தினமலர்,சுயமாக உழைத்து சம்பாரித்தல் தவறு என்கிறதா அல்லது தமிழர்கள் எல்லாம் அரசியலில் ஈடுபடக்கூடாது என்கிறதா?
தினமலர்- வாரமலரில் தற்போது வந்துள்ள செய்தி.(கருத்து என்றே கூறலாம்). அமெரிக்காவில் தற்போது இருக்கும் இந்தியர்கள் எண்ணிக்கை உயர்வதாகவும்(மக்கள் தொகையும் தான்.) அதனால் அவர்கள் வாழ்க்கை தரம் உயர்ந்துவருவதாகவும் சொல்லிவிட்டு அதற்காக இந்தியர்கள் அரசியலில் அங்கீகாரம் கேட்கின்றார்கள் என்று புகார் கூறியுள்ளது. தினமலர் இந்தியர்கள் அங்கு வாழக்கூடாது என்கிறதா? இல்லை அங்கு இருக்கும் ஜனநாயகம் இவர்களுக்கு பிடிக்கவில்லையா? உண்மையான ஜனநாயகம் என்பது எல்லாருக்கும் ஆட்சியில் பங்களிப்பு கொடுப்பது என்பதே. இங்கே இருக்கும் பணநாயகம் போல் அங்கும் இருக்க வேண்டும் என சொல்லவருகிறதா?
அதை விட்டுவிட்டு எங்கே போனாலும் பேசகூடாது என்று சொல்லும் தினமலரை என்னவென்று சொல்லுவது?
சாமியே வரம் தந்தாலும் இவர்கள் தரக்கூடாது என்று சொல்வார்கள் போலிருக்கு. அங்கே குடியுரிமை பெற்றவர்கள் யாராக இருந்தாலும் அரசியலில் ஈடுபட முழுஉரிமை இருக்கிறது. இந்தியாவில் தான் அகதிகளை பிச்சைகாரர்களாக நடத்துகிறது. அமெரிக்காவில் அப்படி இல்லை. மற்றவர்களுக்கு வேண்டுமானால் அமெரிக்கா ஒரு மோசமான நாடாக இருக்கலாம். அந்த நாட்டு மக்களை சிறப்பாக நடத்துவது போல் வேறு எங்கும் நடத்துவதில்லை.
தினமலருக்கு எப்பவும் ஆள்பவர்கள் ஆண்டு கொண்டே இருக்க வேண்டும். இவர்கள் தங்களுக்கு எப்பவும் பல்லக்கு தூக்கிகள் இருக்க வேண்டும் என்றே நினைக்கிறார்களோ


12:38 AM
satheshpandian
, Posted in
