Showing posts with label ஈழத்தமிழர். Show all posts
Showing posts with label ஈழத்தமிழர். Show all posts

அடுத்த ராஜினாமா நாடகம் தயார்

தென் மண்டல அமைப்புச் செயலாளர் பதவியிலிருந்து விலக அழகிரி முடிவு செய்துள்ளதாகவும், மத்திய அமைச்சர் பொறுப்பில் இருந்து விலகுவதாகவும் செய்திகள் சொல்லுகின்றன. அடுத்த வாரம் நடக்க உள்ள கனிமொழி ஏற்பாடு செய்துவரும் சென்னை சங்கமம் நிகழ்ச்சியை ரத்து செய்ய வேண்டும் என்றும் முன்னாள் மத்திய அமைச்சர் ராசாவை தற்காலிகமாக தி.மு.க -விலிருந்து நீக்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்ததாக தெரிகிறது. இது உண்மையில் நம்பும்படியாக இல்லை. ஏன் என்றால் மதுரையில் எந்தவொரு பத்திரபதிவும் அஞ்சாநெஞ்சனுக்கு தெரியாமல் நடக்காது. ஒவ்வொரு பத்திரபதிவு பதிவாளரும் அண்ணனிடம் ஒருவார்த்தை சொல்லியாச்சா என்று கேட்டுவிட்டே பத்திரங்கள் பதிவது வழக்கம். பத்திரபதிவில் வரும் கட்டிடம் அல்லது நிலத்தின் மதிப்பு ஒரு கோடிக்கு மேல் இருந்தால் கண்டிப்பாக அந்த பகுதி பத்திர பதிவாளர் சொல்லும் ஒரே வார்த்தை" அண்ணன்கிட்ட சொல்லியாச்சா என்று தான்". இது தவிர முக்கிய இடங்களில் உள்ள நிலங்கள் அல்லது கட்டிடங்கள் சம்பந்தமான பத்திரபதிவிற்க்கும் இது பொருந்தும். அப்படி இருக்கும் அண்ணன் ஏற்கனவே இந்த ஸ்பெக்ட்ரம் ஊழல் மூலம் கிடைத்த பணத்தில் ஒருபகுதியை பெற்று உள்ளதாக தெரிகிறது. அண்ணனிடம் ஒரு நல்ல விடயம் என்னவென்றால் பணம் வாங்குவதற்கு முன்னர் தான் அவர் எதிரியாக பார்ப்பார். பணம் வாங்கி விட்டார் என்றால் நீங்கள் அவரின் சொந்த தம்பி என்ற அளவுக்கு பார்த்து கொள்ளும் அளவிற்கு நன்றி பாராட்டுவார்.


அவரின் இயல்பு இப்படி இருக்க, அவர் சென்று ராஜினாமா பற்றி பேசியதாகவும் மிரட்டல் விடுத்ததாகவும் வந்த கதையானது அடுத்த நாடகமாகவே தெரிகிறது. நாங்க எல்லாம் நல்லவர்கள், அவர்கள் தான் ஊழல் செய்தார்கள் என்று சொல்வதற்கு இப்படி ஒரு நாடகம் நடத்தி உள்ளனர். எப்பவும் கருணாநிதி ஒரு பிரச்சினையோ இல்லை ஒரு சம்பவத்தையோ மறைக்க வேறு ஒரு சம்பவத்தை அல்லது பிரச்சினையை நடத்துவது வழக்கம். அதில் ஒன்று தான் இது.


இதற்கு முன்னர் நடந்த நாடகங்கள் சிலவற்றை கீழே குறிப்பிட்டு உள்ளேன்.

  1. ஈழத்தமிழர் படுகொலைகளை தடுக்க தமிழக பாராளுமன்ற உறுப்பினர்கள் ராஜினாமா
  2. ஈழத்தமிழர் படுகொலைகளை தடுக்க முன்னுதாரனமாக கனிமொழி ராஜினாமா
  3. ஈழத்தமிழர் படுகொலைகளை தடுக்க கருணாநிதியின் நான்கு மணிநேர உண்ணாவிரதம். 
  4. ஈழத்தமிழர் படுகொலைகளை தடுக்க கருணாநிதியின் மனித சங்கிலி போராட்டம். 
  5. ஈழத்தமிழர் படுகொலைகளை தடுக்க தந்திகள் அனுப்பும் போராட்டம் 
  6. ஈழத்தமிழர் படுகொலைகளை தடுக்க ஈழம் கூட வாங்கி தர தயார் என்று ஒரு முறை கூறி மறுநாளே மறுப்பு தெரிவித்தார். இதே போல் பிரபாகரன் நண்பர் என்று சொல்லி மறுநாள் பல்டி அடித்தார். பிரபாகரன் தீவிரவாதி அல்ல அவர் சார்ந்த இயக்கம் சரியில்லை என்று கூறி உள்ளார். 
  7. பாராளுமன்ற தேர்தலுக்கு முன்பு, அவர் ( மட்டும்) அறிவித்த போர் நிறுத்தத்திற்கு பிறகு நூற்றுக்கணக்கான மக்கள் கொல்லப்படுவதாக செய்தி வந்த போது அவர் என்ன சொன்னார் ? மழை விட்டும் தூவானம் விடவில்லை என்றார். அதே பேட்டியின் இறுதியில் இப்போது என்ன செய்யலாம் என்றிருக்கிறீர்கள் ( இலங்கை தொடர்பில்) என வினவியபோது நக்கலாக நாம் போய் டீ குடிக்கலாம் என்றார். ஒரு இன மக்களின் பேரழிவிற்கு பிறகு சுமுக நிலை நிலவுவதாக சொன்னார். இதன் பொருள் தான் (அல்லது தாம் ) விரும்பிய சூழல் வந்துவிட்டது என்பதுதான். எம்பிக்களின் பயணத்திற்கு பிறகு ஜெயலலிதாவின் கேள்விக்கு பதிலளிக்கும் அறிக்கையொன்றில் நாங்கள் செலவு செய்து போய்வந்தோம். நீயும் முடிந்தால் போய் வா.. யார் தடுத்தது என்றார். 
  8. உயர்நீதிமன்றத்தில் நடந்த வழக்கறிஞர்கள் காவல்துறையினர் அடிதடியெல்லாம் இவரின் நாடகத்தில் சிறந்த காட்சிகள்.  
  9. பிரபாகரனின் தாயாருக்கு மருத்துவ சிகிச்சை என்று ஒரு நாடகம். அவரின் சார்பாக வந்த கடிதமே ஒரு நாடகம் தான்.
  10. கட்ச தீவு பிரச்சினையிலும் தமிழக மீனவர்கள் பிரச்சினையிலும் இன்னும் கண்டனங்களையும் கடிதங்களையும் மட்டுமே அனுப்பி நாடகம் நடத்துகிறார்.
  11. செம்மொழி மாநாட்டிற்காக புலிகள் தரப்பில் வந்த ஆதரவு கடிதமும் இவரின் நாடகங்களில் ஒன்று தான்.  
  12. உலகதமிழ் மாநாடு நடத்தும் அமைப்பு உலகத்தமிழ் மாநாடு இப்போது நடத்துவது சரியில்லை என்று சொன்னதும் அந்த அமைப்பின் ஒப்புதல் இல்லாமலே நடத்த முயன்று பின்னர் அதையே உலகத்தமிழர் செம்மொழி மாநாடு என்று நாடகம் நடத்தினார். 
  13. ஸ்பெக்ட்ரம் ஊழல் பற்றி பேசுவதை தவிர்க்க மோகன்ராஜ் என்கௌன்டர். 
  14. முதுகுவலி என்கிறார்கள் இருந்தாலும் கலைநிகழ்ச்சிகள் என்றால் முதல் வரிசையில் இருக்கும் இவர் உடல்நிலை சம்பந்தமாகவும் நாடகம் தான் நடத்துகிறாரோ?

ஈழத்தமிழர்களின் பெயரில் நடக்கும் மோசடிகள்

ஈழத்தமிழர்களை நமது மத்திய மாநில அரசுகளும்  அரசியல் கட்சிகளும் ஏமாற்றி விட்டன,ஏமாற்றியும் வருகின்றன. ஆனால் இந்த பதிவு அவர்களை ஏமாற்றி வரும் சக மனிதர்கள் மற்றும் நம் சக தமிழக தமிழர்களை பற்றியது. 
 
அவர்களுக்கு நமது தமிழக அரசு வழங்கும் உதவிதொகையானது மிக சொற்பமே. அந்த உதவித்தொகையை வைத்து மட்டுமே வைத்து ஒருவர் தனது தேவைகளை ஒரு வாரத்திற்கு கூட பூர்த்தி செய்ய இயலாது. அப்படி இருக்கும் நிலையில் அவர்கள் வெளியில் சென்று வேலை பார்த்து தான் தங்களின் குடும்பத்தை காப்பாற்றும் நிலையில் உள்ளனர். அப்படி வேலைக்கு செல்லும்போதும் அவர்கள் காலை ஆறு மணியில் இருந்து மாலை ஆறு வரைக்கும் தான் முகாமிற்கு செல்லும் நிலை உள்ளது. அருகே இருக்கும் இடங்களில் அவர்கள் வேலை செய்தாலும் அவர்களின் உழைப்பிற்கு ஏற்ற ஊதியங்கள் கொடுக்கப்படுவதில்லை. இது தான் பெரும்பாலும் எல்லா இடங்களிலும் நடக்கிறது. யாரும் இதனை தட்டிகேட்கவும் முடியாது. காரணம் அவர்கள் அகதிகள் என்பது தான். அவர்களின் உழைப்பை யார் வேண்டுமானாலும் அங்கே பொறுப்பில் இருப்பவர்களை சரிகட்டியோ இல்லை சரிகட்டாமலோ சுரண்ட முடியும் என்பதே உண்மை.

அடுத்தது தமிழகத்தில் இருக்கும் ஈழத்தமிழர்களின் குழந்தைகளின் படிப்பு செலவிற்கு என்று சகத்தமிழர்கள் கொடுக்கும் பணம் இடைத்தரகர்களிடம் போனது போகவே அவர்களிடம் போகிறது. உதாரணத்திற்கு அவர்களின் ஓராண்டிற்கு தேவையான தொகை நாற்பதாயிரம் என்றால் இடைத்தரகர்கள் உதவி செய்பவர்களிடம் கூறும் தொகை அறுபதாயிரம். ஆக இவர்களுக்கு இருபதாயிரம் ரூபாய் கிடைக்கிறது. உதவி செய்பவர்கள் இங்கே ஒன்றை கவனிக்க வேண்டும். ஈழத்தமிழர்களின் குழந்தைகளின் படிப்பு என்று சொல்லும்போது எல்லாருமே இரக்கப்பட்டு உதவி செய்கிறோம். அவர்களுக்கு அருகில் இருக்கும் பள்ளி கல்லூரிகளிலும் ஈழத்தமிழர்களின் குழந்தைகளின் படிப்பு செலவிற்கு நாமே பேசும்போது கட்டணங்களில் சலுகைகளும் தருகிறார்கள். ஆனால் இது எல்லாம் ஈழத்தமிழர்களுக்கும் தெரிவதில்லை,உதவி செய்பவர்களுக்கும் தெரிவதில்லை, இந்த இடைத்தரகர்களுக்கு மட்டுமே தெரிகிறது. இந்த விசயத்தில் நாம் எளிதாக ஏமாறுவதை தடுக்கலாம். எனது நண்பர்கள் சிலர், படிப்பு செலவிற்கு என்று ஈழத்தமிழர்களின் குழந்தைகள் சிலரை தேர்ந்தெடுத்து அவர்களுக்கு உதவி என்று செய்யபோகும் போது இந்த இடைத்தரகர்கள் வந்தார்கள். அவர்களே நேரில் சென்று கட்டணங்களை கட்டிவிட்டு குழந்தைகளை கல்லூரிகளில் விட்டுவிட்டு வருவோம் என்றார்கள். நண்பர்கள் நேரில் சென்று அதே கல்லூரியில் கேட்டபின்னர் தான் தெரிந்தது இடைத்தரகர்கள் நண்பர்களிடம் கூறிய தொகையானது இடைதரகர்களின் கமிஷனையும் சேர்த்து தான் என்று. நண்பர்கள் நேரில் சென்று கட்டணத்தையும் கல்லூரி விடுதியில் சேருவதற்கு கட்டணத்தையும் கட்டிய பின்னரும் இடைத்தரகர்கள் நண்பர்களிடம் கேட்ட தொகை அளவு செலவாகவில்லை.




அரசியல்வாதிகளும் அலுவலர்களும் தான் ஈழத்தமிழர்களை ஏமாற்றுகிறார்கள் என்றால் சகத்தமிழர்களுமா இப்படி ஏமாற்றுவது? கட்டண ரசிதுகளை கேட்டால் மட்டுமே இவர்களை(இடைத்தரகர்கள்) பற்றி தெரிய வருகிறது.

ஈழத்தில் சண்டை நடக்கும்போது அங்கே இருந்து தப்பிவருபவர்கள் இங்கே இருக்கும் நிலை சரியில்லை என்பதால் வெளிநாடுகளுக்கு செல்ல முயற்சித்தனர். அவர்களுக்கு இங்கே உதவி செய்வதாக சொல்லி வசூல் செய்கின்றனர். அந்த பணத்தில் அவர்களை இவர்கள் வெளிநாடுகளுக்கு அனுப்பி வைத்தார்களா என்றால் அதுவும் இல்லை. அவர்களின் பெயரில் வசூல் செய்த பணத்தில் போரூரில் வீடு கட்டிய நபர்களும் இருக்கிறார்கள். ஆனால் உண்மையில் உதவி செய்பவர்களை விட இவர்கள் சொல்லும் கதை தான் உண்மை என்பது போல் உள்ளது. அந்த அளவுக்கு உதவி கேட்பவர்களிடம் பழகி உள்ளார்கள். ஆனால் உதவி தொகையில் ஒரு பகுதி தான் சம்பந்தப்பட்டவர்களிடம் சேர்கிறது.


உதவி செய்பவர்கள் பலர் இருந்தாலும் இன்னும் ஈழத்தமிழர்களின் நிலை மாறாமல் இருக்க காரணம் இவர்களை போன்ற இடைத்தரகர்கள் தான். உதவி செய்பவர்களும் உதவி கேட்பவர்களும் நல்லவர்களாக இருந்து என்ன பிரயோஜனம். இடைத்தரகர்கள் நல்லவர்களாக இல்லையே.




உதவி செய்பவர்கள் அனைவரும் தயவு செய்து உங்களின் உதவிகள் சம்பந்தபட்டவர்களிடம் உதவிகள் போய் சேர்கின்றதா என்பதை ஒரு முறை உறுதிபடுத்தி கொண்டு பின்னர் அவர்கள் மூலமாகவே கூட உதவிகளை தொடரலாம்.

Popular Posts