உண்மையில் மின்வெட்டு எவ்வளவு நேரம்?
9:33 PM
satheshpandian
, Posted in
மின்வெட்டு
,
1 Comment
தினமும் சென்னையில் ஒரு மணி நேரமும் தமிழ்நாட்டின் மற்ற இடங்களில் மூன்று மணிநேரமும் மின்வெட்டு என்று வெளியிட்டார்கள். ஆனால் இந்த அறிவிப்பு வருவதற்கு முன்னரே மற்ற இடங்களில் மூன்று மணிநேர மின்வெட்டு அமலில் இருந்தது. அப்படியென்றால் இத்தகைய அறிவிப்பினால் என்ன பயன்? இது யாருக்கு அறிவிக்கிறார்கள்? முன்னர் அறிவிக்கப்படாத மின்வெட்டினால் மக்களை ஏமாற்றினார்கள். இப்போது அறிவித்து விட்டும் மக்களை ஏமாற்றுகிறார்கள். சென்னையில் ஒரு மணிநேர மின்வெட்டு ஒரு வேலை கோபாலபுரத்திற்கு மட்டும் வேண்டுமானால் பொருந்தலாம்.மற்ற இடங்களில் அந்த அந்த மின்வாரிய ஆட்கள் செல்வசெளிப்பானவர்க்கு தனியாக கவனிக்கிறார்கள். அங்கே அவர்களுக்கு ஒரு மணிநேரம் மட்டும் தடை செய்கின்றனர். அதே பகுதியில் மற்றவர்களுக்கு பகலில் மட்டும் அல்ல இரவிலும் மின்வெட்டு நடக்கிறது. நம்புவதற்கு கடினமாக இருக்கலாம். ஆனால் இது நடக்கிறது. இதன் மூலம் யாருக்கு அதிக மின் சேவை செய்ய முடியுமோ அவர்களுக்கு மின்வாரியம் நன்றாகவே சேவை செய்கிறது.
உதாரணத்திற்கு சைதாபேட்டையில் ஒரு சில இடங்களில் ஒரு மணிநேரம் தான் மின்வெட்டு மற்றவர்களுக்கு மின்வாரிய ஊழியர்களை பொறுத்து மின்வெட்டு அமலாகிறது.மதுரையில் மூன்று மணிநேரம் மின்வெட்டு ஒரு சிலருக்கு மட்டும் தான். மற்றவர்களுக்கு வேலை பார்ப்பதாக கூறி மேலும் பல மணிநேரம் மின்வெட்டு இருக்கிறது.
இலவச தொலைகாட்சிபெட்டிகள் கொடுக்கும் முன்னர் கொஞ்சம் மின்பற்றாகுறையை பற்றி யோசித்தும் இருக்கலாம்.
Already 4 hour power cut in my home town