என்னது இந்தியாவுக்கு சுதந்திரம் கிடைச்சிடுச்சா?
என்னது இந்தியாவுக்கு சுதந்திரம் கிடைச்சிடுச்சா? அப்படின்னு ஒரு படத்துல தான் பார்த்து இருக்கோம். ஆனால் அதையே நேரில் நிருபித்திருக்கிறது தினமலர். இங்கே இருப்பவர்களும் இலங்கையில் இருப்பவர்களும் ஏன் ஐ.நா சபையே கூறியபோது கூட இனபடுகொலை நடந்ததாக சொல்லாத தினமலர் இப்போது "இலங்கை போர்க்குற்றங்களுக்கு ராஜபக்ஷே காரணம் : அதிர்ச்சி தகவல்" என்று மிகபெரிய ஒரு விஷயத்தை கண்டுபிடித்து இருக்கிறது. நடிகர் வடிவேலின் புலிகேசி படத்தில் அவரின் ஒற்றன் ஒருவன் பழைய செய்தியை ஏகப்பட்ட எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தி பின்னர் கூறுவான். அதே போல் தான் தினமலர் இப்போது இந்த தலைப்பை கொடுத்துள்ளது.
http://www.dinamalar.com/News_Detail.asp?Id=138235
http://www.dinamalar.com/News_Detail.asp?Id=138235
தமிழ்நாட்டில் துப்பறிந்து தைரியமாக முன்கூட்டியே எழுதும் பத்தரிக்கைகள் தான் இல்லை. ஆனால் எல்லாருக்கும் தெரிந்த செய்தியை இப்போது தான் தெரிந்தது போல் எழுதுவது நியாயமா? இப்போது கூட எழுதவில்லை என்றால் விக்கிலீக்ஸ் பற்றிய செய்திகள் மறைக்கப்பட்டு வந்திருக்குமோ? அப்படி செய்து இருந்தால் தினமலரில் நடுநிலை இல்லை என்பது தினமலரில் இன்னும் பின்னூட்டங்கள் போடும் மெத்தபடித்தவர்களுக்கும் தெரிந்து விடும் என்ற பயமா?
நான் இதுவரை நான்கு முறை பின்னூட்டங்கள் போட்டு இருந்தேன். இதுவரை ஒருமுறை கூட எதுவும் வெளிவந்ததில்லை. இத்தனைக்கும் நான் மோசமான வார்த்தை பிரயோகம் செய்தது இல்லை. ஒருவேளை உண்மையை சொன்னால் போடமாட்டார்களா? இல்லை பின்னூட்டம் போடுவதற்கென்றே தினமலர் ஏற்பாடு செய்திருக்கும் நபர்களின் பின்னூட்டங்கள் தான் தினமலரில் வெளியாகுமா?
ஒருவேளை இது தான் தினமலரின் தர்மமா? செய்திகளை முந்தி தந்தால் அதை செய்தித்தாள் என்று சொல்லலாம். ஆனால் இப்படி இரண்டு வருடங்கள் பின்தங்கி தரும் செய்தித்தாளை என்னவென்று சொல்லுவது?


6:54 AM
satheshpandian
, Posted in

மிக அருமை
ஒரு வேளை 2 வருஷத்துக்கு மின்னாடி வெளியிடாம இருந்த பேப்பரை புதுசுன்னு போட்டாங்களோ என்னவோ?!!!
long time memory loss problem