ஊழல்களை தடுக்க ஊழல்வாதிகளை கொண்ட குழு

ஊழலை ஒழிப்பதற்கான சட்டப்பூர்வமான மற்றும் நிர்வாக ரீதியான ஆலோசனைகளை தெரிவிப்பதற்காக, மத்திய நிதியமைச்சர் பிரணாப் முகர்ஜி தலைமையில், எட்டு பேர் கொண்ட அமைச்சரவை கமிட்டி, கடந்த வாரம் அமைக்கப்பட்டது.

அதில் அடங்கியுள்ளவர்கள்:
  • சிதம்பரம்
  • சரத் பவார்
  • அந்தோணி
  • வீரப்ப மொய்லி
  • கபில் சிபல்
  • மம்தா பானர்ஜி
  • அழகிரி
இந்த குழு தான் ஊழல்கள் சம்பந்தமாகவும் அரசு முடிவுகள் எடுப்பதில் நிர்வாக ரீதியாகவும் ஆலோசனை சொல்லபோகிறதாம்.தெரியாமல் தான் கேட்கிறேன். ஊழல்களை ஊழல்வாதிகளை கொண்டு தான் தீர்க்க முடியும் என்று இந்த மத்திய அரசு நினைக்கிறதோ? இதில் உள்ளவர்களில் யார் ஊழல் செய்யாதவர்? இவர்கள் எல்லாரும் சேர்ந்து என்ன முடிவு எடுப்பார்கள்? இனிமேல் மாட்டிக்கொள்ளாமல் ஊழல் செய்வது எப்படி என்று யோசிப்பார்களோ? எப்பவுமே ஒரு விடயத்தில் பத்து சதவிதம் கையூட்டு வாங்கினால் மாட்டிகொள்வது கிடையாது. தொண்ணூறு சதவிதம் வாங்கினால் மட்டுமே மாட்டுவார்கள்.(பெரிய கண்டுபிடிப்புங்க)
 
இவர்கள் எல்லாரும் சேர்ந்து சமர்ப்பிக்கும் முடிவுகள் எப்படி இருக்கும்? (இது கற்பனை என்றாலும் உண்மையாக இதே மாதிரி நடந்தால் நான் பொறுப்பல்ல)
 
  1. எந்த ஒரு முடிவையும் காங்கிரஸ் மேலிடம் தான் முடிவு எடுக்கும். அந்த அந்த பகுதிகளுக்கேற்ப தான் இந்த குழு அமைந்துள்ளது. கிழக்கு, மேற்கு என்று உள்ள திசைகள் போல அந்த பகுதிகளின் முடிவுகளுக்கு அந்த அந்த மாநிலங்களில் உள்ள கூட்டணி கட்சிகளிடம் ஆலோசனை செய்யப்படும். உதாரணம்: தமிழகம் என்றால் திமுக, கிழக்கு இந்தியா என்றால் மம்தா, மேற்கு என்றால் பவார்.
  2. கூட்டணிகட்சிகள் அடிக்கும் பணத்தில் ஒரு பகுதியை மத்திய அரசிற்கு கொடுக்க வேண்டும். அப்படி கொடுக்கும் பணம் மத்திய அரசு கூட்டணிகட்சிகள் செய்யும் ஊழல்களை கண்டுகொள்ளாமல் இருப்பதற்கு மட்டுமே. ஒருவேளை விடயம் வெளியே வந்தால் மறைக்கும் வேலைக்கு கூட்டணிகட்சிகள் தனியாக பணம் கொடுக்க வேண்டும். உதாரணம்: ஸ்பெக்ட்ரம் ஊழல்களை வெளிக்கொண்டு வருவதற்கு தூண்டிவிட்டதன் மூலமும் கணிசமான தொகை கிடைத்தது. அதை மறைக்க நடத்தப்படும் வேலைகளின் மூலமும் பணம் கிடைக்கிறது. இதன் மூலம் அரசு இயந்திரங்களுக்கு முழு நேரமும் வேலையும் சம்பளமும் கிடைக்கிறது.
  3. மாட்டிகொள்ளாமல் ஊழல் செய்வது பற்றி சிறப்பு வகுப்புகள் எடுக்கவும் ஏற்பாடுகள் செய்யப்படும். அதில் முழுநேர ஊழியர்களாக பணியாற்ற திமுக சார்பில் மூன்று பேரும் மத்திய அரசின் சார்பில் நான்கு பேரும் பணியாற்றுவார்கள்.உதாரணம்: மொத்தமாக அடிக்கும்போது பிசிறு விடக்கூடாது. கூடிய மட்டும் இடைத்தரகர்களை தவிர்க்க வேண்டும்.
  4. ஊழல்களை கண்டுபிடித்து வழக்குகள் போட்டும் வழக்குகள் போடுவதாகவும் மிரட்டும் நபர்களை குண்டர்கள் சட்டத்தில் கைது செய்ய சட்டம் இயற்றப்படும். உதாரணம்: சுப்ரமணியசுவாமி பதிவு செய்த வழக்குகளும் மிரட்டல்களும் அதிகம்.
  5. மக்களுக்கு லஞ்சம் பற்றிய விழிப்புணர்வு கொண்டு வர ஐந்து அம்ச திட்டம் லஞ்சம் கொடுத்து நடைமுறைபடுத்தபடும்.
    உதாரணம்: இலவச வேட்டிசேலை, இலவச தொலைகாட்சிபெட்டி என்று இலவசம் என்று எதைகொடுத்தாலும் ஏன் என்று கேட்காதாவாறு கொடுக்கும் தமிழக அரசின் திட்டங்கள் மற்ற மாநிலங்களுக்கும் விரிவுபடுத்தப்படும் 
இந்த மாதிரி தீர்மானங்கள் எல்லாம் கொண்டுவரபோவதாக அறிவிப்பு வந்தாலும் ஆச்சர்யம் இல்லை.

3 Response to "ஊழல்களை தடுக்க ஊழல்வாதிகளை கொண்ட குழு"

  1. vadai.....

    //இந்த மாதிரி தீர்மானங்கள் எல்லாம் கொண்டுவரபோவதாக அறிவிப்பு வந்தாலும் ஆச்சர்யம் இல்லை///

    ம்ம்ம்ம் நமக்கு கிடச்ச கொடுப்பினை அப்பிடி.....

    பாம்பின் கால் பாம்பு அறியும் என்பது போல் தான் இதுவும்...........
    எங்கே நம்ம தலைவர் ராஜாவை காணும்????????

Popular Posts