ஈழத்தமிழர்களின் பெயரில் நடக்கும் மோசடிகள்

ஈழத்தமிழர்களை நமது மத்திய மாநில அரசுகளும்  அரசியல் கட்சிகளும் ஏமாற்றி விட்டன,ஏமாற்றியும் வருகின்றன. ஆனால் இந்த பதிவு அவர்களை ஏமாற்றி வரும் சக மனிதர்கள் மற்றும் நம் சக தமிழக தமிழர்களை பற்றியது. 
 
அவர்களுக்கு நமது தமிழக அரசு வழங்கும் உதவிதொகையானது மிக சொற்பமே. அந்த உதவித்தொகையை வைத்து மட்டுமே வைத்து ஒருவர் தனது தேவைகளை ஒரு வாரத்திற்கு கூட பூர்த்தி செய்ய இயலாது. அப்படி இருக்கும் நிலையில் அவர்கள் வெளியில் சென்று வேலை பார்த்து தான் தங்களின் குடும்பத்தை காப்பாற்றும் நிலையில் உள்ளனர். அப்படி வேலைக்கு செல்லும்போதும் அவர்கள் காலை ஆறு மணியில் இருந்து மாலை ஆறு வரைக்கும் தான் முகாமிற்கு செல்லும் நிலை உள்ளது. அருகே இருக்கும் இடங்களில் அவர்கள் வேலை செய்தாலும் அவர்களின் உழைப்பிற்கு ஏற்ற ஊதியங்கள் கொடுக்கப்படுவதில்லை. இது தான் பெரும்பாலும் எல்லா இடங்களிலும் நடக்கிறது. யாரும் இதனை தட்டிகேட்கவும் முடியாது. காரணம் அவர்கள் அகதிகள் என்பது தான். அவர்களின் உழைப்பை யார் வேண்டுமானாலும் அங்கே பொறுப்பில் இருப்பவர்களை சரிகட்டியோ இல்லை சரிகட்டாமலோ சுரண்ட முடியும் என்பதே உண்மை.

அடுத்தது தமிழகத்தில் இருக்கும் ஈழத்தமிழர்களின் குழந்தைகளின் படிப்பு செலவிற்கு என்று சகத்தமிழர்கள் கொடுக்கும் பணம் இடைத்தரகர்களிடம் போனது போகவே அவர்களிடம் போகிறது. உதாரணத்திற்கு அவர்களின் ஓராண்டிற்கு தேவையான தொகை நாற்பதாயிரம் என்றால் இடைத்தரகர்கள் உதவி செய்பவர்களிடம் கூறும் தொகை அறுபதாயிரம். ஆக இவர்களுக்கு இருபதாயிரம் ரூபாய் கிடைக்கிறது. உதவி செய்பவர்கள் இங்கே ஒன்றை கவனிக்க வேண்டும். ஈழத்தமிழர்களின் குழந்தைகளின் படிப்பு என்று சொல்லும்போது எல்லாருமே இரக்கப்பட்டு உதவி செய்கிறோம். அவர்களுக்கு அருகில் இருக்கும் பள்ளி கல்லூரிகளிலும் ஈழத்தமிழர்களின் குழந்தைகளின் படிப்பு செலவிற்கு நாமே பேசும்போது கட்டணங்களில் சலுகைகளும் தருகிறார்கள். ஆனால் இது எல்லாம் ஈழத்தமிழர்களுக்கும் தெரிவதில்லை,உதவி செய்பவர்களுக்கும் தெரிவதில்லை, இந்த இடைத்தரகர்களுக்கு மட்டுமே தெரிகிறது. இந்த விசயத்தில் நாம் எளிதாக ஏமாறுவதை தடுக்கலாம். எனது நண்பர்கள் சிலர், படிப்பு செலவிற்கு என்று ஈழத்தமிழர்களின் குழந்தைகள் சிலரை தேர்ந்தெடுத்து அவர்களுக்கு உதவி என்று செய்யபோகும் போது இந்த இடைத்தரகர்கள் வந்தார்கள். அவர்களே நேரில் சென்று கட்டணங்களை கட்டிவிட்டு குழந்தைகளை கல்லூரிகளில் விட்டுவிட்டு வருவோம் என்றார்கள். நண்பர்கள் நேரில் சென்று அதே கல்லூரியில் கேட்டபின்னர் தான் தெரிந்தது இடைத்தரகர்கள் நண்பர்களிடம் கூறிய தொகையானது இடைதரகர்களின் கமிஷனையும் சேர்த்து தான் என்று. நண்பர்கள் நேரில் சென்று கட்டணத்தையும் கல்லூரி விடுதியில் சேருவதற்கு கட்டணத்தையும் கட்டிய பின்னரும் இடைத்தரகர்கள் நண்பர்களிடம் கேட்ட தொகை அளவு செலவாகவில்லை.




அரசியல்வாதிகளும் அலுவலர்களும் தான் ஈழத்தமிழர்களை ஏமாற்றுகிறார்கள் என்றால் சகத்தமிழர்களுமா இப்படி ஏமாற்றுவது? கட்டண ரசிதுகளை கேட்டால் மட்டுமே இவர்களை(இடைத்தரகர்கள்) பற்றி தெரிய வருகிறது.

ஈழத்தில் சண்டை நடக்கும்போது அங்கே இருந்து தப்பிவருபவர்கள் இங்கே இருக்கும் நிலை சரியில்லை என்பதால் வெளிநாடுகளுக்கு செல்ல முயற்சித்தனர். அவர்களுக்கு இங்கே உதவி செய்வதாக சொல்லி வசூல் செய்கின்றனர். அந்த பணத்தில் அவர்களை இவர்கள் வெளிநாடுகளுக்கு அனுப்பி வைத்தார்களா என்றால் அதுவும் இல்லை. அவர்களின் பெயரில் வசூல் செய்த பணத்தில் போரூரில் வீடு கட்டிய நபர்களும் இருக்கிறார்கள். ஆனால் உண்மையில் உதவி செய்பவர்களை விட இவர்கள் சொல்லும் கதை தான் உண்மை என்பது போல் உள்ளது. அந்த அளவுக்கு உதவி கேட்பவர்களிடம் பழகி உள்ளார்கள். ஆனால் உதவி தொகையில் ஒரு பகுதி தான் சம்பந்தப்பட்டவர்களிடம் சேர்கிறது.


உதவி செய்பவர்கள் பலர் இருந்தாலும் இன்னும் ஈழத்தமிழர்களின் நிலை மாறாமல் இருக்க காரணம் இவர்களை போன்ற இடைத்தரகர்கள் தான். உதவி செய்பவர்களும் உதவி கேட்பவர்களும் நல்லவர்களாக இருந்து என்ன பிரயோஜனம். இடைத்தரகர்கள் நல்லவர்களாக இல்லையே.




உதவி செய்பவர்கள் அனைவரும் தயவு செய்து உங்களின் உதவிகள் சம்பந்தபட்டவர்களிடம் உதவிகள் போய் சேர்கின்றதா என்பதை ஒரு முறை உறுதிபடுத்தி கொண்டு பின்னர் அவர்கள் மூலமாகவே கூட உதவிகளை தொடரலாம்.

பெரியாரிடம் வெங்காய விலையை கேட்க சொன்னால் என்ன ....கு இவர் முதல்வராக இருக்கிறார்

சென்னை அண்ணா அறிவாலயத்தில், முதல்வர் கருணாநிதி அளித்த மினி பேட்டி: வெங்காய விலை உயர்ந்திருக்கிறதே அதற்கு ஏதேனும் நடவடிக்கை எடுக்கப்படுமா?
அதை பெரியாரிடம் போய் கேளு...
போக்குவரத்து தொழிலாளர்கள் ஊதிய உயர்வு கேட்டிருக்கிறார்களே?
அது கொடுத்தாச்சு... அது பற்றி அறிக்கை வரும்.
இன்று கூட இ.வி.கே.எஸ். இளங்கோவன், அ.தி.மு.க. - காங்கிரஸ் கூட்டணி அமைய வாய்ப்பிருக்கிறது என கூறியதாக செய்திகள் வந்துள்ளதே?
அது எனக்கு தெரியாது. இவ்வாறு, முதல்வர் கருணாநிதி சிரித்தபடியே பேட்டியளித்தார்.

மீண்டும் மீண்டும் இவர் வயதிற்க்கோ இல்லை இவர் இருக்கும் பதவிக்கோ ஏற்றபடி பேசாமல் தான் அந்த பதவிக்கு ஏற்றவன் இல்லை என்று நிருபிக்கிறார். 
 
இவர் தனிப்பட்ட முறையில் மற்றவர்களின் அந்தரங்கங்களை விமர்சிப்பது இவருடன் இருக்கும் அலுவலர்களுக்கு தெரிந்ததே. ஆனால் இப்படி பொறுப்பற்ற முறையில் பதில் அளிப்பதற்கு அப்படி முதல்வர் பொறுப்பில் இருந்து தான் பேச வேண்டுமா?

ஒருவேளை இவருக்கும் ஆட்சிக்கும் சம்பந்தம் இல்லை என்று சொல்ல வருகிறாரோ? இல்லை வெங்காயம் பயிரிடுவதெல்லாம் அவருக்கே தெரியாது என்று சொல்ல வருகிறாரோ?




யாருடைய சாவாவது மக்களை சந்தோசப்படும் என்று மக்கள் நினைத்தால் உண்மையில் அப்படி ஒரு பிறவிக்கு அப்படி ஒரு பிறப்பிற்கு அந்த இழிபிறவி மட்டும் அல்ல அந்த குடும்பமும் வருத்தப்படும் நாள் கண்டிப்பாக வரும்.( நான் யாரையும் குறிப்பிட்டு சொல்லவில்லை. மேல் சொன்ன தகவல்களுக்கும் இதற்கும் சம்பந்தம் இல்லை.)

புலி பயம் காட்டி ஊழலில் இருந்து தப்பித்து கொள்ள கருணாநிதி முயற்சி

ஸ்பெக்ட்ரம் பிரச்சினையை எப்படியெல்லாம் திசை திருப்பலாம் என்பதற்கு நேற்று தான் ஒரு பதிவு போட்டேன். அந்த பூச்சாண்டி எல்லாம் ஒத்து வராததால் சோனியா குடும்பம் எதற்கு பயப்படும் என்று பார்த்து கொண்டிருந்த கலைஞர் இப்போது புலிகள் தாக்குதல் நடத்துவார்கள் என்று கிலி வேறு கிளப்பியுள்ளார்.

லத்திகா சரண் ஒரு தேர்ந்த போலிஸ் அதிகாரி என்ற தரத்தினை எப்போதோ இழந்து விட்டார் என்றே தோன்றுகிறது. தமிழீழ ஆதரவாளர்களை நோக்கி இவர் எடுக்கும் ஒவ்வொரு நடவடிக்கையும் சர்ச்சைகளில் கொண்டு போய் தான் முடிந்துள்ளன.

ரயில்வே தண்டவாளத்தில் வெடிகுண்டு வைத்து அந்த வழியாக செல்லும் ரயில்களை தகர்க்க முயற்சி செய்ததாக காவல்துறை அந்த ஒரு வாரத்திலே பல கதைகள் சொன்னது. அதை சொன்னதும் நமது லத்திகா சரண் தான்.
அதே போல் சென்னையிலும் தண்டவாளத்தில் கற்களை வைத்து சமூக விரோதிகள் முயற்சி செய்தனர் என்றனர். ஒரே நேரத்தில் ஒரு மனிதர் இரு இடங்களில் இருந்து இரு வேறு செயல்களை செய்ய முடியாது என்பதால் அதற்கு காரணம் என்று இவர்களால் கைது செய்யப்பட்டவர்கள் எல்லாம் விடுதலை செய்யப்பட்டனர்.

இதில் நமது உளவுத்துறை எவ்வளவு சீரழிந்து வருகிறது என்பதற்கு தமீழத்தில் இருந்து இங்கே தங்கிருக்கும் பெண்களிடம் தங்களது காம லீலைகளை அரங்கேற்றி உள்ளனர் தமிழக உளவுத்துறையினர்.

இவர்கள் எப்போதுமே புது கதைகளை சோடிக்கவும் ஒரு பிரச்சினையை திசை திருப்ப மற்றொரு பிரச்சினையை செய்வதற்குமே பயன்பட்டு இருக்கின்றனர்.


இவரே தான் சொல்வதாக ஒரு செய்தியும், மத்திய உளவுத்துறையும் ராவும் சொல்வதாகவும் ஒரு செய்தியும் பரப்பபட்டது.   எது எப்படி இருந்தாலும் ஊழல்களில் இருந்து தப்பிக்க இப்படியெல்லாமா சொல்லுவது.

அப்படி ஒருவேளை உளவுத்துறை என்று ஒன்று இருந்தால் இங்கே நடக்கும் அசம்பாவிதங்களை முன்னரே தடுத்திருக்க முடியாதா என்ன?

ஜெகத் கஸ்பாரும் நக்கீரன் வார இதழும் ஈழதமிழர்களுக்கு ஆதரவாளர்களா?

தற்போது நடந்து வரும் மத்திய புலனாய்வு துறையின் சோதனைகளில் சிக்கியவர்களுக்கு ஆதரவாக புதிதாக எப்படி ஆதரித்து பேசலாம் என்பதற்கு தட்ஸ் தமிழில் வந்த ஒரு செய்தி உதாரணமாக இருக்கிறது.
"சென்னை: ஸ்பெக்ட்ரம் விவகாரம் தொடர்பாக தமிழகத்தில் நடந்த சிபிஐ சோதனை ஈழத் தமிழ் ஆதரவாளர்களுக்கு எதிரான, பழிவாங்கல் நடவடிக்கையோ என்று சந்தேகப்படுத்தும் வகையில் ஆங்கில மீடியாக்களின் செய்திகள் தோற்றத்தை ஏற்படுத்துகின்றன. நக்கீரன் இதழை ஒரு ஆங்கிலத் தொலைக்காட்சி விடுதலைப் புலிகள் ஆதரவு பத்திரிக்கை என்று வர்ணித்திருப்பதே இந்த சந்தேகத்திற்குக் காரணம்.

இன்று காலை தொடங்கிய இந்த சிபிஐ ரெய்டு குறித்த செய்திகளை அனைத்து தமிழ் மீடியாக்களும் நடுநிலையுடன் கூறி வரும் நிலையில், ஒரு தனியார் தொலைக்காட்சி மட்டும் குயுக்தியான பார்வையுடன் வெளியிட்டு வருவது பலத்த சந்தேங்கங்களை ஏற்படுத்தியுள்ளது. (Pro-LTTE Nakkeran என்று நக்கீரனை இந்த ஆங்கிலத் தொலைக்காட்சி வர்ணிக்கிறது)


இதனால், நக்கீரன் இணையாசிரியர் காமராஜ், மத போதகரும் தமிழ் மையம் அமைப்பின் தலைவருமான ஜெகத் கஸ்பார் ஆகியோரது வீடுகளை குறி வைத்து நடந்து வரும் சோதனைக்கு உண்மையான காரணம் என்ன என்பது தற்போது பலத்த விவாதத்திற்குள்ளாகியுள்ளது.

இவர்கள் குறித்து அந்தத் தொலைக்காட்சி, விடுதலைப் புலிகள் ஆதரவாளர் கஸ்பார் என்றும், விடுதலைப் புலிகள் ஆதரவுப் பத்திரிக்கை நக்கீரன் என்றும் கூறுவது விஷமத்தனமாகவே தோன்றுகிறது.


ஈழத் தமிழர்கள் என்றாலே ஒரு தீவிரவாதக் கூட்டம் போலவே சித்தரித்துப் பழகி விட்டவை இந்த ஆங்கில மீடியாக்கள். காரணம், இவர்களுக்கு இலங்கை விவகாரம் குறித்து எந்த ஆழமான அறிவும் கிடையாது. அவ்வப்போது கிடைக்கும் தகவல்களை வைத்து அன்றைய பொழுதை 'கத்திக் கத்தியே' கழிப்பது தான் இந்த அரைகுறை மீடியாக்களின் வழக்கம்."


எப்படியெல்லாம் யோசித்து கதையா திருப்ப முயற்சி பண்றாங்க பாருங்க.
உண்மையில் ஜெகத் கஸ்பாரும் நக்கீரன் வார இதழும் ஈழத்தமிழர்களின் ஆதரவு என்று யார் இவர்களை நம்ப வைத்தது? அத்தனை வடஇந்திய தொலைகாட்சிகளிலும் மாறன் சகோதரர்களுக்கு பங்கு இருக்கிறது. ஒரு விவகாரத்தில் இருந்து தப்புவதற்கு சொல்லப்படும் உதாரனங்களும் ஏற்புடையவையாகவே இருக்க வேண்டும். அந்த தொலைகாட்சிகளில் ஈழத்தமிழர்கள் ஆதரவு பத்திரிக்கை என்றோ புலிகள் ஆதரவு பத்திரிக்கை என்றோ வரவில்லை. திமுக ஆதரவு பத்திரிக்கை என்றே வந்துள்ளது. இணைப்பு இதில் உள்ளது (Kamaraj is an Associate Editor of pro-DMK magazine Nakkeeran.)
 
ஆங்கிலத்தில் படிக்காதவர்கள் யாரும் நேரடியாக தட்ஸ்தமிழ் மட்டும் படித்து இருந்தால் உண்மையில் ஈழத்தமிழர்களுக்கு இவர்கள் எல்லாம் ஆதரவானவர்கள் என்பது போலவும் ஈழதமிழர்களுக்கு ஆதரவானவர்கள் என்பதற்காக தான் சோதனை செய்கிறார்கள் என்பது போல் அல்லவா நடிக்கிறார்கள்.

உண்மையை சொல்லுங்கள் நீங்கள் எல்லாரும் குற்றவாளிகள் இல்லையா? இந்த ஊழல்களுக்கும் ஈழத்தமிழர்களுக்கும் என்ன சம்பந்தம்?

ஈழத்தமிழர்களின் பெயரை சொல்லி தான் இவ்வளவு நாளும் ஏமாற்றினீர்கள். ஊழல் குற்றசாட்டுக்குமா ஈழத்தமிழர்களை இழுப்பது ?

ஒருவேளை அவர்கள் IBN LIVE பற்றி சொல்லி இந்த விஷயத்தை திசை திருப்ப முயலலாம்
http://ibnlive.in.com/news/2g-scam-cbi-raids-nira-radias-office-residence/137456-3.html?from=tn

விடுதலையான சீமான் ஆவேசம் செய்திக்கு தினமலரில் வந்த முட்டாள்தனமான விமர்சனங்கள்.

தினமலரின் கோமாளிகளுக்கு ஒரு கேள்வி. தினமலரில் வந்த சீமான் பற்றிய செய்திக்கு உங்களின் கருத்துக்களை பார்த்தேன். மிக்க நன்றி.


ஊழல்களில் ஊறி வளர்ந்த காரணத்தால் புதிதாக யார் நல்லது பற்றி பேசினாலும் உங்களுக்கு கோபம் வருகிறதா? உங்களின் மூலையில் இருப்பது மூளையா? இல்லை களிமண்ணா?

தமிழக அரசியலுக்கு தீர்வு சொல்ல வக்கில்லை. உங்களுக்கெல்லாம் ஒரு பேப்பர். அதில் எழுத உங்களை போன்ற அறிவு ஜீவிகள் இருக்கும்வரை இமாய ஊழல்களுக்கு இந்தியாவில் பஞ்சம் இருக்காது. உங்கள் பேப்பரில் வரும் செய்திகளுக்கு நீங்களே கருத்துக்களை திணிப்பதை விட்டுவிட்டு நேரடியாக பேசுவதற்கு கலந்துரையாடல்கள் நடப்பதற்கு ஏற்பாடு செய்யவும்.



கோழைகள் போல கருத்துக்களை நீங்கள் சொல்லுவதை மட்டும் போடுவதை நிறுத்துங்கள். நீங்களும் போங்கடா நீங்களும் உங்கள் பத்திரிக்கை தர்மமும்.

ஒவ்வொரு பிரச்சினைக்கும் குறைகள் சொல்லுவதை விட்டுவிட்டு அந்த பிரச்சினைக்கு முழுவதுமான ஒரு தீர்வினை சொல்லுங்கள். அதற்கு வக்குள்ளவர்கள் கருத்துக்கள் பதியுங்கள். அதன் பின்னர் நான் உங்களை ஆதரிக்கிறேன்


ஜகன் - சென்னை,இந்தியா 2010-12-11 07:21:25 IST


சைமன் என்கிற சீமான் ஒரு ஹிந்து எதிரி (கருணாநிதியை போல்). இவர்கள் இருவருக்கும் வோட்டு போடாதீர்...


சந்திரன் - தமிழ்நாடு,இந்தியா 2010-12-11 07:18:36 IST

இலங்கைத்தமிழர் பிரச்சினை ஒரு போதும் தமிழக தேர்தலில் எதிரொலித்ததில்லை. இனியும் அது எதிரொலித்து ஒரு தாக்கத்தினையும் ஏற்படுத்தப்போவதில்லை. ஏனெனில் தமிழ் நாட்டு தலைவர்கள் அனைவரும் (இதில் யாருக்கும் விதிவிலக்கில்லை) அரசியல் விளம்பரத்திற்க்காக, சுயமையப்படுத்தும் நோக்கில், தனக்கு கூட்டம் கூடுகிறது என்பதற்காக ஒரு கருவியாகத்தான் இலங்கைத்தமிழர் பிரச்சினையை கையாளுகிறார்களே ஒழிய யாருக்கும் எந்த அக்கறையும் உண்மையில் கிஞ்சித்தும் கிடையாது. உண்மையில் 1983 முதல் 1990 வரை சாதாரண தமிழக மக்களுக்கும் ஒரு அக்கறை உணர்வு இலங்கை தமிழர்கள் மீது இருந்தது. அதை சுத்தமாக கெடுத்தது வே.பிரபாகரன் தான். பிரபாகரன் பிரேமதாசாவுடன் சேர்ந்து... "சிங்கள மக்களும் (இ) தமிழ் மக்களும் சண்டை இருந்தாலும் சகோதரர்கள்.. இதில் இந்தியா தலையிட வேண்டிய அவசியமில்லை என்று கூட்டறிக்கை விட்டார்...(அப்புறம் பிரேமதாசாவையே குண்டு வெடிப்பின் மூலம் கொன்றார் என்பது வேறு விஷயம்)...". அப்பொழுதே இந்தியா வின் அக்கறை குறைய ஆரம்பித்தது. பின் 1991 ல் ராஜீவ் காந்தியை கொன்றதன் மூலம் இருக்கும் கொஞ்சநஞ்ச இந்திய, தமிழக அனுதாபத்தினை இழக்க நேரிட்டது. அதன் பின் இலங்கை தாக்கம் என்று ஏதும் கிடையாது... இனியும் எந்த தேர்தலிலும் ஏற்ப்படப்போவதில்லை...சீமான்/நெடுமாறன்/பெ.தி.க/வைகோ போன்றவர்களுக்கு கூட்டம் வேண்டுமானால் கூடலாம்...ஓட்டு என்பது கிஞ்சித்தும் கிடையாது. (வைகோ மட்டும் அதிமுக உடன் (மாறினால் தி.மு.க உடன்) இருப்பதால் அந்த ஆதரவில் கரையேற வாய்ப்புள்ளது...). தமிழக மக்கள் இப்போது எதிர்நோக்கியிருக்கும் சொந்த பிரச்சினைகள் தான் தேர்தலில் எதிரொலிக்கும். சீமான் தனியாக நிற்கும் பட்சத்தில் ஒரு 500 லிருந்து 5000 ஓட்டு வேண்டுமானால் வாங்கலாம்...டெபாசிட் கெடைக்காது....


மண்ணின் மைந்தன் - bangalore,இந்தியா 2010-12-11 07:10:09 IST

அம்மா என்ன தமிழ் நாட்டுல பாத்து பைசா கூட கொள்ளை அடிகளையா என்ன... உங்கள மாதிரி முட்டாள்கள் இருப்பதால் தான் ஒரு புரட்சிய ஆரம்பிக்கவே முடியாது......


vicky - yangsusong,சீனா 2010-12-11 06:59:14 IST

பிக் காமெடி! என்னையா இப்படி காமடிய பேசறிங்க! நிறுத்த முடியவில்லை சிரிப்பை......

jopet - singapore,சிங்கப்பூர் 2010-12-11 05:30:42 IST

ஏன்டா கொய்யாலே! நீ இந்தியாவை கூறு போடுவே. அப்புறம் இலங்கையில புலிகளை காப்பாத்த இங்கே ரத்த ஆறு ஓடும்ன்னு சொல்லுவ. அதெல்லாம் பாத்துட்டு அரசாங்கமும் போலீஸும் சும்மாயிருக்கணும். அதுக்கு உன்னை புடிச்சி ஏன்டா அப்படி பேசுனன்னு கேட்டா அப்புடித்தான் பேசுவேன் பேசகூடாதுண்ணா எனக்கு தனி ஈழம் வாங்கிகுடுன்னு லூசுபயலுக மாதிரியே பேசுவீங்க. என்னமோ ராஜேபக்சே இங்கேருந்து சொன்னவுடனே அப்படியே டிரசவுர்ல ஒன்னுக்கு போயிட்டு பயந்துகிட்டு தனி ஈழம் கொடுக்கிர மாதிரி. வெண்ணைகளா உலகமே கண்டிச்சும் எவன பத்தியும் கவலை படாம அவன் இருக்குறான். இதுல இந்த 85 வயசு அம்னிதர் சத்தம் போடணுமா ? அவர் பதவியை ராஜினாமா செஞ்சாருன்னா அதை கேட்டு உலகமே ஸ்தமபிசிடுமா? ஆனா புலிகளை சுட மாட்டான்கலாம் தனி ஈழம் கிடைச்சிடுமாம். ஏன்டா நீ புலிகளுடைய காசுல படம் எடுத்த நன்றிக்கு எங்க தமிழகம் தான் கிடைசுச்சா?தமிழ் நாட்டு அரசியள்ள நீ ஜெயிச்சாலும் யாருக்காக சட்டசபையில போராடுவ. தனி ஈழம்ன்னு அங்கயும் கத்துவ. பிரபாகரன் வாழ்கன்னு அங்கயும் பேசுவ. உனக்கு, இந்த வைகோவுக்கு எல்லாம் MP சீட்டு MLA சீட்டு கிடைச்சாலும் என்ன பிரோஜனம். தமிழ் நாட்டுக்கோ இந்தியாவுக்கோ குரல் கொடுக்க போறதில்லை. அங்கயும் போய் ரத்தஆறு ஓடும், நாடு ரெண்டாகும்ன்னு தான் பேசுவீங்க. இதுல என்ன பியுட்டின்னா நீ தமிழ் தமிழன்னு பேசிகிட்டு சிங்களகாரியை வச்சே படம் எடுக்கறதுதான். போதும்டா தமிழை என்னமோ நீங்கதான் குத்தகை எடுத்து வச்சிருக்க மாதிரியும் நீங்க இல்லேனா தமிழ் அழிஞ்சிடுமுன்ற மாதிரி பேசாதிங்கடா. எங்களுக்கும் தெரியும்டா உங்க கூத்தெல்லாம். முதல்ல உன்னை, இந்த வைகோ இன்னும் ரெண்டு மூணு டிக்கெட்டுங்க இருக்கீங்க. உங்களை எல்லாம் இலங்கையில குடியுரிமை வாங்கி கொடுத்து அங்கேயே அந்த வன்னி காட்டுலயே குடியிருந்து சேவை செய்யுங்கடான்னு சொல்லணும். போதும்டா இங்கே தமிழ் நாட்டுல எங்க அப்பா அம்மாவுக்கு அண்ணன் தங்கச்சிக்கு நாங்க முழுசா எங்க கடமையா செய்யவே எங்களுக்கு நேரம் பத்தமாட்டேங்குது. இதுல இந்தியாவுக்கு வேற கடமை செய்யணும் இலங்கை தமிழர்களுக்கு வேற கடமை செய்யனும்ன்னா எங்களால முடியலடா? உன்னை மாதிரி லூசு பயலுக கத்தறதுன்னால கலைஞர் has already spent 100 கோடி, which is more than enough. Further more, has done like KALAINGAR for Tamizh refugees in TN....

sathish - melbourne,ஆஸ்திரேலியா 2010-12-11 04:05:24 IST


சபாஸ் ,,சரியான போட்டி,,,, கொசுவுக்கும்,,, கொரங்குக்கும் போட்டி,,, நேத்து முளைச்ச காளான்,, சினிமாவிலே இப்போ தம்பிடி குறையுது,, இல்லே ,,அதனாலே அரசியலில் பூந்துட்டாரு,,, அறிவுள்ளவன் பின்னாலேயும் பத்து பேர்,,, இது போலே அறிவு கெட்ட ....யம் பின்னாலேயும் பத்து பேரு,,,,...

மருதூர் மாணிக்கம் - madurai,இந்தியா 2010-12-11 01:46:09 IST
சீமானே! சிறையில் இருந்தும் உனக்கு புத்தி வரவில்லை. உன்னை இந்த முறை பாளையங்கோட்டையில் பல வருடங்களுக்கு உள்ளே அனுப்பி வைத்து விடுவோம். கலைஞரை எதிர்த்தால் டெபாசிட் கூட வாங்க மாட்டாய்....

குஞ்சுமணி - சென்னை.,இந்தியா 2010-12-11 01:07:28 IST
உனக்கு டிபாசிட் கிடைத்தால் நான் இங்கு கமெண்ட் எழுதுவதை நிறுத்துகிறேன். வாசகர்களும் உன்னை வாழ்த்துவார்கள். நீ வெற்றி பெற்றால் மனித தெய்வம் என நான் நினைக்கும் மருத்துவர் ஐயாவின் கட்சியில் இருந்து விலகி உன்னுடைய அடிமையாக வாழ்நாள் முழுவதும் இருக்கிறேன்....

பாரத புத்திரன் - chennai,இந்தியா 2010-12-11 00:29:37 IST
திரு சீமான் அவர்களே!உண்மையை வெறியோடு பேசுவது,அரசியல் தலைவர்களை ஒத்தைக்கு ஒத்தையா வாறியான்னு கூப்டுறது இதுல்லாம் இல்ல அரசியல். அர்ப்பணிப்பு...மகாத்மா மாதிரி. அடிக்க போறியா? முடிஞ்ச வரைக்கும் என்னை அடி. உடைத்து கைகள் ஓய்ந்த பின்பு ,உனது கோபம் தீர்ந்த பிறகாவது என் மக்களின் நிலை பற்றி யோசி....இது தான் தலைமைக்கு அழகு. உன்னோட மீட்டிங் கொஞ்சம் கேட்டேன். ரொம்ப கேவலமா இருக்கு. கருப்பு சட்டை போட்டு பெரியார் பக்தன்னு சொல்றீங்களே!பெரியாருக்கு இருந்த எதிரியையும் மதிக்கும் பண்பு உங்களுக்கு இல்லாமல் போனது வேட்க கேடு தானே? வாய்க்கு வந்ததெல்லாம் பேசும் வழக்கம் தொண்டனுக்கு இருந்தால் தலைவனுக்கு பிரச்சனை இல்லை, ஆனால் அந்த பழக்கம் தலைவனுக்கு இருந்தால் முதல் அடி உனக்கு அல்ல,உன்னை நம்பி வரும் தொண்டனுக்கே;,,,,,,,,,,,,,,,,,,,,,,பாரத் மாதா கி ஜெய்.தேசம் காப்போம்,தேசியம் காப்போம்....

கே.கைப்புள்ள - nj,இந்தியா 2010-12-11 00:13:28 IST
யாருடா இவன் இந்த சீமான் கோமான். இவன் யாரு இவன் முதல்ல. நீயெல்லாம் இந்த மாறி பேசுர அளவுக்கு ஜனநாயகம் இருக்கு. அதனாலதான் நீ கொரல் விடுற. நீயெல்லாம் யார்ன்னு நெனச்சு சும்மா சவுண்ட் விட்டுகிட்டு திரியிற? இது மாறி சின்ன சின்ன கொசு தொல்ல தாங்கலப்பா....

Chandra - Denver,யூ.எஸ்.ஏ 2010-12-11 00:11:33 IST
Do contest against Kalaignar and lose deposit. You need to take a oath that, if you lost the deposit, you will never speak agaist him. It is the people who decide about who win or loose. Find out your real support in the ground by contesting against Kalaignar....

சீமான் மீதான தேசிய பாதுகாப்பு சட்டம் ரத்து பற்றிய தினமலரின் செய்தி

சென்னை : சினிமாக்காரர் சீமான் மீதான தேசிய பாதுகாப்பு சட்டத்த‌ை ரத்து செய்து சென்னை ஐகோர்‌ட் உத்தரவிட்டது. நீதிபதிகள் தர்மாராவ், ஹரி பரந்தாமன் அடங்கிய பெஞ்ச் இந்த உத்தரவை பிறப்பித்தது.

சீமான் கைது செய்ததை இந்த பத்திரிக்கை வரவேற்கிறதா? இல்லை விடுதலை செய்த நீதிபதிகளை கண்டிக்கிறதா?




அதென்னா சினிமாகாரர் சீமான்? சினிமாவில் இருந்து வந்த முதல்வர் இருக்கிறார், எதிர்கட்சிக்காரர்கள் இருக்கிறார்கள். தண்ணி அடித்துவிட்டு பேசும் விஜயகாந்த் இருக்கிறார். இவர்களையெல்லாம் விட சீமான் என்ன குற்றம் செய்தார்?



மற்றொரு பதிவில் சீமானை விடுதலை செய்வார்கள் ஆனால் இதனை போன்ற வழக்குகளை பதிவு செய்த காவல்துறையை கண்டிக்கவாவது செய்வார்களா என்று கேட்டு இருந்தேன். இதுவரை தீர்ப்பில் அப்படி ஒரு கண்டிப்பு இருப்பதாக வெளி வரவில்லை.



இதற்கு பெயர் தான் இந்திய நீதி.. ஆட்சியில் இருப்பவர்கள் தங்கள் இஷ்டம் போல இதனை போன்ற பல வழக்குகளை பதிவு செய்யலாம்.

ஸ்பெக்ட்ரம் விசாரணை என்னும் கண்துடைப்பு

ராசாவின் வீடுகளில் எல்லாம் நேற்று மத்திய புலனாய்வு துறையினர் சோதனைகள் செய்தனர். இந்த செய்திகளை படித்தவுடன் ஏதோ ராசாவின் வண்டவாளங்கள் எல்லாம் உடனே தண்டவாளம் ஏறியதாக நினைக்கும் ஏமாளிகளுக்காக இந்த பதிவு. ராசாவின் ஊழல் நடந்து பல மாதங்கள் ஆகின்றன. விஞ்ஞான பூர்வமாக ஊழல் செய்வதில் வல்லவர்கள் நாம் தான் என அவர்கள் ஏற்கனவே நிருபித்து உள்ளனர். அப்படி இருக்கும்போது ஊழல் சம்பந்தமாக எந்த ஆவணங்கள் கிடைத்து இருக்கும். அப்படி கிடைக்கும் ஆவணங்கள் எல்லாம் நிதிமன்றத்தில் சமர்பித்து எப்படி அவர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க முடியும்? அந்த ஆவணங்கள் எல்லாம் நாங்களும் சோதனை செய்து கண்டுபிடித்தோம் என்று சொல்வதற்கு மட்டுமே மற்றபடி அதில் ஒன்றும் இருக்காது.( எய்தவர்களை விட்டுவிட்டு அம்பை போய் நோவதேன்? ஏதோ கருணாநிதியின் குடும்பத்தினரின் வீடுகளில் சோதனை செய்து இருந்தால் அதில் ஒரு நியாயம் இருக்கிறது. பணம் இருக்கின்ற இடத்தில் சோதனை செய்தால் தானே எதாவது கிடைக்கும். )




இதுவரை எத்தனை ஊழல்களை கண்டுபிடித்திருக்கிறார்கள் இந்தியாவில்? அதில் எத்தனை ஊழல்களில் பணத்தை திரும்ப வாங்கி இருக்கிறார்கள்? ஆயிரம் ரூபாய், ஒரு லட்சம் ரூபாய் கையூட்டு வாங்கியவர்களை எல்லாம் உடனே பிடித்து கைது செய்து விட்டு அவர்கள் வாங்கிய பணத்தை வசூலிக்க முடியும். ஆனால் இது போல் உள்ள ஊழல்களில் எல்லாம் எங்கே இருந்து பணத்தை திரும்ப பெற முடியும்.

சுவிஸ் பங்கில் இருந்தா இந்த பணத்தை வசூலிக்க முடியும்.

இதில் ஒரு நல்ல விஷயம் என்னவென்றால் ஏற்கனவே ஊழல் குற்ற சாட்டில் இருக்கும் ஒருத்தர் மத்திய புளாய்வு துறையின் தலைவராக நீடித்து கொண்டு இருக்கும்போது மத்தியிலும் மாநிலத்திலும் திமுகவின் கூட்டணி இருக்கும்போதும் ஒரு கண்துடைப்புக்காக என்றாவது இந்த சோதனை நடந்துள்ளதே என்று ஏற்று கொள்ள வேண்டும்.அதை தவிர வேறு ஒன்றும் செய்ய முடியாது :-(

ராஜீவ் காந்தி என்னும் மனித மிருகம்-6

ஈழதமிழர்கள் படுகொலையில் ராஜிவ்காந்தியின் பங்கு என்று எழுத ஆரம்பித்தால் இந்த பதிவுகள் எண்ணிக்கை எப்படியும் நூறினை தாண்டும்.


ஜால்ரா போடுவதற்கு யாராவது இருந்தால் நல்லது என நினைக்கும் அரசியல்வாதிகள் தங்களுக்கு ஜால்ரா போடுபவர்கள் தான் முதல் எதிரிகள் என்பதை உணர வேண்டும். அப்படி அவருக்கு வெளிநாட்டு கொள்கை என்ற பெயரில் தங்களின் வளத்தை வளர்த்து கொண்ட அதிகாரிகள் தான் அதிகம். அத்தகைய அதிகாரிகள் தங்களுக்கு சொந்தமான அல்லது தங்களுக்கு ஆதாயம் தரும் நிறுவனங்களின் கொள்கைகளை தான் தூக்கிபிடிப்பதில் அக்கறை காட்டினர். இலங்கையை பிரித்து ஈழம் அமைப்பதென்றால் அதற்கு ஒரே ஒரு போராளி குழுவை மட்டும் வளர்த்தாலே போதும். ஆனால் அதையே பல போராளி குழுக்களாக வளர்த்து விட்டு அதன் மூலம் இலங்கையை தன கட்டுபாட்டில் வைக்க வேண்டும் என்பதே இந்தியாவின் அப்போதைய இலங்கையின் மீதான வெளியுறவு கொள்கையாக இருந்தது.




வெளியுறவு கொள்கைக்காக அடுத்தவர்களை ஏமாற்றியது போல் நம்மை நாமே ஏமாற்றி விளையாடும் விளையாட்டு ராஜீவ் காந்தியின் காலத்திலேயே வந்தது. உதாரணம் மாலத்தீவு புரட்சி. அதில் ஆதியும் அந்தமும் இந்தியர்களே. ஆட்சியை பிடிக்க நினைக்கும் எதிர்க்கட்சி தலைவரை ஆட்சியில் உட்கார வைக்க இந்தியா எடுத்த முயற்சி தோல்வி (உளவுத்துறையின் வேலை). ஆனால் அதையே ராஜ தந்திரமாக மாற்ற இந்தியாவே படைகளை அனுப்பி புரட்சியை தடுத்தது. இதில் புரட்சி செய்ய அனுப்பப்பட்டவர்கள் தான்

பத்மநாபாவின் ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி. இவர்களை முழுவதுமாக கட்டுபடுத்தி வைத்திருந்தவர்கள் நமது உளவுத்துறையினர் தான். (புலிகள் தமிழின எதிரிகளையும் துரோகிகளையும் ஏன் கொல்லவேண்டும்? இவர்களை விட்டுவைத்தால் போராளிகளுக்கும் காசுக்காக கொலைகளை செய்பவனுக்கும் வித்தியாசம் இல்லாமல் போயிருக்கும்)



இவர்களையும் ஏனைய போராளி குழுக்களையும் புலிகள் அழித்தனர். அதில் சில எச்சங்களை மிச்சம் விட்டதால் வந்த விளைவு தான் இன்றைய அவர்களின் நிலை.(ஆனந்த சங்கரி, டக்ளஸ் தேவானந்தா போன்றோர் இன்னமும் உயிருடன் இருக்கின்றனர்.)


ஈழதமிழர்களை கொல்ல சொல்லி ராஜீவ் இந்திய அமைதிப்படையை அனுப்பவில்லை. ஆனால் அனுப்பிய படையை நிர்வகிக்க அனுப்பிய ஆட்கள் தங்களின் அதிகாரத்தையும் தங்களுக்கு தேவையானவற்றை இலங்கை அரசிடம் இருந்து பெற்று கொள்ள அவர்கள் இந்திய அரசும் இலங்கை அரசும் செய்து கொண்ட ஒப்பந்தங்களை மீறினர்.( சண்டைக்காரர்கள் இருவருக்கும் இடையில் போட்டால் தான் அதன் பெயர் ஒப்பந்தம். சண்டைக்காரனும் சாட்சிக்காரனும் போட்டு கொண்டால் அதன் பெயர் என்னவென்று தெரியவில்லை? இதை கூட ஒழுங்காக அமல்படுத்த முடியாத நாடு தான் நம் நாடு. இவர்களை நம்பி ஒப்பந்தம் போட்டவர்கள் எல்லாம் என்னவானார்கள் என்பதே தனி தொடராக எழுத வேண்டும்.)


முதலில் ஒப்பந்தங்களை மட்டுமே மீறிய அவர்கள் ஏற்கனவே அவர்கள் வளர்த்து வைத்த போராளி குழுக்களை வைத்து தங்களின் விளையாட்டை தொடங்க முற்பட்டனர். அதற்கு பதிலடி புலிகள் கொடுத்தனர். தாக்குதல் நடத்திவிட்டு மறைந்து கொள்வதென்ற கொரில்லா தாக்குதல்களை தாங்க முடியாமல் அப்பாவி மக்களை துன்புறுத்த தொடங்கினர். இந்த துன்புறுத்தல்கள் எல்லாம் பின்னர் வன்முறை, கற்பழிப்பு, கொலைகள் என்று போனது. அதுவே பின்னர் ராஜிவின் கைமீறி சென்று கூட்டம் கூடமாக தமிழர்களை கொல்லும் நிலையை உருவாக்கியது.( மக்களை துன்புறுத்தினால் போராளிகளை காட்டி கொடுப்பார்கள் என்று எதிர்பார்த்தார்கள். இப்போது போல் அப்போது யாரும் இல்லை)



இந்திய அமைதிப்படை செய்த அட்டுழியங்களை இந்த பதிவில் இணைத்து உள்ளேன்.


Download (PDF Zipped):


Volume 1 Part 1: http://www.mediafire.com/?emj0zigyjyu

Volume 1 Part 2: http://www.mediafire.com/?i5tzkzyjfny

Volume 1 Part 3: http://www.mediafire.com/?tz1mvzdgggz

தும்பை விட்டுவிட்டு அதிகாரிகளின் போக்கிலே சென்றால் அழிவது எதிரிகள் மட்டும் அல்ல தாங்களும் தான் என்பதை ராஜீவ் காந்தியின் வாழ்க்கை தந்த பாடமாக இருக்கட்டும்.

ராசாவின் கொண்டையில் மேலுமொரு மாணிக்கம்

ஆட்சியில் இருப்பவர்கள் எல்லாம் எதாவது ஒரு வகையில் தங்களின் செல்வாக்கினை மற்றவர்களிடம் காட்ட முயல்வது இந்திய ஜனஞாயகத்தில் எதார்த்தமான விஷயம். ஊழல் செய்பவர்கள் தான் ஊழலை ஊக்குவிக்கிறார்கள் என்பது உண்மை என்பது போல் ராசா தன்னுடைய அதிகாரத்தை நீதிபதியிடமே காட்ட முயற்சித்துள்ளது திமுகவின் மற்ற செயல்பாடுகள் எப்படி என்பதை காட்டுகிறது. இன்று தான் savukku.net (சவுக்கின் வாசகன் நான்) இல் வந்த "ஜாபர் சேட் டவுசரை கழற்றிய டைம்ஸ் நவ் தொலைக்காட்சி" செய்தியை படித்து கொண்டிருந்தேன். சற்று நேரத்திற்கெல்லாம் அடுத்த செய்தி ராசாவின் பெருமைகளாக வந்து விட்டது. இப்படியே போனால் தமிழ்நாட்டில் இருப்பவர்கள் அனைவரும் மாரடைப்பில் சாவது நிச்சயம். அத்தனை புது புது ஊழல்களை செய்துள்ளார்கள்.



இனிமேல் யாராவது புது ஊழல்களை பற்றி அறிவிப்பதென்றால் தயவு செய்து ஒரு நாளைக்கு ஒரு ஊழலுக்கு மேல் அறிவிக்க வேண்டாம். மாத கடைசியில் ஆயிரம் ரூபாய் சேமிப்பதே அரிதாக இருக்கும்போது இப்படியெல்லாம் அறிவித்து கொண்டே போனீர்கள் என்றால் நானும் திமுகவில் இணைந்து மக்கள் தொன்றாற்ற கிளம்பிவிடுவேன். (மக்கள் சேவையே மகேசன் சேவை. அவர் கொண்டுவந்த பையின் நிறம் மஞ்சள் அதனால் தான் இன்னமும் மஞ்சள் துண்டு அணிந்திருப்பதாக கேள்விபட்டேன்.)




எது எதற்கெல்லாம் காரணம் சொல்கிறார்கள் பாருங்கள். இனிமேல் ராசா பதில் மனு தாக்கல் செய்யும்போது சொல்லுவார்." நீதிபதியை நலம் விசாரிக்கவே நான் அலைபேசியில் அழைத்தேன். அப்போது நீதிபதியும் தமிழ்நாடு பார் கவுன்சிலின் தலைவரா சந்திரமோகன் அவர்களும் ஒரு நல்ல விஷயத்தை பேசிக்கொண்டு இருந்தார்கள். நான் என்னவென்று மட்டுமே கேட்டேன். அதற்காக நீதிபதி நான் மிரட்டினேன் என்று எல்லாம் எடுத்துகொண்டால் நாங்கள் என்ன செய்வது".

ரூம் போட்டு யோசித்திருப்பான்களோ

ஈழத்தமிழர் மக்கள்தொகை - ஒரு நெருடல் கணக்கெடுப்பு

ஈழத்தமிழர் மக்கள் தொகையை எவ்வளவு தூரம் குறைக்க முடியுமோ? அவ்வளவு தூரம் இலங்கை அரசு குறைப்பதற்காக முயற்சித்துள்ளது. இரண்டாயிரத்து எட்டு சூலை  மாதம் கணக்குப்படி 21,324,791.
இரண்டாயிரத்து ஒன்பதாம் ஆண்டு கணக்குப்படி 20,238,000.
ஒரு வருடத்தில் மக்கள் கணக்கில் 1,086,791 குறைந்துள்ளனர்.

இத்தனைக்கும் 2008ம் ஆண்டு கிழக்கு மாவட்டங்கள் எல்லாம் அரசாங்கத்திடம் இருந்தன. அப்படி இருக்கும்போது அடுத்த ஒரு வருடத்தில்(2009) வடக்கு மாவட்டங்களும் இவர்கள் கட்டுபாட்டில் வந்திருந்தாலும் ஏற்கனவே இருந்த மக்கள் தொகையில் எப்படி இப்படி ஒரு பெரிய இடைவெளி வந்தது. அதாவது 1+ 1= 1. இது தான் என்னுடைய கேள்வி.

மக்கள்தொகை இவர்கள் கூட்டுகிறார்களா? இல்லை பத்து தமிழர்களை கொன்று ஒருத்தரை மட்டும் கணக்கில் காட்டுகிறார்களா?






இலங்கையில் இறந்தவர்களின் தொகை 2009

இருக்கின்ற மக்கள் தொகையில் தான் இப்படி என்றால் இறந்தவர்களின் எண்ணிக்கைகளையும் பெரிய குழப்பம் வந்துள்ளது. 2008 ஆண்டு 2009 ஆண்டுகளை பார்த்தீர்கள் என்றால் போர் நடந்த மாதங்களில் கிளிநொச்சி மற்றும் முல்லைதீவுகளில் குறைவான எண்ணிக்கையே பதிவில் உள்ளது. ஆனால் போருக்கு பின்னரும் கொழும்பில் இறந்தவர்கள் மற்ற இடங்களை விட பல மடங்கு காட்டப்பட்டு உள்ளது. இதிலும் சந்தேகங்கள் உள்ளன. போரில் கொல்லப்பட்டவர்களின் உண்மையான தொகை எவ்வளவு? சித்திரவதை செய்யப்பட்டு கொல்லப்பட்டவர்களின் எண்ணிக்கை எவ்வளவு? போரில் பிடிபட்ட அந்த மீதி போராளிகள் அத்தனை பேரையும் இந்த கணக்கில் சேர்த்து உள்ளார்களா என்ன?


இதற்கு பதிலாக நாங்களே ஒரு எண்ணிக்கை சொல்கிறோம் அது தான் உங்களின் மக்கள்தொகை என்று அறிவித்து இருக்கலாம். பின்னர் இதனையே இந்தியாவும் பின்பற்ற கூடும்.

உள்ளம் 'தரிசாக' இருக்கும் அன்னைகளை பற்றி ஒரு ஈனபிறவியின் கருத்து

இவரெல்லாம் அன்னை தெரசா பற்றி பேசவில்லையென்று யார் அழுதது. அன்னை தெரசாவை பற்றி பேச சொன்னால் இவர் ஜெயலலிதாவை கிண்டல் செய்வதாக நினைத்து இவர் சொல்லிய வார்த்தைகள் தான் "அன்னை தெரசா என்று ஒருவர்தான் இருக்க முடியும். வேறு சில அன்னைகளுக்கு உள்ளம் "தரிசாக'' இருக்கும். "தரிசாக'' இருப்பதெல்லாம், தெரசா அல்ல."

அன்னை தெரசாவை பற்றி பேசுவதற்கு ஒரு யோக்யதை வேண்டும். அய்யா நீங்கள் சொல்லுவது போல் தரிசான அம்மாவாக ஜெயலலிதா இருக்கலாம். ஆனால் அதை ஒரு கருமி சொல்லக்கூடாது. ஒரு ஈனபிறவி எடுத்து இங்கே ஆட்சியில் இருக்கும் கலைஞர் சொல்லகூடாது. அரசியல் நாகரிகம் பற்றி அடிக்கடி சொல்லிவிட்டு அதை மீறும் ஒரு ஞாபகமறதி நோயாளி அதை சொல்லகூடாது. (வயசானால் ஞாபகமறதி எல்லாம் வரும் சரி தான் ஆனால் வயசானால் எல்லார் மேலும் இரக்கம் வரும். அது உங்களிடம் இதுவரை யாரும் பார்க்கவில்லையே. இரக்கமே உருவான தெரசாவை பற்றி ஈழதமிழர்கள் கொல்லப்படும்போது ஆட்சியில் இருந்து வேடிக்கை பார்த்த ஒரு இழிபிறவி சொல்லகூடாது.( அப்போது அவர் ஸ்பெக்ட்ரம் ஊழலில் சேர்த்த பணத்தை எண்ணிக்கொண்டு இருந்ததாக சொல்கிறார்கள். இப்படி சேர்த்தும் இன்னமும் பணம் சேர்க்கும் வழி என்னவென்று தான் யோசித்து கொண்டு இருக்கிறார். மடியில் கணம் இல்லையென்றால் இவராக ஏன் இவரின் சொத்து கணக்கை தானாக சொல்ல வேண்டும்?)




மற்ற மாநிலங்களில் எல்லாம் அந்த மாநில தலைவர்கள் எல்லாம் மாநிலத்தில் இருக்கும் தேசிய பிரச்சினைகளுக்கும் பொது பிரச்சினைகளுக்கும் ஒன்றாக தான் போராடுகிறார்கள். ஆனால் இந்த ஈனபிறவிகள் எல்லாம் இருக்கும்வரை அப்படி ஒன்றும் நடவாது என்றே தான் தோன்றுகிறது. இவர் முதலில் ஆரம்பிப்பார்.பின்னர் அந்த அம்மா பதிலடி கொடுக்கும். இப்படி மாற்றி மாற்றி விளையாடும் இவர்களுக்கு மனித உயிர்கள் எல்லாம் என்றைக்கு முக்கியமாகபட்டு உள்ளது. அந்த அம்மா போர் என்றால் உயிர் இழப்பு சகஜம் என்று சொன்னாலும் பின்னர் தனிதமிழ் ஈழமே நிரந்திர தீர்வு என்று கூறி விட்டார். ஆனால் கடைசி வரை வோட்டுக்காக கெஞ்சினாரே தவிர தனிதமிழ் ஈழத்தை இவர் ஆதரிக்கவும் இல்லை. நிரந்திர தீர்வை கூட சொல்ல முடியாத இவர் முதல்வன் படத்தில் வரும் அந்த மோசமான முதல்வர் என்பதில் எள்ளளவும் சந்தேகம் இல்லை.(ரகுவரன் நடித்த வேடம்)



அந்த அம்மா வேண்டுமானால் ஈழ தமிழர்களுக்கும் தமிழர்களுக்கும் எதிரியாக இருக்கலாம். ஆனால் நீங்கள் ஈழதமிழர்களுக்கு மட்டும் இல்லை தமிழினத்திற்க்கே துரோகி என்பதை மக்கள் அறிவார்கள்.

என்னது இந்தியாவுக்கு சுதந்திரம் கிடைச்சிடுச்சா?

 என்னது இந்தியாவுக்கு சுதந்திரம் கிடைச்சிடுச்சா? அப்படின்னு ஒரு படத்துல தான் பார்த்து இருக்கோம். ஆனால் அதையே நேரில் நிருபித்திருக்கிறது தினமலர். இங்கே இருப்பவர்களும் இலங்கையில் இருப்பவர்களும் ஏன் ஐ.நா சபையே கூறியபோது கூட இனபடுகொலை நடந்ததாக சொல்லாத தினமலர் இப்போது "இலங்கை போர்க்குற்றங்களுக்கு ராஜபக்ஷே காரணம் : அதிர்ச்சி தகவல்" என்று மிகபெரிய ஒரு விஷயத்தை கண்டுபிடித்து இருக்கிறது. நடிகர் வடிவேலின் புலிகேசி படத்தில் அவரின் ஒற்றன் ஒருவன் பழைய செய்தியை ஏகப்பட்ட எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தி பின்னர் கூறுவான். அதே போல் தான் தினமலர் இப்போது இந்த தலைப்பை கொடுத்துள்ளது.

http://www.dinamalar.com/News_Detail.asp?Id=138235
தமிழ்நாட்டில் துப்பறிந்து தைரியமாக முன்கூட்டியே எழுதும் பத்தரிக்கைகள் தான் இல்லை. ஆனால் எல்லாருக்கும் தெரிந்த செய்தியை இப்போது தான் தெரிந்தது போல் எழுதுவது நியாயமா? இப்போது கூட எழுதவில்லை என்றால் விக்கிலீக்ஸ் பற்றிய செய்திகள் மறைக்கப்பட்டு வந்திருக்குமோ? அப்படி செய்து இருந்தால் தினமலரில்  நடுநிலை  இல்லை என்பது தினமலரில் இன்னும் பின்னூட்டங்கள் போடும் மெத்தபடித்தவர்களுக்கும் தெரிந்து விடும் என்ற பயமா?
நான் இதுவரை நான்கு முறை பின்னூட்டங்கள் போட்டு இருந்தேன். இதுவரை ஒருமுறை கூட எதுவும் வெளிவந்ததில்லை. இத்தனைக்கும் நான் மோசமான வார்த்தை பிரயோகம் செய்தது இல்லை. ஒருவேளை உண்மையை சொன்னால் போடமாட்டார்களா? இல்லை பின்னூட்டம் போடுவதற்கென்றே தினமலர் ஏற்பாடு செய்திருக்கும் நபர்களின் பின்னூட்டங்கள் தான் தினமலரில் வெளியாகுமா?
ஒருவேளை இது தான் தினமலரின் தர்மமா? செய்திகளை முந்தி தந்தால் அதை செய்தித்தாள் என்று சொல்லலாம். ஆனால் இப்படி இரண்டு வருடங்கள் பின்தங்கி தரும் செய்தித்தாளை என்னவென்று சொல்லுவது?

இன துரோகிகளாக ஆவது எப்படி?

 ஆரம்பத்தில் நல்லவர்களாக தங்களை மக்கள் போராட்டங்களில் பங்கேற்றவர்கள் பலர் இப்போது நல்லவர்களாக இல்லை. அவர்களில் சிலர் மிரட்டப்பட்டு (இறையாண்மை சட்டத்திற்காக) ஆளும் அரசுடன் இணைக்கப்பட்டனர். பலர் பணம் கொழிக்கும் தொழில் தான் இது என்று கண்டுபிடித்து அதிலே முழுவீச்சாக இறங்கியுள்ளனர். இவர்களை அடையாளம் கண்டுபிடிப்பது வெகு சுலபம்.
கீ.வீரமணியுடன் சேர்ந்து இயங்கும் கூட்டம் இதற்கு நல்ல உதாரணம். பெரியார் தொடங்கிய கட்சியை தனது குடும்ப சொத்தாக கொண்டு வளர்ந்து பெரியாரின் கொள்கைகளை குழிதோண்டி புதைக்கும் இந்த நல்ல மனிதர் இதுவரை தானாக எதையும் செய்தது இல்லை. இவருக்கு எந்த கட்சி ஆட்சியில் இருந்தாலும் இந்த அடிமையின் பல்லக்கு எப்போதும் தயாராகவே இருக்கும். தற்போது இந்த பல்லக்கு கருணாநிதியின் சேவைக்காக சென்றுள்ளது.
பல்லக்கு என்றால் தூக்க நான்கு பேர்களுக்கு மேல் வேண்டுமே. அதற்காக முதலில் சேர்ந்தவர் தான் சுப.வீரபாண்டியன். இவரின் பேச்சில் மயங்காதவர் எவரும் இல்லை என்று இருந்தது. இப்போது இவர் பேச்சை கேட்டால் எரிச்சல் தான் வருகிறது. எல்லாருக்கும் சிறை பல மாற்றங்களை தந்திருக்கலாம். இவருக்கு எப்படி காலில் விழுந்து கிடப்பது என்று சொல்லி தந்திருக்கிறது. சுயமரியாதை பற்றி சொல்லிதர வேண்டிய பேராசிரியர் மரியாதை கேட்டு அலைகிறார். 
பல்லக்கினை தூக்கி செல்ல இருக்கும் இன்னொரு கலியுக சிற்பி ஜகத்ரட்சகனை பற்றி என்னவென்று சொல்வது. இவருக்கு தனிப்பட்ட முறையில் பாராட்டு விழாவே வைக்கும் அளவுக்கு கவிதைகளில் தேறி வருகிறார். எப்படியெல்லாம் யோசிக்குரானுங்க? அந்த நான்கு பல்லக்கு தூக்கிகளில் நான்காவது இடமே ரொம்ப முக்கியமான இடம். யார் வேண்டுமானாலும் எப்படி வேண்டுமானாலும் அந்த இடத்தை பிடித்து கொள்ளலாம். ஆனால் அவர்கள் அனைவரும் பணத்தின் அருமை தெரிந்தவராகவே இருக்கவேண்டும். இல்லையென்றால் பல சூழ்நிலைகளில் கோபமோ இல்லை; இன உணர்வோ வந்து விடும். அந்த சமயங்களில் மது, மாது என இறங்க தெரிந்தவராக இருக்க வேண்டும்.  இப்படி பல நல்லவர்களை தான் அப்போதைய இலங்கை துணை கமிஷனர் அம்சா வளைத்து போட்டார்.
பணம் தான் என்றால் பணத்தால் அடிப்பார். பணம் அவர்களுக்கு தேவையில்லை தொழில் தொடங்க அம்சாவே ஏற்பாடு செய்துள்ளார். என்ன ஒரு கரிசனம். பல நட்சத்திர தாங்கும் விடுதிகளில் விபச்சாரம் செய்து பிடிபட்ட நடிகை மூலம் மாது வேண்டும் என கேட்கும் அந்த இன உணர்வாளர்களை சரி செய்து விடுவார் அம்சா. அதையும் மீறி எழுதுபவர்களை கவனிக்க காவல்துறை இருக்கிறது. போதாதென்றால் அண்ணன் திருமா இருக்கிறார். இல்லை என்றால் எல்லாரையும் குழப்பி விடும் ஜகத் இருக்கிறார். இப்படி அனைத்து வளங்கள் தளங்களையும் கையாண்டு மானம் ரோசம் இல்லாதவர்கள் அனைவரையும் தனக்காக பேசவைத்துள்ளார் அம்சா. 
அதே வாயால் முதல் நாள் புகழ்ந்து விட்டு மறுநாள் நான் அடிப்பது போல் அடிக்குறேன் நீ அழுவது போல் அழு என்று இவர்கள் நடித்த நாடகங்கள் நூறு நாட்களை தாண்டும். யாராலும் மறுத்து அறிக்கை விடமுடியாதபடி இவர்களே புலிகளின் சார்பில் அறிக்கைகளை விட்டார்கள்.( பார்வதி அம்மாள் மற்றும் புலிகளை நேரில் சந்தித்தது போல் வந்த கட்டுரைகள்). இந்தியாவில் தான் இவர்கள் வாக்குறுதிகள் கொடுத்து ஏமாற்றுகிறார்கள் என்றால் இலங்கையில் சென்று உங்களை என் தாயார் போல் கவனித்து கொள்வேன் என்று அங்கேயும் வாக்குறுதி கொடுத்து நாங்கள் எல்லாரும் இன்னும் திருந்தவில்லை என்பதை பறை சாற்றினார் திருமா.
புலிகளின் மீதான தடை நீங்க விசாரணை கமிசன் முன் தானாக பேச வாராத திருமா வீதியெங்கும் சுவரொட்டிகளில்  பிரபாகரனோடு  கைகோர்த்து நிற்கிறார்.  இந்த கை தானே ராஜபக்ஷேவின் கைகளில் தஞ்சம் புகுந்தது. மக்கள் இன்னும் சுவரொட்டிகளை நம்பி தான் செய்திகளின் உண்மை நிலைமையை பரிசோதிப்பது இல்லை. அதுவே தமிழ்மக்களின் சாபகேடும். இந்த கூட்டணியில் மது மாது என்று போய் ஐட்ஸ் வாங்கி வந்த ஞான சேகரன் காங்கிரஸ் கட்சிக்காரரும் இருக்கிறார். அதையே முதலாக கொண்டு முன்னேறி வந்த ராம்நாடு சட்டமன்ற தொகுதி சட்டமன்ற உறுப்பினர் ஹுசைன் அலி இருக்கிறார்.ஹுசைன் அலி  தான் முதலில் இந்த தொழிலை ( இனதுரோகியாக மாறும் தொழில்) தொடங்கி வைத்து ராஜபக்ஷேவின் ஆதரவோடு மற்றவர்களையும் குப்பிட்டு சென்று அறிமுகம் செய்கிறார்.
இதில் வைகோவை இவர்கள் சேர்த்து கொள்ள மாட்டார்கள். அவர் பணத்தையும் வாங்கி கொண்டு பின்னர் இவர்கள் தான் பணம் கொடுத்து பேச சொன்னவர்கள் என்று சொல்வார் என்பதால் தான் அப்படி.  

ச்சே இவ்வளவு தானா இந்த உலகம்

இனபடுகொலை சம்பந்தமாக வந்த காணொளியை கண்டபின்னரும்  உலகமே
ஒன்று கூடி நம்மை இன்னும் ஏமாற்றுகிறது என்று புரிகிறது. அந்த காணொளியில் தான் எல்லாமே தெள்ளதெளிவாக உள்ளதே. இன்னும் வேறு என்ன கேட்கிறார்கள்? இன்னும் நம்மை எப்படியெல்லாம் நம்பவைத்து ஏமாற்ற போகிறார்கள். போர்குற்றவியல் நீதிமன்றம் எல்லாம் தமிழனுக்கு சரிபட்டு வருமா? பாலியல் கொடுமைகள் எல்லாம் போரில் சாதாரணம் என்று கேள்விப்பட்டு இருக்கிறேன். ஆனால் சக தமிழன்/ தமிழச்சிகள் இவ்வளவு கொடூரமாக கொல்லப்படும்போது இனிமேலும் துரோகிகளை பற்றி மூடி மறைத்து எழுதுவது தவறு என்றே உணருகிறேன்.
கருணா என்றாலே  துரோகம் என்று பொருளா? அதனால் அந்த இருவரை பற்றியும் நாம் பார்க்க வேண்டியது இல்லை.
ஜகத்கேஷ்பருக்கு முன்னரே (December 2008) புலிகளின் மீதான பிடி மட்டும் அல்ல துரோகங்களும் இறுகுகிறது என்று தெரியும். ஆனாலும் சொல்லவில்லை. அவரே முன்னின்று போராட்டங்களை ஊக்குவிப்பது போல நடித்து தன் மீதான மற்றவர்களின் கவனத்தை திசை திருப்பினார். அப்போதும் கலைஞரை கண்டித்தோ இல்லை மத்திய அரசை கண்டித்தோ கோஷங்கள் எழுப்பகூடாது என்று சொல்லி மாணவர்களையும் மற்றவர்களையும் ஏமாற்றியவர். இவரை வைகோ, நெடுமாறன் போன்றோர்கள் நம்பவில்லை. இவர் பேச்சில் ஆளை வீழ்த்தும் வல்லமை கொண்டவர் ஆதலால் இன்னமும் இவரை நம்பும் ஏமாளிகள் உள்ளனர். இவர் தானாக எந்த ஒரு போராட்டத்திலும் கலந்து கொண்டவரில்லை. முத்துகுமரனின் இறுதி ஊர்வலத்திற்க்கோ அல்லது அதற்கு முதல் நாளிலோ இவர் எங்கே இருந்தார் என்று தெரிந்தவர்கள் கூறவும்?

அடுத்து  வருபவர் திருவாளர் தொல். திருமாவளவன். இவரோ அல்லது இவர் கட்சி சார்ந்தவர்களோ இல்லாமல் எந்தவொரு போராட்டமும் நடைபெறாது. இவர்கள் நடத்தினால் மட்டும் தான் இவரின் கட்சிகாரர்கள் கலந்துகொள்வார்கள் என்றில்லை. எங்கு எந்த போராட்டம் நடந்தாலும் இவர்களே மாணவர்களோ அல்லது மற்றவர்களோடு கலந்து விடுவர். பின்னர் நடக்கும் அத்தனை குழப்பங்களுக்கும் இவரின் கட்சிக்காரர்களே காரணம். முத்துகுமரனின் இறுதி ஊர்வலத்தில் மாணவர்களை அடித்து விரட்டிய பெருமை இவர்களையே சாரும். ஈழத்தமிழர்களின் இனபடுகொலைகளுக்கு எதிராக வழக்கறிஞர்கள் நடத்திய போராட்டத்தில் குழப்பமும் அதையே பின்னர் கலவரமாகவும் மாற்றிய பெருமை இவரையும் இவர் கட்சியினரையுமே சேரும்.

பத்திரிக்கையாளர்கள்: ஈழ பிரச்சினைகளுக்கு முன்னர் வரை பத்திரிக்கை என்றால் அதில் ஒரு தர்மம் கடைபிடிப்பதாகவும் (ஊமை விழிகள் படத்தினை பார்த்து ஏமாந்தது தான்) அதை மீறாமல் எப்போதும் இருப்பார்கள் என்று நினைத்து இருந்தேன். எந்த பத்திரிக்கை நடுநிலையை காத்தது என்றே தெரியவில்லை. அப்படி ஒரு ஒற்றுமை. தினமலரில் ஆரம்பித்து( உங்களுக்கெல்லாம் சாவே வராதா? அப்படியே தான் இருப்பிங்களா என்ன?)  நான் கடைசியாக ஏமாந்தது நக்கீரனிடம். அத்தனை பத்திரிக்கைகளுமே ஊழல்கள் லஞ்ச லாவண்யத்தில் சிக்கி நம்மை ஏமாற்றி விட்டன. ( இதற்கு வேற எவ்வளவோ தொழில்கள் இருக்கின்றனவே. இதில் தான் இந்த மோசடிகளை செய்ய வேண்டுமா?)


மீடியா: எப்போது ஒவ்வொரு கட்சிக்காரர்களும் தொலைக்காட்சி நிறுவனங்கள் ஆரம்பித்தார்களோ அப்போதே நடுநிலை என்பது போய்விட்டது. சன் தொலைகாட்சியில் கிளிநொச்சி வீழ்ந்த உடனே ஆனையிறவு வீழ்ந்ததாக செய்தி போட்டார்கள். அந்த அளவு செய்திகள் நடுநிலையாக இருந்தன.( ஆனால் மூன்று நாட்கள் போராடி தான் ஆனையிறவை விட்டு புலிகள் பின்வாங்கினார்கள்) . கலைஞர் தொலைகாட்சியில் மானமிகு நமிதாவை ஆடவிட்டு அதை மக்கள் பார்க்கும்படி செய்து இருந்தார்கள்.ஜெயா தொலைகாட்சியில் இலங்கையில் போரா என்று கேட்டு புண்ணியம் கட்டியவர்கள் தான் இருக்கிறார்கள்.மக்கள் தொலைகாட்சி இலங்கை போரை தொடர்ந்து காட்டியது. ஆனால் அதில் அரசியல் தேவைக்காக என்பதும் இருந்தது. விஜயில் பரவாயில்லை. நிகழ்ச்சிகளில் யாரேனும் ஈழ பிரச்சினைகளுக்கு அழுதாலும் காட்டினார்கள்.


நான் இந்த பதிவினை மனம் வெறுத்தே பதிவு செய்கிறேன். பலரின் பெயர்கள் எழுதவே நினைக்கின்றேன். ஆனால் அவர்களுடன் தொடர்பில் உள்ளவர்கள்  எல்லாம் நல்லவர்களாக இருக்கிறார்கள். அதனால் நான் எழுதுவது கடினம்.
உங்களுக்கு தெரிந்த துரோகிகளை(புதிய ) பற்றி கூறவும். இனிமேலாவது நாம் ஏமாறாமல் இருப்போம் ஆக.

லஞ்ச ஊழலைப் பொறுத்தவரையில் இவர் நெருப்பு மாதிரியாம் அவரே சொல்லிகொள்கிறார்

இந்தா பார்த்துக்கோ நானும் ரௌடி நானும் ரௌடி.
இது தான் தினமலரில் வந்துள்ள புது செய்தி.
அதே மாதிரி தான் இதுவும் கை சுத்தம் அப்படியென்றால் எதையும் நேரடியாக எதிர்கொள்ள வேண்டியது தானே. அதென்ன தன் பெயரில் ஏதும் இல்லையென்று இவரே பத்த்ரிக்கைகளுக்கு கொடுப்பது. முன்பு தான் தன் பெயரில் சொத்துக்களை வாங்கி பின்னர் ஊழல் குற்றசாட்டில் சிக்கிக்கொண்டு அவர்களே வெட்கப்பட்டு பதவியை ராஜினாமா செய்தார்கள் என்று கேள்விபட்டேன்.
இவர் என்னவென்றால் தன்பெயரில் எதுவும் இல்லை என்பதை இவரே ஒத்துகொள்கிறார். இதில் இவர் வங்கிக்கணக்கில், வைப்பு தொகையாக ரூ. 5 கோடியே 65 லட்சத்து 92 ஆயிரத்து 134ம்ல சேமிப்பு தொகையாக ரூ. 35 லட்சத்து 90 ஆயிரத்து 86 ம் மட்டுமே உள்ளது.(கூட்டினால் என்ன வரும் என்று எனக்கு தெரியாது. கணக்கில் நான் கொஞ்சம் வீக். இது இரண்டையும் கூட்டினால் ஒரு லட்சத்து ஐந்பதாயிரம் கோடி எல்லாம் வராது என்று சொல்ல வருகிறாரோ? நான் தான் கணக்கில் வீக் என்றால் இவருமா?)
பாவம் மஞ்சப்பையோடு கிளம்பியவருக்கு மாதம் உதவித்தொகையாக ஒரு லட்சம் கொடுத்தார்களோ என்னமோ?( கட்சி தொடங்கிய வருடத்தில் இருந்து) இவரும் சாதாரணமாக சொல்கிறார். அவருடைய மொத்த சொத்தும் ஏழு கோடிக்கு உள்ளே என்று. காமராசர் எல்லாம் இருந்தார் என்றால் தூக்கில் தொங்கணும். அப்படி ஒரு வளமான  கட்சியாக திமுக வளர்ந்திருக்கிறது. அவர் இருந்திருந்தால் அவரும் ஒரு பெரிய தொகையை தன்னுடைய சொத்தாக சொல்லிருப்பார். திமுகவை விட காங்கிரஸ் தான் மிக வளமையான கட்சியாக இருக்கிறது. திமுக ஆட்சியில் இருந்து பெரிதாக கொள்ளை அடிப்பதற்கு முன்னரே காங்கிரஸ் தான் கொள்ளை அடிப்பது எப்படி என்று போபர்ஸ் பீரங்கி ஊழலில் மற்றவர்களுக்கு பாடம் நடத்தியது. இப்போது மாணவர்கள்  எல்லாம் வாத்தியாருக்கு பாடம் எடுக்கிறார்கள்.(ஒருவேளை இதை தான் தாய் எட்டு அடி என்றால் குட்டி பதினாறு அடி பாயும் என்று கூறினாரோ?)
என்னமோ போங்க. ஒரு லட்சத்து ஐம்பதாயிரம் கோடி வைத்து இருப்பவர்களும் நாங்களும்  ஒரு லட்சத்து ஐம்பதாயிரம் கோடி தான் வைத்து உள்ளோம் அவ்வளவு தான் என்று சொன்னால் என்ன செய்வது?

ரோம் எரியும்போது பிடில் வாசித்து கொண்டு இருந்தவர்கள் தலைவர்கள் மட்டும் அல்ல, நாமும் தான்

ஈழ தமிழர்கள் இனபடுகொலை செய்யப்பட்டு கொண்டு இருந்தபோது நாம் சார்ந்து இருக்கும் மத்திய மற்றும் மாநில அரசாங்கம் என்ன செய்து கொண்டு இருந்தன என்றே தான் இன்னமும் நாம் பேசுகிறோம். ஆனால் நாம் என்ன செய்தோம் என்று பார்த்தால் ஒன்றுமே இல்லை. இதுவே நமது வீட்டில் இருப்பவர்களில் ஒருத்தருக்கு உடல்நிலை சரியில்லை என்று மருத்துவமனையில் சேர்க்கிறோம் என்று வைத்து கொள்வோம். மருத்துவமனையில் இருக்கும் மருத்துவர் பார்த்து கொள்வார் என்று வீட்டிலேயே இருக்கலாமே என்றா நாம் இருக்கின்றோம். மருத்துவமனையின் ஞாபகம் தூக்கத்தில் கூட வரும் அல்லவா?
அதே உணர்வு நம்மில் எத்தனை பேருக்கு வந்திருக்கும்? எதோ கூட்டாமாங்க, பேரணியாம். அவங்க நடத்துறாங்க. இவங்க நடத்துறாங்க. அவ்வளவு தான். அந்த பேரணியோ இல்லை உண்ணாவிரதமோ முடிந்தவுடன் வீட்டுக்கு போய் ஓய்வு எடுக்க சென்று விடுகிறோம். திரும்பவும் கேட்கிறேன். நம் வீட்டில் இருப்பவர்களுக்கு ஏதேனும் ஒன்று என்றால் எப்படி தூங்க முடிகிறது?  இதில் தமிழர்களின் சார்பாக என்று ஒரு போராட்டம் கூட நடந்தது இல்லை.



நான் இந்த கட்சியை சார்ந்தவன். அதனால் இந்த கட்சி நடத்தும் போராட்டத்தில் பங்கு கொள்கிறேன் என்று சொன்னார்கள். நான் அந்த கட்சி. அதனால் அந்த கட்சி என்றைக்கு போராட்டம் நடத்துகிறதோ? அன்று தான் நான் போராட்டத்தில் கலந்து கொள்வேன் என்றார்கள்.
என்ன கொடுமை இது. ஒரு நாளாவது இந்தியாவில் இருக்கும் தமிழர்களின் சார்பாக என்று இந்த போராட்டம் நடந்திருந்தால் எப்படி இருந்திருக்கும்? யார் யார் இந்த இனபடுகொலைகளுக்கு காரணமோ அவர்கள் எல்லாருக்கும் பயம் வந்திருக்காதா?


இது பேரணி அல்லது உண்ணாவிரதத்தில் கலந்து கொண்டவர்களை பற்றியது. மற்றவர்களுக்கு என்றால் நான் கேட்க விரும்பும் கேள்வி ஒன்றே தான். உங்க வீட்ல இழவு விழுந்தா தான் வந்து கலந்து கொள்வீர்களா? பக்கத்து வீட்டுக்காரன் என்றால் கலந்துகொள்ள மாட்டீர்களா?

இதில் வேறு சிலகொடுமைகளும் உண்டு. அடுத்தவர்கள் நடத்தும் போராட்டத்தில் சென்று தங்களின் முகமும் கட்சியின் பெயரும் வர வேண்டும் என்பதற்காக மட்டும் கலந்து கொண்டு மறுநாள் செய்திதாள்களில் வந்தவர்களும் உண்டு. இவர்களை யாரும் அழைக்கவே வேண்டாம். அவர்களாகவே வந்து விழாவை சிறப்பித்து தாங்கள் வந்த நோக்கம் நிறைவேறியவுடன் சென்று விடுவார்கள்.( வேற என்ன புகைப்படங்கள் தான்).
இப்படி பட்டவர்கள் தான் பல மாணவர்களின் போராட்டங்களை குழப்பி கேடு விளைவித்தது. புலிகளின் தலைவரோடு புகைப்படங்கள் எல்லாம் எடுத்து கொண்டால் புலிகளை ஆதரிக்கிறார் என்று எந்த மடையர்கள் சொன்னாரோ தெரியவில்லை. (வெள்ளையாக இருப்பவன் எல்லாம் போய் சொல்ல மாட்டான் என்று சொல்வது போல்). இன்னமும் இந்த உலகம் அவரை நம்புகிறது. என்ன சொல்வது என்றே தெரியவில்லை எனக்கு. உண்மையில் இந்த இனபடுகொலைகளை தடுக்க முயற்சித்தவர்கள் எல்லாம் ஏதோ ஒருவகையில் சிறைவாசத்தை அனுபவித்தார்கள். ஆனால் எதையுமே பார்க்காமல் இவர்கள் தான் ஏதோ இனபடுகொலைகளை தடுக்க முயற்சித்தவர்கள் என்பது போல் ஏன் இன்னும் நடிக்கிறார்கள்? ஒருவேளை அடுத்த வருடம் வரும் தேர்தலை முன்னிட்டோ?

என்னை கேட்டால் போராட்டம் நடத்த ஒரு எளிமையான வழி இருக்கிறது. நீங்கள் ஒன்றுமே செய்ய தேவை இல்லை. அது மட்டுமே தான் இதனை போன்ற மோசமான நிலையில் நீங்கள் செய்ய வேண்டியது. ஒன்றும் செய்யாமல் என்றால் வீட்டில் உட்காந்து தொலைக்காட்சி பார்ப்பது இல்லை. உங்கள் வீட்டில் தொலைகாட்சியே இல்லை என்றால் என்ன செய்வீர்கள்? வீட்டிற்கு வெளியே வந்து நிற்பீர்கள் அல்லவா? அது போல் ஒரு நாள் அனைவரும் வந்து நின்றாலே எல்லாம் நின்று போய்விடும். (தவறாக இருந்தால் மன்னிக்கவும்).

இதை ஏன் இப்பொழுது சொல்கிறேன் என்றால் இந்த ஈழத்தமிழர் போராட்டமானது முடிந்துவிட்டது என்று நம்மை நாமே ஏமாற்றி கொள்கிறோம். ஆனால் அது ஒரு தொடர்கதை. அதில் இருக்கும் காற்புள்ளியானது கண்ணுக்கு தெரியாமல் உள்ளது. அவ்வளவு தான். மீண்டும் இதே தப்பினை நமது ஆட்சியாளர்கள் திரும்ப செய்யாமல் இருக்க  நாம் திடமனதோடு தமிழர்களாகவோ அல்லது மனிதர்களாகவோ இருக்க வேண்டுகிறேன்

இந்த வண்டியை நாம வச்சிருக்கோம், இந்த வண்டியை வச்சிருந்த சொப்பன சுந்தரியை யார் வச்சிருக்காங்க ?

என்னடா, கரகாட்டகாரன்ல வார நகைசுவையை போட்டு இருக்கானேன்னு பார்க்கிறிங்களா? அதென்னங்க குற்றம் செய்தவனை விட்டுவிட்டு குற்றத்தை மட்டுமே பார்கிறார்கள். இந்திய நீதிமன்றத்தில் நீரா ராடியா சம்பந்தப்பட்ட டேப்பினை ஒப்படைக்க சொல்லி நீதிமன்றம் உத்தரவிட்டு இருக்கிறதாம். பாருங்க இந்த கொடுமையை. இந்த டேப் எல்லாம் இருப்பது அரசாங்கத்திடமே. ஆனாலும் நீதிமன்றத்திற்கு அரசின் மேல் நம்பிக்கை இல்லை. ஒரு வேலை இந்த மத்திய அரசு தான் இந்த டேப்பில் தனக்கு வேண்டாத நபர்கள் பற்றிய விவரங்களை அதுவாகவே தவறவிடுகிறதா? இல்லை மராட்டிய மாநிலத்தில் கார்கில் தியாகிகளுக்கான குடியிருப்பு சம்பந்தபட்ட தகவல்கள் காணாமல் போனது போல் இந்த டேப்புகள் எல்லாம் காணாமல் போய் விடும் என்று நினைக்கிறதா?



நாம் ஒரு நூறு ரூபாய் கையூட்டு வாங்குகிறோம் என்று வைத்து கொள்ளுங்கள். அதை ஒருத்தர் காவல்துறையில் புகார் அளிக்கிறார். நம்மை விசாரிக்கும்போது நாமும் ஒத்துக்கொண்டு விடுகிறோம். அப்போது நீங்கள் தானே குற்றத்தை ஒத்துக்கொண்டு விட்டீர்கள் என்று உங்களை நீதிமன்றத்தில் நிறுத்தாமல் விடுவார்களா என்ன?

நீரா ராடிய கையூட்டு பெற்றதை அவரே ஒத்துக்கொண்டு இருக்கும்போது அவரை தானே முதலில் நீதிமன்றத்தில் ஒப்படைக்க வேண்டும். அதைவிட்டுவிட்டு நீரா ராடியா டேப் விவகாரத்தில் டேப்களை வெளியே கசிய விடக்கூடாது என்று கூறி மனு தாக்கல் செய்த ரத்தன் டாட்டாவிற்க்காக டேப்பினை நீதிமன்றத்தில் ஒப்படைக்க சொல்வது எந்த விதத்தில் நியாயம்.

ஒரு சக்கரை நோயாளிக்கு இருதய துடிப்பு நின்று விட்டால் காலில் போயா சிகிச்சை அளிப்பார்கள்.

நீரா ராடியா டேப்பிணை நீதிமன்றத்தில் ஒப்படைப்பது இருக்கட்டும் நீரா ராடியாவை எப்போது நீதிமன்றத்தில் ஒப்படைப்பார்கள்.

Popular Posts