போலி முகங்கள்-1

உங்களில் பலருக்கு இந்த பழக்கம் இருந்திருக்கலாம் அல்லது இந்த பழக்கம் உடையவர்கள் உங்களின் பக்கங்களில் நுழைந்து உங்களை ஏமாற்றி கொண்டு இருக்கலாம். இந்த பழக்கம் உள்ளவர்கள் அனைவரும் மனநோயினால் பாதிக்கப்பட்டவர்கள் என்றே மருத்துவ உலகங்கள் கூறுகின்றன. அப்படி என்ன பழக்கம் பற்றி நான் கூறுகின்றேன் என்றால் மற்றவர்களையோ அல்லது தங்களை தாங்களே ஏமாற்றி கொள்வதற்காக போலியாக ஒரு இணைய முகவரிகளுடன்(Fake Profile) உலாவரும் பழக்கம் தான். இவர்களை எல்லாம் கீழ்க்கண்ட இணைய தளங்களில் பார்க்கலாம்.
  • பொது குழுமங்கள்(Forums)
  • கல்யாண பதிவு இணையங்கள்(Matrimony Sites)
  • சோசியல் நெட்வொர்கிங் தளங்கள்( Social networking sites)
  • செய்தி தளங்கள்.(News sites)
பொது குழுமங்கள்(Forums):
நாம் எல்லாரும் ஒரு தளத்தில் ஒரு செய்தி பிடிக்கவில்லை அல்லது நமக்கு எதிராக இருந்தால் உடனே அதற்கு எதிர்ப்பு தெரிவிப்போம். இப்படி தெரிவிக்க முதலில் நமது பெயரில் இருக்கும் கணக்கின் மூலம் மறுப்பு அல்லது எதிர்ப்பை வெளியிடுகிறோம். அப்படி வெளியிட்டவுடன் உங்களின் மறுப்பு அல்லது எதிர்ப்புக்கு ஒரு மறுமொழி வர இப்படியே இது தொடர்கிறது. ஒரு நிலையில் நமது கணக்கின் மூலம் கொடுக்கும் பதிலுரைகளுக்கு வலுவூட்ட அதில் இன்னொருவரின் ஆதரவு தேவைபடுகிறது. அந்த இன்னொருவர் கிடைத்துவிட்டால் இந்த போலி முகங்களுக்கு வேலை இல்லை. ஆனால் எல்லாரும் கோவணம் கட்டி இருக்கும்போது நான் அப்படி இருக்க மாட்டேன் என்று அடம்பிடிக்கும் மனிதர்களுக்கு அவர்களே தொடங்கும் வேறு ஒரு கணக்கு தான் தோழன். அதாவது இல்லாத ஒரு நபரின் வாதத்தால் தனது வாதத்திற்கு வலு சேர்க்கும் திட்டம். இப்படி வலு சேர்க்கும் இவர்களின் திறமை போலி கணக்கு தொடங்குவதில் மட்டுமே இருக்கிறது. இவர்களுக்கு வாதத்திறமை கடைசி வரைக்கும் கிடைப்பதில்லை.அவர்களின் வாதமும் ஜெயிப்பது இல்லை.

கல்யாண பதிவு இணையங்கள்(Matrimony Sites):
வெளிநாடுகளில் இருக்கும் முறைகள் எல்லாம் இந்தியா வந்தால் எப்படி இருக்கும். அப்படி துணைகளை நாமே தேடுவதற்கு மேலைநாடுகளில் செயல்பட்டு வந்த முறைகளை போல இந்தியாவினுள் அறிமுகபடுத்தபட்ட தளங்கள் தான் இந்த இணைய தளங்கள். இதில் உறுப்பினர் ஆவது ஒன்றும் கடினமான வேலை இல்லை ஆனால் ஒரு நிலைக்கு மேல் உங்களால் அடுத்தவரின் தகவல்கள் எடுக்க முடியாது. அதற்கு கட்டணங்கள் செலுத்தி பெற்றுக்கொள்ளலாம். (இதில் இருக்கும் மணமகன் அல்லது மனமகள்களின் தொலைபேசி மற்றும் வருமான விவரங்களை மற்ற நிறுவனங்களுக்கு விற்று லாபம் சம்பாதிக்கின்றனர்.)


இதில் போலிகள் எப்படி உருவாகின்றனர் என்றால் உங்களுக்கு அல்லது உங்களின் நண்பருக்கு உருவாக்கப்பட்ட அந்த கணக்கினை வைத்து நீங்கள் ரொம்ப நேர்மையாக எல்லாரையும் தொடர்பு கொள்கிறீர்கள் ஆனால் உங்களின் தகுதிகளை வைத்து உங்களை அவர்கள் நிராகரிக்கிறார்கள்.பத்தாம் வகுப்பு படித்த மணமகன் மென்பொருள் நிறுவனத்தில் வேலை பார்க்கும் பெண்ணிற்கு அழைப்பு விடுகிறார் என்று வைத்து கொள்வோம். அந்த பெண்ணை பெற்றவர்கள் என்ன யோசிப்பார்கள் அல்லது என்ன செய்வார்கள்?இங்கே அந்த பெண்ணின் வீட்டில் இருந்து வரும் பதிலில் அல்லது பல காலமாக பதில் வராத காரணத்தில் அந்த பையன்/ மணமகன் என்ன செய்வார்? ஒரு வேலை அவர் சூழலை புரிந்தவராக இருந்தால் விடயம் அதோடு முடிந்து விடும். ஆனால் அப்படி இல்லை என்றால் அந்த நபர் தொடங்கும் விடயம் ஒரு போலியான மணமகன். அந்த போலிக்கு இந்த பெண்ணை விட படிப்பு அதிகம், வருமானமும் அதிகம். இப்படி அவரின் கற்பனையில் விளைந்த அந்த மணமகனை வைத்து அந்த மணமகளின் கணக்கிற்கு அழைப்பு விடுத்து ஏமாற்றுகின்றனர். அதற்கு அந்த பெண்ணின் வீட்டில் இருந்து மறு மொழி வந்தால் என்ன நடக்கும் தெரியுமா? இவர் உடனே நீங்கள் எனக்கு கொஞ்சமும் பொருத்தம் இல்லாதவர் என்று மறுமொழி அனுப்புவார்.
 
சோசியல் நெட்வொர்கிங் தளங்கள்( Social networking sites):
இந்த நூற்றாண்டுகளில் என்னவெல்லாம் சம்பாதிதீர்களோ அதையெல்லாம் விட உங்களிடம் ஒரு சோசியல் நெட்வொர்கிங் இணையதளத்தில் உங்களுக்கு கணக்கு இல்லாததை பெரிய குறையாக கூறும் காலம் இது. எப்படி பொது குழுமங்களில் தன் வாதத்திற்கு வலு சேர்க்கும் விதமாக ஒரு சிலர் போலியான கணக்குகளை கொண்டுள்ளனரோ அதே போல் சிலர் போலியாக கணக்குகளை தொடங்குகின்றனர்.அவர்கள் ஏன் தொடங்குகிறார்கள் என்பதற்கு கீழ்க்கண்ட காரணங்களில் எதோ ஒன்று அவர்களிடம் இருக்கிறது.
  • தனது கட்சிக்கு அல்லது தனது கொள்கைகளை எதிர்க்கும் நபர்களுக்கு எதிராக.
  • மறைமுக அல்லது தனது செக்ஸ் தேவைகளுக்காக.
  • தலித் அல்லது பார்பனிய கொள்கைகளை பரப்பும் போலியான வட்டங்களை உருவாக்குதல்.
  • பணம் கறக்க பெண்ணாக போலியான தகவல்களுடன்.
  • மார்க்கெட்டிங் எனப்படும் முறைக்காக.
இப்படி பல காரணங்கள் இருந்தாலும் பெண் போல இருக்கும் ஆண்கள் செய்யும் மார்கெட்டிங் அல்லது பணம் பிடுங்கும் முயற்சிகள் தான் அதிகம் நடக்கின்றன.


அடுத்த அளவில் செக்ஸ் தேவைகளுக்காக என்று இது போகின்றது.
 
செய்தி தளங்கள்.(News sites):
செய்தி தளங்களை பொறுத்த அளவில் இது வேறு விதமாக இருக்கிறது. தங்களுக்கு மட்டுமே அதிக வாசகர்கள் அல்லது படிப்பவர்கள் வருகிறார்கள் என்று மற்றவர்களை நம்ப வைக்கவும் அல்லது அதன் மூலம் மேலும் வாசகர்களை கவரவும் இந்த போலியான முகவரிகள் அல்லது கணக்குகள் அவர்களுக்கு தேவைபடுகிறது. மேலும் ஒரு செய்திக்கு தான் வெளியிடும் கருத்து மற்றவர்களால் கவரப்படுவதை அனைவரும் விரும்புகிறார்கள். அப்படி வெளியிடும் கருத்து முகத்தை சுளிக்கும் விதமாக இருந்தால் என்ன செய்யலாம். அதற்கு மறுமொழி கொடுக்கலாம் அல்லது நாமும் ஒரு போலியான முகவரியை உருவாக்கி அதிலிருந்து அதை விட மகாமட்டமான பதில் கொடுக்கலாம். இப்படி அவர்களின் வெறுப்பையோ அல்லது கண்டனத்தையோ தெரிவிக்க சிலர் போலியான முகவரிகளை உடைய கணக்குகளை உருவாக்குகின்றனர்.
 
 
இந்த போலியான முகவரிகள் அல்லது கணக்குகள் யாரையுமே பாதிக்காமல் இருந்தால் இப்படியொரு தொடரினை நான் எழுதும் நிலைக்கு வந்திருக்க மாட்டேன். எனது பேஸ்புக் முகவரியில் இருக்கும் நண்பர்களில் பலர் போலிகள் என்றே எனக்கு தெரியும். என்னுடன் படித்த நண்பர் ஒருவருக்கு போலியான இணையத்தளம் மூலம் வேலைக்கு வருமாறு என்னுடன் படித்த நண்பர்களில் சிலர் அனுப்பி இருக்கின்றனர். அவரும் அந்த முகவரிக்கு சென்று எல்லாம் பார்த்து விட்டு ஏமாந்து விட்டார். பின்னர் அவரின் இமெயிலில் மீண்டும் ஒருமுறை சரி பார்த்த பொழுது தான் மேற்படி விவரம் எல்லாம் போலிகள் என்று தெரிந்தது.( இப்போது வேண்டுமானால் இது போல் போலி பரிசு சீட்டு அல்லது ஓசி பண மோசடிகள் அதிகம் ஆனால் அப்போது இந்த அளவுக்கு கிடையாது.)


என்னுடன் கூட படித்தவர் ஒருவரின் ஈமெயில் கணக்கினை யாரோ ஒருவர் திருடி அதை திரும்ப ஒப்படைக்க பணம் கேட்ட சம்பவம் நடந்தது.

இதெல்லாம் விட ஆறு வருடங்களுக்கு முன்னர் என்னுடைய யாஹூ ஈமெயில் கணக்கினை யாரோ திருடி எல்லாவற்றையும் அழித்து விட்டனர். இப்படி எல்லாம் செய்ய இவர்கள் ஏன் இவ்வளவு மெனக்கெடுகிறார்கள் என்பதும் இதில் அவர்களின் ஆதாயம் பற்றியும் தான் நான் யோசித்தேன்.

ஆனால் அதையும் மீறி சில விடயங்கள் இருக்கின்றன என்பது தெரிந்தது. அதை அடுத்த பதிவில் தொடர்கிறேன்.

2 Response to "போலி முகங்கள்-1"

  1. ஆஹா இப்பிடி வேறா ஆரம்பிச்சிருக்காயிங்களா ம்ம்ம்ம்...!!!

    Hema says:

    மிக தெளிவாக கூறி இருக்கீறீர்கள். நன்றி. ஏமாறும் நபர்கள் இருக்கும் வரை ஏமாற்றுபவர்கள் இருக்க தான் செய்கிறார்கள். இந்த போலி முகங்களுக்கு கிடைக்கும் ஆதாயத்தினைப் பற்றி யோசித்தீர்கள். இப்படி ஏமாற்ற தன் மனதையும் மூளையையும் வருத்தி கொள்ளும் அந்த மன நோயாளிகளை பற்றி நீங்கள் அறிந்த விடயங்களை சீக்கிரமே பதிவு செய்யுங்கள். ஏமாந்த நண்பர்கள் தெரிந்து கொள்ளவும், எதிர்காலத்தில் யாரும் ஏமாறாமல் இருக்கவும் உதவும்.

Popular Posts