Showing posts with label Operation Casino(ஆபரேஷன் கேசினோ). Show all posts
Showing posts with label Operation Casino(ஆபரேஷன் கேசினோ). Show all posts

ராஜீவ் காந்தி என்னும் மனித மிருகம்-4

ஆபரேஷன் ப்ளூ ஸ்டாருக்கு பிறகு சீக்கியர்களின் கோபம் அப்போது ஆட்சியில் இருந்த இந்திராவின் மீது விழுந்தது. பலர் அரசு வேலைகளில் இருந்து ராஜினாமா செய்தனர். ராணுவத்திலும் ஒரு சீக்கிய கிளர்ச்சி ஏற்படும் அபாயம் இருந்தது. இந்த விஷயங்கள் உளவுத்துறை மூலம் ஆட்சியில் இருந்தவர்களிடம் சொல்லப்பட்டது. ஆனால் என்ன முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுத்தார்கள் என்று இதுவரை தெரியவில்லை.இதில் வேறு அங்கே இந்திரா காந்தியிடம் இருந்த பாதுகாவலர்கள் பலர் சீக்கியர்களாகவே இருந்தனர். இதை எப்படி அனுமதித்தனர் என்றே பலருக்கு தெரியவில்லை. ஒரு வேளை பிற்காலத்தில் உண்மைகள் வரக்கூடும் என்றே வேண்டுமென்றே விட்டுவிட்டார்களா?
31 அக்டோபர் 1984 காலை மணி 9:08:
வீட்டில் இருந்த அலுவலகத்தில் இருந்த இந்திரா காந்தியை இரு பாதுகாவலர்கள் வணக்கம் கூறினர். அதற்கு நமஸ்தே என்று பதிலுக்கு வணக்கம் கூறினார் இந்திரா காந்தி.சஞ்சய் காந்தி கொல்லப்பட்ட அன்று எப்படி ராஜீவ் காந்தி டெல்லியில் இல்லையோ அதே போல் இம்முறையும் அவர் டெல்லியில் இல்லை. அவர் மேற்கு வங்கத்தில் அரசியல் சுற்று பயணத்தில் இருந்தார். எப்பவும் போல் சோனியா காந்தி வீட்டில் இருந்தார். அப்போது அவர் மேற்பார்வையில் தான் அங்கே பிரதமரின் வீட்டில் எல்லாம் நடைபெற்றது.(இதுவும்)

இந்திரா காந்தி அன்று தனக்காக பேட்டியெடுக்க காத்திருந்த பிரிட்டிஷ் நடிகர் பீட்டர் உஸ்தினோவ்வை பார்க்க அந்த பங்களாவில் இருந்த நடைபாதையில் சென்று கொண்டு இருந்தார். அவரின் பின்னர் ஐந்து பாதுகாவலர்கள் நடந்து வந்தனர். வழியில் எதிர் நோக்கி நின்று கொண்டு இருந்த பாதுகாவலர்கள் வணக்கம் செய்து செலுத்தி கொண்டு இருந்தனர். அங்கே அடுத்தடுத்து காத்திருந்த இரண்டு பாதுகாவலர்கள் தங்கள் உடையில் காக்கியையும் உருவத்தில் சீக்கியர்களாகவும் இருந்தனர். அதில் பியாந்த்சிங் (சப்-இன்ஸ்பெக்டர்), சத்வந்த்சிங் (கான்ஸ்டபிள்) இருந்தனர்.
 

இதில் பியாந்த்சிங் பத்து வருடங்களுக்கும் மேலாக அங்கே வேலை பார்த்து வந்தார். இந்திரா காந்தியிடம் நம்பிக்கை பாத்திரமாக இருந்தார். புதிதாக சேர்ந்த சத்வந்த் சிங்கிற்கு இருவத்தொரு வயது மட்டுமே. ஆனால் சிறப்பு பயிற்சிகளின் மூலம் பிரதமரின் பாதுகாவலராக அங்கே நியமிக்கபட்டிருந்தார். இது நடந்து ஐந்து மாதங்களே ஆகியிருந்தன.


இப்போது நடப்பு உலகத்தில் நடந்து கொண்டிருக்கும் இந்திரா காந்தியிடம் வருவோம். அங்கே அவர்கள் இருவரும் வணக்கம் செலுத்துவது போல் நின்றனர். பியாந்த்சிங் தன்னிடம் இருந்த .38 பிஸ்டல் மூலம் இந்திரா காந்தியின் வயிற்றில் சுட்டார். (ஐந்து ரவுண்டுகள்). பின்னாடி இருந்த சத்வந்த் சிங்கிற்கு முப்பது ரவுண்டுகள் சுடும் வாய்ப்பு கிடைத்தது. பின்னால் இருந்த பாதுகாவலர்கள் தங்கள் பிரதமர் தங்கள் கண்முன் சுடப்பட்டது தெரிவதற்கு சில வினாடிகளே ஆகின.



அவர்களும் அந்த இருவரை நோக்கி துப்பாக்கிகளினால் சுட்டு வீழ்த்தினர். அங்கேயே பியாந்த் சிங் இந்திராவோடு விழுந்து  மரணித்தார். சத்வந்த் சிங் படுகாயமுற்றார்.ஆர்.கே தவான் அலறி அடித்து கொண்டு அங்கே வந்தார். அங்கே விழுது கிடந்த இந்திரா காந்தியை தூக்கி கொண்டு சோனியாவையும் கூட்டி கொண்டு சென்றனர். சோனியாவின் மடியில் இந்திரா காந்தி படுத்திருந்தார்.


இங்கேயும் ஒரு சந்தேகம் எப்பவும் அவசர சிகிச்சைகள் என்றால் அருகில் உள்ள மருத்துவமனைக்கு தான் எல்லாருமே செல்வார்கள். ஆனால் இங்கே அவ்வாறு நடக்கவில்லை. அருகிலே இருந்த ராம் மோகன் லோஹியா மருத்துவமனைக்கு ஒருவேளை கொண்டு சென்றால் இந்திரா பிழைத்து இருப்பாரோ என்னமோ தெரியவில்லை ஆனால் அகில இந்திய மருத்துவ கவுன்சிலின் மருத்துவமனைக்கு கூட்டி சென்றனர். அப்படி கூட்டி செல்ல கூறியது சோனியா காந்தி தான் என்று ஆர்.கே தவான் கூறியுள்ளார்.

அங்கே அவருக்கு அறுவை சிகிச்சை மூலம் அவருக்குள்ளே பாய்ந்த தோட்டாக்களில் ஏழினை எடுத்தனர்.எட்டாவதை எடுக்கும்முன் அவர் இறந்தார். பகல் 2.25க்கு அவர் மரணித்தார். ஆனாலும் மாலை ஆறு மணியளவிலே இறந்ததாக அறிவிக்கப்பட்டது.
இந்திரா காந்தி இந்த சீக்கியர்களினால் கொல்லப்பட்டு இருந்தாலும் இதில் சில கேள்விகள் உள்ளன.


  1.  சீக்கியர்களினால் இந்திராவுக்கு ஆபத்து உள்ளது என்று தெரிந்தும் அவர்களை பாதுகாவலர்களாக இருக்க அனுமதித்தது யார்?
  2. வீட்டுக்குள் நடக்கும்போது கூட குண்டு துளைக்காத உடை அணிந்து செல்வது தான் இந்திராவுக்கு வழக்கம். அன்று அவர் அவசரத்தில் அதை அணியவில்லை. ஆனால் அதை அவர் அணியவில்லை என்பதை யார் பியாந்த் சிங்கிடம் சொன்னது?
  3. அவசரமாக தான் அவர் நடந்து சென்றார் என்றால் அங்கே நின்று இருந்த பியாந்த் சிங்கிடம் எவ்வளவு நேரம் நின்று இருந்திருக்க முடியும்? அப்படி நின்று இருக்கும்போது பியாந்த் சிங் தன்னுடைய பிஸ்டல் எடுக்க எவ்வளவு நேரம் எடுத்திருக்கும்? சப் இன்ஸ்பெக்டர் நிலையில் இருக்கும் ஒருத்தர் தன்னுடைய துப்பாக்கியை என்ன தொங்கவா போட்டு இருந்தார் உடனே எடுத்து சுடுவதற்கு? உறையில் தானே இருந்திருக்கும். அப்படி எடுக்கும்போது பின்னால் இருப்பவர்களுக்கு தெரியாதா?
  4. ஒரு பிஸ்டலில் இருக்க கூடிய குண்டுகள் எத்தனை ? ஒரு ஸ்டன் கன்னில் இருக்க கூடியது எத்தனை? அதெப்படி சரியாக பியாந்த் சிங்கை மட்டும் கொன்றார்கள். பியாந்த் சிங்கை கொன்றால் யாருக்கு லாபம்? சுட்டுவிட்டார்கள் என்று தெரிகிறது. இருவரில் ஒருவரை மட்டும் சரியாக சுட்டு கொல்லவேண்டும் என்று அங்கே கட்டளையிட்டது யார்?
  5. அடுத்தது சுட்டவுடன் சோனியா காந்தி அகில இந்திய மருத்துவ கவுன்சிலின் மருத்துவமனைக்கு தான் கொண்டு செல்ல வேண்டும் என்று கூறியது ஏன்?
விடை தெரிந்தவர்கள் சொல்லவும்.




அடுத்த பதிவில் சீக்கியர்களுக்கு எதிரான கலவரம் பற்றியது.

Operation Casino(ஆபரேஷன் கேசினோ)

லண்டனில் தற்போது வசித்து வருபரும் முன்னாள் நிறுவனருமான K.S.நாயரின் புத்தகம் சில விசயங்களை சொல்லியுள்ளது. அதில் கவனிக்கதக்க ஒன்று Operation Casino(ஆபரேஷன் கேசினோ). 1970ம் ஆண்டின்  மத்தியில்  இந்திரா காந்தியின் அரசாங்கமானது பல்வேறு நிதிநெருக்கடிகளில் சிக்கித்தவித்தது. அதில் இருந்து தப்புவிக்க என்ன வழி என்று யோசித்து கொண்டுவரும் வேளையில் இரான் அரசாங்கம் இந்தியாவுக்கு கடன் தருவது பற்றி பரிசிலிப்பதாக சொன்னது. அவ்வாறு தரும்தொகை $250 million dollars என்று இருந்தது. அதனை பெறுவதற்கு $6 million dollars லஞ்சம் கொடுக்க எடுத்த முயற்சி தான் இந்த ஆபரேஷன் கேசினோ.

சுவிஸ் வங்கிகளில் பணம் போடுவது இக்காலத்தில் ஒன்றும் புதிது அல்ல. ஆனால் லஞ்சப்பணம் எல்லாம் அங்கே தான் செல்லவேண்டும் என்று வழி காட்டிய பெருமை சஞ்சய் காந்திக்கே சேரும். சஞ்சய் காந்தி தான் இந்திரா காந்தியின் அப்போதைய அரசாங்கத்தில் நம்பர் 2. அவர் அனுமதி இன்றி ஒன்றும் நடவாது. பல்வேறு விசயங்களில் அவரே நம்பர் 1. இந்திரா காந்தி எல்லாம் கணக்கிலே வர மாட்டார்.

இந்த ஆபரேஷன் கேசினோ முற்றிலும் சஞ்சய் காந்தியின் நேரடி வழிகாட்டுதலில் நடைபெற்று இருக்கிறது. சஞ்சய் காந்தியின் சுவிஸ் வங்கி கணக்கில் இந்த பணம் செலுத்தப்பட்டதாக சொல்லபடுகிறது. ஆனால் இதில் வேறு விடயங்கள் நடந்ததாக நாயர் எழுதி உள்ளார். 1974ஆம் ஆண்டு அணு ஆயுத சோதனைக்களுக்கு பிறகு இந்தியாவின் பொருளாதாரம் ஒரு சரிவிற்கு சென்று கொண்டு இருந்ததாக சொல்கின்றனர். இதில் இருந்து மீள்வதற்கு அப்போதைய இரான் அதிபர் ஷா கடன் தருவதாக கூறியுள்ளார். அப்படி இருக்கும்போது அந்த கடனை பெறுவதற்கு கொடுத்ததாக சொல்லப்படும் லஞ்சப்பணம் எங்கு சென்றது? ஏன் கொடுக்கப்பட்டது என்று இன்றும் தெரியவில்லை. முதலில் கொரியரில் கொண்டு செல்ல ஏற்பாடு செய்து இருக்கின்றனர். ஆனால் நாயர் இதற்கு ஒத்து கொள்ளாததால் அப்போதைய மத்திய அரசின் நிதி செயலாளர் கோபி கவுள் நூறு டாலர் நோட்டுகளாக மாற்றி சாம்சொநைட் பெட்டிகளில் கொண்டு செல்ல கூறியிருக்கிறார். அதற்கும் நாயர் ஒத்துவராத காரணத்தினால் ரிசர்வ் வங்கியின் ஜெனிவா கிளையின் மூலம் நாயருக்கு ஆறு மில்லியன் டாலர் அளவுக்கு ஒரு காசோலை தர ஏற்பாடு செய்திருக்கிறது. இதை சஞ்சய் காந்தியின் சுவிஸ் வங்கி கணக்கில் செலுத்துவதோடு நாயரின் பணி முடிந்து உள்ளது.




இரானின் நிதியமைச்சரை சரிகட்ட கொடுத்ததாக சொல்லப்பட்ட இந்த பணம், பலரின் கைகளில் போனதாக கூறப்பட்டது. ஆனால் இரானின் நிதியமைச்சர் இந்த கடன் வழங்குவதற்கு விருப்பம் இல்லை என்று கூறி இருக்கிறார். ஷாவின் தங்கையான அஷ்ரபின் நெருங்கிய நண்பரான ரசிடியான் மூலம் இந்த கடன் கிடைத்துள்ளது. ரசிடியான் இந்தியாவில் பிறந்து இரானில் தொழில் செய்து கொண்டிருந்தவர். இவர் அதே நேரம் சஞ்சய் காந்திக்கும் நெருக்கமானவராக இருந்துள்ளார். இவருக்கு தான் சஞ்சய் காந்தி இந்த ஆறு மில்லியன் டாலர்ஸ் பணத்தை கொடுத்தார் என்று அப்போது பாராட்டப்பட்டு உள்ளது. அதாவது நிதி நிலைமையை சமாளிக்க பெறப்படும் கடனிற்கு லஞ்சம் கொடுப்பதில் தவறு இல்லை என்று வாதிட்டனர். ஆனால் ஆறு மில்லியன் டாலர்ஸ் லஞ்சம் பெற்றதாக சொல்லப்பட்ட அந்த இந்திய தொழில் அதிபர் சஞ்சய் காந்திக்காக தான் பெற்றார் என்பது தான் உண்மை. கொடுப்பது போல் கொடுத்து பின்னர் அதனை வாங்கி உள்ளார் சஞ்சய் காந்தி.

நாட்டிலே முதல் முறையாக கடன் வாங்கி தனது அரசாங்கத்திடம் கொடுக்க லஞ்சம் பெற்ற முதல் மத்திய அமைச்சர் வேறு யாரும் இருக்க முடியாது.

Popular Posts