திமுகவின் வெற்றி உறுதி

தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட பின்னர் தேர்தல் ஆணையம் எல்லா இடங்களிலும் சோதனை  நடத்தி கருப்பு பணம் பட்டுவாடா செய்யப்படுவதை   தடுத்து வருகிறது. இந்த நிலையில் கருணாநிதியின் தூண்டுதலின் பேரில் பொதுமக்கள் இதில் பாதிக்கப்பட்டதாக புகார் அளிக்கப்பட்டது.இதுவரை சிக்கிய கணக்கில் வராத பணத்தின் மதிப்பு இருபது கோடிகள் என்றால் இன்னும் இருபது நாட்களில் எவ்வளவு கோடிகள் கைப்பற்றப்படும். இது வரை சிக்கிய பணம் எல்லாம் சாதாரணம். அண்ணன் அஞ்சா நெஞ்சனின் கோட்டையில் பதுக்கப்பட்டு இருக்கும் பணத்தின் மதிப்பில் இதெல்லாம் தூசு.

தேர்தலில் பணம் பட்டுவாடவை தடுக்க தேர்தல் ஆணையம் எடுக்கும் இந்த முயற்ச்சியை பற்றி வேறு யாருமே இதுவரை கண்டனக்குரல் எழுப்பவில்லை. ஆனால் கலைஞர் மட்டும் இதனை எழுப்பி அதனை தடுத்தும் விட்டார். இனிமேல் பயணிகள் என்ற பெயரில் யார் வேண்டுமானாலும் கோடிகளை துணிமணி பைகளில் கொண்டு செல்லலாம்.
 
பட்டுவாடாவிற்கு ஏற்பாடு செய்துவிட்டது. அடுத்து இருப்பது வாக்காளர்களை கவர்வது அல்லது பயமுறுத்துவது. வாக்காளர்களை கவர இலவசங்களை அள்ளி கொடுத்து விட்டன இரு பிரதான கட்சிகளும். ( சும்மா இருக்கும் பெண்களுக்கு குழந்தைகள் தான் இன்னும் இந்த கட்சிகள் கொடுப்பதாக சொல்லவில்லை.) இந்த இலவசங்கள் ஆட்சிக்கு வந்தால் தரப்படும். வருவதற்கு முன்னால் என்ன தருவீர்கள் என்று கேட்கும் வாக்காளர் பெருமக்களுக்கு, வெள்ளி கொலுசு, ஒரு ஓட்டுக்கு இரண்டாயிரம் ரூபாய் முதல் ஐந்தாயிரம் ரூபாய் வரை தரப்படுகிறது. இந்த பட்டியல் கொஞ்சம் நீளம் என்பதால் இவற்றை மட்டுமே போட்டு உள்ளேன். கவரும் விஷயங்கள் செய்து விட்ட பின்னர் மிச்சம் இருப்பது பயமுறுத்துவது. அதனையும் சிறப்பாக செய்யத்தான் நிறைய விஷயங்கள் இருக்கின்றனவே. கழக உடன்பிறப்புகள் அந்த அந்த தொகுதிகளில் உள்ள வார்டு உறுப்பினர்களை குப்பிட்டு பேசி உள்ளனர். வாக்காளர்களிடம் வெப் கேமரா இருப்பதால் எளிதாக நீங்கள் யாருக்கு போடுகிறீர்கள் என்று பார்த்து விடுவோம் இது தான் அவர்களின் முதல் தாக்குதல். நாங்கள் ஜெயித்து வந்த பின்னர் உங்களுக்கு மாநகராட்சியில் இருந்து எதுவும் வரவிடாமல் செய்வோம். (திமுக தான் இப்போது மதுரையில் உள்ளது.) இப்படி பல நல்ல காரணங்களை கூறி ஒட்டு கேட்கின்றனர்.

இது தவிர சன் தொலைகாட்சியில் வரும் புது செய்திகளையும் கவனியுங்கள். வேட்பாளர்களுக்கு தேர்தல் ஆணையம் நிர்ணயித்துள்ள செலவுகள் இடத்தை பொறுத்து வேறுபடுகிறதாம். எப்படிஎன்றால் கிருஷ்ணகிரியில் வேட்பாளர் சாப்பிடும் வடையின் விலை ஏழு ரூபாய் என்றால் சென்னையில் பத்து ரூபாய்யாம். வெஜ் பிரியாணிக்கு தொண்ணூறு என்றும் நான்-வெஜ் பிரியாணிக்கு நூற்றிபத்து ரூபாயும் தேர்தல் ஆணையம் நிர்ணயம் செய்துள்ளதை கிண்டல் செய்துள்ள சன் தொலைக்காட்சி, இன்னொரு வகையில் ஒரு நன்மை செய்துள்ளது. அது என்னவென்றால் வேட்பாளர் பிரியாணிக்கு தொண்ணூறு ரூபாய்க்கு மேல் செலவு செய்ய எதிர்பார்க்கிறார் என்றால் இவர் தொகுதி பயன்பாட்டு நிதியில் எவ்வளவு பணத்தை தனக்கு பிரியாணி வாங்க செலவு செய்வார் என்பதை காட்டியுள்ளது. மேலும் பொதுமக்கள் தேர்தல் ஆணையத்தினால் கஷ்டபடுகின்றனர் என்று செய்திகள் வெளியிட்டதே தவிர மக்கள் பணத்துடன் வெளியே செல்லும்போது அந்த பணம் எங்கே இருந்து கொண்டு செல்லப்படுகிறது என்பதை விவரிக்க ஆதாரங்களை எடுத்து செல்ல பணிக்கவில்லை.( வங்கியில் இருந்து எடுத்திருந்தால் இதெல்லாம் தேவையே இல்லையே.).




ரியல் எஸ்டேட் தொழில் செய்பவர்கள் இதில் பாதிக்கபடுகின்றனர் என்பது அடுத்த புகாராம். கணக்கில் வராத பணம் எதில் முதலிடு செய்தாலும் அது கருப்பு பணம் தானே. இதில் என்ன ரியல் எஸ்டேட் தொழில் செய்பவர்களுக்கு மட்டும் சிறப்பு சலுகை.(ஒரு வேளை அந்தந்த மாவட்டங்களில் ரியல் எஸ்டேட் தொழில் செய்பவர்கள் தான் தேர்தலில் பணத்தை செலவு செய்ய போகிறார்களா?)

தமிழ்நாட்டில் நடக்கும் தேர்தலுக்கு தேர்தல் ஆணையம் எதற்கு  என்று கூட கேட்கும் காலம் வரும் என்றே தான் நினைக்கிறேன்.கடந்த மாநகராட்சி தேர்தலில் வாக்குபெட்டிகள் ரோட்டில் கிடந்தபோது இந்த நீதிமன்றங்கள் என்ன செய்தன என்று தெரியவில்லை. வழக்கம் போல நடப்பதை தடுக்கும் நீதிமன்றங்களும் நடந்த பின்னர் அதனை மறுக்கும் அரசியல்வாதிகளும் அவர்களின் சொற்பேச்சு நடக்கும் அதிகாரிகளும் இருக்கும் வரையில் திமுக ஜெயிக்க தான் செய்யும். நீங்கள் வாங்கும் ஒவ்வொரு இலவசமும் எங்களின் வரிப்பணம் என்பதை உணருங்கள்.

தீர்ப்பளிக்கும் நீதிமன்றங்களும் அதை மதிக்க தவறும் அரசு இயந்திரங்களும்

தடை செய்யப்பட்ட இயக்கத்துக்கு ஆதரவாக போராட்டம் நடத்துவதோ, பிரச்சாரம் செய்வதோ குற்றமாகாது என்று வைகோ மீதான பொடா வழக்கில் உச்சநீதி மன்றமே தீர்ப்பளித்துள்ளது. எனவே விடுதலைப் புலிகள் மீது இந்தியாவில் விதிக்கப்பட்டுள்ள தடையை எதிர்த்து கையெழுத்து இயக்கம் நடத்துவது தவறு அல்ல.இதுதொடர்பாக, புலிகளுக்கு ஆதரவுக் கருத்துக்களைச் சொல்லவும் தடை இல்லை. இவை அரசியல் சட்டத்துக்கு எதிரான செயல்கள் அல்ல.
நானும் விவரம் தெரிந்த நாளில் (அதாவது இன்டர்நெட் வசதிகள் வந்த பின்னர்) இருந்து பார்த்து கொண்டு தான் இருக்கிறேன். கருத்துரிமை என்பது நமது தமிழ்நாட்டில் ஏட்டளவில் மட்டுமே தான் இருக்கின்றது. அதுவும் யாராவது வழக்கு தொடுத்தால் மட்டுமே அதனை ஏட்டில் வைத்து உள்ளார்கள் என்பது புலனாகிறது. பின்னர் மீண்டும் இதனை போன்ற ஒரு சம்பவத்தில் பழையபடி யாரோ ஒரு காவல்துறை அதிகாரி கருத்துரிமைக்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டங்களை தடுக்கலாம், கைது செய்யலாம் ஏன் பொடாவில் கூட போடலாம்.



ஒருவரை இப்படி கைது செய்து சிறையில் அடைத்து பின்னர் அவர் நிரபராதி என்று தீர்ப்பானால் அவரை கைது செய்த காவல்துறை அதிகாரிக்கு என்ன தண்டனை தர வேண்டும்/தரலாம். ஒரு வேளை அரசின் அழுத்தத்தின் பேரில் தான் அவர் செய்தார் என்று தீர்ப்பானால் அதற்கு சம்பந்தபட்டவரை என்ன செய்யலாம்/ செய்வார்கள்?

என்ன பாவம் செய்தார்கள் ஜப்பானியர்?

வெள்ளிகிழமை காலை மணி பதினொன்றுக்கு ஆரம்பித்த இயற்கையின் ருத்ர தாண்டவம் இன்னும் முடியவில்லை ஜப்பானில். அப்படி என்ன பாவங்கள் செய்தார்கள் நம்மை விட? சிறந்த தொழிலதிபர்கள், சிறந்த மக்கள், சிறந்த அரசியல்வாதிகள் இருந்தும் இந்த இயற்கை பேரழிவு மட்டும் தான் அவர்களுக்கு இருக்கும் ஒரே தடைகல். நட்பில் மட்டும் அல்ல அரசியல் நாகரிகத்திலும் கூட ஜப்பானியர்களின் கால் தூசிக்கு கூட நமது அரசியல்வாதிகள் ஈடாக மாட்டார்கள்.

நேற்று இரவு முதல் நமது தொலைகாட்சிகளில் நமது அணு உலைகள் முற்றிலும் பாதுகாப்பானவை என்றும் அவற்றை ஒன்றும் செய்ய முடியாது என்றும் தொடர்ந்து சொல்லி கொண்டிருக்கின்றனர். இதில் நம்மை பார்த்து அவர்கள் கற்று கொள்ள வேண்டும் என்று வேறு சொல்லி வருகின்றனர். ஒருவேளை நமது உலைகள் பாதுகாப்பானவையாகவே இருக்கட்டுமே அதை ஏன் இந்த நேரத்தில் சொல்ல வேண்டும். மக்கள் ஒன்றும் இங்கே உலைகளின் பாதுக்காப்பினை பற்றி பேசவில்லையே. கல்பாக்கத்தில் ஒரு முறை உலைகள் பற்றிய பீதி ஏற்பட்டபோது இப்படியா சொல்லிக்கொண்டு இருந்தனர். அரசின் கடை நிலை ஊழியர்கள் மட்டுமே அந்த நேரத்தில் அங்கே இருந்து விளக்கி கொண்டு இருந்தனர். இப்போது என்ன வென்றால் தொலைகாட்சியில் சொல்லி கொண்டே இருக்கின்றனர். நாம் ஜப்பானுக்கு பாடம் சொல்லி கொடுக்கிறோம் என்று வேறு அவர்களின் வெந்த புண்ணில் வேல் பாய்ச்சுவதாக நினைத்து இங்கே கதை சொல்லி கொண்டு திரிகின்றனர்.




சுனாமியும் அனுகதிர்வீச்சும் ஏற்படுத்திய பிரச்சினைகளில் இருந்து ஜப்பான் மீள மற்ற நாடுகள் போர்க்கப்பல்களில் நிவாரணங்களை அனுப்பும்போது நம் பிரதமர் நிவாரணம் அனுப்பட்டுமா என்று கேட்டதாக செய்திகள் வந்தன. என்ன கொடுமை சார் இது.

பிரச்சினையில் சிக்கி இருக்கும் ஜெயலலிதா

ஹசன் அலி விவகாரத்தை மத்திய அரசு அதன் பிரம்மாஸ்திரமாக வைத்து காரியங்களை சாதிக்க உள்ளது. திமுக உடன் காங்கிரஸின் கூட்டணி உறுதியான உடனே ஹசன் அலி விவகாரத்தினை மத்திய அரசு சரியாக கையாளுகிறதா என்ற சந்தேகத்தை எழுப்பி உள்ளது. ஹசன் அலியின் மொத்த சொத்தின் மதிப்பு ஒன்பது பில்லியன் அமெரிக்க டாலர்கள் என்று உள்ளது. இவர் குதிரைகளை வாங்கி விற்கும் தொழிலில் இருந்து உடைந்த இரும்பு பொருட்களை வாங்கி விற்கும் தொழிலில் கோடி கட்டியுள்ளார். இதற்காக இவர் யாரிடமிருந்து கடன் பெற்றார் என்ற விவரம் தெரியவில்லை. அதன் பின்னர் இவர் தொடங்கியுள்ள பத்து சுவிஸ் வங்கி கணக்குகளில் யாருடைய பணம் உள்ளது என்றும் தெரியவில்லை. ஸ்பெக்ட்ரம் பணம் சத்தியமாக இவரிடம் போய் முடங்கவில்லை என்பது கலைஞர் தொலைகாட்சியிலும் மலேசியாவிலும் செய்யப்பட்ட முதலீடுகளில் இருந்து தெரிகிறது.


இவரிடம் பணம் கொடுத்தவர்களில் ரெட்டி சகோதரர்கள், அந்திராவினை சேர்ந்த ஒரு கட்சித்தலைவரின் மகன், தமிழ்நாட்டில் ஜெயலலிதா ஆகியோர் முக்கியமானவர்கள் என்று செய்தி கசிகிறது. இந்த விவகாரம் முன்னரே தெரிந்து இருந்தாலும் மேலே சொல்லப்பட்ட நபர்களை நோக்கி மட்டும் இப்போதைக்கு மத்திய புலனாய்வு துறையின் கைகள் நீளுகிறது. ஒரு வேளை தேர்தல் நேரத்தில் ஜெயலலிதா கைது செய்யப்படும் நிலையும் வரலாம்.



தேர்தல்கள் வரும்போது மட்டும் நீதிமன்றங்களும் மத்திய புலனாய்வு துறையும் சிறப்பாக இயங்க காரணம் என்ன?

தலைக்கு மேல் தொங்கும் கத்திகள்

நாம் எதிர்பார்த்தது போலவே கலைஞரின் ராஜினாமா மற்றும் கூட்டணி முறிவு நாடகங்கள் முடிவுற்று இன்று ஏழு வருட கூட்டணி மீண்டும் இணைகிறது. பலர் எதிர்பார்த்தது போல் இந்த தேர்தலில் காங்கிரஸ் கலைஞரையோ அல்லது கலைஞர் காங்கிரசையோ கை கழுவுவார்கள் என்று தான் எதிர்பார்த்தார்கள். ஆனால் காங்கிரஸ் ஏற்கனவே கிடைத்த உளவுத்துறையின் கணிப்பின் பேரிலே காய்களை நகர்த்துகிறது. காங்கிரஸ் தனித்து நின்றால் தற்போது பாமக கட்சி எந்த அளவில் இருக்கிறதோ அதே அளவில் தான் இருக்கும் என்று காங்கிரஸ் தலைமைக்கு தெரியும். அதன் கைகளில் சிக்கிய மானாக இருந்தாலும் திமுக ஒன்றும் சாதாரண கட்சி இல்லை. ஸ்பெக்ட்ரம் பணத்தில் குளித்தவர்கள் எல்லாம் திமுகவில் தான் அதிகம் இருக்கிறார்கள். இப்போது மத்திய அரசின் கையில் தான் அனைத்து மத்திய அரசின் துறைகளும் இருக்கிறது(நீதி, தேர்தல் ஆணையம், மத்திய புலனாய்வு துறை  போன்றவை தனிப்பட்ட மற்றும் தன்னிச்சையாக இயங்ககூடிய நிறுவனங்கள் என்றாலும் உண்மையில் இவை மத்திய அரசின் கட்டுப்பாட்டில் இயங்குகின்றன)

அத்தனை துறைகளையுமே இந்த ஐந்து சட்டமன்ற தேர்தல்களில் துஸ்பிரயோகம் செய்ய இருக்கிறது.தமிழ்நாட்டில் நடக்கும் இந்த தேர்தலில் என்ன தான் பணம் பட்டுவாடா செய்தாலும் மக்கள் திமுக கூட்டணிக்கு எதிராக தான் இருக்கிறார்கள். அந்த எதிர்ப்பு இன்னும் ஒரு மாதத்தில் ஆதரவு என்று மாறுவதற்கு வாய்ப்புகள் இல்லை. ஒருவேளை பெட்ரோல் விலையை ஒரே மாதத்தில் மூன்று வருடங்களுக்கு முன்னர் உள்ள விலைக்கு குறைத்தாலோ அல்லது கச்சதீவு ஒப்பந்தத்தை முறித்து காட்டினாலோ அல்லது விலைவாசியை ஒரே மாதத்தில் குறைத்து காட்டினாலோ அல்லது மின்வெட்டு இல்லாமல் ஒரு மாதத்தில் தமிழகம் இருந்தாலோ தான் இது நடக்கும். ஆனாலும் திமுக கூட்டணி ஜெயிக்க வேண்டுமே. அதற்கு தான் தேர்தல் முடிந்தவுடன் ஒரு மாத இடைவெளி இருக்கிறது. ஒவ்வொரு நாளும் மின்னணு இயந்திரங்களில் ஓட்டுக்கள் மாற்றப்பட்டு திமுகவின் கூட்டணி ஜெயிக்கவைக்க வாய்ப்பு அதிகம் உள்ளது.


ஒரே நாள் இரவிலே சென்ற பாராளுமன்ற தேர்தலில் முறைகேடுகள் செய்ய தமிழகம் முழுவதும் மின்வேட்டினை ஏற்படுத்தி வெற்றி கண்டனர். அதே முறை இந்த தேர்தலிலும் வெற்றி பெற வழிவகுக்கலாம். அந்த வாய்ப்பு இல்லை என்றால் திமுக காங்கிரசிடம் இந்த அளவுக்கு ஒட்டிக்கொண்டு இருக்க வேண்டாம். எப்படி என்றாலும் திமுகவினருக்கு கைது நடவடிக்கைகளில் இருந்து தப்பிக்க வேண்டும். அதற்கு காங்கிரஸ் வேண்டும். காங்கிரசுக்கு தமிழ்நாட்டில் கூட்டணி வேண்டும். கூட்டணி மட்டும் எதுவும் இல்லையென்றால் காங்கிரஸ் இருக்கும் இடம் காங்கிரஸ் தலைவர்களுக்கு மட்டுமே தெரியும் ஒரு கட்சியாக மாறி விடும்.
 
உதாரணத்திற்கு காங்கிரஸ் கட்சியில் செத்து சுடுகாடு சென்ற பலர் இன்னமும் தொண்டர்களாக இருக்கின்றனர். இதை காங்கிரஸில் இருக்கும் சிதம்பரம் ஒரு முறை கண்டே பிடித்து விட்டார். அப்படி இருக்கும் கட்சிக்கு என்ன பலம் இருக்க முடியும்? ஒட்டுண்ணியின் பலமே அது எங்கு ஒட்டி கொண்டு இருக்கின்றது என்பதில் தானே.




இப்படி ஒரு கூட்டணி தான் நம்மை அடுத்த ஐந்து வருடங்கள் ஆள போகின்றது என்றால் நம் நிலை எப்படி இருக்கும். இப்போது இருக்கும் விலைவாசி ஏற்றத்திற்கு காரணம் பொருளாதார முன்னேற்றம் தான் என்று கருத்து சொல்கின்ற ஆட்களும் இருக்கிறார்கள். இவர்கள் தான் உலகிலே மிக்க படித்தவர்கள்.(எட்டாவது பாஸ்). பொருளாதார முன்னேற்றத்தை கருத்தில் கொண்டு விலைவாசியை கட்டுபாட்டில் வைக்கும் காரணிகளை கட்டுபடுத்த தவறியவர்கள் மத்திய அரசு மட்டுமே. உண்மையில் பெட்ரோல் விலை ஏற்றத்தை அரசினால் கட்டுபடுத்த முடியும். அதன் மூலம் விலைவாசியையும் கட்டுபடுத்த முடியும். எப்படி என்றால் மத்திய அரசு தன் கையிருப்பில் சில ஆயிரம் கோடிகளை வைத்து உள்ளது. இது எதற்காக என்றால் எப்போது எல்லாம் கச்சா எண்ணையின் விலை ஏறுகிறதோ அப்போது எல்லாம் மத்திய அரசு அதில் இருந்து எடுத்து சமாளிக்கும். பின்னர் பீப்பாயின் விலை குறையும்போது அதன் கையிருப்பில் பணம் சேரும்.( பீப்பாயின் விலை ஏறும்போது பெட்ரோல் விலை ஏற்றி பின்னர் குறையும்போது பெட்ரோல் விலையை குறைக்க வேண்டுமே. ஆனால் அப்படி நாம் செய்வதில்லை) இப்படி பலவழிகளில் விலைவாசியை கட்டுக்குள் வைத்திருக்க முடியும்.



அப்படி விலையை கட்டுக்குள் வைத்திருக்க முடியும் என்று இருக்கும்போது மத்திய அரசு ஏன் அப்படி செய்வது இல்லை என்பது தெரியுமா? அதற்கும் நாம் தான் காரணம். ஒவ்வொரு மாநிலமும் தங்களின் தேவைக்கு என்று சில ஆயிரம் கோடிகளை மானியமாகவும் கடனாகவும் மத்திய அரசிடம் இருந்து பெறுகின்றன. இந்த தொகை எப்படியும் லட்சம் கோடியில் இப்போது இருக்கும். அந்த தொகையினை ஒழுங்காக செலவு செய்தால் அதன் பின்னர் அதே தேவைக்கு இதே போல் மானியமாகவும் கடனாகவும் கேட்க தேவையில்லை.( பேரிடர் நிவாரண நிதி இதில் வரவில்லை). அந்தந்த தொகுதிகளில் இருக்கும் வேலைகளுக்கு என்று ஆரம்பித்து ஒவ்வொரு முறையும் லஞ்சம் வழங்கப்பட்டு செய்யும் வேலைகளின் செலவு தொகையை விட பல இடங்களில் லஞ்சம் அதிகம் என்றாகின்றது. (உதாரணத்திற்கு லஞ்சம் அதிகமாகி விட்டது இப்போது என்று பாலம் கட்டாமல் இருக்க முடியாது என்பதால் அதில் கலக்கும் பொருட்களின் தரமும் குறைகிறது. தரம் சரி இல்லையென்பதால் இதே பாலம் அடுத்த மழையில் பல்லை இளிக்கிறது).

இதே சங்கிலி தொடர் பின்னரும் நடக்கிறது. அது சரி இந்த சங்கிலி தொடர் எப்போதும் இருப்பது போல் தானே இப்போதும் இருக்கிறது என்று தானே நினைக்கிறீர்கள். அது தான் இல்லை. எப்போதுமே லஞ்சம் எல்லா மட்டங்களிலும் ஒரே அளவில் பரவும்போது விலைவாசியை பற்றி கவலை படத்தேவையே இல்லை. ஆனால் இப்போது அதி மிஞ்சிய அளவில் இருக்கும் லஞ்சப்பணம் கருப்பு பணமாக மாறுகிறது.அந்த பணம் வெளிநாடுகளில் தேங்கி விட்டால் இங்கே அந்த லஞ்சம் கொடுத்த நிறுவனங்கள் அந்த லஞ்ச பணத்தையும் தங்களின் முதலீடுகளில் ஒன்றாக தான் கருதுவார்கள். அந்த முதலீட்டை எப்படி திரும்ப பெறுவது என்று யோசிக்கும்போது நம்மை போன்ற சாமானியர்களுக்கே தெரியும் பொருட்களின் விலையேற்றம் மூலம் லாபத்தை அதிகரிக்கலாம் என்று அவர்கள் எல்லாம் பழம் தின்று கொட்டை போட்டவர்களாக இருக்கும்போது அவர்களுக்கு தெரியாதா என்ன?




விலையை ஏற்ற வேண்டும் அதே நேரத்தில் அது தெரியவும் கூடாது அல்லது மத்திய அரசின் மூலம் தங்களுக்கு தேவையான துறையில் ஒதுக்கீடு பெற வேண்டும். இதில் முதலில் சொன்னது உடனடியாக லாபம் பார்க்கும் விடயம். மற்றதில் உங்களின் கருப்பு பணம் அனைத்தையும் முதலீடு என்ற பெயரில் நுழைக்கும் வசதியும் இருக்கிறது. உங்கள் ஊரில் ஒரு ஏக்கர் நிலத்தின் விலை ஒரு லட்ச ரூபாய் என்று வைத்து கொள்ளுங்கள். உங்கள் ஊரினை சுற்றி 400 ஏக்கர் நிலம் இருக்கின்றது என்று வைத்து கொள்வோம். இந்த நிலம் பலரிடம் பரவி இருக்கிறது. அதாவது சிறு சிறு விவசாயிகள் பலரின் நிலமாக அது இருக்கிறது. நீங்கள் இப்போது அமைச்சருக்கு வேண்டிய ஒருத்தர், அந்த அமைச்சர் 40 கோடி ரூபாய் உங்களிடம் கொடுக்கிறார் என்று வைத்து கொள்வோம். எப்போதுமே நமக்கு சொந்த ஊரின் மேல் ஒரு கண் இருக்கும். வழக்கமாக எல்லாரும் செய்வது போல் நீங்களும் சாலையின் இருமங்கிலும் உள்ள நிலத்தினை ஏக்கர் ஒரு லட்சத்தி ஐந்பதாயிரம் என்று வாங்குகிறீர்கள்.( இப்போதெல்லாம் ஏக்கர் ஒரு லட்சம் என்றால் ஆளும்கட்சியினர் எழுபத்தி ஐந்து லட்சத்திற்கு தான் வாங்குகின்றனர்). விருப்பபட்டு கொடுப்பவர்கள் பலர் எனும்போது அவர்களின் நிலங்களின் இடையில் சிக்கி கொள்ளும் நிலத்தின் உரிமையாளர் கண்டிப்பாக நிலத்தை விற்றே ஆக வேண்டிய நிலைக்கு ஆகின்றார். காலங்காலமாக விவசாயம் செய்தவர்களை திடீர் என்று வேறு தொழில் பார்க்க வைத்தால் என்ன நடக்கும். நிலத்தை விற்று கிடைத்த பணத்தை கண்டிப்பாக புதிதாக தொடங்கும் தொழிலில் தான் முதலீடு செய்வர். ஒரே ஊரில் பலர் நிலத்தை விற்று ஒருவர் ஏற்கனவே இருக்கும் தொழிலில் போட்டியாக தொழில் தொடங்க வேண்டிய கட்டாயத்தில் தள்ளப்படுகின்றார்.அந்த தொழிலில் பற்றாக்குறை அதிகம் இருந்தால் அவரால் தொடர்ந்து அதே தொழிலில் நடத்த முடியும். ஆனால் அப்படி ஒரு தொழிலிலும் பலர் இருந்தால் பற்றாக்குறை குறைந்து பொருளின் விலையும் குறைந்து தொழில் செய்பவர் நட்டம் அடைகிறார்.( இது MRF நிறுவனம் அரியலூர் அருகே விவசாயிகளிடம் நிலத்தை வாங்கியதால் வந்த நிலைமை. விருப்பபட்டு கொடுத்தவர்கள் சிலர் மட்டுமே.)



உண்மையை சொல்லப்போனால் விலைவாசியை பாதிக்கும் காரணிகள் என்று சொல்லப்படும் அனைத்திற்கும் இப்போது ஆட்சியில் இருக்கும் மத்திய அமைச்சர்களுக்கும் சம்பந்தம் இருக்கிறது. அமைச்சர்கள் தங்களுக்கு வேண்டியவர்களுக்கு என்று செய்திருக்கும் அனைத்தும் தான் இப்போது நம்மை பாதிக்கின்றது.( சிமெண்ட் தொழிலில் ஆதிக்கம் செலுத்துவது தற்போது உள்ள திமுக கட்சியினரே.சிமெண்ட் விலை அதன் மூலபோருட்களின் விலை அதே நிலையில் இருக்கும்போதும் ஏறுகின்றது அல்லது எற்றபடுகின்றது.)

இப்படி விலைவாசியை ஏற்றும் திமுக காங்கிரஸ் கூட்டணியினர் ஸ்பெக்ட்ரம் பணத்தில் சில புதிய முதலீடுகள் வந்திருப்பதாக கணக்கு காட்டியுள்ளனர்.( தொழில்கள் புதிதாக தொடங்குகின்றனர் என்று பார்த்தால் அடுத்தவரிடம் இருந்து அந்த தொழிலை பிடுங்கி கொள்கின்றனர்.)




சென்ற தேர்தலில் எப்படி சிதம்பரம் ஜெயித்து வந்தாரோ அதே போல் இந்த முறையும் பலர் ஜெயித்து வர முடியும். (அதே பணம் தானே இப்போதும் வேலை செய்ய போகிறது.அப்புறம் என்ன?) இந்த ஸ்பெக்ட்ரம் பணம் வெளிநாட்டில் அதிக அளவில் இருக்கின்றது என்கிறார்கள். இதுவரை இந்தியாவிற்குள் வந்த ஸ்பெக்ட்ரம் பணமே இவ்வளவு விலைவாசியை ஏற்றுகிறது என்றால் முழுபணமும் உள்ளே நுழைந்தால் அப்போது என்ன நிலையில் நாம் இருக்க போகிறோம் என்று தெரியவில்லை.



காஷ்மீரில் தீவிரவாதம் தொண்ணூறுகளுக்கு பின்னர் தான் நுழைந்தது. ஏன் நுழைந்தது? அதற்கு முன்னர் பிரிவினைவாதம் பற்றி அவர்கள் ஏன் பேசவில்லை? நமது தேர்தலின் லட்சணம் அப்படி. தேர்தலில் 1987 இல் நடந்த சம்பவங்கள் தான் இன்றைய காஷ்மீரின் நிலைக்கு காரணம். தேர்தலில் தில்லுமுல்லுக்கள் ஒரு அளவிற்கு மேல் செல்லும்போது மக்களுக்கு குறிப்பாக இளைஞர்களுக்கு தேர்தல்களில் நம்பிக்கை இருப்பது இல்லை. விளைவு ஆயுதங்கள் ஏந்தும் கலாச்சாரம். அதே நிலைக்கு தமிழகம் செல்லாமல் இருப்பதற்காக இம்முறை தேர்தல் முறைகேடுகள் பெரிய அளவில் இருக்க வேண்டும். அப்படி ஒரு வேளை முறைகேடுகள் தேர்தலில் நடந்தால் விலைவாசியை மட்டும் இந்த அரசு நம் மீது திணிக்காது. அது தீவிரவாதத்தையும் நம் மீது விதைத்து விருட்சமாக வளர்த்து விடும்

அடுத்த நாடகம் தயார்

 தற்போதைக்கு முடிவிற்கு வந்துள்ளதாக நினைக்கப்படும் திமுக காங்கிரஸ் கூட்டணி, மீண்டும் இணையும் என்றே தெரிகிறது.
கூட்டணிகட்சியான காங்கிரஸ் முரண்டு பிடித்து கொண்டே அதிமுகவிடம் பேரம் பேசினாலும் அதிமுகவின் பிடி ஒன்றை வைத்தே இந்த பேச்சுவார்த்தையை காங்கிரஸ் செய்தது. அந்த பிடி என்னவென்றால் ஹசன் அலிக்கும் ஜெயலலிதாவிற்கும் உள்ள நிதித்துறை சம்பந்தப்பட்ட விவகாரம் என்றே தெரிகிறது. இதுவரை ஏமாளியாக இருந்த காங்கிரஸ் இப்போது திமுக மற்றும் அதிமுகாவை சமாளிக்கும் சக்தியாக உருவெடுத்து வருகிறது. திமுகவை சமாளிக்க ஸ்பெக்ட்ரம் என்றும் அதிமுகவை சமாளிக்க ஹசன் அலி என்றும் காங்கிரஸின் நிலைப்பாடு உள்ளது. இதில் யார் காங்கிரஸின் இழுப்பிற்கு ஒத்து வருகிறார்களோ அவர்களுடன் காங்கிரஸ் கூட்டணி அமைக்க இருக்கும் நிலையில் ஈழத்தமிழர்களை கொல்வதற்கு உதவிய  கருணாநிதி கூட்டணி முறிவு நாடகத்தை கொண்டு வந்தார். ஒருவேளை அந்த நாடகம் ஒரு முடிவிற்கு வந்து மீண்டும்
இந்திராவின் மருமகளே என்று கருணாநிதி சொல்லும் காலம் தொலைவில் இல்லை.
பின் குறிப்பு: யார் கொள்ளை அடிக்கிறார்கள் என்பது முக்கியம் அல்ல. கொள்ளை அடிக்கின்றவர்களிடம் இருந்து கொள்ளை அடிக்கவும் ஒரு திறமை வேண்டும்.

மெரினாவில் ஓரிடம் வேண்டும்

இறந்தவர்களுக்கு கொடுத்தது போக எனக்கும் ஓரிடம் வேண்டும்.

கொள்கை வகுத்தவனுக்கு ஓரிடம்.

கொள்கை வளர்த்தவனுக்கு ஓரிடம்.

கொள்ளை அடித்த எனக்கு ஏன் இல்லை ஓரிடம்?

ஆட்சியில் செத்தால் இடம் என்றார்கள்.

லட்சம் தமிழர் செத்தும் இடம் இல்லை எனக்கு.

இன்னும் ஈழத்தமிழர் போதுமா தாய்தமிழரும் வேண்டுமா?

---யாரோ என் கனவில் சொன்னது



Popular Posts