Showing posts with label துரோகம். Show all posts
Showing posts with label துரோகம். Show all posts

புலி பயம் காட்டி ஊழலில் இருந்து தப்பித்து கொள்ள கருணாநிதி முயற்சி

ஸ்பெக்ட்ரம் பிரச்சினையை எப்படியெல்லாம் திசை திருப்பலாம் என்பதற்கு நேற்று தான் ஒரு பதிவு போட்டேன். அந்த பூச்சாண்டி எல்லாம் ஒத்து வராததால் சோனியா குடும்பம் எதற்கு பயப்படும் என்று பார்த்து கொண்டிருந்த கலைஞர் இப்போது புலிகள் தாக்குதல் நடத்துவார்கள் என்று கிலி வேறு கிளப்பியுள்ளார்.

லத்திகா சரண் ஒரு தேர்ந்த போலிஸ் அதிகாரி என்ற தரத்தினை எப்போதோ இழந்து விட்டார் என்றே தோன்றுகிறது. தமிழீழ ஆதரவாளர்களை நோக்கி இவர் எடுக்கும் ஒவ்வொரு நடவடிக்கையும் சர்ச்சைகளில் கொண்டு போய் தான் முடிந்துள்ளன.

ரயில்வே தண்டவாளத்தில் வெடிகுண்டு வைத்து அந்த வழியாக செல்லும் ரயில்களை தகர்க்க முயற்சி செய்ததாக காவல்துறை அந்த ஒரு வாரத்திலே பல கதைகள் சொன்னது. அதை சொன்னதும் நமது லத்திகா சரண் தான்.
அதே போல் சென்னையிலும் தண்டவாளத்தில் கற்களை வைத்து சமூக விரோதிகள் முயற்சி செய்தனர் என்றனர். ஒரே நேரத்தில் ஒரு மனிதர் இரு இடங்களில் இருந்து இரு வேறு செயல்களை செய்ய முடியாது என்பதால் அதற்கு காரணம் என்று இவர்களால் கைது செய்யப்பட்டவர்கள் எல்லாம் விடுதலை செய்யப்பட்டனர்.

இதில் நமது உளவுத்துறை எவ்வளவு சீரழிந்து வருகிறது என்பதற்கு தமீழத்தில் இருந்து இங்கே தங்கிருக்கும் பெண்களிடம் தங்களது காம லீலைகளை அரங்கேற்றி உள்ளனர் தமிழக உளவுத்துறையினர்.

இவர்கள் எப்போதுமே புது கதைகளை சோடிக்கவும் ஒரு பிரச்சினையை திசை திருப்ப மற்றொரு பிரச்சினையை செய்வதற்குமே பயன்பட்டு இருக்கின்றனர்.


இவரே தான் சொல்வதாக ஒரு செய்தியும், மத்திய உளவுத்துறையும் ராவும் சொல்வதாகவும் ஒரு செய்தியும் பரப்பபட்டது.   எது எப்படி இருந்தாலும் ஊழல்களில் இருந்து தப்பிக்க இப்படியெல்லாமா சொல்லுவது.

அப்படி ஒருவேளை உளவுத்துறை என்று ஒன்று இருந்தால் இங்கே நடக்கும் அசம்பாவிதங்களை முன்னரே தடுத்திருக்க முடியாதா என்ன?

ச்சே இவ்வளவு தானா இந்த உலகம்

இனபடுகொலை சம்பந்தமாக வந்த காணொளியை கண்டபின்னரும்  உலகமே
ஒன்று கூடி நம்மை இன்னும் ஏமாற்றுகிறது என்று புரிகிறது. அந்த காணொளியில் தான் எல்லாமே தெள்ளதெளிவாக உள்ளதே. இன்னும் வேறு என்ன கேட்கிறார்கள்? இன்னும் நம்மை எப்படியெல்லாம் நம்பவைத்து ஏமாற்ற போகிறார்கள். போர்குற்றவியல் நீதிமன்றம் எல்லாம் தமிழனுக்கு சரிபட்டு வருமா? பாலியல் கொடுமைகள் எல்லாம் போரில் சாதாரணம் என்று கேள்விப்பட்டு இருக்கிறேன். ஆனால் சக தமிழன்/ தமிழச்சிகள் இவ்வளவு கொடூரமாக கொல்லப்படும்போது இனிமேலும் துரோகிகளை பற்றி மூடி மறைத்து எழுதுவது தவறு என்றே உணருகிறேன்.
கருணா என்றாலே  துரோகம் என்று பொருளா? அதனால் அந்த இருவரை பற்றியும் நாம் பார்க்க வேண்டியது இல்லை.
ஜகத்கேஷ்பருக்கு முன்னரே (December 2008) புலிகளின் மீதான பிடி மட்டும் அல்ல துரோகங்களும் இறுகுகிறது என்று தெரியும். ஆனாலும் சொல்லவில்லை. அவரே முன்னின்று போராட்டங்களை ஊக்குவிப்பது போல நடித்து தன் மீதான மற்றவர்களின் கவனத்தை திசை திருப்பினார். அப்போதும் கலைஞரை கண்டித்தோ இல்லை மத்திய அரசை கண்டித்தோ கோஷங்கள் எழுப்பகூடாது என்று சொல்லி மாணவர்களையும் மற்றவர்களையும் ஏமாற்றியவர். இவரை வைகோ, நெடுமாறன் போன்றோர்கள் நம்பவில்லை. இவர் பேச்சில் ஆளை வீழ்த்தும் வல்லமை கொண்டவர் ஆதலால் இன்னமும் இவரை நம்பும் ஏமாளிகள் உள்ளனர். இவர் தானாக எந்த ஒரு போராட்டத்திலும் கலந்து கொண்டவரில்லை. முத்துகுமரனின் இறுதி ஊர்வலத்திற்க்கோ அல்லது அதற்கு முதல் நாளிலோ இவர் எங்கே இருந்தார் என்று தெரிந்தவர்கள் கூறவும்?

அடுத்து  வருபவர் திருவாளர் தொல். திருமாவளவன். இவரோ அல்லது இவர் கட்சி சார்ந்தவர்களோ இல்லாமல் எந்தவொரு போராட்டமும் நடைபெறாது. இவர்கள் நடத்தினால் மட்டும் தான் இவரின் கட்சிகாரர்கள் கலந்துகொள்வார்கள் என்றில்லை. எங்கு எந்த போராட்டம் நடந்தாலும் இவர்களே மாணவர்களோ அல்லது மற்றவர்களோடு கலந்து விடுவர். பின்னர் நடக்கும் அத்தனை குழப்பங்களுக்கும் இவரின் கட்சிக்காரர்களே காரணம். முத்துகுமரனின் இறுதி ஊர்வலத்தில் மாணவர்களை அடித்து விரட்டிய பெருமை இவர்களையே சாரும். ஈழத்தமிழர்களின் இனபடுகொலைகளுக்கு எதிராக வழக்கறிஞர்கள் நடத்திய போராட்டத்தில் குழப்பமும் அதையே பின்னர் கலவரமாகவும் மாற்றிய பெருமை இவரையும் இவர் கட்சியினரையுமே சேரும்.

பத்திரிக்கையாளர்கள்: ஈழ பிரச்சினைகளுக்கு முன்னர் வரை பத்திரிக்கை என்றால் அதில் ஒரு தர்மம் கடைபிடிப்பதாகவும் (ஊமை விழிகள் படத்தினை பார்த்து ஏமாந்தது தான்) அதை மீறாமல் எப்போதும் இருப்பார்கள் என்று நினைத்து இருந்தேன். எந்த பத்திரிக்கை நடுநிலையை காத்தது என்றே தெரியவில்லை. அப்படி ஒரு ஒற்றுமை. தினமலரில் ஆரம்பித்து( உங்களுக்கெல்லாம் சாவே வராதா? அப்படியே தான் இருப்பிங்களா என்ன?)  நான் கடைசியாக ஏமாந்தது நக்கீரனிடம். அத்தனை பத்திரிக்கைகளுமே ஊழல்கள் லஞ்ச லாவண்யத்தில் சிக்கி நம்மை ஏமாற்றி விட்டன. ( இதற்கு வேற எவ்வளவோ தொழில்கள் இருக்கின்றனவே. இதில் தான் இந்த மோசடிகளை செய்ய வேண்டுமா?)


மீடியா: எப்போது ஒவ்வொரு கட்சிக்காரர்களும் தொலைக்காட்சி நிறுவனங்கள் ஆரம்பித்தார்களோ அப்போதே நடுநிலை என்பது போய்விட்டது. சன் தொலைகாட்சியில் கிளிநொச்சி வீழ்ந்த உடனே ஆனையிறவு வீழ்ந்ததாக செய்தி போட்டார்கள். அந்த அளவு செய்திகள் நடுநிலையாக இருந்தன.( ஆனால் மூன்று நாட்கள் போராடி தான் ஆனையிறவை விட்டு புலிகள் பின்வாங்கினார்கள்) . கலைஞர் தொலைகாட்சியில் மானமிகு நமிதாவை ஆடவிட்டு அதை மக்கள் பார்க்கும்படி செய்து இருந்தார்கள்.ஜெயா தொலைகாட்சியில் இலங்கையில் போரா என்று கேட்டு புண்ணியம் கட்டியவர்கள் தான் இருக்கிறார்கள்.மக்கள் தொலைகாட்சி இலங்கை போரை தொடர்ந்து காட்டியது. ஆனால் அதில் அரசியல் தேவைக்காக என்பதும் இருந்தது. விஜயில் பரவாயில்லை. நிகழ்ச்சிகளில் யாரேனும் ஈழ பிரச்சினைகளுக்கு அழுதாலும் காட்டினார்கள்.


நான் இந்த பதிவினை மனம் வெறுத்தே பதிவு செய்கிறேன். பலரின் பெயர்கள் எழுதவே நினைக்கின்றேன். ஆனால் அவர்களுடன் தொடர்பில் உள்ளவர்கள்  எல்லாம் நல்லவர்களாக இருக்கிறார்கள். அதனால் நான் எழுதுவது கடினம்.
உங்களுக்கு தெரிந்த துரோகிகளை(புதிய ) பற்றி கூறவும். இனிமேலாவது நாம் ஏமாறாமல் இருப்போம் ஆக.

Popular Posts