ஏர்டெல்லின் தரங்கெட்ட சேவை

நான் கடந்த ஐந்து வருடங்களாக ஏர்டெல்லின் சேவையை உபயோகபடுத்தி வருகிறேன். ஒரே நம்பர் தான் எல்லாரிடமும் கொடுத்து வைத்திருப்போம் என்பதால் இப்படி. நான் சென்னையில் இருந்து சோழிங்கநல்லூர் அருகே உள்ள நிறுவனதிற்கு எங்கள் நிறுவனத்தின் பேருந்தில் செல்கிறேன். எப்போது வேளச்சேரிக்கு அருகில் வந்தாலும் பேசிக்கொண்டு இருந்தாலும் என்னுடைய அலைபேசியானது தொடர்பை துண்டிக்கிறது. இப்போது நான் பேசிக்கொண்டு இருக்கும் நபர் மிகவும் முக்கியமானவராகவோ, இல்லை வேண்டியவராகவோ அல்லது நம்மை தவறாக நினைக்க கூடிய ஆளாகவோ இருக்கும் நிலையில் நமது இணைப்பு தானாக துண்டிக்கபட்டால் எப்படி இருக்கும்? நாம் அவசரம் அவசரமாக மீண்டும் முயற்சித்து அந்த நபரிடம் வருத்தம் தெரிவித்து பேசுவதை தொடர்வோம். ஆனால் சென்னையிலே இருக்கும் வேளச்சேரியினுள் இப்படி என்றால் மற்ற இடங்களில் எப்படி என்று தெரியவில்லை. நண்பர் ஒருவரிடம் இதுபற்றி கேட்டபோது தான்( ஏர்டெல்லின் தகவல்தொழில்நுட்ப பிரிவில் இருக்கிறார்) அவர் சொன்னார்." பெரும்பாலான நிறுவனங்கள் தங்களின் வாடிக்கையாளர்கள் எண்ணிக்கை அதிகரிக்கும்போது அதற்கேற்ப தங்களின் தொலைதொடர்பு கோபுரங்களின் எண்ணிக்கையை அதிகரிக்க வேண்டும். குறைந்தது தனது வாடிக்கையாளர்கள் அதிகம் இருக்கும் பகுதிகளில் இத்தகைய தொலைதொடர்பு கோபுரங்களின் எண்ணிக்கை அல்லது அதன் வீச்சை உயர்த்த வேண்டும். ஆனால் இதை ஏர்டெல் பின்பற்றவில்லை. நாமும் தினமும் இந்த பிரச்சினைகளை கடந்து தான் போகின்றோம். இதை ஏன் நாம் கண்டு கொள்ளபோகிறோம் என்ற நினைப்பிலே ஏர்டெல் தொடர்ந்து இது மாதிரியாக வரும் புகார்களை கண்டுகொள்வது இல்லை."

லாபம் மட்டுமே குறிக்கோள் என்றால் கூட சேவை நன்றாக இருந்தால் கண்டு கொள்ளாமல் போகலாம். ஆனால் இது மட்டும் தான் பிரச்சினை என்றில்லை. முதலில் முதலிலே கட்டணம் செலுத்தி பெரும் சேவையில் இருந்தேன். ஏர்டெல்லில் இருந்து பேசினார்கள். உங்களின் அலவலகத்தில் இருக்கும் நண்பர்களுக்குள் பேசினால் கட்டணம் இல்லை என்றார்கள். அதற்காக பேசியபின் கட்டணம் செலுத்தும் சேவையை தேர்ந்தெடுத்தேன். முதலில் இது நல்ல விசயமாக இருந்தாலும் கொஞ்சம் கொஞ்சமாக விஷமாக மாறிக்கொண்டே இருந்தது. அது வரை முன்னூறு ரூபாய் மட்டுமே செலுத்தி வந்த நான் ஆயிரம் ரூபாய் கட்டணம் செலுத்த வேண்டி இருந்தது. சில நாட்கள் பேசியதற்கும் பல நாட்கள் பேசாதபோதும் கட்டணம் கட்டி இருந்தேன். நமக்கு தெரிந்த இதே தகவல் தொழில்நுட்ப நண்பர் மூலமே நான் பேசி இருந்த அழைப்புகளை சரிபார்த்தேன். அப்போது தான் நான் பேசாத அழைப்புகளும் அதில் இருந்தது கண்டுபிடித்து ஏர்டெல்லில் முதலில் கேட்டபோது கட்டி தான் ஆக வேண்டும் என்றார்கள். பின்னர் நாங்கள் வழக்கு பதிவோம் என்றவுடன் அவர்களே இறங்கிவந்து அந்த அழைப்புகளை கழித்து இனிமேல் இவ்வாறு நடக்காது என்று கூறினார்கள்.


ஏர்டெல் உபயோகபடுத்தும் முறையானது கொடுப்பது போல் கொடுத்து பின்னர் அதற்கும் பணம் பறிப்பது. இந்த முறையானது முதலிலே கண்டு கொள்பவர்கள் விலகி நிற்கிறார்கள். என்னை போன்றவர்கள் அதே நம்பர் வேண்டும் என்பதால் அமைதியுடன் அதே நம்பர் உடன் அடுத்த சேவைக்கு தாவுவதற்கு உள்ளோம். உங்களுக்கு தெரிந்த நல்ல சேவை அல்லது குறைந்த கட்டணம் மட்டுமே வசூலிக்கும் நிறுவனம் இருந்தால் எனக்கு கூறுங்களேன்.

யார் அதிகமான சம்பளம் வாங்குகிறார்கள்

இந்தியாவில் அதிகமாக சம்பளம் வாங்கும் துறையினர் உண்மையில் மென்பொருள்துறையினர் இல்லை. பலரும் மென்பொருள்துறையினர் தான் அதிகம் வாங்குவதாக நினைத்து கொண்டு இருக்கின்றனர். எல்லா துறையிலும் சம்பளம் என்பது அவர்களின் படிப்பை பொறுத்தே இருக்கிறது. பத்தாம் வகுப்பு படித்துவிட்டு கலெக்டர் வேலை கேட்கும் மனப்பான்மை தான் இன்னும் இங்கே இருக்கிறது.
கொரியர்கள் கொண்டு போய் கொடுப்பவர்களின் சம்பளம் தான் இருப்பதிலே ரொம்ப குறைவாக உள்ளது. அவர்களுக்கு 3000 தருகிறார்கள். அடுத்தபடியாக ஓட்டுனர்கள் (4000).
எல்லா துறையிலும் படித்தவர்களுக்கு அதிகமாக சம்பளம் என்று ஆரம்பித்து பின்னர் அவர்களை வேலையில் முன் அனுபவம் உள்ளவர்கள் முந்துகிறார்கள். இவர்களிடையில் உள்ள வருடங்களின் வித்தியாசம் இரண்டு ஆண்டுகள் மட்டுமே. இரண்டு ஆண்டுகள் முன் அனுபவம் உள்ள நெட்வொர்க் பொறியாளர்களின்(BE-இளங்கலை பொறியியல் படித்தவர்)  சம்பளமும் நான்கு ஆண்டுகள் முன் அனுபவம் உள்ள நெட்வொர்க் பொறியாளர்களின்(Diploma-பட்டயபடிப்பு  பொறியியல் படித்தவர்)  சம்பளமும் ஒன்று தான்.

முக்கியமான நிறுவனங்களில் வேலையில்  முதலில் சேரும்போதே ஆண்டுக்கான சம்பளம் இதுவென பேசி வாங்கினால் மட்டுமே மென்பொருள்துறையினருக்கு சம்பளம் அதிகரிக்கும். பின்னர் கிடைக்கும் என்று எதிர்பார்த்தவர்கள் எல்லாம் விரக்தியில் தான் இருக்கிறார்கள்.

மென்பொருள் துறையினரை விட பெட்ரோலியம்(ONGC), தனியார் தொழிற்சாலைகளில் வேலை புரியும் பொறியாளர்கள் (SAIPEM, Reliance energy, Vedanda etc) மற்றும் மத்திய அல்லது மாநில அரசுகளில் இருப்பவர்கள் தான் அதிகமான சம்பளம் வாங்குகின்றனர்.

மென்பொருள்துறையில் ஒவ்வொரு நிறுவனத்திலும் ஒவ்வொரு சம்பளவிகிதம் உள்ளது. ஒரு நிறுவனம் இரண்டு ஆண்டுகள் முன் அனுபவம் உள்ளவருக்கு நான்கரை லட்சம் கொடுப்பதாக சொல்கிறது. அதே முன் அனுபவம் உள்ளவருக்கு ஆறு லட்சம் கொடுப்பதாக மற்றொரு நிறுவனம் சொல்கிறது. இப்படி வித்தியாசங்கள் இருந்தாலும் மத்திய அரசின் பணியாளர்களை விட இவர்கள் குறைவாகவே கையில் வாங்குகிறார்கள். எப்படி என்றால் பெரும்பாலான நிறுவனங்கள் இந்த ஆண்டு சம்பளங்களில் கூறுவது போல் கொடுப்பது இல்லை. நிறுவனங்களை பொறுத்து அவர்கள் ஒரு தொகையை பிடித்தம் செய்கிறார்கள். கேட்டால் ஆண்டு இறுதியில் கொடுப்பதாக கூறுகின்றனர்.(நீங்கள் நூற்றி பத்து சதவிதம் உழைத்தால் மட்டுமே இந்த பிடித்தம் செய்த பணத்தில் தொண்ணூறு சதம் கிடைக்கும். இல்லையென்றால் அந்த பணம் நிறுவனத்திற்கு தான் சொந்தம்) இந்த நான்கரை லட்சத்தில் ஒரு லட்சம் அதில் போகிறது என்று கொள்வோம். மிச்சம் மூன்றரை லட்சம். இதுவும் முழுமையாக உங்கள் கைகளில் வந்து சேராது. மென்பொருள்துறையில் இருப்பதால் அவர்களின் வருமானவரியையும் நிறுவனங்களே பிடித்தம் செய்கின்றன. அதை தவிர்க்கும் பொருட்டு செய்யும் செலவுகள் தான் அதிகம். கையில் ஒன்றும் நிற்காது. 

இதே நிலையில் இருக்கும் ஒரு மத்திய அல்லது மாநில அரசு பொறியாளரை எடுத்து கொண்டால் அவர்கள் வாங்கும் சம்பளத்தை விட அவர்களுக்கு கிடைக்கும் இதர படிகள் தான் அதிகம். கழுத்தில் பட்டை அணிந்து இருப்பவர்கள் எல்லாரும் மென்பொருள்துறையினர் என்ற தவறான எண்ணமும் அங்கே அங்கே இருக்கத்தான் செய்கிறது.
பெட்ரோலியம் மற்றும் தனியார் நிறுவனங்களில் இருக்கும் பொறியாளர்களுக்கு வழங்கப்படும் இலவச உணவு, இலவச தங்கும் வசதி, இலவச போக்குவரத்து வசதி மென்பொருள்துறையினருக்கு கிடையாது.



2008-2009ஆண்டுகளின் சம்பளங்களின் தொகுப்பு
2010-2011ஆண்டுகளின் சம்பளங்களின் தொகுப்பு

மென்பொருள் நிறுவனங்கள் கொடுப்பது போல் கொடுத்தாலும் சேமிப்பு என்பது மற்ற துறையினருக்கு மட்டுமே சாத்தியமாகிறது.

தினமலர்,சுயமாக உழைத்து சம்பாரித்தல் தவறு என்கிறதா அல்லது தமிழர்கள் எல்லாம் அரசியலில் ஈடுபடக்கூடாது என்கிறதா?



தினமலர்- வாரமலரில் தற்போது வந்துள்ள செய்தி.(கருத்து என்றே கூறலாம்). அமெரிக்காவில் தற்போது இருக்கும் இந்தியர்கள் எண்ணிக்கை உயர்வதாகவும்(மக்கள் தொகையும் தான்.) அதனால் அவர்கள் வாழ்க்கை தரம் உயர்ந்துவருவதாகவும் சொல்லிவிட்டு அதற்காக இந்தியர்கள்  அரசியலில் அங்கீகாரம் கேட்கின்றார்கள் என்று புகார் கூறியுள்ளது. தினமலர் இந்தியர்கள் அங்கு வாழக்கூடாது என்கிறதா? இல்லை அங்கு இருக்கும் ஜனநாயகம் இவர்களுக்கு பிடிக்கவில்லையா? உண்மையான ஜனநாயகம் என்பது எல்லாருக்கும் ஆட்சியில் பங்களிப்பு கொடுப்பது என்பதே. இங்கே இருக்கும் பணநாயகம் போல் அங்கும் இருக்க வேண்டும் என சொல்லவருகிறதா?
அதை விட்டுவிட்டு எங்கே போனாலும் பேசகூடாது என்று சொல்லும் தினமலரை என்னவென்று சொல்லுவது?
சாமியே வரம் தந்தாலும் இவர்கள் தரக்கூடாது என்று சொல்வார்கள் போலிருக்கு. அங்கே குடியுரிமை பெற்றவர்கள் யாராக இருந்தாலும் அரசியலில் ஈடுபட முழுஉரிமை இருக்கிறது. இந்தியாவில் தான் அகதிகளை பிச்சைகாரர்களாக நடத்துகிறது. அமெரிக்காவில் அப்படி இல்லை. மற்றவர்களுக்கு வேண்டுமானால் அமெரிக்கா ஒரு மோசமான நாடாக இருக்கலாம். அந்த நாட்டு மக்களை சிறப்பாக நடத்துவது போல் வேறு எங்கும் நடத்துவதில்லை.  
தினமலருக்கு எப்பவும் ஆள்பவர்கள் ஆண்டு கொண்டே இருக்க வேண்டும். இவர்கள் தங்களுக்கு எப்பவும் பல்லக்கு தூக்கிகள் இருக்க வேண்டும் என்றே நினைக்கிறார்களோ

ஈழ இனபடுகொலையை தடுக்க தவறியது நாங்கள் தான் என்று கருணாநிதி ஒத்துகொள்வாரா?

தமிழக முதல்வர் தற்போது ஒரு பேட்டியில் கூறியிருக்கும் விஷயம் முக்கியமானது. ஏன் என்றால் இதையே அவர் பின்னர் மாற்றி கூறக்கூடும். தற்போது தி.மு.க அங்கம் வகிக்கும் காங்கிரெஸ் கூட்டணியில் சிறு சிறு பிரச்சினைகள் வந்து கொண்டு இருக்கின்றன. இப்படி பிரச்சினைகள் பல வந்தாலும் காங்கிரஸ் கட்சியில் இருப்பவர்களே திட்டினாலும் வாய் திறக்காது இருந்தார். ஆனால் அதையும் மீறி பேட்டி கொடுத்தே ஆக வேண்டிய நிலைக்கு நமது முதல்வர் தள்ளப்பட்டுள்ளார். இந்த பேட்டியில்  கூறியுள்ளதாவது
"மத்திய அரசு, மாநில அரசு என்று கருதாமல் இரண்டும் ஒரே அரசுதான் என்று சிந்தித்து ஒரே அரசாக கருதுகிறோம். நிர்வாக வசதிக்காக அவை பிரிக்கப்பட்டவை என்பதை நாம் மறந்து விடக்கூடாது. அவை பேதம், பிளவுக்காக இல்லை. நீங்கள் படித்தவர்கள் உங்கள் சிந்தனைக்கு தீனி போட்டதை போல சில கருத்தை கூறினேன். உங்களுக்கு இது புலப்படுமானால், மாநில அரசு, மத்திய அரசை ஆளுபவர்களுக்கு, கட்சிகளுக்கு இது புலப்படாமல் போக முடியாது. "

இதன் உள் அர்த்தமானது நாங்கள் மத்திய அரசு, மாநில அரசு என்று பிரிந்து ஊழல்கள் செய்யவில்லை. அப்படி நாங்கள் செய்திருந்தாலும் அதில் கொடுக்கவேண்டிய பங்கை காங்கிரஸ் கட்சியின் மேலிடத்திற்கு ஏற்கனவே கொடுத்து உள்ளேன் என்பது தானே அர்த்தம். இது மட்டுமா? ஈழத்தில் நடந்த இனபடுகொலைகளை நாங்கள் இருவரும் சேர்ந்து தான் கண்டு கொள்ளாமல் இருந்தோம். இருப்போம். அதையும் ஆதரிப்போம். தி.மு.க காங்கிரஸ் கட்சியுடன் கூட்டு வைத்தால் தி.மு.க,காங்கிரஸ் இரு கட்சிகளுமே தங்கள் தொகுதிகளின் எண்ணிக்கைகளை இழக்கும். தற்போதைய பீகார் அரசியலில் காங்கிரஸ் ஒரு தோல்வியின் சின்னம்.
அதே நேரத்தில்  அ.தி.மு.க காங்கிரஸ் கட்சியுடன் கூட்டு வைத்தால் எவ்வளவு தொகுதிகளை  அ.தி.மு.க விட்டுகொடுக்க வேண்டியிருக்கும் என்பதும் கூட்டணி ஆட்சியை அவர்கள் எதிர்பார்க்கிறார்கள் என்பதும் அ.தி.மு.கவை யோசிக்க செய்யும். அ.தி.மு.க காங்கிரஸ் கூட்டணியை உடைக்கும் என்றே எதிர்பார்க்கலாம். அப்படி உடைந்தால் அ.தி.மு.கவுடன் இருக்கும் கட்சிகள் எல்லாம் நட்ராற்றில் விடப்படும். அதையும் மீறி இப்பவும் கூட்டணியில்  இருக்கிறார்கள் என்றால் அது அ.தி.மு.க காங்கிரசை நட்ராற்றில் விடபோகிறது என்பதே உண்மையாக இருக்கலாம். ஆகவே காங்கிரஸ் தே.மு.தி.கவுடனும் பா.மா.கவுடனும் கூட்டணி அமைக்கும் என எதிர்பார்க்கலாம்.
ஆனால் இது தேர்தலுக்கு முன் உள்ள நிலைமை. 
கூட்டணி நிலவரங்கள் இப்படி இருக்க இப்போது திருவாய் மலர்ந்துள்ள கலைஞர் காங்கிரஸ் கூட்டணியை விட்டு வந்தால்  நாங்கள் எல்லாவற்றையும் ஒன்றாக தான் சேர்ந்து செய்தோம் என்றே சொல்லுவாரா என்ன? இல்லை வடிவேலு சொல்வது போல் அது வேற வாய் இது நாறவாய் என்பதை உறுதிபடுத்துவாரோ

மீண்டும் ஏமாறுவதற்கு ஒரு நல்ல வாய்ப்பு,ஏமாறுவதற்கு வாரீர்

தினமலரில் தற்போது வந்துள்ள செய்தி. இந்திய வெளியுறவுத் துறை அமைச்சர் கிருஷ்ணா கூறியதாவது:இலங்கை இனப் பிரச்னைக்கு தீர்வு காண்பதற்கு, அரசுக்கு ஒரு நல்ல வாய்ப்பு கிடைத்துள்ளது. இந்த வாய்ப்பு நல்ல முறையில் பயன்படுத்தி கொள்ளப்படுமென நம்புகிறேன்.தமிழர்களை மறுகுடியமர்த்தும் பணிகளை விரைவுபடுத்தும்படி தமிழக முதல்வர் வலியுறுத்தியுள்ளார். ஏற்கனவே, பெரும்பாலான தமிழர்கள் மறுகுடி யமர்த்தப்பட்டு விட்டனர். இன்னும் 17 ஆயிரத்தில் இருந்து, 20 ஆயிரம் பேர் வரை மட்டுமே முகாம்களில் உள்ளனர். அவர்களும் விரை வில் குடியமர்த்தப்படுவர். இந்த பிரச்னையை இலங்கை அரசு உணர்வுப்பூர்வமாக அணுகும் என நம்புகிறேன்.இவ்வாறு கிருஷ்ணா கூறினார்.
இதை படித்தவுடன் உங்களுக்கு தோன்றுவது போலவே எனக்கும்  தோன்றுகிறது. அந்த ஊழல் இந்த ஊழல் பற்றியெல்லாம் வந்த செய்திகள் இருக்கும்போது இதையேன் தினமலர் முன்னிலைபடுத்தி சொல்கிறது என்று எனக்கு தெரியவில்லை. அதே போல் அந்த ஊழல்களை எல்லாம் மறைக்க தான் இந்த பயணம் என்றும் நான் சொல்லவே இல்லை. இதில் ஒரு விஷயம் எனக்கு புரியவில்லை. ஐ.நாவின் கூற்றுப்படி அங்கே இருந்தவர்கள் மூன்று லட்சம் பேர்( புலிகள் ஐந்து லட்சம் பேர் என்று கூறி இருந்தனர். ஒருவேளை இரண்டு லட்சம் பேர் புலிகளாகவே இருந்து இருக்கலாம்.) இப்போது குடியமர்த்த போவது பதினேழு முதல் இருபது ஆயிரம் பேர் என்று கூறுகிறார்கள்.மற்றவர்கள் என்னவானார்கள்? ஒரு முறை இவர்கள் சென்று வந்தால் மட்டுமே இப்படி குடியமர்த்தல் நடக்கிறது என்றால் இவர்கள் அடிக்கடி அங்கே செல்லலாமே.என்னை கேட்டால் இவர் அங்கேயே குடிசை போட்டு தங்கலாம். இதில் தமிழக முதல்வர் சொல்லியபடி தான் தான் நடந்து கொள்வதாக வேறு சொல்கிறார். அப்படியானால் இவருக்கு எப்ப எப்போ இப்படி தோன்றுகிறதோ அப்போது மட்டுமே குடியமர்வு நடக்குமா?


கேட்டால் தீவிரவாதம் என்கிறார்கள்.இறையாண்மை என்கிறார்கள். கேட்க வேண்டியவர்களும் சரியில்லாமல் வேடிக்கை பார்க்கும் நிலையில் ஐ.நாவில் இனபடுகொலைகளை செய்தவர்களுக்கு இடமும் கொடுத்து புண்ணியம் சேர்த்து வருகிறார்கள். ஆக மொத்தத்தில் ஒரு வயதான முதியவர் தான் இந்த உலகை ஆட்டுவிக்கிறார் என்பது நமக்கெல்லாம் பெருமை இல்லையா? ஐ.நாவே நிறுத்த முடியாத போரினை நான்கு மணிநேரம் மட்டுமே உண்ணாவிரதம் இருந்து தடுத்த பெருமையும், அமெரிக்கா மற்றும் மேற்குலகின் செயற்கைகோள்களையும் மீறி நடந்த எறிகணைவீச்சினை அறிக்கைகள் மூலம் அழித்ததையும் என்னவென்று பாராட்டுவது என்றே தெரியவில்லை.

இந்தியா ஒரு ஈனபிறவிகளின் நாடு

என்னடா இந்தியாவினுள் இருந்துகொண்டு இப்படி எழுதி இருக்கிறானே என்று பார்க்கிறீர்களா? இந்தியாவில் இருந்து ஒழுங்காக வருமான வரிகள் செலுத்திவரும் அனைவரும் நாட்டை சாடுவதற்கு முழு உரிமை படைத்தவர்களே.அதிலும் நாம் தமிழர்கள் வேறு. ஈனபிறவிகள் எங்கு அதிகம் என்று கேட்டால் அதற்கு விடை தமிழ்நாடு என்று தான் வரும். யோசித்து பாருங்கள். நமக்கு வாய்த்த கட்சிகள் அப்படி. ஈனபிறவிகளை ஆட்சியில் வைத்து அழகு பார்ப்பதே நமது வேலையாக போயிற்று. இப்போது இருக்கும் மத்திய அரசு இரு வருடங்களுக்கு முன்னரே தோற்று இருந்தால் இப்போது வெளியே வந்து கொண்டிருக்கும் பல ஊழல்கள் அப்போதே வெளியே வந்திருக்கும்.

தாமதமாக கிடைக்கும் நீதியும் நிதியும் பயன் தராது. செத்தவன் கையில் கோடி ரூபாய் இருந்தால் என்ன ? இல்லாவிட்டால் என்ன? நீதி இப்போது எல்லாம் அவ்வளவு சுலபம் இல்லை. அவர்களை காப்பாற்றி கொள்ளவே அவர்களுக்கு தெரியாதபோது எப்படி நம்மை எப்படி காப்பாற்றுவார்கள். நம் தமிழ்நாடு எல்லாவற்றிலும் ஒருபடி மேல். யார் யார் எதிரிகள், துரோகிகள்   என்றே நமக்கு தெரியாமல் ஈழ பிரச்சினைகளுக்கு போராடி பல ஆயிரம் இனஉயிர்களை காவு கொடுத்திருக்கிறோம். இன்னும் கொடுக்க இருக்கிறோம். எனக்கு தெரிந்து ஆளும்கட்சியுடன் தொடர்பில் இருந்த, இருக்கின்ற அனைவரும் துரோகிகளே.( பெயரை குறிப்பிட்டு வம்பில் மாட்டிக்கொள்ள நான் தயாரில்லை). இதில் இவர்களே நமக்கு முன்னர் ஈழத்திற்கு குரல் கொடுப்பர். நாமும் நம்பி இறங்கியபின்னர் அவர்கள் பைகளை நிரப்பிக்கொண்டு சென்று விடுகிறார்கள். இதை எழுதவேண்டிய பத்திரிக்கைகளும் ஒன்றாக தண்ணி சாப்பிட்டு கொண்டு இருக்கிறார்கள்.(தண்ணியை மட்டுமே இங்கே எழுதி இருக்கிறேன். இதன் மூலம் வந்த வருவாய் வைத்து வீடு கட்டியவர்கள் அதிகம். மிச்சம் சொச்சம் எல்லாம் நிறையா இருக்கு. எழுதினால் இந்த பதிவு அசைவமாகி விடும்).

ஆளும்கட்சி தான் இப்படி என்றால் முக்கிய எதிகட்சிக்கு இந்த பிரச்சினையை எப்படி எதிர்கொள்வது என்றே தெரியவில்லை. எம்.ஜி. ஆர் இருந்தால் என்ன செய்திருப்பாரோ? அந்த அளவு இல்லையென்றால் கூட கொஞ்சம் முயற்சி செய்து இருக்கலாம். கடைசி நேரத்தில் கூறப்படும் வாக்குறுதிகள் மக்களை குழப்பமடையவே செய்யும். தெளிவாக்காது.நானும் ஈழ மக்களுக்காக போராடுகிறேன். நீங்களும் ஈழ மக்களுக்காக போராடுகிறீர்கள். இப்படி எல்லாருமே போராடியும் ஒன்றுமே நடக்காததற்கு இந்த ஈனபிறவிகள் தான் காரணம்.


அந்த ஈனபிறவிகள் செய்த காரியங்கள் மிகவும் எளிதானது.
நீங்கள் போராட்டம் நடத்தும்போது உங்களுடன் உங்களைவிட அதிகமான உணர்ச்சி பெருக்கோடு அவர்கள் நடந்து கொள்வார்கள். ஆனால் யார் எதிரி என்பது அவர்களுக்கு நன்றாகவே தெரியும். நீங்கள் அவர்களோடு  நடத்தும் போராட்டம் என்பது கட்டையால் பாம்பினை அடிக்கும்போது கம்பும் உடையகூடாது அதே நேரம் பாம்பும் சாக கூடாது என்று நினைப்பவர்களின் வழிகாட்டுதலுக்கு உள்ளாகும். உங்களுடைய கூட்டங்களில் உங்களின் அனுமதி இல்லாமல் ராஜபக்ஷேவை பற்றி பேசுவார்கள்.( பின்னர் அவரோடு கைகுலுக்குவது வேறு) நீங்களும் எவ்வளவு நல்லவர் என்றே நினைப்பீர்கள். உங்கள் கூட்டம் எப்பொழுது மக்களை நேரடியாக சந்திக்க செல்கிறதோ. அப்போது அவர்களின் உண்மை முகம் வெளிப்படும்.( இதை தான் பொன்சேகா அரசியல் கோமாளிகள் என்றார்.) எங்கே மக்கள் கொந்தளித்து விடுவார்களோ என்று இவர்களே பலவிசயங்களை செய்வார்கள். உண்ணாவிரதம், மனித சங்கிலி, அடிதடி என இவர்கள் செய்தது அனைத்துமே மக்களை குழப்புவதற்காக மட்டுமே. இவர்களால் எந்த  பிரச்சினைகளுக்கும் நிரந்தர தீர்வு கொடுக்க தெரியாது. முடியாது. ஆனால் பேச்சுக்கள் மட்டும் தெளிவாக இருக்கும். நம் நாட்டில் எல்லா மக்களுக்கும் உள்ள அதே ஞாபகமறதி  இங்கே தமிழ்நாட்டில் அதிகம் உள்ளது.

ஈழத்தில் இருந்த தலைவர் தான் தங்களின் நலத்திட்டங்களை செய்யவிடாமல் தடுத்தார் என்று கூறியவர்கள் ஓடி ஒளிந்து கொண்டுவிட்டார்கள்.இவர்கள் என்ன திட்டம் வைத்திருந்தார்கள்? மக்களை பன்னீரில் குளிப்பாட்டி சந்தனத்தை பூசி தினமும் விருந்துகள் கொடுத்து காப்பாற்றுவேன் என்று சொன்னவர்களிடம் ஒரே ஒரு கேள்வி.

அங்கே இன்னமும் உடுக்க உடையும் உண்ண உணவும் இருக்க இருப்பிடமும் இன்னமும் கிடைக்கலாம். என்ன செய்யலாம்? போராட்டம் நடத்தியவர்களும் ஓய்ந்து போய் நாட்கள் ஆகின்றன. நீங்கள் தானே சொன்னீர்கள் அதெப்படி அரசாங்கம் மக்களை கொல்லும் என்று. இராணுவ வீரர்களுக்கு பொழுது போகவில்லை என்றால் தமிழின பெண்களோடு விளையாடி பின்னர் கொல்கிறார்கலாம். என்ன செய்யலாம் சொல்லுங்கள்.


ஒரு காரியத்தை செய்ய சொன்னதாக கூறியதை நம்புவதற்கும், செய்ததாக சொல்வதை நம்புவதற்கும்  மிகபெரிய வித்தியாசம் இருக்கிறது.
உதாரணம் நமது ஆளும்கட்சியின் எம்பிக்கள் ராஜினாமா செய்வதாக கூறியதற்கும் உண்ணாவிரதம் இருந்து போர் நிறுத்தியதாக சொல்லியதற்கும் உள்ள வித்தியாசம் தான். இரண்டுமே ஒரே மனிதரின் பித்தலாட்டங்களில் ஒன்று தான். ஆனால் நம்பாமல் இருந்தவர்கள் ஒரு சிலர் மட்டுமே. ஏமாறுபவர்கள் இருக்கும்வரை ஏமாற்றுபவர்கள் இருக்கத்தான் செய்வார்கள் என்பது உண்மை தான். ஆனால் ஏமாறுபவர்கள் ஒரு நிலையில் ஏமாறுவதற்கு ஒன்றும் இல்லை என்ற நிலை வந்திருக்கும். அந்த நிலை தான் இப்போது. வளங்களும் உரிமைகளும் எப்படி இழந்து இருக்கிறோம் என்று அறிவதற்கு முன்னரே நமது கோமணங்கள் பிடுங்கப்பட்டு இருக்கும்.

அப்படி பிடுங்கியவரை கோமனபிடுங்கி என்றே அன்புடன் அழைக்கலாம். பறிகொடுத்தவரை என்னவென்று அழைப்பது?  களத்தில் போராடி தோற்றவர்களுக்கு வீரமரணம் கிடைக்கிறது. ஆனால் இங்கே போராட்டங்களில் ஏமாந்த நமக்கு என்ன பெயர் கொடுத்து அழைப்பது?

நம்மை ஈனபிறவிகள் என்று சொல்வதா இல்லை நம்மை ஏமாற்றியவர்களை ஈனபிறவிகள் என்று கூறுவதா?

ராஜீவ் காந்தி என்னும் மனித மிருகம்-5



இந்திரா காந்தி இறப்பிற்கு பின்னர் அடுத்து வந்த நான்கு நாட்களில் கொல்லப்பட்ட சீக்கியர்களின் எண்ணிக்கை மூவாயிரத்திற்கும் மேல். இந்திராகாந்தி  கொல்லப்பட்ட  விஷயம் கேள்விப்பட்டவுடன் காங்கிரெஸ் கமிட்டியின் அங்கத்தவர்கள் கூடினர். அடுத்து என்ன செய்வது என்பது பற்றி விவாதம் நடந்தது. அதில் இருந்தவர்கள் சீக்கியர்களின் மேல் கோபமாக இருந்தனர். அங்கே என்ன முடிவு எடுத்தார்களோ ஆனால் இந்த கலவரங்களை இவர்கள் தான் முன்னின்று நடத்தினர்.




அதில் முக்கியமானவர்கள் கமல் நாத்தும், ஜகதீஷ் டைட்லர். இவர்களை நேரில் பார்த்து பின்னர் தப்பித்தவர்கள் அதிகம். இவர்கள் சீக்கியர்களை கண்டுபிடிக்க பெரிதாக ஒன்றும் செய்யவில்லை. டெல்லியில் இருந்தவர்களின் ஒட்டு மொத்தவர்களின் பட்டியல் காங்கிரெஸ் கமிட்டியின் அங்கத்தவர்கள் வைத்திருந்தனர். அதில் உள்ள சீக்கியர்களை கண்டுபிடிக்க என்ன செய்ய வேண்டும் என்று சின்ன பிள்ளைக்கு கூட தெரியும், காங்கிரெஸ் கமிட்டியின் அங்கத்தவர்களுக்கு தெரியாத என்ன?


நான் அங்கே சும்மா தான் நின்று கொண்டு இருந்தேன் என்று சொல்லுவதற்கு இவர்கள் என்ன செய்து கொண்டு இருந்தார்கள் அங்கே? கமிட்டி அங்கத்தவர்கள் சும்மா வேடிக்கை பார்க்க அங்கே என்ன பொருட்காட்சியா நடந்தது? இவர்களின் முதல் இலக்கு போலீசில் இருந்த சீக்கியர்கள் தான். மற்ற போலீஸ் அதிகாரிகள் இருக்கும்போது தான் அவர்கள் கொல்லப்பட்டனர். அடுத்து இந்த குண்டர்களின் படை வீடு வீடாக கொலை, கொள்ளை, கற்பழிப்புகளை நடத்தினர். இதில் அவர்கள் பாரபட்சம் எதுவும் பார்க்கவில்லை. எத்தனை பேர் எத்தனை கனவுகள் அத்தனையும் அங்கே எரிக்கபட்டது. ஒரு நாட்டின் தலைநகர் மட்டுமே எப்போதும் பாதுகாப்புக்கு பேர்போன இடமாக இருக்கும். அந்தளவுக்கு பாதுகாப்பு பலபடுத்தபட்டு இருக்கும். ஆனால் இங்கே தலைநகரில் தான் கற்பழிப்புகளும் கொள்ளைகளும் கொலைகளும் நடந்தது. அதை ஆட்சியில் இருந்தவர்களே முன்னின்று நடத்தியது கொடுமையிலும் கொடுமை. இந்த கொடுமைகளுக்கு பின்னர் இதை ராஜீவ் காந்தியிடம் சொன்னவர்களுக்கு ராஜீவ் சொன்னது " ஆலமரம் சாயும்போது புல் பூண்டுகள் எல்லாம் அழியத்தான் செய்யும்." எவ்வளவு திமிரான பதிலாக இருந்திருக்கும். புகாரை வாங்கி அதனை விசாரிக்கும் நிலையில் இருந்தவர்கள் மேல் எப்படி புகார் கொடுக்க முடியும். வழக்கம் போல விசாரணை கமிஷன்கள் அமைக்கப்பட்டு விசாரணை நடந்தது. பலன் ஒன்றும் இல்லை. 

சீக்கியர்கள் கொல்லப்பட்டது தான் மிச்சம். வேறு ஒன்றும் நடக்கவில்லை. தலைநகரில் நடந்த இந்த கலவரம் சாதாரண விசயமா என்ன? கேட்பதற்கு யாரும் இல்லாமல் வீடில்லாமல் தவித்த சீக்கியர்கள் முற்பதாயிரம் பேர்.
 இதில் கேட்பதற்கு எந்த கேள்விகளும் இல்லை. ஏனென்றால் எல்லாம் தெளிவாக இருந்தது .

அடுத்த பதிவில் இலங்கையில் இந்திய அமைதி படை நடத்திய கொடூரங்கள் .

லிவிங் டூகெதர்:மென்பொருள் துறையினர் படும்பாடு

 அதென்னமோ தெரியல. மென்பொருள் துறையினர் தான் பலரின் கண்களுக்கு உறுத்தலாக தெரிகின்றனர். நான் இங்கே தமிழ்நாட்டை சேர்ந்த   மென்பொருள் துறையினரை மற்ற மாநில மென்பொருள்துறையினரிடம் தனித்து தான் பார்க்கின்றேன். எந்த மென்பொருள் கார்பொரேட் கம்பெனியாக இருந்தாலும் அங்கே தமிழ்நாட்டை சேர்ந்த மென்பொருள்துறையினர் தனித்து தான் தெரிவார்கள். எப்படி என்றால் ஒரு ப்ரொஜெக்டில் நானூறு பேர் வேலை செய்கிறார்கள் என்று வைத்தால் அதில் பாதி பேர் தமிழர்கள் தான் இருப்பார்கள். மிச்சம் இருப்பவர்கள் மற்ற மாநிலத்தை சேர்ந்தவர்களாக இருக்கிறார்கள் என்று வைத்து கொள்வோம். இந்த மிச்சம் இருப்பவர்கள் அவர்களுக்குள் குழுக்களாக இருக்க வாய்ப்பு
இல்லை. ஆனால் தமிழர்கள் அனைவரும் ஒன்றாக இருந்ததாக நினைவில்லை.அப்படி ஒரு ஒற்றுமை. இந்த தனி தனி குழுக்களாக இருக்கும்  தமிழர்களால் சத்தியமாக எந்தவொரு பிரச்சினையும் இல்லைங்க. இவர்களால் லிவிங் டூகெதர் எல்லாம் வாய்ப்பு இல்லைங்க.ஏன் என்றால் நம் தமிழ்நாட்டை சேர்ந்த மென்பொருள்துறையினருக்கு (சென்னையினை சேர்ந்தவர்களை சேர்க்காமல்)எப்பவும் கூச்ச சுபாவம் அதிகம். இவர்களாக யாரிடமும் தானாக சென்று பேசுவதற்கு வாய்ப்புகள் இல்லை. அப்படியே யாராவது தங்களிடம் பேசினாலும் அவர்களிடம் தொடர்ந்து பேசுவதற்கும் தெரியாது. இது தான் தமிழ்நாட்டினை சேர்ந்த மென்பொருள்துறையினரின் உண்மை நிலை. இந்த மிச்சம் சொச்சம் எல்லாம் ஆந்திர, கர்நாடக, கேரளா மற்றும் வட மாநிலங்களை சேர்ந்தவர்களாக இருப்பார்கள். இவர்கள் தான் நீங்கள் சொல்லும் அந்த லிவிங் டூகெதர் எல்லாம் செய்து புண்ணியம் கட்டி கொள்பவர்கள். நான் இதுவரை விளக்கியது மென்பொருள்துறையை மட்டுமே(IT field).

மென்பொருள்துறையினர் என்று மற்றவர்களால் கருதப்படும் BPO, Call centers பற்றி நான் எதுவும் சொல்ல முடியாது. ஏன் என்றால் இந்த BPO, call centers வந்த பிறகு தான் நம் தமிழ்நாட்டில் இந்த லிவிங் டூகெதர் வந்துள்ளது. BPOவுக்கும் மென்பொருள்துறைக்கும் வித்தியாசங்கள் பலருக்கு தெரிவதில்லை. (அதென்னப்பா சும்மா உட்காந்து பேசுறதெல்லாம் ஒரு வேலையா அப்படின்னு கேட்கிறவர்கள் ஒரு நாள் அப்படி உட்காந்து முயற்சி செய்து பாருங்கள். அப்போது தெரியும் அது எப்படின்னு.)


இந்த வித்தியாசங்கள் அவர்களின் வாழ்க்கை முறையிலும் உள்ளது. மென்பொருள்துறையினர் எப்பவும் மற்றவர்கள் வேலைக்கு செல்வது போல் சென்று மற்றவர்கள் திரும்பும் நேரத்தில் வருகிறார்கள்(வேலை இருந்தால் இந்த நேரம் அதிகம் ஆகும்). இதுவே BPO மற்றும் கால் சென்டர் என்றால் பெரும்பாலும் இரவு நேரத்தில் வேலை பார்ப்பார்கள் அல்லது நேரங்கெட்ட நேரத்தில் வேலை பார்ப்பார்கள்.  இப்படி பலவிஷயங்கள்  இருக்கும்போது எப்படி தான் இவர்களாக எதோ தமிழ்நாட்டை சேர்ந்த மென் பொருள் துறையினரால் தான் கலாச்சாரம் எல்லாம் கெடுகிறது என்று சொல்கிறார்களோ?

இதில் கொடுமை என்னவென்றால் எங்கே என்ன சொல்வது என்றே பலருக்கு தோணுவது இல்லை. இரண்டாயிரத்து எட்டாம் வருடம் மென்பொருள் துறையினர் நடத்திய உண்ணாவிரதத்தினை வாழ்த்தி பேச வந்தவர்களுள் ஒருவர் சொன்னார். "மென்பொருள் துறையினர் என்றால் பீச் பார்க் என்று மட்டுமே சுத்துபவர்கள் என்றே நினைத்திருந்தேன். நீங்கள் தான் மாற்றி விட்டீர்கள் " என்று.

 
(மறு நாள் காலையில் உண்ணாவிரதத்தில் இருந்ததால் தண்ணீர் குடிக்க சென்றேன். தொடர்ந்து தண்ணீர் குடிக்கவில்லை என்றால் கிட்னி பாதிக்கப்படும் மருத்துவர்கள் சொன்னார்கள். ஆனால் தண்ணீர் கூட குடிக்காமல் இருந்த மென்பொருள் துறையினர் ஏராளம். ஒரு நாள் மட்டும் இல்லை இரு நாட்களும் அவ்வாறு தான் இருந்தார்கள். சும்மா உண்ணாவிரதம் இருப்பது போல் இருந்து நடிக்க அவர்களுக்கு தெரியவில்லை. பலருக்கு உண்ணாவிரதம் இருந்த திலீபன் தான் முன்னுதாரணம். அவரும் தண்ணீர் குடிக்கவில்லை. மறுநாள் காலையில் அங்கே சென்ற ஒரு வழிபோக்கர் சொன்னது தான் கொடுமையிலும் கொடுமை. அந்த கழுத்து முழுவதிலும் தங்கத்தினால் செய்யப்பட்ட ஆபரணங்கள் அணிந்த பிச்சைகாரர் சொன்னார். "ரொம்ப ஆடினீர்கள் தானே. உண்ணாவிரதம் இரண்டு நாள் இருந்தால் ஒன்றும் குறைந்து போவதில்லை. " எப்படி இருக்கிறது. அவரின் தனிப்பட்ட கோபத்தை காட்டிய நேரத்தை பாருங்கள். எவ்வளவு கேவலமாக இருக்கிறார்கள். இதில் இருந்து நான் தெரிந்து கொண்டது என்னவென்றால் தங்களுக்கு மென்பொருள் துறையில் வேலை கிடைக்காத கோபத்தில் தான் இவர்கள் இப்படி செய்கிறார்கள் என்று.)


சென்னையில் ஐந்து நட்சத்திர டீலக்ஸ் அந்தஸ்து கொண்ட ஹோடேல்களின் எண்ணிக்கை ஐந்து.
சென்னையில் ஐந்து நட்சத்திர அந்தஸ்து கொண்ட ஹோடேல்களின் எண்ணிக்கை ஆறு.
சென்னையில் நான்கு நட்சத்திர அந்தஸ்து கொண்ட ஹோடேல்களின் எண்ணிக்கை பதினொன்று.
சென்னையில் மூன்று நட்சத்திர அந்தஸ்து கொண்ட ஹோடேல்களின் எண்ணிக்கை பத்து + ஒன்பது.

ஒரு சின்ன சர்வே. யாரால் லிவிங் டூகெதர் வளர்கிறது என்று.

நள்ளிரவுக்கு மேல் இந்த ஹோடேல்களில் தண்ணி அடித்துவிட்டு ஒன்றாக கூத்து அடிப்பவர்களில் பலர். அரசியல்வாதிகளின் பிள்ளைகளில் பலர் அங்கே தான் இருக்கிறார்கள்.பெருத்த பணம் படைத்தவர்களின் பிள்ளைகள் இருக்கிறார்கள்,மென்பொருள் துறையினரும் இருந்திருக்கிறார்கள். ஆனால் இவர்களை விட அங்கே அதிக நேரம் அல்லது அதிக நாட்கள் அங்கே குடித்தனம் நடத்துபவர்கள் சினிமா துறையினர் மட்டுமே. மற்றவர்களுக்கு அங்கே இருப்பது பொழுதுபோக்கு மட்டுமே. சினிமாதுறையில் இருக்கும் அந்த நண்பர்கள் அதற்கு அடிமையாக மாறி ரொம்ப நாட்கள் ஆகின்றன. கல்யாணம் செய்யாமல் குடித்தனம் நடத்தும் துணை நடிகர்கள் எண்ணிக்கையும் ஏராளம். இப்படி இருக்கும்போது விவரம் தெரியாமல் பேசினால் மட்டும் லிவிங் டூகெதர் ஒழிக்கப்படுமா என்ன?


அதென்னமோ லிவிங் டூகெதர் என்பது மென்பொருள்துறையினர் மட்டுமே கொண்டு வந்த கலாச்சாரம் போல பல பதிவுகள் வந்து கொண்டு இருக்கின்றன. வெளியே இருந்து சொல்பவர்கள் இருக்கட்டும். உள்ளே இருந்து ஒரு குரலாவது எதிர்த்து வர வேண்டுமே என்பதற்காகவே இந்த பதிவு. மற்றபடி நான் இந்த லிவிங் டூகெதர் கலாச்சாரத்தை கண்டிக்கிறேன், எதிர்க்கிறேன்.

ஆம்புலன்சினால் உயிரை காப்பாற்ற முடியுமா?

இந்த திங்கள்(22.11.2010) அதிகாலையில் என் நண்பன் ஒருவனின் தகப்பனார் மாரடைப்பால் ஜெயங்கொண்டத்தில் இறந்து போனார். அவரின் இறுதி சடங்கு நேற்று(23.11.2010) ஜெயங்கொண்டத்தில் நடந்தது. அங்கே சென்ற பின்னர் தான் மருத்துவ வசதிகள் எப்படி இருக்கின்றன என்று அறிந்து கொண்டேன். அதிகாலை ஐந்து மணி அளவில் நண்பரின் தந்தை வேறு ஓரிடம் செல்லுவதற்கு கிளம்பி இருக்கிறார். நண்பரின் தாயார் தயாரித்த காப்பியை அவசரமாக குடிக்கும்போது மாரடைப்பு ஏற்பட்டு உள்ளது. அவர் அங்கு வலியால் துடிப்பதை கண்டு பக்கத்து வீடுகளில் உள்ளவர்களை நண்பரின் தாயார் அழைத்து உள்ளார். அவர்கள் நிலைமையை புரிந்து அவசர ஆம்புலன்சை(108ஐ)அழைத்து உள்ளனர்.அவர்கள் அழைத்து இருபது நிமிடங்கள் கழித்து வந்தவர்கள் ஒன்றும் செய்ய இயலாது. எல்லாம் முடிந்து போயிற்று என்று கூறியுள்ளனர்.அதிகாலை ஐந்து மணிக்கு ஜெயங்கொண்டத்தில் டிராபிக் அதிகமாக இருக்கிறதா? இல்லை ஒருத்தர் அவசரத்தில் அழைத்தால் இவ்வளவு நேரம் கழித்து தான் வருவார்களா? ஒரு கிலோமீட்டருக்குள் இருக்கும் ஒரு இடத்தை அடைய இருபது நிமிடங்கள் என்றால் மற்ற இடங்களுக்கு செல்ல எவ்வளவு நேரம் ஆகும்?

இதற்கு பெயர் தான் மருத்துவ சேவையா? இது ஒரு சேவை. அதற்கு ஒரு பெயர் வேறு?


தயவு செய்து அவசர உதவிகள் தேவைபடுவோர் அருகில் இருக்கும் மருத்துவமனைகளின் தொலைபேசி எண்களை வாங்கி வைத்து கொள்ளுங்கள். அரசின் சேவையை நம்பாதீர்கள். ஏமாந்து யாருடைய உயிரையும் இழக்காதீர்கள்.

உங்களுக்கும் வேணாம் எனக்கும் வேணாம் நாற்பதாயிரம் ஒரு ஓட்டு

தினமலரில் ஸ்பெக்ட்ரம் 2 ஜி ஒதுக்கீட்டால் அரசுக்கு ஒரு லட்சத்து 76 ஆயிரம் கோடி ரூபாய் இழப்பு சம்பந்தமாக வந்த ஒரு கட்டுரையில் இந்த பணத்தை வைத்து என்ன செய்யலாம் என்று கூறியுள்ளனர்.
இதில் எனக்கு பிடித்த ஒரு விஷயத்தை சொல்லியிருந்தனர். அது சத்தியமா தமிழ்நாட்டை திருத்துவதற்க்கோ இல்லை பொருளாதாரத்தில் உயர்த்துவதற்க்கோ இல்லை. இருந்தாலும் அது தமிழ்நாட்டின் சொத்தான ஓட்டுக்கு பணமே. அவர்கள் சொல்லிருந்த விஷயமாவது
"தமிழகத்தில் நான்கு கோடியே 30 லட்சம் வாக்காளர்கள் உள்ளனர். அவர்களுக்கு ஸ்பெக்ட்ரம் தொகையை பிரித்துக் கொடுத்தால், ஒரு ஓட்டுக்கு 42 ஆயிரம் ரூபாய் தர முடியும் என கணக்கிடப்பட்டுள்ளது. ஐந்து ஓட்டுகள் உள்ள குடும்பத்துக்கு இரண்டு லட்சம் ரூபாய் தர முடியும். பொருளாதார வல்லுனர்கள் இந்த தகவல்களை தெரிவித்துள்ளனர். இதுவே மக்களின் எதிர்பார்ப்பாக அமையும் என்பதில் வியப்பில்லை."
இந்த விஷயம் தான் எனக்கு மிகவும் பிடித்திருந்தது. அதாவது எப்படினாலும் நாம் ஓட்டுக்கு பணம் வாங்குவதை நிறுத்த போவதில்லை. அதனால் நான் உங்களை பணம் வாங்காதிங்கனு சொல்ல போறதில்லை. கம்மியா வாங்கிடாதிங்கனு தான் சொல்றேன். உங்களுடைய ஒரு ஓட்டுக்கு நாற்பத்திரண்டு ஆயிரம் ரூபாய் மதிப்பு இருக்கிறது.( அது நம்ம பணம்ங்க. அப்புறம் நாம தானே இன்கம் டாக்ஸ் எல்லாம் செலுத்துறோம். அரசியல்வாதிகளா ஒழுங்கா செலுத்துரானுங்க?) இந்த பணத்தை அடித்தது நம் தமிழ்நாட்டில் இருக்கும் கட்சியை சேர்ந்தவர்களே என்று சொல்லபடுகிறது. அப்படியானால் நமக்கு தானே முதலுரிமை. நம்ம ஊர்காரங்க பணம் அடிச்சதெல்லாம் எதுக்காக? நாம பாட்டுக்கு ஒரு ஓட்டுக்கு ஆயிரம்னு ஆரம்பிச்சு திருமங்கலத்துல இருபத்தி ஐந்தாயிரம் வரைன்னு போயிட்டோம். யாருக்காக இருந்தாலும் நமக்கு ஓட்டுக்கு பணம் குடுக்கனும்னா கண்டிப்பாக இப்படி மாபெரும் ஊழல் செஞ்சு தானே ஆகணும்.இல்லையா இப்பவெல்லாம் இருபத்தி ஐந்தாயிரத்துக்கு கம்மியா எங்க தொகுதியில நாங்க வாங்குரதில்லைங்க ( நானும் திருமங்கலத்திருக்குட்பட்ட ஒரு கிராமத்தை சேர்ந்தவன்).


ஆனால் இது இரண்டு வருடங்களுக்கு முன்னர் நடந்த விஷயம். இப்போ வருடங்களும் அதிகமாகிடுச்சு. ஊழலும் அதிகமாகிடுச்சு. நம்ம விலையும் அதிகமாகிடுச்சு. நாம தான் அதை ஒழுங்கா வசூல் செய்யணும். பொருள் நம்முடையது. அவங்களால எவ்வளவு கொடுக்க முடியும்னு தினமலர் சொல்லிருச்சு.( ப்ரோக்கர் கமிசன் கிடையாதுங்க ) இனி நாம என்ன செய்யனும்னா ஒழுங்கா உட்காந்து யோசிச்சு நல்ல விலையா பேசணும்.

என்னை கேட்டால் ஒரு ஓட்டுக்கு நாற்பதாயிரம் கேட்கலாம்னு சொல்லுவேன். அவங்களால நாற்பத்திரண்டு கொடுக்க முடிந்தாலும் அங்கே பணம் பட்டுவாடா செய்பவருக்கும் ஒரு நல்ல தொகை கிடைக்க வேண்டுமே.( அது தனி பதிவாக போடுறேன். பணம் பட்டுவாடா செய்பவர்கள் தயவு செய்து பின்னர் என்னை சந்திக்கவும்.) அதனால் தான் சொல்கிறேன். உங்களுக்கும் வேணாம் அவர்களுக்கும் வேணாம். நாற்பதாயிரம் ரூபாய் கேளுங்கள் என்கிறேன். ஆனால் பணம் வாங்குவதற்கு கொடுக்கப்படும் பணத்திற்கு நான் ஜவாப்தாரி இல்லை. நல்ல ப்ரோக்கர்களை தேடி கேளுங்கள். நாற்பதாயிரம் ரூபாய் ஓட்டு உங்களுக்கு இல்லையென்றால் எதிர்கட்சிக்கு என்று கூறிவிடுங்கள்.

திரும்பவும் சொல்கிறேன். ஏமாந்து விடாதிர்கள். ஒரு ஓட்டுக்கு நாற்பதாயிரம் ரூபாய் என்றால் நான்கு பேருக்கு ஒரு லட்சத்து அறுபதாயிரம் ரூபாய் கிடைக்கிறது. தமிழ்நாட்டில் உள்ள அனைவரையும் லட்சாதிபதியாவதற்க்கு கிடைத்த ஒரு நல்ல வாய்ப்பு இது. ஏமாறுபவர்கள் பின்னர் யாரிடமும் கேட்க முடியாது. இது ஒரு முறையே கிடைக்கும் வாய்ப்பு.

( அய்யா நான் யாரையும் குறை சொல்ல வரலைங்க. முதலில் வருபவர்களுக்கு முன்னுரிமை என்னும் அடிப்படையில் கொடுத்திருக்கிறார். இதில் என்ன தவறு இருக்கிறது. அவர் வாங்கிய வீடு பத்து வருஷங்களுக்கு முன்னர் ஒரு கோடி என்றால் இப்போதும் அதே விலையிலே அவர் விற்பார். தயவு செய்து வீடு வாங்க ராசாவை அணுகவும்)




ராஜீவ் காந்தி என்னும் மனித மிருகம்-4

ஆபரேஷன் ப்ளூ ஸ்டாருக்கு பிறகு சீக்கியர்களின் கோபம் அப்போது ஆட்சியில் இருந்த இந்திராவின் மீது விழுந்தது. பலர் அரசு வேலைகளில் இருந்து ராஜினாமா செய்தனர். ராணுவத்திலும் ஒரு சீக்கிய கிளர்ச்சி ஏற்படும் அபாயம் இருந்தது. இந்த விஷயங்கள் உளவுத்துறை மூலம் ஆட்சியில் இருந்தவர்களிடம் சொல்லப்பட்டது. ஆனால் என்ன முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுத்தார்கள் என்று இதுவரை தெரியவில்லை.இதில் வேறு அங்கே இந்திரா காந்தியிடம் இருந்த பாதுகாவலர்கள் பலர் சீக்கியர்களாகவே இருந்தனர். இதை எப்படி அனுமதித்தனர் என்றே பலருக்கு தெரியவில்லை. ஒரு வேளை பிற்காலத்தில் உண்மைகள் வரக்கூடும் என்றே வேண்டுமென்றே விட்டுவிட்டார்களா?
31 அக்டோபர் 1984 காலை மணி 9:08:
வீட்டில் இருந்த அலுவலகத்தில் இருந்த இந்திரா காந்தியை இரு பாதுகாவலர்கள் வணக்கம் கூறினர். அதற்கு நமஸ்தே என்று பதிலுக்கு வணக்கம் கூறினார் இந்திரா காந்தி.சஞ்சய் காந்தி கொல்லப்பட்ட அன்று எப்படி ராஜீவ் காந்தி டெல்லியில் இல்லையோ அதே போல் இம்முறையும் அவர் டெல்லியில் இல்லை. அவர் மேற்கு வங்கத்தில் அரசியல் சுற்று பயணத்தில் இருந்தார். எப்பவும் போல் சோனியா காந்தி வீட்டில் இருந்தார். அப்போது அவர் மேற்பார்வையில் தான் அங்கே பிரதமரின் வீட்டில் எல்லாம் நடைபெற்றது.(இதுவும்)

இந்திரா காந்தி அன்று தனக்காக பேட்டியெடுக்க காத்திருந்த பிரிட்டிஷ் நடிகர் பீட்டர் உஸ்தினோவ்வை பார்க்க அந்த பங்களாவில் இருந்த நடைபாதையில் சென்று கொண்டு இருந்தார். அவரின் பின்னர் ஐந்து பாதுகாவலர்கள் நடந்து வந்தனர். வழியில் எதிர் நோக்கி நின்று கொண்டு இருந்த பாதுகாவலர்கள் வணக்கம் செய்து செலுத்தி கொண்டு இருந்தனர். அங்கே அடுத்தடுத்து காத்திருந்த இரண்டு பாதுகாவலர்கள் தங்கள் உடையில் காக்கியையும் உருவத்தில் சீக்கியர்களாகவும் இருந்தனர். அதில் பியாந்த்சிங் (சப்-இன்ஸ்பெக்டர்), சத்வந்த்சிங் (கான்ஸ்டபிள்) இருந்தனர்.
 

இதில் பியாந்த்சிங் பத்து வருடங்களுக்கும் மேலாக அங்கே வேலை பார்த்து வந்தார். இந்திரா காந்தியிடம் நம்பிக்கை பாத்திரமாக இருந்தார். புதிதாக சேர்ந்த சத்வந்த் சிங்கிற்கு இருவத்தொரு வயது மட்டுமே. ஆனால் சிறப்பு பயிற்சிகளின் மூலம் பிரதமரின் பாதுகாவலராக அங்கே நியமிக்கபட்டிருந்தார். இது நடந்து ஐந்து மாதங்களே ஆகியிருந்தன.


இப்போது நடப்பு உலகத்தில் நடந்து கொண்டிருக்கும் இந்திரா காந்தியிடம் வருவோம். அங்கே அவர்கள் இருவரும் வணக்கம் செலுத்துவது போல் நின்றனர். பியாந்த்சிங் தன்னிடம் இருந்த .38 பிஸ்டல் மூலம் இந்திரா காந்தியின் வயிற்றில் சுட்டார். (ஐந்து ரவுண்டுகள்). பின்னாடி இருந்த சத்வந்த் சிங்கிற்கு முப்பது ரவுண்டுகள் சுடும் வாய்ப்பு கிடைத்தது. பின்னால் இருந்த பாதுகாவலர்கள் தங்கள் பிரதமர் தங்கள் கண்முன் சுடப்பட்டது தெரிவதற்கு சில வினாடிகளே ஆகின.



அவர்களும் அந்த இருவரை நோக்கி துப்பாக்கிகளினால் சுட்டு வீழ்த்தினர். அங்கேயே பியாந்த் சிங் இந்திராவோடு விழுந்து  மரணித்தார். சத்வந்த் சிங் படுகாயமுற்றார்.ஆர்.கே தவான் அலறி அடித்து கொண்டு அங்கே வந்தார். அங்கே விழுது கிடந்த இந்திரா காந்தியை தூக்கி கொண்டு சோனியாவையும் கூட்டி கொண்டு சென்றனர். சோனியாவின் மடியில் இந்திரா காந்தி படுத்திருந்தார்.


இங்கேயும் ஒரு சந்தேகம் எப்பவும் அவசர சிகிச்சைகள் என்றால் அருகில் உள்ள மருத்துவமனைக்கு தான் எல்லாருமே செல்வார்கள். ஆனால் இங்கே அவ்வாறு நடக்கவில்லை. அருகிலே இருந்த ராம் மோகன் லோஹியா மருத்துவமனைக்கு ஒருவேளை கொண்டு சென்றால் இந்திரா பிழைத்து இருப்பாரோ என்னமோ தெரியவில்லை ஆனால் அகில இந்திய மருத்துவ கவுன்சிலின் மருத்துவமனைக்கு கூட்டி சென்றனர். அப்படி கூட்டி செல்ல கூறியது சோனியா காந்தி தான் என்று ஆர்.கே தவான் கூறியுள்ளார்.

அங்கே அவருக்கு அறுவை சிகிச்சை மூலம் அவருக்குள்ளே பாய்ந்த தோட்டாக்களில் ஏழினை எடுத்தனர்.எட்டாவதை எடுக்கும்முன் அவர் இறந்தார். பகல் 2.25க்கு அவர் மரணித்தார். ஆனாலும் மாலை ஆறு மணியளவிலே இறந்ததாக அறிவிக்கப்பட்டது.
இந்திரா காந்தி இந்த சீக்கியர்களினால் கொல்லப்பட்டு இருந்தாலும் இதில் சில கேள்விகள் உள்ளன.


  1.  சீக்கியர்களினால் இந்திராவுக்கு ஆபத்து உள்ளது என்று தெரிந்தும் அவர்களை பாதுகாவலர்களாக இருக்க அனுமதித்தது யார்?
  2. வீட்டுக்குள் நடக்கும்போது கூட குண்டு துளைக்காத உடை அணிந்து செல்வது தான் இந்திராவுக்கு வழக்கம். அன்று அவர் அவசரத்தில் அதை அணியவில்லை. ஆனால் அதை அவர் அணியவில்லை என்பதை யார் பியாந்த் சிங்கிடம் சொன்னது?
  3. அவசரமாக தான் அவர் நடந்து சென்றார் என்றால் அங்கே நின்று இருந்த பியாந்த் சிங்கிடம் எவ்வளவு நேரம் நின்று இருந்திருக்க முடியும்? அப்படி நின்று இருக்கும்போது பியாந்த் சிங் தன்னுடைய பிஸ்டல் எடுக்க எவ்வளவு நேரம் எடுத்திருக்கும்? சப் இன்ஸ்பெக்டர் நிலையில் இருக்கும் ஒருத்தர் தன்னுடைய துப்பாக்கியை என்ன தொங்கவா போட்டு இருந்தார் உடனே எடுத்து சுடுவதற்கு? உறையில் தானே இருந்திருக்கும். அப்படி எடுக்கும்போது பின்னால் இருப்பவர்களுக்கு தெரியாதா?
  4. ஒரு பிஸ்டலில் இருக்க கூடிய குண்டுகள் எத்தனை ? ஒரு ஸ்டன் கன்னில் இருக்க கூடியது எத்தனை? அதெப்படி சரியாக பியாந்த் சிங்கை மட்டும் கொன்றார்கள். பியாந்த் சிங்கை கொன்றால் யாருக்கு லாபம்? சுட்டுவிட்டார்கள் என்று தெரிகிறது. இருவரில் ஒருவரை மட்டும் சரியாக சுட்டு கொல்லவேண்டும் என்று அங்கே கட்டளையிட்டது யார்?
  5. அடுத்தது சுட்டவுடன் சோனியா காந்தி அகில இந்திய மருத்துவ கவுன்சிலின் மருத்துவமனைக்கு தான் கொண்டு செல்ல வேண்டும் என்று கூறியது ஏன்?
விடை தெரிந்தவர்கள் சொல்லவும்.




அடுத்த பதிவில் சீக்கியர்களுக்கு எதிரான கலவரம் பற்றியது.

இந்தியாவின் தேசிய அடையாளம்

எதையும் பணத்தினால் வாங்கி விடலாம் என்கின்ற மனப்பான்மை இப்பொழுது அதிகமாகிவிட்டது. ஊழல்களும் ஆயிரம், லட்சம், கோடி எல்லாம் தாண்டி நூறு கோடி என்றாகிவிட்டது. சமிபத்திய ஸ்பெக்ட்ரம் ஊழல் ஒரு லட்சம் கோடி என்றாகி விட்டது. ஒரு வேளை ஊழல் என்பது நமது தேசிய அடையாளமா என்ன? ஊழல் செய்யாதவரை காட்டுங்கள் என்று தான் எல்லாரும் கேட்கிறார்கள். இதன் மூலம் தாங்களும் ஊழலில் திளைத்தவர்கள் என்பதை காட்டுகிறார்கள்.

நமது நாட்டில் எந்தளவு வெளிபடையான செயல்முறை திட்டங்கள் இருக்கின்றன என்பதற்கு ட்ரான்ஸ்பெரன்சி இன்டெர்நேஷனல் என்னும் அமைப்பு எடுத்த கணக்கெடுப்பில் தெரிகிறது. ஒரு வெளிபடையான செயல்முறை திட்டம் இல்லாதவரை ஊழல்களும் சரி ஊழல்வாதிகளும் சரி திருந்த போவதில்லை. நம் தலைமுறையில் இந்த மாற்றம் கொண்டு வந்தால் நமக்கு அடுத்த தலைமுறைகள் நன்றாக இருப்பார்கள். கணினி மயமாக்கல் வந்தால் எல்லாம் சரியாகிவிடும் என்று கூறுகிறார்கள் ஆனால் இன்னும் எத்தனை வருடங்களுக்கு இதையே சொல்லி நம்மை ஏமாற்றுவார்கள் என்று தெரியவில்லை.


ஆட்சிக்கு வந்தவுடன் வெளிநாட்டில் பதுக்கி வைத்திருக்கும் அத்தனை கருப்பு பணத்தையும் இந்தியாவுக்கு கொண்டு வருவதாக சொல்லி தான் காங்கிரஸ் கட்சி ஆட்சிக்கு வந்தது. இப்போ அந்த பணம் கொண்டு வரும் முயற்சி எந்த அளவில் இருக்கிறது? ஒரு வேளை உச்ச நீதிமன்றம் இதில் தலையிட்டால் மட்டுமே மத்திய அரசு பதில் அளிக்குமோ?
 
 உச்ச நீதிமன்றம் தலையிட்டும் பல இடங்களில் ஒன்றும் நடக்காமல் உள்ளது. அதில் ஒரு விஷயம் உயர்நீதி மன்றத்தினுள் வக்கீல்கள் தாக்கப்பட்ட சம்பவத்தில் தொடர்புடையவர்களை இடமாற்றம் செய்ய சொல்லி உத்தரவு வந்தது. அதில் என்ன நடந்தது என்று இன்றும் எனக்கு புரியவில்லை. அதற்கு உச்ச நீதிமன்றத்தின் பதில் நடவடிக்கை என்னவென்று தெரியவில்லை?


இப்படி பகிரங்கமாக தெரியும் பல விசயங்களையே இந்த நீதிமன்றங்கள் கண்டு கொள்வதில்லையே அப்புறம் எப்படி இந்த நீதி, நியாயம் எல்லாம் இங்கே இருக்கும்? ஒரு வேளை நீதிபதிகளும் மனிதர்கள் தானே அவர்களும் இந்தியர்கள் தானே இந்தியாவின் தேசிய அடையாளத்தை அவர்களும் பின்பற்றுகிறார்களோ?




தயவு செய்து விவரம்  தெரிந்தவர்கள் சொல்லவும்.
 
நான் சொல்லியதில் எதுவும் தவறு இருப்பின் மன்னிக்க.

ராஜீவ் காந்தி என்னும் மனித மிருகம்-3

இந்தியாவில் இருக்கும் முஸ்லிம்கள் முகலாய சாம்ராஜ்யம் மூலமாகவும் கிறிஸ்துவர்கள் ஆங்கிலேய ஆட்சி மூலமாகவும் 12ம் நூற்றாண்டு முதல் சுதந்திரம் பெறும் வரையில் இங்கே குடியேறினர். அவர்கள் இங்கே குடியேறிய வகையில் அந்நியர்களே. அப்போது இருந்த அரசாங்கங்களை கலைத்து அழித்து அவர்கள் குடியேறினர். இவ்வாறு குடியேறியவர்களில் கிருஷ்துவர்களை தவிர மற்ற அனைவரும் இந்த மண்ணிற்கு சொந்தம் கொண்டாடினர்.

சீக்கியர்கள் முகலாயர்களுக்கு எதிராக போர்களை நடத்திருந்தாலும் முகலாயர்கள் தங்க கோவில் அல்லது ஹர்மந்தர் சாஹிப்கிற்கு எதிராக எந்த ஒரு விதத்திலும் அழிவுகளை ஏற்படுத்தவில்லை. ஆங்கிலேய ஆட்சியில் கூட அவர்களின் மத உணர்வுகளுக்கு மதிப்பளித்து நடத்தினர்.(3 போர்கள் சீக்கிய அரசுகளால் ஆங்கிலேயர்களுக்கு எதிராக நடத்தப்பட்டது)


ஆனால் இந்து மதத்தை சேர்ந்ததாக கூறப்படுபவர்கள் இருந்த அன்றைய காங்கிரஸ் அரசு தங்க கோவிலின் மேல் போர் தொடுத்தது. யுத்தத்தில் மட்டுமே உபயோகபடுத்தபடும் அனைத்து ஆயுதங்களும் சீக்கியர்களின் புனித கோவிலான அகால் தக்த் அழிப்பதற்கு அப்போதைய அரசால் உபயோகபடுத்தபட்டது. ஐந்து நாட்கள் மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கை இது.

ஜூன் 3,1984: குரு அர்ஜனின் தியாக நாளன்று தான் தாக்குதல் நடத்த வேண்டும் இந்திரா காந்தியால் தேர்ந்தெடுக்கபட்டதுக்கு இரு வேறு காரணங்கள் இருந்தன(சீக்கியர்களின் சார்பாக சொல்லப்பட்ட காரணங்கள்).
  1. அன்று சீக்கியர்கள் கூடும் நேரம், அவர்களின் மத நம்பிக்கைகளையும் சீக்கிய பிரிவினைவாதிகளையும் ஒன்றாக கேவலபடுத்துதல்.
  2.  இரண்டாவது அங்கே கூடும் சீக்கியர்கள் எல்லாரும் பிரிவினைவாதிகள் என்று கொன்று இனபடுகொலை ஒன்றை
     நடத்துதல்.(ஈழ தமிழர்கள் கூட்டமாக கொல்லப்பட்டதை நினைவில் கொள்க)
என்ன தான் தீவிரவாதிகள் என்று கூறப்பட்ட பிரிவினைவாதிகள் புனித பொற்கோவிலின் உள்ளே இருந்தாலும் ஒரு ராணுவ நடவடிக்கை என்பது அன்றைய சூழலில் தேவை அற்றது. அப்பாவி மக்கள் பலர் உள்ளே இருப்பார்களே என்று கொஞ்சம் கூட யோசிக்காதது சந்தேகங்களை கிளப்பியது.(இந்த பிரிவினைவாதிகள் ஜூன் நான்காம் நாள் அருகில் இருந்த இந்துக்களின் மீது தாக்குதல் நடத்த இருந்தனர் என்று ஜூலையில் வெள்ளை அறிக்கை சமர்பிக்கப்பட்டது.)

ஜூன் முதலாம் நாள் 1984:


பிருந்தன்வலே(வெள்ளை உடையில்) மற்றும் அவரது பாதுகாவலர்கள்
 புனித பொற்கோவிலின் சுற்றுபகுதியில் உள்ள கட்டிடங்களில் இருந்த மக்கள் துணை ராணுவப்படையின் மூலம் அப்புறபடுத்தபட்டு அங்கு ராணுவம் மற்றும் துணை இராணுவப்படையினர் அங்கு நிலை நிறுத்தப்பட்டனர். அவர்களின் முதல் நோக்கம் அங்கே இருந்த பிரிவினைவாதிகளின் தலைவன் என்று சொல்லப்படும் பிருந்தல்வாலேவை கொல்லுவது அங்கே குவித்து வைத்திருந்ததாக சொல்லப்படும் ஆயுதங்களை அழிப்பது. இதில் பிருந்தன்வாலே மற்றும் அவரின் பாதுகாவலர்கள் அங்கே இருந்த குரு ராம் தாஸ் லங்கர் கட்டிடத்தில் இருந்தனர். பால்கனியில் இருந்த பிருந்தன்வாலேவை கொல்லமுயற்சித்து பின்னர் அருகே அருகே தாக்குதல் நடத்தினர். நாம் தாக்கினால் பதிலுக்கு தாக்குவார்கள் என்பதே துணை ராணுவப்படையின்

எண்ணமாக இருந்தது. ஆனால் பதில் தாக்குதல் பிருந்தன்வாலேவின் ஆதரவாளர்களால் நடத்தப்படவில்லை. மதியம் 12 .45கு ஆரம்பித்த இந்த தாக்குதல் இரவு ஏழு மணிக்கு முடிவுற்றது. பிருந்தன்வாலேவினால் எந்த ஒரு பதில் தாக்குதல்களும் இதில் நடத்தப்படவில்லை. 30 குண்டுகள் புனித பொற்கோவிலை தாக்கிருந்தன. இவர்கள் பதில் தாக்குதல் நடத்தாதால் அங்கே சீக்கியர்களின் ஆயுதங்களின் தோட்டாக்கள் அப்படியே இருந்தன.

(இந்திய ராணுவத்தின் முன்னர் அவர்களின் ஆயுதங்கள் எல்லாம் துரும்புகள் மட்டுமே என்பது என் கருத்து).

அப்பாவிகள் பலர் இதில் கொல்லப்பட்டு இருந்தனர்.


ஜூன் இரண்டாம் நாள், 1984:


இந்திய ராணுவத்தினர் சர்வதேச எல்லையுடன் (பாக்கிஸ்தானுடன்) இணைக்கும் எல்லைகளை அடைத்தனர்.(கங்கா நகர் முதல் ஜம்மு காஷ்மீர் வரை). அதே நேரத்தில் ஏழு கம்பனி படைகள் பஞ்சாபில் உள்ள அனைத்து கிராமங்களையும் தங்கள் கட்டுபாட்டில் கொண்டுவந்தனர். ஏதேனும் தாக்குதல் நடத்தப்படலாம் என்று முன் எச்சரிக்கைக்காக டாங்குகள், அர்டிலேரிகள் மற்றும் கனரக ராணுவ வாகனங்கள் அங்கே நிறுத்தப்பட்டன. மாநிலத்தை மற்ற மாநிலங்களோடு இணைக்கும் அனைத்து போக்குவரத்துகளும் அடியோடு நிறுத்தப்பட்டன. செய்திகள் தணிக்கைகளுக்கு உட்படுத்தப்பட்டன.


( நமக்கு பக்கத்துல குண்டு விழுந்தாலே கண்டுக்க மாட்டோம். தணிக்கை செய்யப்பட்ட செய்திகள்னா நமக்கு வருவதற்கு அல்லது குற்றம் நடந்தது என்ன என்று சொல்வதற்கு குறைந்தது ஒரு மாதம் தேவை. அந்த ஒரு மாதத்தில் அங்கே பல அப்பாவிகள் கொல்லப்பட்டு இறந்தனர் அப்படின்னு மட்டும் தெரியும். அப்போ நாம என்ன செஞ்சிட்டு இருந்தோம்னு ஞாபகம் இருக்காது.)

 
ராணுவ நடவடிக்கைகளுக்காக அங்கு ராணுவ ஆட்சி அமல்படுத்தப்பட்டு அங்கு ஜெனரல் கெளரி சங்கர் பஞ்சாப் கவர்னரின் பாதுகாப்புக்கான ஆலோசகராக நியமிக்கபட்டார்.அன்றைய இரவிலே துணை ராணுவபடைகள் விலக்கப்பட்டு இராணுவம் அந்த நிலைகளை ஏற்றது.

ஜூன் மூன்றாம் நாள், 1984:

பஞ்சாபில் இருக்கும் அனைத்து தெருக்களும் வெறிச்சோடி இருந்தன. அங்கு ராணுவத்தின் பல்வேறு பிரிவுகள் மட்டுமே உலாவிக்கொண்டு இருந்தன. யாரும் அங்கே நடமாடாதபடி தடுப்பதே அவர்களின் நோக்கமாக இருந்தது.லெப்டினன்ட் ஜெனரல் கிருஷ்ணசுவாமி சுந்தர்ஜி(General Officer Commander-in-Chief, Western Command) என்னும் ராணுவ அதிகாரியின் தலைமையில் நடத்த முடிவு செய்து அவரிடம் ஒப்படைக்கபட்டது. அவருக்கு அடுத்த இடத்தில் ரஞ்சித் சிங் தயாள் என்பவர் இருந்தார். இவர்கள் இருவரும் சேர்ந்து தயாரித்த திட்டத்தின் அடிப்படையில் தாக்குதல் நடத்த ஏற்பாடு செய்யபட்டது.அதே நேரத்தில் டெல்லியில் ஒரு கட்டுப்பட்டு அறை ராஜீவ் காந்தியின் தலைமையில் இருந்தது. அவருக்கு துணையாக அர்ஜுன் சிங் ,கே.பி.சிங் டியோ(பாதுகாப்புக்கான காபினெட் அமைச்சர்) இருந்தனர்.இதில் ரஞ்சித் சிங் தயாள் ஒரு சீக்கியராக இருந்தாலும் அவருக்கு பிந்தரன்வாலேயின் அமைப்பினை பிடிக்காது.பாண்டஸி பிரியரான ராஜீவ் காந்திக்கு ராணுவ விளையாட்டுகளில் ஆர்வம் அதிகம். உயிரின் மதிப்பு தெரியாதவர்.(தமிழர்கள் மட்டும் தான் ஒற்றுமைக்கு பேர்போனவர்கள் இல்லை, சீக்கியர்களும் தான். ஆளுக்கு ஒரு அமைப்பு, கொடி என்று இருந்தார்கள்).
 
ஐந்து கம்பனி படைகள்(the 10th. the 11th the 2nd, the 1st and 15th) புனித பொற்கோவிலின் மேல் தாக்குதல் நடத்த காத்து இருந்தனர்.இதுமட்டும் அல்லாமல் இரண்டு பட்டாலியன் வீரர்கள் தனியாக தேர்ந்தெடுத்திருந்தனர். இவர்கள் அனைவரும் கமாண்டோ பயிற்சி முடித்தவர்கள். முகங்களை ஹெல்மேட்டாலும் உடலை குண்டு துளைக்காத உடையாலும் நிரப்பிய இந்த படை தாக்குதலுக்கு தயாராக வைக்கப்பட்டு இருந்தது.
 
இம்முறை தாக்குதலை ராணுவம் கனரக ஆயுதங்களில் தொடங்கியது. அதற்கு பதிலடியும் எதிர்புறம் கிடைத்தது. மறு நாள் காலை வரை நீடித்த சண்டை வெற்றி தோல்வி இன்றி முடிவுற்றது. பிந்தரன்வாலேயின் ஆதரவாளர்கள்  உள்ளே  இருந்து  தாக்குதல்களை  தொடுத்திருந்தாலும் புனித பொற்கோவிலின் பக்கம் செல்லாமல் தவிர்த்தனர். ஒரு சிலர் தங்கள் உயிரை கொடுத்து அங்கு நடக்கும் தாக்குதல்களை வேறு பக்கம் திருப்பினர்.( தானாக முன்வந்து சாதல்).
(பின்னாளில் இவர்களுக்கும் சேர்த்து சீக்கியர்கள் நினைவு அனுசரிக்கின்றனர். இன்னும் அவர்களிடம் அதே பிரிவினைவாதம் இருக்கிறது. ஒரு சிலர் இந்த விசயங்களை மறந்தும் இறந்தவர்களை பழித்தும் வருகின்றனர்.(கல்சா அமைப்பு). நம்மை போலவே இவர்களுக்குள்ளும் துரோகிகளும் இருக்கின்றனர்.)



ஜூன் நான்காம் நாள், 1984:

வெளியே இருந்த ராணுவம் இம்முறை தன் நிலைகளை மாற்றி அமைத்தது. முன்பு போல் இல்லாமல் யுத்தத்தில் ஈடுபடும் டாங்கிகளை பயன்படுத்த முடிவு செய்தது. மறுபக்கம் சோறு தண்ணி இல்லாமல் கிடந்த சீக்கியர்களின் கையில் கார்பைன், செமி ஆட்டோமாடிக்  மற்றும் இலகுரக  துப்பாக்கிகள் இருந்தன.( தாக்குதல் நடத்தாமல் சும்மா சோறு தண்ணி அனுப்பாமல் இருந்தாலே பாதி பேர் அங்கே செத்திருப்பாங்க. அப்புறம் எதுக்கு தாக்குதல்?)ராணுவம் அங்கே இருந்த தண்ணீர் தொட்டியை நோக்கி தாக்குதல் நடத்தியது. அதன் அருகில் விழுந்த குண்டுகள் எட்டாம் நூற்றாண்டை சேர்ந்த கட்டிடத்தையும் சேர்த்து தாக்கின. ஷெல்களும் அடிக்கப்பட்டன.( கன்னத்தில் முத்தமிட்டால் படத்தில் சொல்லும் அதே ஷெல் தான் இது. ஒவ்வொன்றும் உள்ளங்கை அகலமும் முழங்கை நீளமும் கொண்டவை. உள்ளே இருக்கும் மருந்து வெடிக்கும்போது ஏற்படும் வீரிய தாக்குதலில் உடல்கள் கிழிந்து தொங்கும்.)


இப்படி விழுந்த ஷேல்களினால் இறந்தவர்களில் பெரும்பாலானோர் அங்கே குழுமிருந்த பக்தர்களே. மற்றவர்களுக்கு அது வீர மரணம். அப்பாவிகளுக்கு?

இப்போது பிந்திரன்வலேவின் ஆட்கள் சிலர் அங்கே இருந்து அமிர்தசரசினுள் நுழையமுற்பட்டனர். அவ்வாறு முயற்சித்தவர்கள் அனைவரும் கனரக ஆயுதங்களால் கொல்லப்பட்டனர். மற்றவர்களையும் அங்கே இருந்து பிரிக்க உள்ளே டாங்கிகள் அனுப்பப்பட்டது. உள்ளே இருந்த பிந்திரன்வலேவின் நெருங்கிய சகாக்களில் சிலர் கனரக ஆயுதங்களுக்கு எதிராக போர் செய்வது அபத்தம் என்று கூறி சரணடைய முற்பட்டனர். அதே நேரத்தில் பக்கத்து கிராமங்களில் இருந்து வாள்களோடு மக்கள்( ஐம்பதாயிரம் பேர்) அமிர்தசரசினுள் வர முயற்சி செய்தனர். உள்ளே இருந்தவர்களில் ஒரு சிலர் போர் செய்தனர் வேறு சிலர் சரணடைய முற்பட்டனர். வேறு சிலரோ அங்கேயே ஒளிந்து கொண்டனர். என்ன தான் டாங்கிகள் உள்ளே நுழைந்தாலும் பிந்திரன்வலேவின் ஆட்கள் மேற்கொண்டு உள்ளே ராணுவம் நுழைவதை தடுத்து அனுப்பினர்.

ஜூன் ஐந்தாம் நாள், 1984:
பிந்திரன்வலேவின் ஆட்கள் மீது தாக்குதல் நடத்த அனுப்பப்பட்ட படையில் தமிழர்கள், பீகாரிகள், டோக்ராக்கள் மற்றும் ராஜபுத்திரர்கள் அதிகம் இருந்தனர். இதில் தமிழர்கள் அதிகம். (இங்கு ஒரு விஷயம் இலங்கைக்கு அனுப்பப்பட்ட அமைதிபடையில் சீக்கியர்கள் அதிகம், தமிழர்கள் குறைவு. பொற்கோவிலுக்கு விழுந்த அடிக்கு பதிலடி கொடுக்க கிடைத்த சந்தர்ப்பமாகவே அவர்கள் இலங்கையில் தமிழர்களுக்கு எதிரான போரினை நடத்திருக்க கூடும்.)

உள்ளே இருந்தவர்களின் மீது தாக்குதல் நடத்த பயன்படுத்த நமது ராணுவம் கீழ்க்கண்டவற்றை பயன்படுத்தியது.
  1. விஜயாந்த டாங்கிகள் (அர்ஜுன் டாங்கிகளின் தாத்தா அல்லது பாட்டி). எடை 38 டன்
  2. கனரக ஆயுதங்கள்.
       

 
<><><><><><><><><> 
25 பவுண்டர் பீரங்கிகள் 

ஹோடிசர்ஸ்




இவ்வளவு இருந்தும் உள்ளே இருந்தவர்களின் தீரமான எதிர்ப்புகளை சமாளிக்க முடியாமல் ராணுவம் திணறியது.முடிவில் ரசாயன குண்டுகள் பிரயோகிக்கப்பட்டுள்ளது( ஒருவேளை கண்ணீர் புகைக்குண்டுகளை அவர்கள் அவ்வாறு சொல்லிருக்கலாம். டெல்லி மேலிடம் கூறியதை அடுத்தே ரசாயன குண்டுகள் உபயோகபடுதபட்டுள்ளன. உறுதி செய்ய உள்ளே இருந்தவர்கள் யாரும் இப்போது உயிருடன் இல்லை ). அதில் மயங்கிய சீக்கியர்களை தலையில் சுட்டு கொன்றுள்ளனர். இவ்வாறு நுழைவதற்கு வழி செய்த ராணுவம் தொடர்ந்து முன்னேறுவதற்கு என்னவேண்டுமானாலும் செய்து கொள்ள டெல்லி மேலிடம் அதிகாரம் அளித்தது. (சும்மா விட்டாலே சித்ரவதை தான். முழு சுதந்திரம்னா எப்படி இருக்கும்? உள்ளே புகுந்த ராணுவம் தன் மனம் போல் விளையாடியது). பொற்கோவிலின் உள்ளே டெல்லி மேலிடத்தின் அனுமதி கிடைக்கும் முன்னரே ஏழு விசயந்தா டாங்கிகள் இருந்தன. ஆனால் இப்போது முழு அனுமதிக்கு பின்னர் அவற்றின் உபயோகம் அதிகரித்தது. கன்னாபின்னாவென்று பொற்கோவிலின் மேல் தாக்குதல் செய்தனர். அங்கே ஒளிந்து கொண்டு இருந்தவர்களில் லோங்கோவலே,ரஞ்சித் சிங் தயாள் இருக்கும் அதே பிரிவினை சேர்ந்தவர். அதனால் லோங்கோவலேவை பத்திரமாக மீட்க உள்ளே ராணுவம் நுழைந்து அழைத்து வந்தது. அதுவரை அவரை பின்பற்றியவர்கள் நொந்து போயினர். மற்றரோருவரான தோக்ரா சரணடைந்தார். இவ்விருவரும் அங்கே இருந்து வேறு இடங்களுக்கு அழைத்து செல்லப்பட்டனர்.எங்கெங்கு காணினும் ரத்தமும் சதையும் தான் காணகிடைத்துள்ளது.

ஜூன் ஆறாம் மற்றும் ஏழாம் நாட்கள் , 1984:
சரணடைந்தவர்களை துரோகிகள் என்று சீக்கியர்கள் இன்றும் கூறுகின்றனர். அவர்கள் சரணடைந்தவுடன் எதுவும் முடிவுக்கு வரவில்லை. பிந்திரன்வலேவின் ஆட்கள் கடைசி முறை தொழுது பின்னர் அவர்கள் மத்தியில் பிந்திரன்வலே பேசுகிறார். அவர்களில் யாரெல்லாம் புனித மரணத்தை விரும்புகிறார்களோ அவர்கள் எல்லாம் தன்னுடன் வரலாம் என்று கூறுகிறார். அதன் பின்னரும் வந்த நாற்பது வீரர்கள் மீண்டும் தாக்குதல்களில் ஈடுபடுகிறார்கள். இதில் கோபம் அடைந்த ராணுவம் அந்த இடங்களில் கனரக ஆயுதங்களை உபயோகபடுத்தி கட்டிடங்களை நொறுக்கியது.அதில் அந்த நாற்பது பேரும் கொல்லபடுகின்றனர். உள்ளே நுழைந்த ராணுவம் இதை முதலில் உறுதி படுத்தியது. பின்னர் பிந்திரன்வலேவை தேடியது, அவரை கண்டுபிடிக்க முடியாமல் அங்கே பக்கத்து கட்டிடங்களில் இருந்த மக்களை கொன்றது. பெண்களின் கற்பினை சூறையாடி உள்ளது. முதலில்  ஜூன் ஆறாம் நாள் கொல்லப்பட்டதாக சொல்லப்பட்ட பிந்திரன்வலே  பின்னர் ஜூன் ஏழாம் நாள் கொல்லப்பட்டதாக சொல்லப்பட்டது. இதில் எது  உண்மை  என்பது  யாருக்கு  தெரியுமோ?

 எப்போதும் ராணுவம் கடமையை செய்யும் பின்னர் அவர்களின் வேலையை காட்டி விடுவார்கள். சண்டை முடிந்தஉடனே அங்கே இருந்த பொற்கோவிலில் இருந்த தங்கத்திலான பொருட்களை கொள்ளை அடித்துள்ளனர்.( இன்றும் ராணுவத்தில் இருந்த தமிழர்கள் செய்தது தான் அது என்று சீக்கியர்கள் கூறுகிறார்கள்). அங்கே சிக்கியவர்களை சித்திரவதை செய்து கொன்று இருக்கின்றனர்.  பெண்கள் யாரும் இதில் தப்பவில்லை.

ஒட்டுமொத்தமாக கொல்லப்பட்டவர்களின் எண்ணிக்கை எட்டாயிரம் பேர். கொல்லப்பட்ட இராணுவத்தினரின் எண்ணிக்கை 84. கொல்லப்பட்ட சீக்கிய போராளிகளின் எண்ணிக்கை 492. மற்றவர்கள்?



சீக்கியர்கள் பின்னர்  கோபப்பட்டு  ரஞ்சித் சிங் தயாள்ளை சுட்டு கொன்றனர். ஒரு சிலரை தேடி அழித்தனர். இந்திரா காந்தியை சுட்டு கொன்றனர். ஆனால் இதற்க்கெல்லாம் சூத்திரதாரியான ராஜீவ் காந்தியை விட்டுவிட்டனர்.விட்டுவிட்டதன் பிரதிபலனை இந்திரா காந்தி கொல்லப்பட்ட அன்று அனுபவித்தனர்.


அடுத்த பதிவில் இந்திரா காந்தி படுகொலை

ராஜீவ் காந்தி என்னும் மனித மிருகம்-2

 சஞ்சய் காந்தியின் இயற்பெயர் சஞ்சீவ். ஒரு திருடப்பட்ட காரினை வைத்திருந்த குற்றத்திற்காக சஞ்சய்யை பிடிக்கும்போது அவர் பெயர் சஞ்சீவ். அங்கே இருந்து தப்பிபதற்காக லண்டனில் இருந்த அப்போதைய இந்திய ஹை கமிஷனர் கிருஷ்ணா மேனன் சஞ்சீவிற்கு சஞ்சய் என்ற பெயரில் பாஸ்போர்ட் கொடுத்துள்ளார். சஞ்சீவ் என்கிற சஞ்சய் சீக்கிய பெண்ணான மேனகாவை கற்பமுற செய்துள்ளார். மேனகாவை சஞ்சீவிற்கு மணமுடிக்க முஹம்மத் யுனுசிர்க்கு விருப்பம் இல்லை. மேனகா காந்தி அப்போது பாம்பே டையீங் விளம்பர படத்தில் துண்டு மட்டும் கட்டி நடித்த புகழில் இருந்தவர். முஹம்மத் யூனுஸ் ஒரு தீவிர முஸ்லிம். அப்படியிருக்க எப்படி மணம் செய்துவைக்க மனம் வரும்? ஆனால் மேனகாவின் தந்தை கலோனல் ஆனந்த் விடவில்லை. அதனால் ஒரு வழியாக இந்த விஷயம் மீடியாவுக்கு வராமல் கல்யாணத்தில் முடிந்தது.இப்போது மேனகா காந்தி வீட்டை விட்டு துரத்திய சம்பவத்திற்கு வருவோம்.



கீழிருந்து மேலாக ராகுல், இந்திரா, சஞ்சய்,மேனகா, ராஜீவ், பிரியங்கா. நடுவில் சோனியா





சஞ்சய் காந்தி இறந்த உடன் இந்திரா காந்தி கேட்ட முதல் கேள்வி "சஞ்சய் காந்தி வைத்து இருந்த சாவி கொத்து பற்றியது".இந்திரா காந்திக்கு சஞ்சயின் இழப்பு ஈடு செய்ய முடியாத ஒன்றாகவே இருந்தது. இதற்காகவே காத்து இருந்தார் போல் ராஜீவ் காந்தி சஞ்சய் காந்தியின் நம்பர் 2 இடத்தை பிடித்தார்.



வருண் காந்தி அப்போது 1௦௦ நாட்கள் ஆன ஒரு கைக்குழந்தை மட்டுமே. மாமியார் இந்திரா காந்தியோ மகன் இறந்த சூழ்நிலையில் பேசும் நிலையில் இல்லை. மகன் வருண் காந்தியை கவனிக்க கூட ஆட்கள் இல்லாத நிலையில் அந்த வீட்டில் இந்திரா காந்தியின் குடும்பத்தோடு இருந்துள்ளார் ஆனால் இந்திரா காந்தியும் மேனகா காந்தியும் அப்போது அங்கு இருந்த மூன்றாவது பெண்ணை பற்றி பயந்தனர் என்று மேனகா காந்தி இப்போது கூறியுள்ளார். முதலில் ராஜீவ் காந்தியின் வலியுறுத்தலின் பேரில் மேனகா புறக்கணிக்கபட்டார். வழக்கமாக கணவர் இறந்தவுடன் மனைவி அந்த பதவியை பெறுவது தான் தற்போது நடைமுறை. அதனை அங்கே யாரேனும் வலியுறுத்தினால் என்ன செய்வது என்பதால் மேனகா காந்தி அங்கே இருப்பது சோனியா காந்திக்கு பெரும் உறுத்தலாக இருந்தது.பின்னர் இந்திரா காந்தியும் சோனியா காந்தியும் ஒன்றாக சேர்ந்து மேனகாவிற்கு தொல்லை கொடுத்துள்ளனர்.மகனை கல்யாணம் செய்ததால் ஒருத்தர் நமக்கு சொந்தகாராகி விட்டார் என்பதை இந்திராவினால் ஏற்று கொள்ள முடியவில்லை. மேனகா மனதளவிலும் உடல் அளவிலும் இந்திராவின் வீட்டில் துன்புருத்தபட்டதாக பின்னர் பேட்டி அளித்துள்ளார்.

மேனகாவை வெளியே அனுப்ப இந்திராவின் வீட்டில் இருந்த எல்லாரும் தயாராக இருந்தனர். அந்த சந்தர்ப்பமும் வந்தது. மேனகா காந்திக்கு சஞ்சய்யின் கனவுகள் மெய்பட வேண்டும் என்பதில் தீவிரமாக இருந்தார். ஆனால் எல்லாரும் மேனகாவை வெளியே அனுப்பும் கனவினை மெய்பட வைத்தனர். இந்திரா லண்டன் சென்று இருந்த நேரம் மேனகா தொடங்கிய சஞ்சய் விசார் மனச்(Sanjay Vichar Manch)அதற்கு வழிவகுத்தது.


இதில் பேசுவதற்காக மேனகா எழுதியிருந்த உரை இந்திரா காந்தியின் பார்வைக்கு லண்டனுக்கு அனுப்பி வைக்கப்பட்டது. அனுப்பியவர் ராஜீவ். அங்கே இந்திராவின் உடன் இருப்பவர் சோனியா. வேறு என்ன வேண்டும்? விஷயம் பற்றிக்கொள்ள. இதில் ஒரு கொடுமை என்னவென்றால் இந்த உரை இந்திராவின் பார்வைக்கு மேனகா கொண்டு சென்று ஒப்புதல் பெறப்பட்டு தான் அவர் பேசினார் என்பதே.
 
மார்ச் மாதம் 28, 1984: லண்டனில் இருந்து காலையில் திரும்பிய இந்திராவை பார்க்க சென்ற மேனகாவை இந்திரா திருப்பி அனுப்பினார்.இந்திராவை மேனகா சந்திக்க சென்ற பொழுது அங்கே இந்திராவின் மொத்த குடும்பமும் விவாதத்தில் இருந்துள்ளனர். திரும்பவும் மதியம் சென்று சந்திப்பதாக இருந்தார் ஆனால் அதற்கு முன்னரே இந்திரா கூப்பிட்டு அனுப்பிருந்தார்.வரவேற்பறையில் இருந்த மேனகாவை வீட்டை விட்டு வெளியேற வேலையாட்கள் முன்னியிலையில் உத்தரவிட்டார்.
 
ஏன் நான் என்ன தவறு செய்தேன்?என்று கேட்டதற்கு இந்திரா லண்டனில் இருக்கும்போது இங்கே மேனகா பேசியது தெரியும் என்று சொன்னார். பொருட்களை எடுத்து செல்ல அவகாசம் கேட்டதற்கு மறுக்கப்பட்டு வெளியே மேனகாவின் தாயார் வீட்டிற்க்கு அனுப்பப்பட இருந்தார். அதற்குள் மேனகாவின் அக்கா அம்பிகாவுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு 1௦ நிமிடங்களில் அங்கு இருந்தார்.அம்பிகா தன் தங்கைக்கு பரிந்து பேசுவதற்கு முற்பட்டார். ஆனால் ஒரே வார்த்தையில் இது உனது தங்கையின் கணவர் வீடு அல்ல. இது இன்றைய பிரதமரின் வீடு என்று கூறி இந்திரா ஆவேசபட்டார். இருந்தாலும் அம்பிகாவிடம் இது எடுபடவில்லை. இருந்தாலும் மெதுவாக கிளம்பலாம் என்று முடிவு எடுத்து அன்றைய மதிய உணவினை மேனகாவின் அறையிலேயே மேனகாவும் அம்பிகாவும் முடித்தனர். பின்னர் அமிதாப் பச்சன் நடித்த படத்தையும் பார்த்து கொண்டு இருந்தனர். இந்த அறையின் மறுபக்கம் இருந்த அறையில் இந்திராவின் அறை இருந்தது. அவர்கள் இந்திராவிடம் விட்டுகொடுத்து போவதற்கு தயாராக இல்லை. இரவு பதினோரு மணியளவில் கண்ணீரும் கம்பலையுமாக இந்திராவின் வீட்டைவிட்டு மேனகாவும் அம்பிகாவும் வருனுடன் வெளியேறினர். அரசியலில் வாரிசு போட்டி வரும் என்று தெரிந்தால் அப்போதே கொன்று விடும் வழக்கம் வடஇந்திய அரசுகளில் இருந்தது.அதற்கு வீட்டைவிட்டு அனுப்புதல் எவ்வளவோ மேல் என்று ராஜீவ் நினைத்து இருக்கலாம்.


இதுவே முதலில் இறந்தது ராஜீவ் காந்தியாக இருந்தால் சோனியா காந்தி நிச்சயம் அனுதாபம் பெற்று அப்போதே பெரிய அளவில் வந்திருப்பார். என்ன இருந்தாலும் இந்தியர்கள் அடுத்த நாட்டினர் மேல் கொஞ்சமாவது இரக்கம் காட்டுவர்.

அடுத்த பதிவில் ஆபரேஷன் ப்ளூ ஸ்டார்.

Operation Casino(ஆபரேஷன் கேசினோ)

லண்டனில் தற்போது வசித்து வருபரும் முன்னாள் நிறுவனருமான K.S.நாயரின் புத்தகம் சில விசயங்களை சொல்லியுள்ளது. அதில் கவனிக்கதக்க ஒன்று Operation Casino(ஆபரேஷன் கேசினோ). 1970ம் ஆண்டின்  மத்தியில்  இந்திரா காந்தியின் அரசாங்கமானது பல்வேறு நிதிநெருக்கடிகளில் சிக்கித்தவித்தது. அதில் இருந்து தப்புவிக்க என்ன வழி என்று யோசித்து கொண்டுவரும் வேளையில் இரான் அரசாங்கம் இந்தியாவுக்கு கடன் தருவது பற்றி பரிசிலிப்பதாக சொன்னது. அவ்வாறு தரும்தொகை $250 million dollars என்று இருந்தது. அதனை பெறுவதற்கு $6 million dollars லஞ்சம் கொடுக்க எடுத்த முயற்சி தான் இந்த ஆபரேஷன் கேசினோ.

சுவிஸ் வங்கிகளில் பணம் போடுவது இக்காலத்தில் ஒன்றும் புதிது அல்ல. ஆனால் லஞ்சப்பணம் எல்லாம் அங்கே தான் செல்லவேண்டும் என்று வழி காட்டிய பெருமை சஞ்சய் காந்திக்கே சேரும். சஞ்சய் காந்தி தான் இந்திரா காந்தியின் அப்போதைய அரசாங்கத்தில் நம்பர் 2. அவர் அனுமதி இன்றி ஒன்றும் நடவாது. பல்வேறு விசயங்களில் அவரே நம்பர் 1. இந்திரா காந்தி எல்லாம் கணக்கிலே வர மாட்டார்.

இந்த ஆபரேஷன் கேசினோ முற்றிலும் சஞ்சய் காந்தியின் நேரடி வழிகாட்டுதலில் நடைபெற்று இருக்கிறது. சஞ்சய் காந்தியின் சுவிஸ் வங்கி கணக்கில் இந்த பணம் செலுத்தப்பட்டதாக சொல்லபடுகிறது. ஆனால் இதில் வேறு விடயங்கள் நடந்ததாக நாயர் எழுதி உள்ளார். 1974ஆம் ஆண்டு அணு ஆயுத சோதனைக்களுக்கு பிறகு இந்தியாவின் பொருளாதாரம் ஒரு சரிவிற்கு சென்று கொண்டு இருந்ததாக சொல்கின்றனர். இதில் இருந்து மீள்வதற்கு அப்போதைய இரான் அதிபர் ஷா கடன் தருவதாக கூறியுள்ளார். அப்படி இருக்கும்போது அந்த கடனை பெறுவதற்கு கொடுத்ததாக சொல்லப்படும் லஞ்சப்பணம் எங்கு சென்றது? ஏன் கொடுக்கப்பட்டது என்று இன்றும் தெரியவில்லை. முதலில் கொரியரில் கொண்டு செல்ல ஏற்பாடு செய்து இருக்கின்றனர். ஆனால் நாயர் இதற்கு ஒத்து கொள்ளாததால் அப்போதைய மத்திய அரசின் நிதி செயலாளர் கோபி கவுள் நூறு டாலர் நோட்டுகளாக மாற்றி சாம்சொநைட் பெட்டிகளில் கொண்டு செல்ல கூறியிருக்கிறார். அதற்கும் நாயர் ஒத்துவராத காரணத்தினால் ரிசர்வ் வங்கியின் ஜெனிவா கிளையின் மூலம் நாயருக்கு ஆறு மில்லியன் டாலர் அளவுக்கு ஒரு காசோலை தர ஏற்பாடு செய்திருக்கிறது. இதை சஞ்சய் காந்தியின் சுவிஸ் வங்கி கணக்கில் செலுத்துவதோடு நாயரின் பணி முடிந்து உள்ளது.




இரானின் நிதியமைச்சரை சரிகட்ட கொடுத்ததாக சொல்லப்பட்ட இந்த பணம், பலரின் கைகளில் போனதாக கூறப்பட்டது. ஆனால் இரானின் நிதியமைச்சர் இந்த கடன் வழங்குவதற்கு விருப்பம் இல்லை என்று கூறி இருக்கிறார். ஷாவின் தங்கையான அஷ்ரபின் நெருங்கிய நண்பரான ரசிடியான் மூலம் இந்த கடன் கிடைத்துள்ளது. ரசிடியான் இந்தியாவில் பிறந்து இரானில் தொழில் செய்து கொண்டிருந்தவர். இவர் அதே நேரம் சஞ்சய் காந்திக்கும் நெருக்கமானவராக இருந்துள்ளார். இவருக்கு தான் சஞ்சய் காந்தி இந்த ஆறு மில்லியன் டாலர்ஸ் பணத்தை கொடுத்தார் என்று அப்போது பாராட்டப்பட்டு உள்ளது. அதாவது நிதி நிலைமையை சமாளிக்க பெறப்படும் கடனிற்கு லஞ்சம் கொடுப்பதில் தவறு இல்லை என்று வாதிட்டனர். ஆனால் ஆறு மில்லியன் டாலர்ஸ் லஞ்சம் பெற்றதாக சொல்லப்பட்ட அந்த இந்திய தொழில் அதிபர் சஞ்சய் காந்திக்காக தான் பெற்றார் என்பது தான் உண்மை. கொடுப்பது போல் கொடுத்து பின்னர் அதனை வாங்கி உள்ளார் சஞ்சய் காந்தி.

நாட்டிலே முதல் முறையாக கடன் வாங்கி தனது அரசாங்கத்திடம் கொடுக்க லஞ்சம் பெற்ற முதல் மத்திய அமைச்சர் வேறு யாரும் இருக்க முடியாது.

ராஜீவ் காந்தி என்னும் மனித மிருகம்-1

ராஜீவ் காந்தி என்னும் சைக்கோவின் வாழ்க்கை இந்திரா காந்தியின் வாழ்க்கைக்கு பின்னரே முக்கியத்துவம் பெறுகிறது. அதுவரை இந்திரா காந்தியை ஆட்டி வைத்தது சஞ்சய் காந்தி. இவர் இந்திரா காந்திக்கும் முஹம்மத் யூனுஸ் என்னும் முஸ்லிமுக்கும் பிறந்தவர். அப்படியென்றால் ராஜீவ் காந்தி? அவர் இந்திரா காந்திக்கும் பெரோஸ் கான் அல்லது பெரோஸ் காந்திக்கும் பிறந்தவர். இதில் ஒன்றும் விசேஷம் என்று இல்லை. ஆனால் சஞ்சய் காந்தி எதற்க்காக இந்திரா காந்தியை மிரட்டினார்,ஏன் கொல்லபட்டார்? என்பதெல்லாம் ராஜீவ் காந்திக்கு தெரியாததல்ல. இவர்களின் கூட்டணியில் உருவானது தான் மாருதி உத்யோக் என்னும் நிறுவனம். இந்த நிறுவனத்தின் வருகைக்கு முன்னர் ஹிந்துஸ்தான் மோட்டர்ஸ் தான் பெரிய நிறுவனம். அதில் சஞ்சய் காந்திக்கும் பெரும்பான்மை பங்குகள் இருந்தது. இந்த பங்குகள் எல்லாம் எப்படி வாங்கினார்கள் என்பதெல்லாம் சிதம்பர ரகசியம்.

மாருதி உத்யோக் நிறுவனம் சஞ்சய் காந்தியின் கனவாக இருந்தது.ஆனால் அந்த நிறுவனம் உருவாவதில் இந்திரா காந்தியின் குடும்ப உறுப்பினர்களுக்கு விருப்பம் இல்லை.என்ன தான் கொடுமைகள் செய்தாலும் எந்த அம்மாவுக்கும் பிள்ளையை கொல்ல மனம் வராது. அப்ப யார் சஞ்சய் காந்தியை கொல்ல சொன்னது? இதற்கு விடை குடும்ப உறுப்பினர்கள். இங்கே இருக்கும் ஆட்சியில் எப்படி பணத்திற்காக எல்லாவற்றையும் செய்தார்களோ அதே மனநிலை இந்திரா காந்தியின் குடும்ப உறுப்பினர்களிடம் இருந்தது. ஆட்சியில் இருப்பது நாம் தான் அப்புறம் எதுக்கு ஒரு நிறுவனம் ஆரம்பித்து அதனை அரசுடமை ஆக்க வேண்டும்? இது தான் அவர்களின் கேள்வி?

இது ராஜீவ் காந்தியை பற்றிய பதிவுகளின் தொடக்கம்.
மேலும் விவரங்களுடன் விரைவில் அடுத்த பதிவு.
(மேனகா காந்தியின் வெளியேற்றம்)

Popular Posts