நல்லவர்களா இல்லை கெட்டவர்களா?

முள்ளிவாய்க்காலில் நடந்தது ஒரு இனபேரழிவு என்பது உலக  நாடுகளுக்கு மட்டும் அல்ல, நம்மை போன்று வேடிக்கை பார்த்த அனைவருக்கும் தெரியும். நாம் என்ன செய்ய வேண்டும் என்றோ அல்லது இதற்கு பின்னர் என்ன நடக்கும் என்பதை பற்றிய பதிவு அல்ல இது? நாம் என்ன தான் எழுதினாலும் திருந்தாத திருந்த முயற்சி செய்யாதவர்கள் பற்றிய பதிவு இது.

சென்ற தேர்தலுக்கு முன்னர் பல போராட்டங்களில் மாணவ சமுதாயம் ஒன்றிணைந்து போராடினர். அதை எப்படி ஆளும்கட்சி  வேறு ஒரு கட்சியை வைத்து கெடுத்தார்கள் என்பதும் நமக்கு தெரிந்ததே. இவர்களின் வன்முறையால் பாதிக்கப்பட்டவர்கள், காரணம் இன்றி ஈழமக்களின் போராட்டங்களை கொச்சை படுத்தினர். இதில் தவறு யாரிடம் உள்ளது??? போராட்டம் நடத்தியவர்களின் நோக்கம் ஈழத்தமிழர்களை காப்பாற்றுவதில் தான் இருந்தது. அதில் கலந்து கொள்வதாக கூறி அரசியல் செய்த விசமிகளின் முகமுடி இன்னும் கிழிக்கப்படவில்லை.

இன்னும் அவர்களின் போராட்டங்களால் படித்தவர்கள் மட்டும் அல்ல வேடிக்கை பார்கின்றவர்களும் குழம்பி போகின்றார்கள். ஒருவேளை இவர்கள் தான் உண்மையாக போராடுகிறார்களோ என்று.
ஆனால் இந்த தேர்தலில் மாற்றங்கள் கொண்டுவந்தது தேர்தலில் புதிதாக வாக்களித்தவர்கள் தான் என்பது தற்போதய செய்தி.

இந்த புதிதாக சேர்ந்த வாக்காளர்கள் தான் இந்த முறை புரட்சியை ஏற்படுத்தி உள்ளனர். இதுவரை ஏமாற்றப்பட்டு அடக்கி வைத்திருந்து இருந்த மாணவர்கள் இப்போது அந்த ஏமாற்று கூட்டத்திற்கு தேர்தலில் சரியான பாடம் கற்பித்து உள்ளனர்.இருந்தாலும் பதிவுலகத்திலும் படித்தவர்கள் மத்தியிலும் அவர்கள் நல்லவர்களா இல்லை கெட்டவர்களா என்ற விவாதம் சென்று கொண்டே தான் இருக்கின்றது.


இதற்கு முற்றுபுள்ளி வைக்க ஒன்று புலிகளின் தரப்பில் இருந்து யாரேனும் முன் வர வேண்டும். இல்லை இவர்களாக உண்மையை ஒப்பு கொள்ளும் நிலை வர வேண்டும்.
 
ஈழத்தமிழர்களை காக்க ஈழத்தமிழர்களே போதும். அவர்களுக்கு நல்லது செய்யாவிட்டாலும் கேட்டது செய்யும் சக்திகளுடன் சேராமல் இருப்பதே நாம் அவர்களுக்கு செய்யும் உதவி/ கைம்மாறு/ பிச்சை/மனிதாபிமானம்

0 Response to "நல்லவர்களா இல்லை கெட்டவர்களா?"

Popular Posts