அறிவிக்கப்படாத யுத்தம்

ஆண்டவன் கொடுக்கிறான். நான் பெற்று கொள்கிறேன் என்று நமது எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகமாகி வருகிறது. இதில் எம்மதமும் விதிவிலக்கில்லை. நமது தலைவர்களாவது நமக்கு வழிகாட்டுவார்கள் என்று பார்த்தால் அவர்கள் இதை பற்றி திறப்பதிற்கு பதிலாக இதனை ஊக்குவிக்கும் தொலைக்காட்சிபெட்டிகளை வாங்கி வழங்கி அதில் ஒரு தொகை பார்ப்பதையே வேலையாக கொண்டுள்ளனர். நான் என்ன தான் நேராக விடயத்திற்கு வராமல் பேசினாலும் இந்த பதிவு நமது மக்கள்தொகை பற்றியது.


முன்பெல்லாம் பத்து பதினைந்து பிள்ளைகள் பெற்று கொள்ளுவார்கள். அதில் குறைந்தது இரண்டு அல்லது மூன்று குழந்தைகள் வளரும் பொது இறக்க நேரிடும். வறுமையினால் மட்டும் தான் இந்த இறப்பு என்று கிடையாது. அப்போது இருந்த நோய்கள் எல்லாம் இப்போது இல்லை. ஒரு வேளை இருந்தாலும் அதற்கான தடுப்பு மருந்துகள் எல்லாம் கிடைத்து விடுகின்றன. அதனால் முன்பு எப்படி பெற்று எடுத்து வளர்த்தார்களோ அதே வீதத்தில் போக வேண்டிய தேவை இப்போது இல்லை. முன்பு வீட்டில் பதினைந்து பேர் இருந்தால் விவசாயம் செய்ய வெளியாட்கள் எல்லாம் தேவை இல்லை. அந்த குடும்பமே அந்த வேலையே செய்ய இயலும். இப்போது பதினைந்து பேர் ஒன்றாக இருக்கும் குடும்பங்கள் ரொம்ப குறைவு. அவர்களும் விவசாயம் பார்த்து சாப்பிட்டால் வீடு தாங்காது என்பதே நிலையாக இருப்பதால் ஆளுக்கு ஒரு வேலை என்று பார்த்து கூட்டு குடும்பம் என்பதை பெயருக்காவது கடைபிடிக்கின்றனர்.




ஒவ்வொரு பிரச்சினைக்கும் ஒவ்வொரு காரணம் இருக்கும். ஆனால் எல்லா பிரச்சினைக்கும் எனக்கு தெரிந்து இதுவொன்றே காரணம்.




இலங்கை சுதந்திரம் அடையும்போது இருந்த அதே அளவில் தான் ஈழத்தமிழர்கள் இருக்கிறார்கள். ஆனால் சிங்களர்களோ தங்களின் மக்கட்செல்வங்களை பெருக்கியுள்ளனர். இதனால் முன்னர் இருந்த விகிதாச்சாரம் முற்றிலும் மாறியுள்ளது. ஒற்றை பிள்ளை பிள்ளை பெற்றவனுக்கும் பதினைந்து பிள்ளைகள் பெற்றவனுக்கும் ஒரே அளவு முதல் தலைமுறையில் இருப்பதாக கொண்டால் மூன்றாம் தலைமுறையில் ஒற்றை பிள்ளை பெற்றவனின் குடும்பம் மற்றவனின் குடும்பத்தை விட பல மடங்கு வசதி படைத்து இருக்கும். அப்போது வரும் தாழ்வு மனப்பான்மையால் இந்த பதினைந்து பிள்ளைகள் பெற்றவனின் குடும்பம் எப்போது அவர்களை கவிழ்க்கலாம் என்று இருக்கும்.



சாதாரண அண்ணன் தம்பிகளிடமே இந்த பிரச்சினைகள் இருக்கும்போது ஒரே தீவு இரு வேறு இனங்கள் ஒன்றாக இருக்க வாய்ப்பு இல்லை.

முன்பெல்லாம் இருந்த விலை இப்போது இல்லை. எல்லாம் மாறிவிட்டது என்று சொல்பவர்கள் முதலில் அவர்களின் குடும்ப உறுப்பினர்களின் எண்ணிக்கை எத்தனை? அவர்களில் எத்தனை பேர் ஒரே இடத்தில் இருக்கிறார்கள் என்று பார்த்தால் புரியும். (இப்போதைய சூழலில் மக்கள்தொகை குறைக்க கூட்டு குடும்பமும் விவசாயமும் தான் சரியான தீர்வாகும். இதை சொல்கின்ற நானே இதை செயல்படுத்த முடியாது என்கின்ற நிலை என்று இருப்பதால் அடுத்தவர்களை குறை சொல்லவும் முடியாது. :-) ). மக்கள்தொகை பெருக்கம் என்பது எல்லாம் சென்றுவிட்டது. இப்போது இதன் பெயர் வெடிப்பு.




எப்போதும் நாம் எந்த ஒரு துறையிலும் முற்றிலும் தன்னிறைவு பெற்ற நாடு கிடையாது. ஒவ்வொரு விடயத்திலும் தன்னிறைவு என்ற பெயரில் நாம் ஊரை அல்ல நாட்டை ஏமாற்றி கொண்டு இருக்கிறோம். (அது பற்றி ஒரு பெரிய பதிவு போட வேண்டிருக்கும்) அப்படி இருக்கும்போது நமது மக்கள்தொகைக்கு ஏற்ப நாமும் விவசாமும் பார்க்கவில்லை. வெளிநாடுகளில் இப்போது வாங்கும் விவசாய பொருட்களின் எண்ணிக்கைகளும் அதிகரித்து ஒரு அளவில் மாத்திரைகளை மட்டுமே சாப்பிடும் நிலை இங்கே வரலாம். அல்லது இந்தியாவிற்கு ஏற்றுமதி செய்ய கூடாது என்று அந்த நாடுகளும் முடிவு எடுக்கும் நிலை வரலாம்.நம்ம மக்கள்தொகை தான் வெடிப்பு என்று சொல்கிறோம். அவர்களுடையது மக்கள்தொகை பெருக்கமே. பெருக்கத்தை உள்நாட்டில் இருக்கும் பொருட்களை கொண்டே சமாளிக்க முடியும். அப்படி இருக்கும்போது அவர்களின் தேவை போகவே நமக்கு ஏற்றுமதி செய்ய இயலும். ஒரு நாட்டில் ஒரு முறை உணவு தட்டுபாடு வந்தது என்றால் முதலில் தடை செய்வது உணவு பொருட்கள் ஏற்றுமதியை தான். அப்படி ஒரு நாடு தனது தேவைக்காக அங்கே ஏற்றுமதி தடை கொண்டு வந்திருக்கும்போது எங்கே என்ன செய்ய முடியும்? வெங்காயத்திற்கு பதில் தொலைக்காட்சி பெட்டியையா சமைக்க முடியும்.



அவன் கொடுக்கிறான். நான் வாங்குகிறேன். இதில் உனக்கு என்ன கஷ்டம். யாருக்கு என்ன நஷ்டம். எந்த ஒரு இலவசமும் முதலில் இனிக்க தான் செய்யும் பின்னர் அதுவே பரவி நம்மை முடமாக்கும். எப்போது எல்லாம் தொலைகாட்சியை பார்க்கிறோம்? பொழுது போகவில்லை என்றா? சரி. இது விவசாயம் செய்பவர்களுக்கு பொருந்துமா? நிச்சயம் பொருந்தாது. அப்படி இருக்கும்போது தொலைகாட்சிகளின் எண்ணிக்கை மக்கள்தொகையினால் பெருகி தெருவிற்கு ஒன்று இருந்த போதே நாம் நாள்கணக்கில் அதனை கண்டு களித்தோம். இப்போது வீட்டுக்கு வீடு என்னும்போது எப்படி இருக்கும்?



இப்படி மக்கள்தொகை அதிகமாக்கும் பொருள் தருவதை விட(தொலைகாட்சியில் நடுஇரவில் வரும் பாடல்கள் எல்லாம் கேட்ட பின்னர் சும்மாவா படுக்க முடியும்) அரசே குடும்பக்கட்டுப்பாட்டை கட்டாயமாக்கலாம். இல்லை என்றால் இலவசம் என்று கேட்கும் எல்லாருக்கும் ஆணுறையை மட்டும் இலவசமாக கொடுக்கலாம். (இதனை பெறுவதற்கும் யோசிப்பார்கள்) நம்மை விட மக்கள்தொகை அதிகம் உள்ள சீனா இப்போது மக்கள்தொகை வெடிப்பை தடுக்க குடும்பகட்டுபாட்டு திட்டங்களை கட்டாயமாக்கி உள்ளது. நாம் இரண்டாம் இடத்தில் தானே என்று நினைக்கிறோம். ஆனால் நாம் தான் முதலிடத்தில் இன்னும் பத்து வருடத்தில் இருப்போம். சீனாவின் உணவு உற்பத்தி தன்னிறைவு அடைந்து பல வருடங்கள் ஆகின்றது. அதே நேரத்தில் அவர்கள் மக்கள்தொகையும் கட்டுக்குள் கொண்டு வந்து உள்ளார்கள். அடுத்த பத்து வருடங்களில் என்ன செய்வது என்று அங்கே ஒரு செயல்திட்டத்திற்கு வந்து விட்டார்கள். ஊழலும் குறைவு( ஊழல்களுக்கெல்லாம் சாதாரணமாகவே மரண தண்டனை கிடைப்பதாக கேள்வி).



அடுத்த பத்து வருடத்திற்குள் ஒரு ஒழுங்கற்ற ஒழுங்கினமான செயலற்ற நிலையில் இருக்கும் நாடாக இந்தியா இருக்க வாய்ப்பு இருக்கிறது.



  • இதுவரை ஊழல்கள் செய்தவர்கள் எவரும் தண்டிக்கப்படவில்லை.
  • ஊழல்கள் எல்லாத்துறையிலும் மலிந்து போய்விட்டன.  
  • மக்கள்தொகையை கட்டுக்குள் கொண்டுவர முயற்சிகள் இல்லை. 
  • உணவு உற்பத்தியில் தன்னிறைவு அடையவில்லை. 
  • மக்கள்தொகை வெடிப்பு ஒரு அளவில் யாரும் யாரையும் குறை சொல்ல முடியாத நிலைக்கு தள்ளும்.



உதாரணம்: ராணுவ வீரர்கள் லஞ்சம் பெற்று கொண்டு எல்லைகளை விட்டு கொடுத்தால் என்னவாகும் ?

 சரி. எல்லாரும் தானே இதில் பாதிக்கப்படபோவது. அப்புறம் என்ன நமக்கு கவலை என்கிறீர்களா?



அதிலும் ஒரு சிறு பிரச்சினை இருக்கிறது. ஊழல்கள் செய்பவர்கள் எல்லாரும் மேலை நாடுகளில் செண்டு உட்காந்து விடுவார்கள். இங்கே மட்டுமே சொத்து வைத்து இருக்கும் அனைவரும் ஒரு நாள் சோத்துக்கு அலைவது நிச்சயம். என்னடா ஊழல்களை பற்றிய பதிவு போல இருக்கிறது என்று நினைக்கிறீர்கள் தானே? மக்கள்தொகை மிகவும் குறைவாக இருந்தபோதும் ஊழல்கள் இருந்தன. ஆனால் சிறிய அளவில். மக்கள்தொகையும் ஊழல்களும் ஒன்றுக்கு ஒன்று தொடர்பானவை. மக்கள்தொகை கூடும்போது அந்த தொகுதியில் இருக்கும் மக்களுக்கு செய்வதற்கென்று வழங்கப்படும் தொகையும் அதிகமாகும். அதில் அடிக்கும் கமிசனும் அதிகமாகும். இது தான் நியதி.



எல்லா பாதுகாப்பு நிறுவனங்களின் கணக்கெடுப்புகளும் சீனா இந்தியாவின் மீது எப்போது வேண்டுமானாலும் படையெடுக்கலாம் என்று உள்ளன. ஆனால் சீனாவிருக்கு தெரியுமோ தெரியாதோ நம்மை நாமே அழிப்பதற்கு ஏற்கனவே நாம் ஒரு போர் தொடுத்து உள்ளோம் என்பது. இந்த கணிப்புகளும் நினைப்புகளும் போரியல் தந்திரங்களும் மாறக்கூடும். ஆனால் நம்மை நாமே அழிக்க மக்கள்தொகை விட பெரிய ஆயுதம் உலகில் இல்லை.



 

6 Response to "அறிவிக்கப்படாத யுத்தம்"

  1. idroos says:

    Enakku oru maatru karuthu nam naatai poruththavarai makkal thokai enbathu namakku palame ozhiya palaveenam alla.

    ஐத்ருஸ்,

    மாற்று கருத்திற்கு நன்றி. ஆனால் நான் குறிப்பிட்டு உள்ள விடயங்களை எப்படி சமாளிக்க போகிறீர்கள்? எல்லாரும் விவசாயம் பார்த்தால் மட்டுமே சரி செய்ய இயலும். எல்லாரும் விவசாயம் பார்க்க நிலம் எங்கே இருக்கு?

    //நம்மை நாமே அழிப்பதற்கு ஏற்கனவே நாம் ஒரு போர் தொடுத்து உள்ளோம்//
    சுயநினைவில்லாமல்

    மக்கள் தொகையை பற்றிதான் பெசுறேங்கனு என்று நினைத்தன் , அனால் இலங்கை பிரேச்சன்னையில் இருந்து இந்திய எதிர்கொள்ளும் பிரேச்சன்னை வரை சொல்லிருகிரிகள் ....
    நன்றாக உள்ளது, யோசிக்கவும் வைக்கிறது

    Unknown says:

    super message.....
    carry on my friend.......

    Anonymous says:

    அருமையான பதிவு.
    பாராட்டுக்கள்.
    மேலும் ஒரு முறை நிதானமாக படித்துவிட்டு
    எனது கருத்துக்களை பதிகிறேன்....

Popular Posts