ராஜீவ் காந்தி என்னும் மனித மிருகம்-2

 சஞ்சய் காந்தியின் இயற்பெயர் சஞ்சீவ். ஒரு திருடப்பட்ட காரினை வைத்திருந்த குற்றத்திற்காக சஞ்சய்யை பிடிக்கும்போது அவர் பெயர் சஞ்சீவ். அங்கே இருந்து தப்பிபதற்காக லண்டனில் இருந்த அப்போதைய இந்திய ஹை கமிஷனர் கிருஷ்ணா மேனன் சஞ்சீவிற்கு சஞ்சய் என்ற பெயரில் பாஸ்போர்ட் கொடுத்துள்ளார். சஞ்சீவ் என்கிற சஞ்சய் சீக்கிய பெண்ணான மேனகாவை கற்பமுற செய்துள்ளார். மேனகாவை சஞ்சீவிற்கு மணமுடிக்க முஹம்மத் யுனுசிர்க்கு விருப்பம் இல்லை. மேனகா காந்தி அப்போது பாம்பே டையீங் விளம்பர படத்தில் துண்டு மட்டும் கட்டி நடித்த புகழில் இருந்தவர். முஹம்மத் யூனுஸ் ஒரு தீவிர முஸ்லிம். அப்படியிருக்க எப்படி மணம் செய்துவைக்க மனம் வரும்? ஆனால் மேனகாவின் தந்தை கலோனல் ஆனந்த் விடவில்லை. அதனால் ஒரு வழியாக இந்த விஷயம் மீடியாவுக்கு வராமல் கல்யாணத்தில் முடிந்தது.இப்போது மேனகா காந்தி வீட்டை விட்டு துரத்திய சம்பவத்திற்கு வருவோம்.



கீழிருந்து மேலாக ராகுல், இந்திரா, சஞ்சய்,மேனகா, ராஜீவ், பிரியங்கா. நடுவில் சோனியா





சஞ்சய் காந்தி இறந்த உடன் இந்திரா காந்தி கேட்ட முதல் கேள்வி "சஞ்சய் காந்தி வைத்து இருந்த சாவி கொத்து பற்றியது".இந்திரா காந்திக்கு சஞ்சயின் இழப்பு ஈடு செய்ய முடியாத ஒன்றாகவே இருந்தது. இதற்காகவே காத்து இருந்தார் போல் ராஜீவ் காந்தி சஞ்சய் காந்தியின் நம்பர் 2 இடத்தை பிடித்தார்.



வருண் காந்தி அப்போது 1௦௦ நாட்கள் ஆன ஒரு கைக்குழந்தை மட்டுமே. மாமியார் இந்திரா காந்தியோ மகன் இறந்த சூழ்நிலையில் பேசும் நிலையில் இல்லை. மகன் வருண் காந்தியை கவனிக்க கூட ஆட்கள் இல்லாத நிலையில் அந்த வீட்டில் இந்திரா காந்தியின் குடும்பத்தோடு இருந்துள்ளார் ஆனால் இந்திரா காந்தியும் மேனகா காந்தியும் அப்போது அங்கு இருந்த மூன்றாவது பெண்ணை பற்றி பயந்தனர் என்று மேனகா காந்தி இப்போது கூறியுள்ளார். முதலில் ராஜீவ் காந்தியின் வலியுறுத்தலின் பேரில் மேனகா புறக்கணிக்கபட்டார். வழக்கமாக கணவர் இறந்தவுடன் மனைவி அந்த பதவியை பெறுவது தான் தற்போது நடைமுறை. அதனை அங்கே யாரேனும் வலியுறுத்தினால் என்ன செய்வது என்பதால் மேனகா காந்தி அங்கே இருப்பது சோனியா காந்திக்கு பெரும் உறுத்தலாக இருந்தது.பின்னர் இந்திரா காந்தியும் சோனியா காந்தியும் ஒன்றாக சேர்ந்து மேனகாவிற்கு தொல்லை கொடுத்துள்ளனர்.மகனை கல்யாணம் செய்ததால் ஒருத்தர் நமக்கு சொந்தகாராகி விட்டார் என்பதை இந்திராவினால் ஏற்று கொள்ள முடியவில்லை. மேனகா மனதளவிலும் உடல் அளவிலும் இந்திராவின் வீட்டில் துன்புருத்தபட்டதாக பின்னர் பேட்டி அளித்துள்ளார்.

மேனகாவை வெளியே அனுப்ப இந்திராவின் வீட்டில் இருந்த எல்லாரும் தயாராக இருந்தனர். அந்த சந்தர்ப்பமும் வந்தது. மேனகா காந்திக்கு சஞ்சய்யின் கனவுகள் மெய்பட வேண்டும் என்பதில் தீவிரமாக இருந்தார். ஆனால் எல்லாரும் மேனகாவை வெளியே அனுப்பும் கனவினை மெய்பட வைத்தனர். இந்திரா லண்டன் சென்று இருந்த நேரம் மேனகா தொடங்கிய சஞ்சய் விசார் மனச்(Sanjay Vichar Manch)அதற்கு வழிவகுத்தது.


இதில் பேசுவதற்காக மேனகா எழுதியிருந்த உரை இந்திரா காந்தியின் பார்வைக்கு லண்டனுக்கு அனுப்பி வைக்கப்பட்டது. அனுப்பியவர் ராஜீவ். அங்கே இந்திராவின் உடன் இருப்பவர் சோனியா. வேறு என்ன வேண்டும்? விஷயம் பற்றிக்கொள்ள. இதில் ஒரு கொடுமை என்னவென்றால் இந்த உரை இந்திராவின் பார்வைக்கு மேனகா கொண்டு சென்று ஒப்புதல் பெறப்பட்டு தான் அவர் பேசினார் என்பதே.
 
மார்ச் மாதம் 28, 1984: லண்டனில் இருந்து காலையில் திரும்பிய இந்திராவை பார்க்க சென்ற மேனகாவை இந்திரா திருப்பி அனுப்பினார்.இந்திராவை மேனகா சந்திக்க சென்ற பொழுது அங்கே இந்திராவின் மொத்த குடும்பமும் விவாதத்தில் இருந்துள்ளனர். திரும்பவும் மதியம் சென்று சந்திப்பதாக இருந்தார் ஆனால் அதற்கு முன்னரே இந்திரா கூப்பிட்டு அனுப்பிருந்தார்.வரவேற்பறையில் இருந்த மேனகாவை வீட்டை விட்டு வெளியேற வேலையாட்கள் முன்னியிலையில் உத்தரவிட்டார்.
 
ஏன் நான் என்ன தவறு செய்தேன்?என்று கேட்டதற்கு இந்திரா லண்டனில் இருக்கும்போது இங்கே மேனகா பேசியது தெரியும் என்று சொன்னார். பொருட்களை எடுத்து செல்ல அவகாசம் கேட்டதற்கு மறுக்கப்பட்டு வெளியே மேனகாவின் தாயார் வீட்டிற்க்கு அனுப்பப்பட இருந்தார். அதற்குள் மேனகாவின் அக்கா அம்பிகாவுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு 1௦ நிமிடங்களில் அங்கு இருந்தார்.அம்பிகா தன் தங்கைக்கு பரிந்து பேசுவதற்கு முற்பட்டார். ஆனால் ஒரே வார்த்தையில் இது உனது தங்கையின் கணவர் வீடு அல்ல. இது இன்றைய பிரதமரின் வீடு என்று கூறி இந்திரா ஆவேசபட்டார். இருந்தாலும் அம்பிகாவிடம் இது எடுபடவில்லை. இருந்தாலும் மெதுவாக கிளம்பலாம் என்று முடிவு எடுத்து அன்றைய மதிய உணவினை மேனகாவின் அறையிலேயே மேனகாவும் அம்பிகாவும் முடித்தனர். பின்னர் அமிதாப் பச்சன் நடித்த படத்தையும் பார்த்து கொண்டு இருந்தனர். இந்த அறையின் மறுபக்கம் இருந்த அறையில் இந்திராவின் அறை இருந்தது. அவர்கள் இந்திராவிடம் விட்டுகொடுத்து போவதற்கு தயாராக இல்லை. இரவு பதினோரு மணியளவில் கண்ணீரும் கம்பலையுமாக இந்திராவின் வீட்டைவிட்டு மேனகாவும் அம்பிகாவும் வருனுடன் வெளியேறினர். அரசியலில் வாரிசு போட்டி வரும் என்று தெரிந்தால் அப்போதே கொன்று விடும் வழக்கம் வடஇந்திய அரசுகளில் இருந்தது.அதற்கு வீட்டைவிட்டு அனுப்புதல் எவ்வளவோ மேல் என்று ராஜீவ் நினைத்து இருக்கலாம்.


இதுவே முதலில் இறந்தது ராஜீவ் காந்தியாக இருந்தால் சோனியா காந்தி நிச்சயம் அனுதாபம் பெற்று அப்போதே பெரிய அளவில் வந்திருப்பார். என்ன இருந்தாலும் இந்தியர்கள் அடுத்த நாட்டினர் மேல் கொஞ்சமாவது இரக்கம் காட்டுவர்.

அடுத்த பதிவில் ஆபரேஷன் ப்ளூ ஸ்டார்.

1 Response to "ராஜீவ் காந்தி என்னும் மனித மிருகம்-2"

  1. vinakuri says:

    சீரியல் கிள்ளரும்பான்களே அது நீதானாயா....

Popular Posts