம் உலகில் இல்லை.



 

ஈழத்தமிழர்களின் பெயரில் நடக்கும் மோசடிகள்

ஈழத்தமிழர்களை நமது மத்திய மாநில அரசுகளும்  அரசியல் கட்சிகளும் ஏமாற்றி விட்டன,ஏமாற்றியும் வருகின்றன. ஆனால் இந்த பதிவு அவர்களை ஏமாற்றி வரும் சக மனிதர்கள் மற்றும் நம் சக தமிழக தமிழர்களை பற்றியது. 
 
அவர்களுக்கு நமது தமிழக அரசு வழங்கும் உதவிதொகையானது மிக சொற்பமே. அந்த உதவித்தொகையை வைத்து மட்டுமே வைத்து ஒருவர் தனது தேவைகளை ஒரு வாரத்திற்கு கூட பூர்த்தி செய்ய இயலாது. அப்படி இருக்கும் நிலையில் அவர்கள் வெளியில் சென்று வேலை பார்த்து தான் தங்களின் குடும்பத்தை காப்பாற்றும் நிலையில் உள்ளனர். அப்படி வேலைக்கு செல்லும்போதும் அவர்கள் காலை ஆறு மணியில் இருந்து மாலை ஆறு வரைக்கும் தான் முகாமிற்கு செல்லும் நிலை உள்ளது. அருகே இருக்கும் இடங்களில் அவர்கள் வேலை செய்தாலும் அவர்களின் உழைப்பிற்கு ஏற்ற ஊதியங்கள் கொடுக்கப்படுவதில்லை. இது தான் பெரும்பாலும் எல்லா இடங்களிலும் நடக்கிறது. யாரும் இதனை தட்டிகேட்கவும் முடியாது. காரணம் அவர்கள் அகதிகள் என்பது தான். அவர்களின் உழைப்பை யார் வேண்டுமானாலும் அங்கே பொறுப்பில் இருப்பவர்களை சரிகட்டியோ இல்லை சரிகட்டாமலோ சுரண்ட முடியும் என்பதே உண்மை.

அடுத்தது தமிழகத்தில் இருக்கும் ஈழத்தமிழர்களின் குழந்தைகளின் படிப்பு செலவிற்கு என்று சகத்தமிழர்கள் கொடுக்கும் பணம் இடைத்தரகர்களிடம் போனது போகவே அவர்களிடம் போகிறது. உதாரணத்திற்கு அவர்களின் ஓராண்டிற்கு தேவையான தொகை நாற்பதாயிரம் என்றால் இடைத்தரகர்கள் உதவி செய்பவர்களிடம் கூறும் தொகை அறுபதாயிரம். ஆக இவர்களுக்கு இருபதாயிரம் ரூபாய் கிடைக்கிறது. உதவி செய்பவர்கள் இங்கே ஒன்றை கவனிக்க வேண்டும். ஈழத்தமிழர்களின் குழந்தைகளின் படிப்பு என்று சொல்லும்போது எல்லாருமே இரக்கப்பட்டு உதவி செய்கிறோம். அவர்களுக்கு அருகில் இருக்கும் பள்ளி கல்லூரிகளிலும் ஈழத்தமிழர்களின் குழந்தைகளின் படிப்பு செலவிற்கு நாமே பேசும்போது கட்டணங்களில் சலுகைகளும் தருகிறார்கள். ஆனால் இது எல்லாம் ஈழத்தமிழர்களுக்கும் தெரிவதில்லை,உதவி செய்பவர்களுக்கும் தெரிவதில்லை, இந்த இடைத்தரகர்களுக்கு மட்டுமே தெரிகிறது. இந்த விசயத்தில் நாம் எளிதாக ஏமாறுவதை தடுக்கலாம். எனது நண்பர்கள் சிலர், படிப்பு செலவிற்கு என்று ஈழத்தமிழர்களின் குழந்தைகள் சிலரை தேர்ந்தெடுத்து அவர்களுக்கு உதவி என்று செய்யபோகும் போது இந்த இடைத்தரகர்கள் வந்தார்கள். அவர்களே நேரில் சென்று கட்டணங்களை கட்டிவிட்டு குழந்தைகளை கல்லூரிகளில் விட்டுவிட்டு வருவோம் என்றார்கள். நண்பர்கள் நேரில் சென்று அதே கல்லூரியில் கேட்டபின்னர் தான் தெரிந்தது இடைத்தரகர்கள் நண்பர்களிடம் கூறிய தொகையானது இடைதரகர்களின் கமிஷனையும் சேர்த்து தான் என்று. நண்பர்கள் நேரில் சென்று கட்டணத்தையும் கல்லூரி விடுதியில் சேருவதற்கு கட்டணத்தையும் கட்டிய பின்னரும் இடைத்தரகர்கள் நண்பர்களிடம் கேட்ட தொகை அளவு செலவாகவில்லை.




அரசியல்வாதிகளும் அலுவலர்களும் தான் ஈழத்தமிழர்களை ஏமாற்றுகிறார்கள் என்றால் சகத்தமிழர்களுமா இப்படி ஏமாற்றுவது? கட்டண ரசிதுகளை கேட்டால் மட்டுமே இவர்களை(இடைத்தரகர்கள்) பற்றி தெரிய வருகிறது.

ஈழத்தில் சண்டை நடக்கும்போது அங்கே இருந்து தப்பிவருபவர்கள் இங்கே இருக்கும் நிலை சரியில்லை என்பதால் வெளிநாடுகளுக்கு செல்ல முயற்சித்தனர். அவர்களுக்கு இங்கே உதவி செய்வதாக சொல்லி வசூல் செய்கின்றனர். அந்த பணத்தில் அவர்களை இவர்கள் வெளிநாடுகளுக்கு அனுப்பி வைத்தார்களா என்றால் அதுவும் இல்லை. அவர்களின் பெயரில் வசூல் செய்த பணத்தில் போரூரில் வீடு கட்டிய நபர்களும் இருக்கிறார்கள். ஆனால் உண்மையில் உதவி செய்பவர்களை விட இவர்கள் சொல்லும் கதை தான் உண்மை என்பது போல் உள்ளது. அந்த அளவுக்கு உதவி கேட்பவர்களிடம் பழகி உள்ளார்கள். ஆனால் உதவி தொகையில் ஒரு பகுதி தான் சம்பந்தப்பட்டவர்களிடம் சேர்கிறது.


உதவி செய்பவர்கள் பலர் இருந்தாலும் இன்னும் ஈழத்தமிழர்களின் நிலை மாறாமல் இருக்க காரணம் இவர்களை போன்ற இடைத்தரகர்கள் தான். உதவி செய்பவர்களும் உதவி கேட்பவர்களும் நல்லவர்களாக இருந்து என்ன பிரயோஜனம். இடைத்தரகர்கள் நல்லவர்களாக இல்லையே.




உதவி செய்பவர்கள் அனைவரும் தயவு செய்து உங்களின் உதவிகள் சம்பந்தபட்டவர்களிடம் உதவிகள் போய் சேர்கின்றதா என்பதை ஒரு முறை உறுதிபடுத்தி கொண்டு பின்னர் அவர்கள் மூலமாகவே கூட உதவிகளை தொடரலாம்.

பெரியாரிடம் வெங்காய விலையை கேட்க சொன்னால் என்ன ....கு இவர் முதல்வராக இருக்கிறார்

சென்னை அண்ணா அறிவாலயத்தில், முதல்வர் கருணாநிதி அளித்த மினி பேட்டி: வெங்காய விலை உயர்ந்திருக்கிறதே அதற்கு ஏதேனும் நடவடிக்கை எடுக்கப்படுமா?
அதை பெரியாரிடம் போய் கேளு...
போக்குவரத்து தொழிலாளர்கள் ஊதிய உயர்வு கேட்டிருக்கிறார்களே?
அது கொடுத்தாச்சு... அது பற்றி அறிக்கை வரும்.
இன்று கூட இ.வி.கே.எஸ். இளங்கோவன், அ.தி.மு.க. - காங்கிரஸ் கூட்டணி அமைய வாய்ப்பிருக்கிறது என கூறியதாக செய்திகள் வந்துள்ளதே?
அது எனக்கு தெரியாது. இவ்வாறு, முதல்வர் கருணாநிதி சிரித்தபடியே பேட்டியளித்தார்.

மீண்டும் மீண்டும் இவர் வயதிற்க்கோ இல்லை இவர் இருக்கும் பதவிக்கோ ஏற்றபடி பேசாமல் தான் அந்த பதவிக்கு ஏற்றவன் இல்லை என்று நிருபிக்கிறார். 
 
இவர் தனிப்பட்ட முறையில் மற்றவர்களின் அந்தரங்கங்களை விமர்சிப்பது இவருடன் இருக்கும் அலுவலர்களுக்கு தெரிந்ததே. ஆனால் இப்படி பொறுப்பற்ற முறையில் பதில் அளிப்பதற்கு அப்படி முதல்வர் பொறுப்பில் இருந்து தான் பேச வேண்டுமா?

ஒருவேளை இவருக்கும் ஆட்சிக்கும் சம்பந்தம் இல்லை என்று சொல்ல வருகிறாரோ? இல்லை வெங்காயம் பயிரிடுவதெல்லாம் அவருக்கே தெரியாது என்று சொல்ல வருகிறாரோ?




யாருடைய சாவாவது மக்களை சந்தோசப்படும் என்று மக்கள் நினைத்தால் உண்மையில் அப்படி ஒரு பிறவிக்கு அப்படி ஒரு பிறப்பிற்கு அந்த இழிபிறவி மட்டும் அல்ல அந்த குடும்பமும் வருத்தப்படும் நாள் கண்டிப்பாக வரும்.( நான் யாரையும் குறிப்பிட்டு சொல்லவில்லை. மேல் சொன்ன தகவல்களுக்கும் இதற்கும் சம்பந்தம் இல்லை.)

இந்தியா ஒரு ஈனபிறவிகளின் நாடு

என்னடா இந்தியாவினுள் இருந்துகொண்டு இப்படி எழுதி இருக்கிறானே என்று பார்க்கிறீர்களா? இந்தியாவில் இருந்து ஒழுங்காக வருமான வரிகள் செலுத்திவரும் அனைவரும் நாட்டை சாடுவதற்கு முழு உரிமை படைத்தவர்களே.அதிலும் நாம் தமிழர்கள் வேறு. ஈனபிறவிகள் எங்கு அதிகம் என்று கேட்டால் அதற்கு விடை தமிழ்நாடு என்று தான் வரும். யோசித்து பாருங்கள். நமக்கு வாய்த்த கட்சிகள் அப்படி. ஈனபிறவிகளை ஆட்சியில் வைத்து அழகு பார்ப்பதே நமது வேலையாக போயிற்று. இப்போது இருக்கும் மத்திய அரசு இரு வருடங்களுக்கு முன்னரே தோற்று இருந்தால் இப்போது வெளியே வந்து கொண்டிருக்கும் பல ஊழல்கள் அப்போதே வெளியே வந்திருக்கும்.

தாமதமாக கிடைக்கும் நீதியும் நிதியும் பயன் தராது. செத்தவன் கையில் கோடி ரூபாய் இருந்தால் என்ன ? இல்லாவிட்டால் என்ன? நீதி இப்போது எல்லாம் அவ்வளவு சுலபம் இல்லை. அவர்களை காப்பாற்றி கொள்ளவே அவர்களுக்கு தெரியாதபோது எப்படி நம்மை எப்படி காப்பாற்றுவார்கள். நம் தமிழ்நாடு எல்லாவற்றிலும் ஒருபடி மேல். யார் யார் எதிரிகள், துரோகிகள்   என்றே நமக்கு தெரியாமல் ஈழ பிரச்சினைகளுக்கு போராடி பல ஆயிரம் இனஉயிர்களை காவு கொடுத்திருக்கிறோம். இன்னும் கொடுக்க இருக்கிறோம். எனக்கு தெரிந்து ஆளும்கட்சியுடன் தொடர்பில் இருந்த, இருக்கின்ற அனைவரும் துரோகிகளே.( பெயரை குறிப்பிட்டு வம்பில் மாட்டிக்கொள்ள நான் தயாரில்லை). இதில் இவர்களே நமக்கு முன்னர் ஈழத்திற்கு குரல் கொடுப்பர். நாமும் நம்பி இறங்கியபின்னர் அவர்கள் பைகளை நிரப்பிக்கொண்டு சென்று விடுகிறார்கள். இதை எழுதவேண்டிய பத்திரிக்கைகளும் ஒன்றாக தண்ணி சாப்பிட்டு கொண்டு இருக்கிறார்கள்.(தண்ணியை மட்டுமே இங்கே எழுதி இருக்கிறேன். இதன் மூலம் வந்த வருவாய் வைத்து வீடு கட்டியவர்கள் அதிகம். மிச்சம் சொச்சம் எல்லாம் நிறையா இருக்கு. எழுதினால் இந்த பதிவு அசைவமாகி விடும்).

ஆளும்கட்சி தான் இப்படி என்றால் முக்கிய எதிகட்சிக்கு இந்த பிரச்சினையை எப்படி எதிர்கொள்வது என்றே தெரியவில்லை. எம்.ஜி. ஆர் இருந்தால் என்ன செய்திருப்பாரோ? அந்த அளவு இல்லையென்றால் கூட கொஞ்சம் முயற்சி செய்து இருக்கலாம். கடைசி நேரத்தில் கூறப்படும் வாக்குறுதிகள் மக்களை குழப்பமடையவே செய்யும். தெளிவாக்காது.நானும் ஈழ மக்களுக்காக போராடுகிறேன். நீங்களும் ஈழ மக்களுக்காக போராடுகிறீர்கள். இப்படி எல்லாருமே போராடியும் ஒன்றுமே நடக்காததற்கு இந்த ஈனபிறவிகள் தான் காரணம்.


அந்த ஈனபிறவிகள் செய்த காரியங்கள் மிகவும் எளிதானது.
நீங்கள் போராட்டம் நடத்தும்போது உங்களுடன் உங்களைவிட அதிகமான உணர்ச்சி பெருக்கோடு அவர்கள் நடந்து கொள்வார்கள். ஆனால் யார் எதிரி என்பது அவர்களுக்கு நன்றாகவே தெரியும். நீங்கள் அவர்களோடு  நடத்தும் போராட்டம் என்பது கட்டையால் பாம்பினை அடிக்கும்போது கம்பும் உடையகூடாது அதே நேரம் பாம்பும் சாக கூடாது என்று நினைப்பவர்களின் வழிகாட்டுதலுக்கு உள்ளாகும். உங்களுடைய கூட்டங்களில் உங்களின் அனுமதி இல்லாமல் ராஜபக்ஷேவை பற்றி பேசுவார்கள்.( பின்னர் அவரோடு கைகுலுக்குவது வேறு) நீங்களும் எவ்வளவு நல்லவர் என்றே நினைப்பீர்கள். உங்கள் கூட்டம் எப்பொழுது மக்களை நேரடியாக சந்திக்க செல்கிறதோ. அப்போது அவர்களின் உண்மை முகம் வெளிப்படும்.( இதை தான் பொன்சேகா அரசியல் கோமாளிகள் என்றார்.) எங்கே மக்கள் கொந்தளித்து விடுவார்களோ என்று இவர்களே பலவிசயங்களை செய்வார்கள். உண்ணாவிரதம், மனித சங்கிலி, அடிதடி என இவர்கள் செய்தது அனைத்துமே மக்களை குழப்புவதற்காக மட்டுமே. இவர்களால் எந்த  பிரச்சினைகளுக்கும் நிரந்தர தீர்வு கொடுக்க தெரியாது. முடியாது. ஆனால் பேச்சுக்கள் மட்டும் தெளிவாக இருக்கும். நம் நாட்டில் எல்லா மக்களுக்கும் உள்ள அதே ஞாபகமறதி  இங்கே தமிழ்நாட்டில் அதிகம் உள்ளது.

ஈழத்தில் இருந்த தலைவர் தான் தங்களின் நலத்திட்டங்களை செய்யவிடாமல் தடுத்தார் என்று கூறியவர்கள் ஓடி ஒளிந்து கொண்டுவிட்டார்கள்.இவர்கள் என்ன திட்டம் வைத்திருந்தார்கள்? மக்களை பன்னீரில் குளிப்பாட்டி சந்தனத்தை பூசி தினமும் விருந்துகள் கொடுத்து காப்பாற்றுவேன் என்று சொன்னவர்களிடம் ஒரே ஒரு கேள்வி.

அங்கே இன்னமும் உடுக்க உடையும் உண்ண உணவும் இருக்க இருப்பிடமும் இன்னமும் கிடைக்கலாம். என்ன செய்யலாம்? போராட்டம் நடத்தியவர்களும் ஓய்ந்து போய் நாட்கள் ஆகின்றன. நீங்கள் தானே சொன்னீர்கள் அதெப்படி அரசாங்கம் மக்களை கொல்லும் என்று. இராணுவ வீரர்களுக்கு பொழுது போகவில்லை என்றால் தமிழின பெண்களோடு விளையாடி பின்னர் கொல்கிறார்கலாம். என்ன செய்யலாம் சொல்லுங்கள்.


ஒரு காரியத்தை செய்ய சொன்னதாக கூறியதை நம்புவதற்கும், செய்ததாக சொல்வதை நம்புவதற்கும்  மிகபெரிய வித்தியாசம் இருக்கிறது.
உதாரணம் நமது ஆளும்கட்சியின் எம்பிக்கள் ராஜினாமா செய்வதாக கூறியதற்கும் உண்ணாவிரதம் இருந்து போர் நிறுத்தியதாக சொல்லியதற்கும் உள்ள வித்தியாசம் தான். இரண்டுமே ஒரே மனிதரின் பித்தலாட்டங்களில் ஒன்று தான். ஆனால் நம்பாமல் இருந்தவர்கள் ஒரு சிலர் மட்டுமே. ஏமாறுபவர்கள் இருக்கும்வரை ஏமாற்றுபவர்கள் இருக்கத்தான் செய்வார்கள் என்பது உண்மை தான். ஆனால் ஏமாறுபவர்கள் ஒரு நிலையில் ஏமாறுவதற்கு ஒன்றும் இல்லை என்ற நிலை வந்திருக்கும். அந்த நிலை தான் இப்போது. வளங்களும் உரிமைகளும் எப்படி இழந்து இருக்கிறோம் என்று அறிவதற்கு முன்னரே நமது கோமணங்கள் பிடுங்கப்பட்டு இருக்கும்.

அப்படி பிடுங்கியவரை கோமனபிடுங்கி என்றே அன்புடன் அழைக்கலாம். பறிகொடுத்தவரை என்னவென்று அழைப்பது?  களத்தில் போராடி தோற்றவர்களுக்கு வீரமரணம் கிடைக்கிறது. ஆனால் இங்கே போராட்டங்களில் ஏமாந்த நமக்கு என்ன பெயர் கொடுத்து அழைப்பது?

நம்மை ஈனபிறவிகள் என்று சொல்வதா இல்லை நம்மை ஏமாற்றியவர்களை ஈனபிறவிகள் என்று கூறுவதா?

Popular Posts